Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
Page 1 of 1 • Share
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
பதினெட்டு வயது!
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த
கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு
கலையத் தொடங்கிய நாள்!
சக நண்பன் சரவணனுடன்
பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!
"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள்
அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது
முகப்புப் பலகை!
கான்கிரீட் மலையாய்
கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல்
நீட்டித் தொட்டிடும்!
வகுப்பறை...
படிக்க வந்த
பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!
பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன்
"பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன
என் நகங்கள்!
புன்னகையோடு தன்னருகில்
இடம் தருகிறான்
அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன்
"பழனிக்குமார்" என்றே ஞாபகம்!
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம்
சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...
ஆண்கள் பள்ளி எனும்
அனல் பாலைவனத்திலிருந்து
வந்த எனக்கு, கானல் நீரும்
கரும்புச்சாறாய்தான் தெரியும்!
அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம்
செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே
நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!
என் முறை வருகிறது....
கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என்
குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!
உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது
இரு மடங்காக!
முதல் நாளில் மட்டும்
மூன்று நண்பர்களின்
அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும்,
பல நேரங்களில்
நாராசமும் காட்டும்
அன்பு நண்பன்
குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும்
அமைதியாகச் சிரிக்கும்
வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே"
என்றழைத்த "மணிமாறன்"!
இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர்
இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு
முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை
போட்டதுபோல் மற்றொருவன்!
ராகிங்...
இளைய மாணவர்களின்
இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின்
மூர்க்க விளையாட்டு!
தோல் செருப்பு
காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!
வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!
மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!
மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!
மொத்தத்தில், அவர்களின்
ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய்
நின்று ஊறுகாய் ஆனோம்!
இப்படியாகக் கழிந்தது
அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது
இதயத்தில் அந்த நினைவு!
பதினெட்டாண்டுகள்
பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள்
அந்தப் பசுமையான சுவடு!
- நிலவை.பார்த்திபன்
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த
கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு
கலையத் தொடங்கிய நாள்!
சக நண்பன் சரவணனுடன்
பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!
"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள்
அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது
முகப்புப் பலகை!
கான்கிரீட் மலையாய்
கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல்
நீட்டித் தொட்டிடும்!
வகுப்பறை...
படிக்க வந்த
பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!
பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன்
"பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன
என் நகங்கள்!
புன்னகையோடு தன்னருகில்
இடம் தருகிறான்
அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன்
"பழனிக்குமார்" என்றே ஞாபகம்!
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம்
சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...
ஆண்கள் பள்ளி எனும்
அனல் பாலைவனத்திலிருந்து
வந்த எனக்கு, கானல் நீரும்
கரும்புச்சாறாய்தான் தெரியும்!
அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம்
செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே
நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!
என் முறை வருகிறது....
கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என்
குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!
உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது
இரு மடங்காக!
முதல் நாளில் மட்டும்
மூன்று நண்பர்களின்
அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும்,
பல நேரங்களில்
நாராசமும் காட்டும்
அன்பு நண்பன்
குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும்
அமைதியாகச் சிரிக்கும்
வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே"
என்றழைத்த "மணிமாறன்"!
இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர்
இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு
முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை
போட்டதுபோல் மற்றொருவன்!
ராகிங்...
இளைய மாணவர்களின்
இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின்
மூர்க்க விளையாட்டு!
தோல் செருப்பு
காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!
வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!
மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!
மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!
மொத்தத்தில், அவர்களின்
ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய்
நின்று ஊறுகாய் ஆனோம்!
இப்படியாகக் கழிந்தது
அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது
இதயத்தில் அந்த நினைவு!
பதினெட்டாண்டுகள்
பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள்
அந்தப் பசுமையான சுவடு!
- நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்- புதியவர்
- பதிவுகள் : 26
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
என் மனதுக்குள்ளும் பசுமையாய் அந்த நினைவுகள்இப்படியாகக் கழிந்தது
அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது
இதயத்தில் அந்த நினைவு!
பதினெட்டாண்டுகள்
பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள்
அந்தப் பசுமையான சுவடு!
மறக்க முடியுமா?
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
கடந்து வந்த
கல்லூரி நினைவுகளை தங்களின்
கைவண்ணத்தால் காட்டிய கவியே!
வருடங்கள் ஓடினாலும் அந்த பசுமை மாறா நினைவுகளை மரக்கமுடியுமா........
வாழ்த்துகளுடன்....
நன்றிகள்!
கல்லூரி நினைவுகளை தங்களின்
கைவண்ணத்தால் காட்டிய கவியே!
வருடங்கள் ஓடினாலும் அந்த பசுமை மாறா நினைவுகளை மரக்கமுடியுமா........
வாழ்த்துகளுடன்....
நன்றிகள்!
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
எல்லாருக்குமான நினைவுகள்... நீண்டிருக்கும்...
சரி...
என் கல்லூரி அனுபவம் வேறு. நான் கல்லூரி தொடங்கிய முதல் 15 நாள் கல்லூரிக்கே செல்ல வில்லை...
ஏன்ன ராகிங் என்பது முதல் 10 நாளுக்குள்ளதான் இருக்கும் அப்புறம் இருக்காது என்ற நினைப்பு. அந்த நினைப்பு என்னை காக்க வைத்தது.
