தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல் அறிவோம்: சீனா

View previous topic View next topic Go down

தகவல் அறிவோம்: சீனா Empty தகவல் அறிவோம்: சீனா

Post by மகா பிரபு Sat Sep 07, 2013 3:53 pm

சீனாவைப் பற்றிய தகவல்கள் நம்மை வியக்கவைக்கின்றன. ஆதிகாலத்திலிருந்தே அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்
களாக இருந்திருக்கிறார்கள். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்:
காற்றாடி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹூவான் ஹெங் என்ற அரசன் சீனாவை ஆண்டுவந்தான். அவன் ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது அவன் தலையில் அணிந்திருந்த பட்டுத்தொப்பி காற்றில் பறந்து சென்றது. அப்பொழுது அதன் நுனியில் ஒரு பட்டு நூல் கட்டப்பட்டிருந்தது.

தொப்பியைப் பிடிக்க அந்த நூலை இழுத்தான். தொப்பி காற்றில் அழகாக பறந்தது. அதைப்பார்த்த அவன் அந்த நூலுடன் மேலும் நூல் கட்டிப் பறக்கவிட்டான். அதுவே உலகின் முதல் காற்றாடி. உலகின் முதல் காற்றாடியை அதாவது பட்டத்தைப் பறக்கவிட்டவர்கள் சீனர்கள்தான். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அந்த நாள் அவர்களுக்கு திருவிழா நாள்.

காகிதப் பணம்: காகிதப் பணத்தை உலகில் முதன்முதலாகப் புழக்கத்துக்கு விட்டவர்களும் சீனர்கள்தான். கி.மு. 119-ஆம் ஆண்டிலேயே சீனர்கள் காகிதப் பணத்தை உருவாக்கிவிட்டனர்.

சட்டை பொத்தான்கள்: சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர். அப்பழக்கத்திற்கு அடிப்படைக்காரணமாக விளங்கியது, கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.

பின்னல்: மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவன் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானான். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டான். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

சின்கூய்: காட்ஹு என்ற சீன மன்னனிடம் சின்கூய் என்பவன் அமைச்சராக இருந்தான். அவன் எதிரிகளிடம் தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்தான் என்று சீனர்கள் நம்புகிறார்கள். அவன் மேலுள்ள தங்கள் வெறுப்பைக் காட்ட, எச்சில் துப்பும் தொட்டிக்கு "சின்கூய்' என்று பெயரிட்டனர். இப்பொழுதும் அங்கு அந்தப் பெயர்தான் வழக்கத்தில் உள்ளது.

சீனத் தலைநகர் மாற்றம்: சீனாவின் தலைநகராக ஆரம்பத்தில் நான்கிங் நகரம்தான் இருந்தது. மிங் வம்சத்து மன்னருக்கும் லிங்வென் என்ற அலுவலருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லிங்வென் நியாயத்தைப் பேசினான். அதனால் மன்னருக்கு அவமானம் ஏற்பட்டது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவன் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அவன், ""அரசன் ஒரு துரோகி. அவனிடம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் சாகும்போதும் செத்த

பின்பும் அவனை "துரோகி' என்றே அழைப்பேன்..'' என்றான்.

மன்னனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே அவன் தலையை வெட்டுங்கள் என்றான். அவன் தலை வெட்டப்பட்டது. அவன் கழுத்திலிருந்து வெளியே வந்த ரத்தம் தரையில் விழுந்தது. அந்த ரத்தம் "துரோகி' என்ற சீன எழுத்துக்களைப் போல தரையில் சிதறியது. அதைக் கண்ட மன்னன் நடுங்கினான். தனக்கு ஆபத்து வரும் என்று பயந்தான். அதனால் உடனே தலைநகரை நான்கிங்கிலிருந்து பீகிங்கிற்கு மாற்றிவிட்டான்.

