Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
க. மோகனரங்கன்
'சுந்தர ராமசாமி - 75' போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை
1
என்
கண்ணும் கருத்தும்
கூடிக் குறித்து நிற்க
குறுகத் தரித்த வுன்
சிறு தனங்களிலும்
பெருந் தக்கது
பிறி தொன்றறியேன்
பெண் திருவே!
பித்தூறிப்
பீதிக் கனவுகள் பெருகிக்
கனத்த யென்
மத்தகம் குத்தியடக்கும்
அங்குசமும்
அவையே யென
அறிந்து
ஐம்புலனும்
அவிந் தொடுங்கி நின்றேன்
என் தேவே!
'சுந்தர ராமசாமி - 75' போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை
1
என்
கண்ணும் கருத்தும்
கூடிக் குறித்து நிற்க
குறுகத் தரித்த வுன்
சிறு தனங்களிலும்
பெருந் தக்கது
பிறி தொன்றறியேன்
பெண் திருவே!
பித்தூறிப்
பீதிக் கனவுகள் பெருகிக்
கனத்த யென்
மத்தகம் குத்தியடக்கும்
அங்குசமும்
அவையே யென
அறிந்து
ஐம்புலனும்
அவிந் தொடுங்கி நின்றேன்
என் தேவே!
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
2
ஏதிலார் போல்
நோக்கும் தொழில்
ஒழித்து
விருப்போடுன்
விழிவிளை நிலம்
பார்த்திருந்தேன்
காத்திருந்த நொடிகள்
கல்லாகி உறைய
கடுத்த வதனத்தில்
கனிவேது மில்லை
விட்டு விலகி நிற்கவும்
விதி கூடவில்லை
மத்திடைப் பட்ட தயிராய்
புத்தியில் நினைவுகள் திரிபட
பரந்து கெடும்
இவ்வுலகியற்றி யானும்
அளவறியான்
கரவுற்ற நெஞ்சின் நோவு.
ஏதிலார் போல்
நோக்கும் தொழில்
ஒழித்து
விருப்போடுன்
விழிவிளை நிலம்
பார்த்திருந்தேன்
காத்திருந்த நொடிகள்
கல்லாகி உறைய
கடுத்த வதனத்தில்
கனிவேது மில்லை
விட்டு விலகி நிற்கவும்
விதி கூடவில்லை
மத்திடைப் பட்ட தயிராய்
புத்தியில் நினைவுகள் திரிபட
பரந்து கெடும்
இவ்வுலகியற்றி யானும்
அளவறியான்
கரவுற்ற நெஞ்சின் நோவு.
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
3
கற்றும் தேறா
கடையேன் யென்னை
கருணை சற்றுமின்றி
சுற்றி இறுக்கிடும்
முன் வினைப் புரியது
இற்று வீழாதோ யென
ஏங்கியே
என் தேவியே!
உன் பதமிரண்டினையும்
பற்றிச் சரணடைந்தேன்!
நினைவுள் பொத்திவைத்து
நிதமும் பத்தி செய்தேன்
கல்லாப் பிழையும்
கருதாப் பிழையுமென
எளியேன் கணக்கில்
இதுமட்டும் கூடிய
எல்லாப் பிழைகளையும்
இட்டு எரித்தாற் போல
சிவந்து கனலுமந்த
செவ்வடிகளில்
முகம் புதைத்தேன்
முத்த மிட்டேன்
உன்மத்த களி கொண்டு
உயிரார அவற்றிற்கு
ஊழியம் செய்வித்தேன்
கற்றும் தேறா
கடையேன் யென்னை
கருணை சற்றுமின்றி
சுற்றி இறுக்கிடும்
முன் வினைப் புரியது
இற்று வீழாதோ யென
ஏங்கியே
என் தேவியே!
உன் பதமிரண்டினையும்
பற்றிச் சரணடைந்தேன்!