தவிர நான் உடற்கல்வி ஆசிரியர் பட்டம் பெற்றிருந்தால் 2,3 ஆம் ஆண்டு மாணர்கள் எல்லாருமே மதிப்பளித்தார்கள்.
சரி...
என் கல்லூரி அனுபவம் வேறு. நான் கல்லூரி தொடங்கிய முதல் 15 நாள் கல்லூரிக்கே செல்ல வில்லை...
ஏன்ன ராகிங் என்பது முதல் 10 நாளுக்குள்ளதான் இருக்கும் அப்புறம் இருக்காது என்ற நினைப்பு. அந்த நினைப்பு என்னை காக்க வைத்தது.
தவிர நான் உடற்கல்வி ஆசிரியர் பட்டம் பெற்றிருந்தால் 2,3 ஆம் ஆண்டு மாணர்கள் எல்லாருமே மதிப்பளித்தார்கள்.
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
முரளிராஜா, சரண் மற்றும் கவியருவிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பார்த்திபன்- புதியவர்
- பதிவுகள் : 26
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
ரொம்ப அருமை உங்க கல்லூரி நினைவுகள்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
மிக மிக அருமையான கவிதை.
நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருபாலார் பள்ளியில் படித்தேன்.
அதன் பிறகு முதுநிலை பட்டதாரி வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தேன்.
என்ன செய்வது உங்கள் கவிதையை படிக்கும் போது ஒரு ஆதங்கம்
கவிதை ரொம்ப அருமை... தொடர்ந்து எழுதுங்கள். நன்றி தம்பி!
நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருபாலார் பள்ளியில் படித்தேன்.
அதன் பிறகு முதுநிலை பட்டதாரி வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தேன்.
என்ன செய்வது உங்கள் கவிதையை படிக்கும் போது ஒரு ஆதங்கம்
கவிதை ரொம்ப அருமை... தொடர்ந்து எழுதுங்கள். நன்றி தம்பி!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
மீண்டும் பத்தாண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது என் வாழ்க்கை..
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
'மகா'வை நோக்கிதானே ?மகா பிரபு wrote:மீண்டும் பத்தாண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது என் வாழ்க்கை..
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
ஸ்ரீராம் wrote:'மகா'வை நோக்கிதானே ?மகா பிரபு wrote:மீண்டும் பத்தாண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது என் வாழ்க்கை..
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
நானும் வரேன் யார் யார் கிட்ட்ட எப்புடி அடி வாங்கினிங்ககனு பார்க்கமகா பிரபு wrote:மீண்டும் பத்தாண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது என் வாழ்க்கை..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
என் மனதுக்குள்ளும் பசுமையாய் அந்த நினைவுகள்
மறக்க முடியுமா?
_________________________________________________
நீங்கதான் 8 ம் வகுப்பே தேர்ச்சி பெறவில்லை என அண்ணி கரிச்சுக் கொட்டிக்கிட்டு இருக்காங்களே?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
நான் எதுவும் ஸ்ரீ ராமிடம் சொல்லவில்லை அவருக்கு எப்படி இந்த உண்மை தெரிந்தது என்று எனக்கு தெரியாதுமகா பிரபு wrote:ஸ்ரீராம் wrote:'மகா'வை நோக்கிதானே ?மகா பிரபு wrote:மீண்டும் பத்தாண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது என் வாழ்க்கை..
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
செந்தில் wrote:என் மனதுக்குள்ளும் பசுமையாய் அந்த நினைவுகள்
மறக்க முடியுமா?
_________________________________________________
நீங்கதான் 8 ம் வகுப்பே தேர்ச்சி பெறவில்லை என அண்ணி கரிச்சுக் கொட்டிக்கிட்டு இருக்காங்களே?
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
போட்டு பார்த்தேன். விஷயம் வந்துட்டு. அப்ப விஷயம் இருக்குதானே.நான் எதுவும் ஸ்ரீ ராமிடம் சொல்லவில்லை அவருக்கு எப்படி இந்த உண்மை தெரிந்தது என்று எனக்கு தெரியாது
தம்பி மகாபிரபு போன வாரம் எனக்கு ஃபோன் பண்ணினார்... அப்ப பாங்கில் அவர் பெயர் மிஸ்டர். பிரபு என்பதை நான் தவறாக மிஸ்டர் மகா பிரபுனு தவறா சொல்லிட்டேன் முரளி. அப்பதான் சொன்னாரு என் பெயர் பிரபு மட்டும்தானு இருக்கும்னு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
ராணுஜா, திரு.ஸ்ரீராம், மகா பிரபு மற்றும் கவிஞர்.கே.இனியவன் ஆகியோருக்கு என் நன்றிகள்.
பார்த்திபன்- புதியவர்
- பதிவுகள் : 26
Similar topics
» கண்ட நாள் முதல் திரைப்படம்
» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
» இன்று உலக சிக்கன நாள்: குழந்தைகளிடம் சேமிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்; முதல்–அமைச்சர் அறிவுரை
» இன்றைய நாள் வெற்றி நாள்
» இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்
» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
» இன்று உலக சிக்கன நாள்: குழந்தைகளிடம் சேமிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்; முதல்–அமைச்சர் அறிவுரை
» இன்றைய நாள் வெற்றி நாள்
» இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|