2300 மைல்கள் எடுத்துச் செல்லப்பட்ட சடலம்:

சீனத் தளபதி யிகன் என்பவரது சடலம் 1912-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பீகிங்கிலிருந்து புறப்பட்டு 2300 மைல்கள் கொண்டுசெல்லப்பட்டு 1913 ஜூலை 1-ஆம் தேதி, 14 மாதங்கள் கடந்து சிக்கியாங்கில் அடக்கம் செய்யப்பட்டது. இத்தனைக்காலம், கடந்து, கொண்டு செல்லப்பட்ட சவ ஊர்வலம் உலகிலேயே அது ஒன்றுதான்!

எலி ஆண்டின் சிறப்பு:

சீனர்கள் ஒவ்வொரு ஆண்டையும் எலி, எருது, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, வெள்ளாடு, குரங்கு, நாய், பன்றி போன்ற பிராணிகளின் ஆண்டுகளாகக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு அவர்களுக்கு பாம்பு ஆண்டு. ஆனால் அவர்கள் எலி ஆண்டையே மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். புத்தர் இந்த பூமியை விட்டு புறப்படுவதற்கு முன்பு, தன்னிடம் அனைத்து உயிரினங்களும் வந்து சரணடையும்படிக் கூறினாராம். அனைத்து உயிரினங்களையும் முந்திக் கொண்டு எலி முன்வந்து புத்தரிடம் சரணடைந்ததாம். அதனால் சீனர்கள் எலி உருவத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த எலி ஆண்டில் வணிகம், விவசாயம், தொழில், மக்களின் உடல் நலம் ஆகிய அனைத்தும் செழிப்பாக இருக்குமாம். எலி ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் அழகாகவும் அறிவுள்ளவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்றும் நம்புகிறார்கள்.

சீனப் பழமொழிகள் சில!


1. இரவும் பகலும் சிறைச்சாலை மூடியே இருக்கிறது. ஆனால் அது எப்பொழுதும் நிறைந்திருக்கிறது. ஆலயங்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. ஆனால் ஆட்களே இருப்பதில்லை!

2. தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை. தந்தையின் மௌனத்திற்குத்தான் அஞ்சுகிறான்.

3. ஒருவன் நீதிமன்றத்திற்குப் போகிறான் என்றால் ஒரு பூனையை மீட்க, ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்.

4. ஒரு கேள்வியைக் கேட்பவன் அந்த ஒரு நிமிடத்திற்கு மட்டும் வேண்டுமானால் முட்டாளாக இருக்கலாம். ஆனால் கேள்வியே கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள்தான்!

5. கட்டளையின்படி நடப்பதால் கிளிகள் கூண்டில் உள்ளன. கட்டளையின்படி நடக்காதபடியால் காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.

- என்.ஆர். ஜெயசந்திரன், காவேரிப்பட்டணம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் அறிவோம்: சீனா Empty Re: தகவல் அறிவோம்: சீனா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 07, 2013 4:31 pm

3. ஒருவன் நீதிமன்றத்திற்குப் போகிறான் என்றால் ஒரு பூனையை மீட்க, ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்.
அங்கேயுமா இந்த நிலைமை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகவல் அறிவோம்: சீனா Empty Re: தகவல் அறிவோம்: சீனா

Post by மகா பிரபு Sat Sep 07, 2013 4:43 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
3. ஒருவன் நீதிமன்றத்திற்குப் போகிறான் என்றால் ஒரு பூனையை மீட்க, ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்.
அங்கேயுமா இந்த நிலைமை
எல்லா நாட்டிலும் இதே நிலை தான் போல..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகவல் அறிவோம்: சீனா Empty Re: தகவல் அறிவோம்: சீனா

Post by Muthumohamed Sun Sep 08, 2013 12:16 am

தெரிந்துகொண்டோம் பகிர்வுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் அறிவோம்: சீனா Empty Re: தகவல் அறிவோம்: சீனா

Post by முரளிராஜா Wed Sep 25, 2013 2:19 pm

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகவல் அறிவோம்: சீனா Empty Re: தகவல் அறிவோம்: சீனா

Post by mohaideen Wed Sep 25, 2013 4:04 pm

சீனா பற்றிய தகவல்களுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தகவல் அறிவோம்: சீனா Empty Re: தகவல் அறிவோம்: சீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum