Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை !
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நேஷனல் பப்ளிஷர்ஸ் 2.வடக்கு உஸ்மான் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 70. தொலைபேசி 044-28343385.
மின் அஞ்சல் national_publishers@yahoo.com
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நாடறிந்த நல்ல கவிஞர் .கவிக்கோ என்றால் அப்துல் ரகுமான் .அப்துல் ரகுமான் என்றால் கவிக்கோ என்பது அனைவரும் அறிந்த ஒன்று .கவிக்கோ என்ற பட்டத்திற்கு பெருமைகள் சேர்த்தவர் .அவரது புதிய படைப்பு கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை .நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது ."நான் சிற்பி அம்மி கொத்த விருப்பம் இல்லை "என்று சொல்லி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவதில்லை என்ற நல்ல கொள்கையோடு உறுதியாக வாழும் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் .
.
நூலிற்கான முன்னுரையும் கவிக்கோ அவர்களே எழுதி உள்ளார்கள் .
கைதை பற்றிய விளக்கம் மிக நன்று .
ஒளி எல்லா இடங்களில்
ஒளிந்திருக்கிறது
அது சில சந்தர்ப்பங்களில்
வெளிப்படுகிறது
மேகத்திலிருந்து
மின்னலைப் போல்
கல்லிலிருந்து தீப்பொறி போல்
கவிதையும் அப்படித்தான்
ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது !
கவிஞனுக்குள்ளும் இருக்கிறது !
இந்த வரிகளைப் படிக்கும்போது மகாகவி பாரதியின் வைர வரிகள் நினைவிற்கு வந்தது .'"இருள் என்பது இருட்டு அல்ல குறைந்தபட்ச ஒளி"அதுபோலதான் கவிதையும் எங்கும் நிறைந்து உள்ளன . ஒளியை கண்ணில் ஒளியோடு கவிஞன் பார்க்கும்போது கவிதைகள் பிறக்கின்றன .அட்டை முதல் அட்டை வரை அனைத்து கவிதைகளும் நன்றாக இருந்தாலும் ,பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் சொற்ச்சிற்பி என்பதால் அவரது கவிதைகள் சிலைபோல இருக்கும் தேவையற்ற ஒரு சொல்லும் இருக்காது .ஒரு சொல்லுக்கு பல அர்த்தமிருக்கும் .
வாழ்க்கை என்பது புதினம்
எழுதப்படுவதற்கு முன்பே
அதன் முன்னுரையும்
முடிவுரையும்
எழுதப்பட்டு விடுகின்றன .
இந்தப் பூக்களில்
எவை மணமாலைக்கு ?
எவை பிணமாலைக்கு ?
என் பயணத்தின்போது
கேள்விகளையே
என் பெட்டி படுக்கையாய்
எடுத்துச் செல்கிறேன் .
தத்துவ விசாரணை போல கவிதை உள்ளது . தந்தை பெரியார் சொன்னதுபோல எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? என்ற கேள்விகள் கேட்க வேண்டும் .அதுதான் பகுத்தறிவுப் பெற்ற மனிதனுக்கு அழகு என்பதை கவிதையில் உணர்த்துகின்றார்
இந்தப் பூக்களில்
எவை மணமாலைக்கு ?
எவை பிணமாலைக்கு ?
இந்த வரிகளைப் படித்தப் போது கவிஞர் அமுத பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்தது .
இந்தக்காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் !
ஜென் சிந்தனைகள் போல பல கவிதைகள் உள்ளன .வாழ்வின் நிலையாமை உணர்த்தும் கவிதைகளும் உள்ளன .
எந்தப் பூ
மறுபடியும்
இதயத்தில் பூக்குமோ ?
விதி
தொட்டிலைச் செய்யும்போதே
பாடையையும்
செய்துவிடுகிறது !
களையறுக்கும் அரிவாளுக்கும்
தலையறுக்கும் அரிவாளுக்கும்
ஒரே மாதிரி வேலைதான்
செய்கிறான் கொல்லன் !
கவிதை வரிகள் சில என்றாலும் படிக்கும் வாசகனை வெகு நேரம் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கவிக்கோ அப்துல் ரகுமான்அவர்களின் கவிதைகளுக்கு உண்டு கவிதைகளுக்கு மிகவும் பொருத்தமாக நூலின் உள்ள ஓவியங்களும் புகைப்படங்களும் உள்ளன .கவிதைக்கு மேலும் சிறப்பைக் கூட்டும் விதமாக உள்ளன .
நூலின் தலைப்பில் வரும் கவிதை .