நினைவுள் பொத்திவைத்து
நிதமும் பத்தி செய்தேன்
கல்லாப் பிழையும்
கருதாப் பிழையுமென
எளியேன் கணக்கில்
இதுமட்டும் கூடிய
எல்லாப் பிழைகளையும்
இட்டு எரித்தாற் போல
சிவந்து கனலுமந்த
செவ்வடிகளில்
முகம் புதைத்தேன்
முத்த மிட்டேன்
உன்மத்த களி கொண்டு
உயிரார அவற்றிற்கு
ஊழியம் செய்வித்தேன்
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
4
அரவமேது மின்றி
ஊர் உறங்கும்
யாமத்திலும்,
கண் கொள்ள முடியா
கனவுகள் ஆழத்தில் நீந்த
விழித்திருக்கும்
என் மனம்
புழுவேறிய
தூண்டில் முள்ளென
உன் நினைவு மிதக்கும்
துன்பக் கேணியடி
அரவமேது மின்றி
ஊர் உறங்கும்
யாமத்திலும்,
கண் கொள்ள முடியா
கனவுகள் ஆழத்தில் நீந்த
விழித்திருக்கும்
என் மனம்
புழுவேறிய
தூண்டில் முள்ளென
உன் நினைவு மிதக்கும்
துன்பக் கேணியடி
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
5
இமை தாழும்
உனது கண்நோக்கு
என்றேனும்
எனைக் களவு கொள்ளுமென
நடைவழி நின்றேன்
'உள்ளமனக் குரங்காட்டித் திரியுமென்
உளவறிந்து'*
ஏறிட்ட
உனது புருவங்களினடியில்
பளபளத்த பார்வை
மின் வெட்டிப் போக
அடிவயிறு
கிழிபட்டுத் தொங்கிய
குலை ஈரலின்றும்
பீறிட்டு வழிந்தது
நாறும் மஞ்சள் திரவமாய்
நின் மெலிந்த தேகத்தை
கரந்த காமம்
இமை தாழும்
உனது கண்நோக்கு
என்றேனும்
எனைக் களவு கொள்ளுமென
நடைவழி நின்றேன்
'உள்ளமனக் குரங்காட்டித் திரியுமென்
உளவறிந்து'*
ஏறிட்ட
உனது புருவங்களினடியில்
பளபளத்த பார்வை
மின் வெட்டிப் போக
அடிவயிறு
கிழிபட்டுத் தொங்கிய
குலை ஈரலின்றும்
பீறிட்டு வழிந்தது
நாறும் மஞ்சள் திரவமாய்
நின் மெலிந்த தேகத்தை
கரந்த காமம்
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
6
மிகுதிக் கண்
மேற்சென்று
இடித்துரைக்கச் செய்யாது
நகுதற் பொருட்டென்றே யென்னை
நட்புச் செய்த
நல்லோர் பலரும் கூடி
வியந்து நோக்க
பித்தம் வடிந்து
பிரமை கலைந்து
பேதலித்த புத்தி
நலுங்காமல்
நடுநிற்க
நாளும் துதிக்கிறேன்
மண் நீர் தீ வளி வானென
அனைத்துமாகி நிற்கும்
போதப் பொருளே என் பூரணமே!
மிகுதிக் கண்
மேற்சென்று
இடித்துரைக்கச் செய்யாது
நகுதற் பொருட்டென்றே யென்னை
நட்புச் செய்த
நல்லோர் பலரும் கூடி
வியந்து நோக்க
பித்தம் வடிந்து
பிரமை கலைந்து
பேதலித்த புத்தி
நலுங்காமல்
நடுநிற்க
நாளும் துதிக்கிறேன்
மண் நீர் தீ வளி வானென
அனைத்துமாகி நிற்கும்
போதப் பொருளே என் பூரணமே!
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
7
கண் தொட எட்டி
கைபட எட்டாது
நழுவும்
உனதுடலை
உச்சரிக்கத் தித்திக்கு மொரு
சொல்லாக்கி
உள்ளுக்கு முள்ளே
கிடத்தினேன்
உருவேறத்
திருவாகிய அச் சொல்
திறந்தேகிய
உருவங்கள் ஓராயிரம்
உன் தீராச் சாயல்களில்
சூழ்ந் தென்னை
ஆரத் தழுவியே ஆலிங்கனம் செய்திட
உடல் கொள்ளாது
உயிர் கொதிக்கும்
கடிவாளம் உதறிய
குருதியின் குளம்புகள்
நாளங்களில்
பாயும்
தலை கீழாக
கண் தொட எட்டி
கைபட எட்டாது
நழுவும்
உனதுடலை
உச்சரிக்கத் தித்திக்கு மொரு
சொல்லாக்கி
உள்ளுக்கு முள்ளே
கிடத்தினேன்
உருவேறத்
திருவாகிய அச் சொல்
திறந்தேகிய
உருவங்கள் ஓராயிரம்
உன் தீராச் சாயல்களில்
சூழ்ந் தென்னை
ஆரத் தழுவியே ஆலிங்கனம் செய்திட
உடல் கொள்ளாது
உயிர் கொதிக்கும்
கடிவாளம் உதறிய
குருதியின் குளம்புகள்
நாளங்களில்
பாயும்
தலை கீழாக
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
8
ஓயாது துடிக்கும்
நாடிக்கும் நடுவே
யாதிட்டும் நிறையாத
ஊசி முனைப் பள்ளம்
ஒன்றிருந்து
வாதிக்கும் உயிரை
வழியும்
புறங்கழுத்தின்
கூந்தல் பற்றிக்
குனிந்து வுன்
உச்சி முகர்ந்து
உடல் மணம் தேடி உள்ளிழுக்க
நிறையுமப் பள்ளமென
நினைத்து
கூடுபிரிந்தே
மேவி யெழுந்த என் ஆவியுனை
கூடி முயங்கிய கோலமும் கோணமும்
கூற வாய் துணியேன்!
