Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.
Page 1 of 1 • Share
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.
Posted by Sakthivel Balasubramanian
புகழ் என்பதொரு உச்சாணிக் கொம்பின் தேன் மாதிரி. எட்டியெடுக்க தேனடை விட்டு உதிரும் ஈக்கள் வந்து மனிதரைச் சுற்றிக் கொள்வதைப் போலவே; புகழ் கொண்டோரைச் சுற்றி தலைகொத்தும் மனிதர்கள் ஏராளமாய் திரிகின்றனர். தான் வென்றதைக்காட்டிலும் பிறர் தோற்ற வலி ஆழமான வடுவைக் கொண்டதென புரியாதோர் தலைகொத்தும் ஈக்களை தானே தேடிக்கொள்கின்றனர்.
தேடித் தேடிக் கொணர்ந்து சிறுகச் சிறுகச் சேகரித்த தேனியின் உழைப்பைப் போலவே தனது லட்சியத்தை வெல்லப் போராடும் மனிதர்களின் உழைப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி எனும் நடுநிலையிலா தராசையறுத்து தனது வெற்றியை பிறருக்கும் புரிய அல்லது பிறரும் மகிழத்தக்க அமைத்துக் கொள்வதென்பது ஒரு கலை. தான் வளரும்போதே தன்னோடுள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்தக் கலை கைகூடுகிறது.
ஓட்டப்பந்தயத்திற்கென ஓடும் தெருவில் உடன் நிகராக ஓடுபவன் வீழ்ந்துவிடுகையில் சிரிக்கமுடியாத மன நிலையைக் கொண்டவருக்கு அந்தக் கலையும் புரியும். ஒரு சக மனிதரை எதிரியாகப் பார்க்காததொரு உணர்வு மட்டுமே மனிதத்தையும் வளர்க்கப் பதைக்கும். வெற்றி ஒரு போதை, புகழுக்கான பாடு பொருள். ஆனால் நிலைத்தல் என்பது வாழ்தல். நாட்களை வருடங்களைக் கடந்து வாழ்தலே நிலைத்தல் ஆகும். நிலைப்பதற்கு வெற்றி வெறுமனே போதுமானதல்ல, உடனிருப்போரின் உணர்வை மதித்தலும் நிலைப்பின் பாடுபொருளாகும்.
சிந்தித்துப் பாருங்கள். வெற்றி நிலைப்புத் தன்மைக் கொண்டதல்ல; அது இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் மனிதம் நிலைக்கும். மனிதமுடையோரின் புகழ் வான்கடந்து நிற்கும். காலத்தைக் கடந்தும் பேசப்படும். மனிதம் நிலைப்பின் பாடுபொருள்.
எனவே வெற்றியை எண்ணுங்கள். தனது வெற்றியை மட்டுமே எண்ணாதீர்கள். தேன் என்பது இனிப்பு மட்டுமல்ல, அது இன்னொரு உயிரின் உழைப்பும். எனவே உழைப்பைக் களவாடி இன்பம் கொள்வதைக் காட்டிலும் இனிப்பை வேறெங்கேனும் தேடுங்கள். கடைசியில் அது மனிதம் புரியுமிடத்தில் கிடைப்பதை உணர்வீர்கள்.
வெற்றி புகழைத் தரும், புகழ் சுயநலப் போதையை ஏற்படுத்தும். தேன் கூட போதை கொண்டது. சுயநல போதையை அதிகமாகக் கொண்டது தேன். எனவே தேன் வேண்டாம். வெற்றி வேண்டாம். வெறுமனே புகழ் மீதான ஆசை மட்டும் வேண்டாம். மனிதர் மீதான ஈரம் அந்த வெற்றியைக் காட்டிலும் அடர்த்தியானது. புகழை திரியாக்கி பிறருக்கு வெளிச்சம் தரும் விளக்காய் தன்னை மாற்றிக்கொள்ள முடிபவர்களுக்கு புகழ் எனும் தேனைவிடவும், அதைச் சுற்றியிருக்கும் தேனீக்களின் பசி இன்றியமையாத ஒன்றென்பது புரியும்..
Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.
வெற்றி நிலைப்புத் தன்மைக் கொண்டதல்ல; அது இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் மனிதம் நிலைக்கும். மனிதமுடையோரின் புகழ் வான்கடந்து நிற்கும். காலத்தைக் கடந்தும் பேசப்படும். மனிதம் நிலைப்பின் பாடுபொருள்.
அருமையான கருத்து
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.
» ஒவ்வொரும் நிமிடம் உனது இறுதி நிமிடம் என முக்யம் கொடுத்து விடு
» ஒரு நிமிடம் நில்லுங்கள்!
» ஒரு நிமிடம் தா ..
» அந்த ஒரு நிமிடம்
» ஒவ்வொரும் நிமிடம் உனது இறுதி நிமிடம் என முக்யம் கொடுத்து விடு
» ஒரு நிமிடம் நில்லுங்கள்!
» ஒரு நிமிடம் தா ..
» அந்த ஒரு நிமிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|