Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
Page 1 of 1 • Share
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
தமிழகத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் மிகச் சிறந்த நீர்வீழ்ச்சி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியாகும். தருமபுரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் 48 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஹோகேனக்கல் உள்ளது.
காவேரியின் துணை நதி ஒன்றுதான் இங்கு நீர்வீழ்ச்சியாக உருமாறியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 250 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியை இந்தியாவின் நயாகரா என்று கூட அழைப்பார்கள். இங்குள்ள படகுப் போக்குவரத்து சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த ஒரு விஷயமாகும்.
காவேரியின் கிளை நதி பாறையில் இருந்து சரிந்து பாறை மீது விழும் போது எழும் சப்தம் அழகான இசை மழையாகும். கன்னடாவில், ஹோக் என்றால் புகை.கல் என்றால் பாறை. பாறை மீது தண்ணீர் விழும் போது எழும் சாறல் புகை போல காட்சியளிப்பதால் இதற்கு ஹோகேனக்கல் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விரிந்து பறந்து வரும் காவேரியில் இருந்து சிறிய கிளை நதியாக பிரிந்து ஹோகேனக்கலில் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இவ்விடம் விரிந்து பறந்து காணப்படுகிறது.
இயற்கைக் காட்சிகள்
ஹோகேனக்கல்லுக்குச் செல்லும் வழிகளும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளாகக் காணப்படும். தமிழகத்தின் அழகை பறைசாற்றும் கிராமங்களின் தோற்றமும், ஆங்காங்கே வீற்றிருக்கும் கிராம தெய்வங்களும், மல்பெர்ரி மரங்களும் கண்களுக்கு சிறந்த விருந்தாக அமையும்.
படகு சவாரி
ஹோகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புவது படகுச் சவாரியைத்தான். பொதுவாக கோடைக் காலத்தில் காவிரியில் அதிகம் தண்ணீர் கொட்டாது. அப்போதுதான் படகுச் சவாரி எந்த தடையும் இல்லாமல் இருக்கும். ஆனால், நீர்வீழ்ச்சியின் அழகைக் காண தண்ணீர் அதிகம் கொட்டும் காலத்தில் வருவது நல்லது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து படகுகள் இயக்கப்படுகின்றன. ஒரே ஒரு துடுப்பைக் கொண்டு இந்த படகுகள் இயக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் ஒரு படகில் 8 பேர் வரை ஏற்றப்படுவர்.
சுற்றுலா செல்ல உரிய காலம்
பொதுவாக மழைக்காலம் முடிந்து குளிர் காலம் துவங்கும் போது இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். மழைக் காலங்களில் பல நேரங்களில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் அந்த நேரத்தை தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டுமானால், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரலாம். பலரும், கோடை விடுமுறையில் இங்கு வர விரும்புவதும் உண்டு.
தண்ணீர், உணவு வசதி
இங்கு குடிநீர் மற்றும் உணவு வசதி குறைவு. எனவே, எங்கிருந்து வந்தாலும், உங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடி நீரை நீங்களே எடுத்து வருவது நல்லது.
மீன் விற்பனையும் படுஜோர்
இங்கு புதிதாக பிடிக்கப்படும் மீன் வகைகளும் அதிகமாக விற்கப்படுகிறது. காவிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பிடிபடும் மீன்கள் பிடித்தவுடன் விற்பனைக்கு வருவதால், அதனை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள்.
தினமணி
காவேரியின் துணை நதி ஒன்றுதான் இங்கு நீர்வீழ்ச்சியாக உருமாறியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 250 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியை இந்தியாவின் நயாகரா என்று கூட அழைப்பார்கள். இங்குள்ள படகுப் போக்குவரத்து சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த ஒரு விஷயமாகும்.