ஓயாது துடிக்கும்
நாடிக்கும் நடுவே
யாதிட்டும் நிறையாத
ஊசி முனைப் பள்ளம்
ஒன்றிருந்து
வாதிக்கும் உயிரை
வழியும்
புறங்கழுத்தின்
கூந்தல் பற்றிக்
குனிந்து வுன்
உச்சி முகர்ந்து
உடல் மணம் தேடி உள்ளிழுக்க
நிறையுமப் பள்ளமென
நினைத்து
கூடுபிரிந்தே
மேவி யெழுந்த என் ஆவியுனை
கூடி முயங்கிய கோலமும் கோணமும்
கூற வாய் துணியேன்!
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
9
அந்தி தொறும்
ஒளியணைந்து பிறக்கும்
அரையிருளில்
இரை தேடி
மறைவிடம் விட்டு வரும்
விஷ நினைவுகள்
தம் பிளவுண்ட நா நீட்டித்
தொடப் பரவும் அம் மயக்கம்
சருமத் துளை தொறும்
உருகிக் கசிந்த
உயிர்த் தைலம் பற்றி
உந்திச் சுழியில் மூண்ட
தீ
திசுக்கள் ஒவ்வொன்றையும்
தின்று எரிய
வெந்தடங்கியது
எலும்பும் நரம்பும் கூடி
சதை கொண்டு எழுந்தாடிய
விரகம்
கலைந்த படுக்கையில்
நிசி முழுவதும் சுடலை காத்து
விடியவும்
எஞ்சிய சாம்பலை
நுதலில் நீறெனப் பூசி
எழுவாய் காளீ!
அந்தி தொறும்
ஒளியணைந்து பிறக்கும்
அரையிருளில்
இரை தேடி
மறைவிடம் விட்டு வரும்
விஷ நினைவுகள்
தம் பிளவுண்ட நா நீட்டித்
தொடப் பரவும் அம் மயக்கம்
சருமத் துளை தொறும்
உருகிக் கசிந்த
உயிர்த் தைலம் பற்றி
உந்திச் சுழியில் மூண்ட
தீ
திசுக்கள் ஒவ்வொன்றையும்
தின்று எரிய
வெந்தடங்கியது
எலும்பும் நரம்பும் கூடி
சதை கொண்டு எழுந்தாடிய
விரகம்
கலைந்த படுக்கையில்
நிசி முழுவதும் சுடலை காத்து
விடியவும்
எஞ்சிய சாம்பலை
நுதலில் நீறெனப் பூசி
எழுவாய் காளீ!
Re: உறங்காப் பத்து -க. மோகனரங்கன்
10
முன்னைப் பேற்றின் தவத்தால்
என்னை யின்று யிங்கு
ஆட் கொண்டாய்
எண்ணம் போல்
ஆட்டு வித்தாய்
பின்னைப் பிறவிகளுக்கும்
உன்னையே தொழுதேத்தும் பித்தனாய்
உளம் பேதுறச் செய்தாய்
முடிவுறா நடனம் புரிவாய்
'அன்னை! அன்னை!
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.!' #
# பாரதியார்
முன்னைப் பேற்றின் தவத்தால்
என்னை யின்று யிங்கு
ஆட் கொண்டாய்
எண்ணம் போல்
ஆட்டு வித்தாய்
பின்னைப் பிறவிகளுக்கும்
உன்னையே தொழுதேத்தும் பித்தனாய்
உளம் பேதுறச் செய்தாய்
முடிவுறா நடனம் புரிவாய்
'அன்னை! அன்னை!
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.!' #
# பாரதியார்
Similar topics
» 'பத்து'வம் !
» நகைசுவைகள் பத்து ...!!!
» பத்து கட்டளைகள்
» ’பத்து’வம் அது தத்துவம்...!!
» பத்து கட்டளைகள்.
» நகைசுவைகள் பத்து ...!!!
» பத்து கட்டளைகள்
» ’பத்து’வம் அது தத்துவம்...!!
» பத்து கட்டளைகள்.
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|