Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் ஆரோக்கியம்மாக இருக்க யோகாசனங்கள்
Page 1 of 1 • Share
உடல் ஆரோக்கியம்மாக இருக்க யோகாசனங்கள்
சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!
யோகாசனம் செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. இது உள் உறுப்புகளான நுரையீரல், கல்லீரல் ஆகியவை நன்றாக இயங்க உதவுகிறது. ஒவ்வொரு உறுப்புகளும் இயங்க அவற்றிற்குத் தேவையான ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்கிறது.
ரத்தமானது ஒரே சீராக அனைத்துப் பகுதிகளுக்கும் பாய்வதற்கு யோகாசனம் உதவுகிறது. மருந்தில்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ யோகாசனம் செய்யலாம்.
மயூராசனம்:
மயூர் ஆசனம் என்றால் மயில் எனப் பெயர், முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச சேர்த்து தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புகளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு மறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம்.
பலன்கள்: வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத் ஓட்டம் ஏற்படும். ஜுரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.
கோமுகாசனம்:
செய்முறை......
முதலில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். இடக்காலின் முழங்காலை மடித்து பின்புறமாகக் கொண்டு சென்று இடக்காலின் மீது அமரவும். முழங்கால் தரைமீது இருப்பது போல வைக்கவும். வலக்காலை வளைத்து, இடக்காலுக்கு மறுபுறம் கொண்டு செல்லவும், அப்போது வலது பக்க முழங்கால், இடது பக்க முழங்காலுக்கு மேலாக இருக்க வேண்டும்.
வலது பாதத்தை இடது பிருஷ்டத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும். வலது பக்க முழங்கையை மடித்து, கீழ்ப் புறமாக வளைத்து, முதுகுப்புறம் கொண்டுவரவும். இடக்கையை வளைத்துத் தலைக்கு மேலாகப் பின்புறம் கொண்டு செல்லவும். மூச்சை உள்ளிழுத்து கைகளின் விரல்களை ஒற்றை ஒன்று பிடிக்க வேண்டும். சுவாசம் இயல்பாக இருக்கட்டும்.
இந்த நிலையில் மூச்சினை நன்றாக இழுத்து விடவும். மூச்சை வெளியில் விட்டு, பிடித்த விரல்களை விட வேண்டும். பின்புறம் கைகளை மெதுவாக எடுத்து முன்புறம் கொண்டு செல்லவும். மேலே உள்ள வலக்காலை மெதுவாக நீட்டவும். இடக்காலை நீட்டி ஆரம்ப நிலைக்குக் கொண்டு வரவும். வலக்காலை முதலில் மடக்கியும் இதனைச் செய்யலாம்.
பலன்கள்......
தோல் தசைகள் மற்றும் மரபுக் கூட்டுத் தசைகளை வழுவடையச் செய்கிறது. அயர்வடைந்த கணுக்கால் மூடுத்தசைகள், நுனிக்கால் தசைகளைப் புத்துணர்வு பெறச் செய்கிறது. முதுகு வலி மற்றும் தசைகளின் வலிகளை நீக்கும் ஆசனமாகும்.
அஷ்டாங்க நமஸ்காரம்
முதலில் தரையில் மல்லந்து படுத்து கொள்ளவும். பின்னர் மெதுவாக உள்ளங்கையை தரையில் ஊன்றி மார்பு மற்றும் தாடை தரையில் படிந்திருக்க வயிறு, பின்புறத்தை மேல் நோக்கி தூக்க வேண்டும். இப்போது பார்க்க கோபுரம் போல் இருக்கும்(படத்தில் உள்ளது போல்). சின், மார்பு, இரண்டு கைகள், இரண்டு முழங்கால், மற்றும் இரண்டு கால்விரல்கள் தரையில் படும்படி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்த பின் இயல்பான நிலைக்க வரவும். இந்த ஆசனத்தை செய்யும் போது மிகவும் பொறுமையாக, இயல்பாக சுவாசத்தில் செய்ய வேண்டும். மூன்று முறை செய்தால் போதுமானது. இந்த ஆசனம் செய்யும் போது முதுகெலும்பு மையத்தில் தொப்புள் பின்னால் அமைந்துள்ள உங்கள் மணிப்பூர் சக்கரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பயன்கள்....
இந்த ஆசனம் செய்வதால் வயிற்றில் அனைத்து பகுதிகளுக்கும் சக்தி கிடைக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
மேலும் பல ஆசனங்களை ஏன் அடுத்தப்பதிவில் பகிர்வேன். மேற்கண்ட ஆசனங்களை அவசியம் செய்துப்பாருங்கள், படங்களை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடாதீர்கள்
நன்றி மாலைமலர்
தொகுத்து வழங்கியது உங்கள் கௌரிசங்கர் :fit:
யோகாசனம் செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. இது உள் உறுப்புகளான நுரையீரல், கல்லீரல் ஆகியவை நன்றாக இயங்க உதவுகிறது. ஒவ்வொரு உறுப்புகளும் இயங்க அவற்றிற்குத் தேவையான ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்கிறது.