கண்ணீர்த் துளிகளெல்லாம்
ஓரிடத்தில் கூடியிருந்தன
ஒரு கண்ணீர்த் துளியில் கூட
முகவரி இல்லை .
காதலனே
உன் சோகமே
என் கண்மை
விடியலிடம் எதோ
மந்திர வித்தை இருக்கிறது
அதன் ஷ்பரிசம்
எல்லாவற்றையும்
அழகாக மாற்றிவிடுகிறது !
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை என்று எதையாவது சிந்தித்து எழுதி இருக்கலாம். ஆனால் எனக்கு கண்ணீர்த் துளிகள் என்பதை படித்தவுடன் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலையே நினைவிற்கு வந்தது .ஈழத் தமிழரின் கண்ணீரைத் துடைக்காமல் நின்ற குற்றவாளிகள் நாம் என்ற குற்ற உணர்வும் வந்தது .
கவிதை
என் சுமைதாங்கி
மெழுகுவர்த்தி
அழுதுகொண்டே சிரிக்கிறது !
அதற்கு
வாழ்க்கையின் தத்துவம்
புரிந்துவிட்டதுபோலும் !
பால் கூடச்
சமைந்தால்
ஆடைக் கட்டிக் கொள்கிறது
நிலாவைப் பற்றிப் பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடாதவர் கவிஞரே இல்லை எனது உண்மை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் நிலா .
நிலா பற்றி நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பார்வை மிகவும் வித்தியாசமானது .இதுவரை யாரும் இப்படிப் பார்க்கவில்லை .
நிலாவுக்குக் கொஞ்சம் கூட
வெட்கமில்லை
என்னைப் பார்க்கும்போதெல்லாம்
அழைக்கிறாள் !
உலகப் பொது மறை படைத்த திருவள்ளுவர் போல அறநெறி எழுதி உள்ளார் .சிலப்பதிகாரத்தை நினைவு படுத்துவது போல எழுதி உள்ளார் .
கவிஞர்களின் வாய்களிலிருந்து
பரல்கள் தெறித்தால்
கொடுங்கோலர்களின் அரசு
கவிழும்
பாவம் செய்த ஊர்கள் எரியும் !
கவிதையின் ஆற்றலை உணர்த்தும் விதமாக எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பாராட்டுக்கள்
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நேஷனல் பப்ளிஷர்ஸ் 2.வடக்கு உஸ்மான் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 70. தொலைபேசி 044-28343385.
மின் அஞ்சல் national_publishers@yahoo.com
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நாடறிந்த நல்ல கவிஞர் .கவிக்கோ என்றால் அப்துல் ரகுமான் .அப்துல் ரகுமான் என்றால் கவிக்கோ என்பது அனைவரும் அறிந்த ஒன்று .கவிக்கோ என்ற பட்டத்திற்கு பெருமைகள் சேர்த்தவர் .அவரது புதிய படைப்பு கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை .நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது ."நான் சிற்பி அம்மி கொத்த விருப்பம் இல்லை "என்று சொல்லி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவதில்லை என்ற நல்ல கொள்கையோடு உறுதியாக வாழும் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் .
.
நூலிற்கான முன்னுரையும் கவிக்கோ அவர்களே எழுதி உள்ளார்கள் .
கைதை பற்றிய விளக்கம் மிக நன்று .
ஒளி எல்லா இடங்களில்
ஒளிந்திருக்கிறது
அது சில சந்தர்ப்பங்களில்
வெளிப்படுகிறது
மேகத்திலிருந்து
மின்னலைப் போல்
கல்லிலிருந்து தீப்பொறி போல்
கவிதையும் அப்படித்தான்
ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது !
கவிஞனுக்குள்ளும் இருக்கிறது !
இந்த வரிகளைப் படிக்கும்போது மகாகவி பாரதியின் வைர வரிகள் நினைவிற்கு வந்தது .'"இருள் என்பது இருட்டு அல்ல குறைந்தபட்ச ஒளி"அதுபோலதான் கவிதையும் எங்கும் நிறைந்து உள்ளன . ஒளியை கண்ணில் ஒளியோடு கவிஞன் பார்க்கும்போது கவிதைகள் பிறக்கின்றன .அட்டை முதல் அட்டை வரை அனைத்து கவிதைகளும் நன்றாக இருந்தாலும் ,பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் சொற்ச்சிற்பி என்பதால் அவரது கவிதைகள் சிலைபோல இருக்கும் தேவையற்ற ஒரு சொல்லும் இருக்காது .ஒரு சொல்லுக்கு பல அர்த்தமிருக்கும் .