காவேரியின் கிளை நதி பாறையில் இருந்து சரிந்து பாறை மீது விழும் போது எழும் சப்தம் அழகான இசை மழையாகும். கன்னடாவில், ஹோக் என்றால் புகை.கல் என்றால் பாறை. பாறை மீது தண்ணீர் விழும் போது எழும் சாறல் புகை போல காட்சியளிப்பதால் இதற்கு ஹோகேனக்கல் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விரிந்து பறந்து வரும் காவேரியில் இருந்து சிறிய கிளை நதியாக பிரிந்து ஹோகேனக்கலில் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இவ்விடம் விரிந்து பறந்து காணப்படுகிறது.
இயற்கைக் காட்சிகள்
ஹோகேனக்கல்லுக்குச் செல்லும் வழிகளும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளாகக் காணப்படும். தமிழகத்தின் அழகை பறைசாற்றும் கிராமங்களின் தோற்றமும், ஆங்காங்கே வீற்றிருக்கும் கிராம தெய்வங்களும், மல்பெர்ரி மரங்களும் கண்களுக்கு சிறந்த விருந்தாக அமையும்.
படகு சவாரி
ஹோகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புவது படகுச் சவாரியைத்தான். பொதுவாக கோடைக் காலத்தில் காவிரியில் அதிகம் தண்ணீர் கொட்டாது. அப்போதுதான் படகுச் சவாரி எந்த தடையும் இல்லாமல் இருக்கும். ஆனால், நீர்வீழ்ச்சியின் அழகைக் காண தண்ணீர் அதிகம் கொட்டும் காலத்தில் வருவது நல்லது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து படகுகள் இயக்கப்படுகின்றன. ஒரே ஒரு துடுப்பைக் கொண்டு இந்த படகுகள் இயக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் ஒரு படகில் 8 பேர் வரை ஏற்றப்படுவர்.
சுற்றுலா செல்ல உரிய காலம்
பொதுவாக மழைக்காலம் முடிந்து குளிர் காலம் துவங்கும் போது இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். மழைக் காலங்களில் பல நேரங்களில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் அந்த நேரத்தை தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டுமானால், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரலாம். பலரும், கோடை விடுமுறையில் இங்கு வர விரும்புவதும் உண்டு.
தண்ணீர், உணவு வசதி
இங்கு குடிநீர் மற்றும் உணவு வசதி குறைவு. எனவே, எங்கிருந்து வந்தாலும், உங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடி நீரை நீங்களே எடுத்து வருவது நல்லது.
மீன் விற்பனையும் படுஜோர்
இங்கு புதிதாக பிடிக்கப்படும் மீன் வகைகளும் அதிகமாக விற்கப்படுகிறது. காவிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பிடிபடும் மீன்கள் பிடித்தவுடன் விற்பனைக்கு வருவதால், அதனை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள்.
தினமணி
Re: ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
நான் பலமுறை சென்றுள்ளேன். எத்தனை முறை சென்றாலும் சலிக்காத மிக அழகான இடம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
ஒகேனக்கல் பற்றிய பகிர்வுக்கு நன்றி மகா பிரபு.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
நானும் எங்க ஊர் நண்பர்களும் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருகிறோம்...
பொங்கலுக்கும் சென்று வந்தோம்...
படங்கள் பின்னர் பதிகிறேன்...
நாம் மீனை வாங்கித்தந்தால் உடனே வறுத்தோ குழம்பு வைத்து கொடுக்கவோ ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்...
பிரபு... சாப்பாட்டுக்கும் இப்போதெல்லாம் பிரச்சினைகள் இல்லை... எல்லாம் கிடைக்கிறது.
பொங்கலுக்கும் சென்று வந்தோம்...
படங்கள் பின்னர் பதிகிறேன்...
நாம் மீனை வாங்கித்தந்தால் உடனே வறுத்தோ குழம்பு வைத்து கொடுக்கவோ ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்...
பிரபு... சாப்பாட்டுக்கும் இப்போதெல்லாம் பிரச்சினைகள் இல்லை... எல்லாம் கிடைக்கிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|