ரத்தமானது ஒரே சீராக அனைத்துப் பகுதிகளுக்கும் பாய்வதற்கு யோகாசனம் உதவுகிறது. மருந்தில்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ யோகாசனம் செய்யலாம்.
மயூராசனம்:
மயூர் ஆசனம் என்றால் மயில் எனப் பெயர், முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச சேர்த்து தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புகளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு மறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம்.
பலன்கள்: வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத் ஓட்டம் ஏற்படும். ஜுரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.
கோமுகாசனம்:
செய்முறை......
முதலில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். இடக்காலின் முழங்காலை மடித்து பின்புறமாகக் கொண்டு சென்று இடக்காலின் மீது அமரவும். முழங்கால் தரைமீது இருப்பது போல வைக்கவும். வலக்காலை வளைத்து, இடக்காலுக்கு மறுபுறம் கொண்டு செல்லவும், அப்போது வலது பக்க முழங்கால், இடது பக்க முழங்காலுக்கு மேலாக இருக்க வேண்டும்.
வலது பாதத்தை இடது பிருஷ்டத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும். வலது பக்க முழங்கையை மடித்து, கீழ்ப் புறமாக வளைத்து, முதுகுப்புறம் கொண்டுவரவும். இடக்கையை வளைத்துத் தலைக்கு மேலாகப் பின்புறம் கொண்டு செல்லவும். மூச்சை உள்ளிழுத்து கைகளின் விரல்களை ஒற்றை ஒன்று பிடிக்க வேண்டும். சுவாசம் இயல்பாக இருக்கட்டும்.
இந்த நிலையில் மூச்சினை நன்றாக இழுத்து விடவும். மூச்சை வெளியில் விட்டு, பிடித்த விரல்களை விட வேண்டும். பின்புறம் கைகளை மெதுவாக எடுத்து முன்புறம் கொண்டு செல்லவும். மேலே உள்ள வலக்காலை மெதுவாக நீட்டவும். இடக்காலை நீட்டி ஆரம்ப நிலைக்குக் கொண்டு வரவும். வலக்காலை முதலில் மடக்கியும் இதனைச் செய்யலாம்.
பலன்கள்......
தோல் தசைகள் மற்றும் மரபுக் கூட்டுத் தசைகளை வழுவடையச் செய்கிறது. அயர்வடைந்த கணுக்கால் மூடுத்தசைகள், நுனிக்கால் தசைகளைப் புத்துணர்வு பெறச் செய்கிறது. முதுகு வலி மற்றும் தசைகளின் வலிகளை நீக்கும் ஆசனமாகும்.
அஷ்டாங்க நமஸ்காரம்
முதலில் தரையில் மல்லந்து படுத்து கொள்ளவும். பின்னர் மெதுவாக உள்ளங்கையை தரையில் ஊன்றி மார்பு மற்றும் தாடை தரையில் படிந்திருக்க வயிறு, பின்புறத்தை மேல் நோக்கி தூக்க வேண்டும். இப்போது பார்க்க கோபுரம் போல் இருக்கும்(படத்தில் உள்ளது போல்). சின், மார்பு, இரண்டு கைகள், இரண்டு முழங்கால், மற்றும் இரண்டு கால்விரல்கள் தரையில் படும்படி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்த பின் இயல்பான நிலைக்க வரவும். இந்த ஆசனத்தை செய்யும் போது மிகவும் பொறுமையாக, இயல்பாக சுவாசத்தில் செய்ய வேண்டும். மூன்று முறை செய்தால் போதுமானது. இந்த ஆசனம் செய்யும் போது முதுகெலும்பு மையத்தில் தொப்புள் பின்னால் அமைந்துள்ள உங்கள் மணிப்பூர் சக்கரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பயன்கள்....
இந்த ஆசனம் செய்வதால் வயிற்றில் அனைத்து பகுதிகளுக்கும் சக்தி கிடைக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
மேலும் பல ஆசனங்களை ஏன் அடுத்தப்பதிவில் பகிர்வேன். மேற்கண்ட ஆசனங்களை அவசியம் செய்துப்பாருங்கள், படங்களை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடாதீர்கள்
நன்றி மாலைமலர்
தொகுத்து வழங்கியது உங்கள் கௌரிசங்கர் :fit:
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உடல் ஆரோக்கியம்மாக இருக்க யோகாசனங்கள்
யோகாசானம் செய்வதால் பல நன்மைகள் உண்டாகிறது
அதிகம் மருத்தவமனை செல்லும் அவலம் இருக்காது
பகிர்வுக்கு நன்றி சகோ
அதிகம் மருத்தவமனை செல்லும் அவலம் இருக்காது
பகிர்வுக்கு நன்றி சகோ
Similar topics
» உடல் எலும்புகள் பலமாக இருக்க
» உடல் எடை கூடாமல் அழகாக இருக்க...
» இளம் பெண்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க அழகாகவும் ஜொலிக்க
» உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க சில சத்தான உணவுகள்.
» உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க...
» உடல் எடை கூடாமல் அழகாக இருக்க...
» இளம் பெண்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க அழகாகவும் ஜொலிக்க
» உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க சில சத்தான உணவுகள்.
» உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|