வாழ்க்கை என்பது புதினம்
எழுதப்படுவதற்கு முன்பே
அதன் முன்னுரையும்
முடிவுரையும்
எழுதப்பட்டு விடுகின்றன .
இந்தப் பூக்களில்
எவை மணமாலைக்கு ?
எவை பிணமாலைக்கு ?
என் பயணத்தின்போது
கேள்விகளையே
என் பெட்டி படுக்கையாய்
எடுத்துச் செல்கிறேன் .
தத்துவ விசாரணை போல கவிதை உள்ளது . தந்தை பெரியார் சொன்னதுபோல எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? என்ற கேள்விகள் கேட்க வேண்டும் .அதுதான் பகுத்தறிவுப் பெற்ற மனிதனுக்கு அழகு என்பதை கவிதையில் உணர்த்துகின்றார்
இந்தப் பூக்களில்
எவை மணமாலைக்கு ?
எவை பிணமாலைக்கு ?
இந்த வரிகளைப் படித்தப் போது கவிஞர் அமுத பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்தது .
இந்தக்காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் !
ஜென் சிந்தனைகள் போல பல கவிதைகள் உள்ளன .வாழ்வின் நிலையாமை உணர்த்தும் கவிதைகளும் உள்ளன .
எந்தப் பூ
மறுபடியும்
இதயத்தில் பூக்குமோ ?
விதி
தொட்டிலைச் செய்யும்போதே
பாடையையும்
செய்துவிடுகிறது !
களையறுக்கும் அரிவாளுக்கும்
தலையறுக்கும் அரிவாளுக்கும்
ஒரே மாதிரி வேலைதான்
செய்கிறான் கொல்லன் !
கவிதை வரிகள் சில என்றாலும் படிக்கும் வாசகனை வெகு நேரம் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கவிக்கோ அப்துல் ரகுமான்அவர்களின் கவிதைகளுக்கு உண்டு கவிதைகளுக்கு மிகவும் பொருத்தமாக நூலின் உள்ள ஓவியங்களும் புகைப்படங்களும் உள்ளன .கவிதைக்கு மேலும் சிறப்பைக் கூட்டும் விதமாக உள்ளன .
நூலின் தலைப்பில் வரும் கவிதை .
கண்ணீர்த் துளிகளெல்லாம்
ஓரிடத்தில் கூடியிருந்தன
ஒரு கண்ணீர்த் துளியில் கூட
முகவரி இல்லை .
காதலனே
உன் சோகமே
என் கண்மை
விடியலிடம் எதோ
மந்திர வித்தை இருக்கிறது
அதன் ஷ்பரிசம்
எல்லாவற்றையும்
அழகாக மாற்றிவிடுகிறது !
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை என்று எதையாவது சிந்தித்து எழுதி இருக்கலாம். ஆனால் எனக்கு கண்ணீர்த் துளிகள் என்பதை படித்தவுடன் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலையே நினைவிற்கு வந்தது .ஈழத் தமிழரின் கண்ணீரைத் துடைக்காமல் நின்ற குற்றவாளிகள் நாம் என்ற குற்ற உணர்வும் வந்தது .
கவிதை
என் சுமைதாங்கி
மெழுகுவர்த்தி
அழுதுகொண்டே சிரிக்கிறது !
அதற்கு
வாழ்க்கையின் தத்துவம்
புரிந்துவிட்டதுபோலும் !
பால் கூடச்
சமைந்தால்
ஆடைக் கட்டிக் கொள்கிறது
நிலாவைப் பற்றிப் பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடாதவர் கவிஞரே இல்லை எனது உண்மை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் நிலா .
நிலா பற்றி நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பார்வை மிகவும் வித்தியாசமானது .இதுவரை யாரும் இப்படிப் பார்க்கவில்லை .
நிலாவுக்குக் கொஞ்சம் கூட
வெட்கமில்லை
என்னைப் பார்க்கும்போதெல்லாம்
அழைக்கிறாள் !
உலகப் பொது மறை படைத்த திருவள்ளுவர் போல அறநெறி எழுதி உள்ளார் .சிலப்பதிகாரத்தை நினைவு படுத்துவது போல எழுதி உள்ளார் .
கவிஞர்களின் வாய்களிலிருந்து
பரல்கள் தெறித்தால்
கொடுங்கோலர்களின் அரசு
கவிழும்
பாவம் செய்த ஊர்கள் எரியும் !
கவிதையின் ஆற்றலை உணர்த்தும் விதமாக எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பாராட்டுக்கள்
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|