Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!
Page 1 of 1 • Share
ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!
[You must be registered and logged in to see this image.]
அப்போது(சேட்டிலைட் டிவி எல்லாம் வருவதற்கு முன்னாடின்னு வச்சுக்கோங்களேன்!!!!) எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்...
என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவில் எல்லா பட்டாளங்களும் கொஞ்சம் சீனியராக இருக்கும் ஒரு அண்ணாவோ அக்காவோ வழிகாட்ட...விளையாட்டுக்கள் களை கட்டும்....
பாலம்மா, எங்க அம்மா, ஜோயல் அம்மா இன்னும் தெருவில் இருக்கும் எல்லா அம்மாக்களும் வாசலில் மாலை நேரத்தில் வரும் முல்லை பூவையோ அல்லது கொல்லையில் இருந்து பறித்த டிசம்பர் பூவையோ கட்டிக் கொண்டு ....ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்பாக்கள் எல்லாம் அமைதியாக திருச்சிராப்பள்ளி வானொலியையோ, இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளையோ அல்லது விவித பாரதியையோ கேட்டுக் கொண்டும் ஏதேனும் பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டோ, இரவு 8:40 தூர்தர்ஷன் செய்திகளுக்காக காத்துக் கொண்டோ இருப்பார்கள்....இல்லை கடைகளுக்குச் சென்று வார இறுதிக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும், அல்லது பிள்ளைகளை கூப்பிட்டு வைத்துக் கொண்டு விளையாடுவதற்கும் தயாராகி இருப்பார்கள்...
எத்தனை விளையாட்டுக்கள் இருந்தனஅப்போது எல்லாம், குலை குலையா முந்திரிக்கா, கிளிக்கோடு, கல்லா மண்ணா, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் விளையாட்டு.....எவ்வளவு சந்தோசமாய் கண்ணாமூச்சி ரே...ரே காதடைபார் ரே என்று யாரோ ஒரு அண்ணாவோ அக்காவோ கண்ணை பொத்தி விட ஒவ்வொருத்தராய் கண்டு பிடித்து வர வேண்டும்....!
வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்....கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம். கால்களை நீட்டி எல்லோரும் உட்கார்ந்து கொண்டு அக்கா...அக்கா ஈர்வேலி (சீப்பு மாதிரி இருக்கும் தலையில் இருக்கும் ஈறினை எடுக்க மரத்தால் செய்யப்பட்ட ஒன்று ..பெரும்பாலும் எல்லோரின் வீட்டிலுமிருக்கும்)... என்று ஒரு விளையாட்டு.... என்று கேளிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை....
இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்...?
அப்போது(சேட்டிலைட் டிவி எல்லாம் வருவதற்கு முன்னாடின்னு வச்சுக்கோங்களேன்!!!!) எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்...
என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவில் எல்லா பட்டாளங்களும் கொஞ்சம் சீனியராக இருக்கும் ஒரு அண்ணாவோ அக்காவோ வழிகாட்ட...விளையாட்டுக்கள் களை கட்டும்....
பாலம்மா, எங்க அம்மா, ஜோயல் அம்மா இன்னும் தெருவில் இருக்கும் எல்லா அம்மாக்களும் வாசலில் மாலை நேரத்தில் வரும் முல்லை பூவையோ அல்லது கொல்லையில் இருந்து பறித்த டிசம்பர் பூவையோ கட்டிக் கொண்டு ....ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்பாக்கள் எல்லாம் அமைதியாக திருச்சிராப்பள்ளி வானொலியையோ, இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளையோ அல்லது விவித பாரதியையோ கேட்டுக் கொண்டும் ஏதேனும் பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டோ, இரவு 8:40 தூர்தர்ஷன் செய்திகளுக்காக காத்துக் கொண்டோ இருப்பார்கள்....இல்லை கடைகளுக்குச் சென்று வார இறுதிக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும், அல்லது பிள்ளைகளை கூப்பிட்டு வைத்துக் கொண்டு விளையாடுவதற்கும் தயாராகி இருப்பார்கள்...
எத்தனை விளையாட்டுக்கள் இருந்தனஅப்போது எல்லாம், குலை குலையா முந்திரிக்கா, கிளிக்கோடு, கல்லா மண்ணா, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் விளையாட்டு.....எவ்வளவு சந்தோசமாய் கண்ணாமூச்சி ரே...ரே காதடைபார் ரே என்று யாரோ ஒரு அண்ணாவோ அக்காவோ கண்ணை பொத்தி விட ஒவ்வொருத்தராய் கண்டு பிடித்து வர வேண்டும்....!
வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்....கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம். கால்களை நீட்டி எல்லோரும் உட்கார்ந்து கொண்டு அக்கா...அக்கா ஈர்வேலி (சீப்பு மாதிரி இருக்கும் தலையில் இருக்கும் ஈறினை எடுக்க மரத்தால் செய்யப்பட்ட ஒன்று ..பெரும்பாலும் எல்லோரின் வீட்டிலுமிருக்கும்)... என்று ஒரு விளையாட்டு.... என்று கேளிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை....
இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்...?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!
பல தொழில் நுட்ப வளர்ச்சியாலும் நாகரீக மாற்றத்தாலும் பல நிம்மதிகளும் சந்தோசங்களும் காணாமல் போயின அவற்றுள் சில இவை
இந்த கட்டுரையை அப்படியே கற்பனையில் நினைத்து பாருங்கள்
எவ்வளவு சந்தோஷமாக உள்ளது மனதுக்கு
இந்த கட்டுரையை அப்படியே கற்பனையில் நினைத்து பாருங்கள்
எவ்வளவு சந்தோஷமாக உள்ளது மனதுக்கு
Similar topics
» ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
» ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
» ஞாபகம் வருதே !!ஞாபகம் வருதே !!
» ஞாபகம் வருதே - கவிதை
» இட்லில ஏதோ வாசனை வருதே...?
» ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
» ஞாபகம் வருதே !!ஞாபகம் வருதே !!
» ஞாபகம் வருதே - கவிதை
» இட்லில ஏதோ வாசனை வருதே...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|