Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?
Page 1 of 1 • Share
மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?
பருவ மழையை எதிர்கொள்ள குடை, ரெயின்கோட் மட்டுமே நம் பாதுகாப்புக் கவசங்களாக நினைக்கிறோம். ஆனால், மழை கொண்டுவரப்போகும் எண்ணிலடங்கா வியாதிகளிடமிருந்து நம்மை எப்படிக் காப்பது?
பொதுநல சிறப்பு மருத்துவரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான ஜி.சதீஷ்குமார், மழைக் கால நோய்களில் இருந்து மீள்வதற்கான வழிகளை விவரிக்கிறார்...
'பருவ காலங்கள் எதுவானாலும் வியாதிகளைப் பரப்புவதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாரசைட் போன்றவைதான் பிரதானம். அதிலும் மழைக் காலத்தில், சாதாரண சளியில் தொடங்கி, மூக்கடைப்பு, இருமல், காய்ச்சல் எனப் பல்வேறு நோய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றித் தாக்கலாம். இந்த உபாதைகளைத் தவிர்க்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் கவனம் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு குறையும்போதுதான், தொற்றுக் கிருமிகளுக்கு நம் உடல் வரவேற்பு சொல்லும்.
மழைக் காலத்தில் உரிய வடிகால்கள் அமையாவிட்டாலோ அல்லது அவை அடைத்துக்கொண்டாலோ, உருவாகும் குட்டி நீர்த்தேக்கங்கள்தான் கொசுப் பட்டாளத்துக்கு கெஸ்ட் ஹவுஸ். அசுத்த நீர் மட்டுமா... குடிநீர், மழைநீர் போன்ற தூய்மையான நீர்ப்பரப்பும்கூட மலேரியா, டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களுக்கு அடைக்கலம் தந்துவிடும். எனவே, வீட்டுக்குள்ளும், வெளியேயும் நீர் தேங்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.
>> வாட்டர் டேங்கிலும்கூட கொசு ஊடுருவும் இடைவெளிகளைப் பார்த்து அடைத்துவிடுவது நல்லது. கூடுதல் உபயோகத்துக்கு அதிகப்படியாக குடிநீர் பிடித்துவைத்திருக்கும் பாத்திரங்களையும்கூட, தூய்மையான துணியால் வேடு கட்டி, அதன் மேல் வழக்கமான மூடிகளைக்கொண்டு மூடலாம்.
>> மழை நீர் பெருக்கத்தில், குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்துவிடுவது சாதாரணமாக நடக்கும். அதை உத்தேசித்து, வீட்டைச் சுற்றி அசுத்தம் அதிகமாகும் நாட்களில் ப்ளீச்சிங் பவுடரை உபயோகிக்கலாம்.
>> மழை சீஸனில் மிகவும் சாதாரணமானது, ஃப்ளூ காய்ச்சல். மூன்று முதல் ஐந்து தினங்கள் மட்டுமே அதன் பாதிப்பு இருக்கும். ஆனால், வந்திருப்பது சாதாரண காய்ச்சலா அல்லது மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற விபரீதக் காய்ச்சலா என்று உணர முடியாதபட்சத்தில், காய்ச்சல் வந்ததும் அவசரத்துக்கு கைவசமிருக்கும் 'பாராசிட்டமால்’ மாத்திரைகளைப் பயன்படுத்திக்கொள்தல் தவறில்லை. இரண்டாவது நாளும் அதன் வீரியம் குறையாதுபோனால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
>> வீட்டுக்குள்ளே துணி மூட்டைகள் மற்றும் சுத்தமில்லாத இடங்களில், கொசுக்கள் அதிகம் அடைக்கலமாகும். திரைச்சீலைகள் அலங்கார விரிப்புகளையும்கூட மழைக் காலத்துக்கான கூடுதல் கவனிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
>> குழந்தை முதல் பெரியவர் வரை கொசுத் தொந்தரவு இல்லாத உறக்கத்துக்கு கொசுவலைதான் பெஸ்ட். பிற்காலத்திய மூச்சு தொடர்பான பக்கவிளைவுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் புகை, லிக்யூட், மேட் என ரகம் ரகமான கொசு விரட்டிகள் பயன்படுத்தும் விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும்'' என்று பாதுகாப்பு டிப்ஸ்களை வழங்கிய டாக்டர் சதீஷ்குமார், வைரஸ் கிருமிகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்.
''பொதுவாக, வைரஸ் காய்ச்சல்களில் சாதாரண ஃப்ளூவில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை சுமார் 21 ரகங்கள் அடையாளம் காணப்படுகின்றன. இதில், உடலின் உள் அவயங்களில் ரத்தப்போக்கை உண்டாக்கும் டெங்கு மற்றும் ஆப்பிரிக்க இறக்குமதியான யெல்லோ ஃபீவர் போன்ற விபரீதக் காய்ச்சல்களும் அடக்கம்.
சென்ற வருட அனுபவத்தின் அடிப்படையில், இந்த மழை சீஸனில் நாம் அதிகம் எதிர்த்துப் போரிட வேண்டியது டெங்கு கொசுவாகத்தான் இருக்கும்.
டெங்குவை வரவழைக்கும் 'ஏடிஸ் எஜிப்டி’ பெண் கொசுக்கள் கடிப்பதால், நமது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம், கேரள மாநிலங்களை அதிகம் பாதித்த சிக்குன்குன்யாவும் வைரஸ் காய்ச்சல்தான். வைரஸ் போலவே பாரசைட் தொற்று உண்ணிகள் பரப்பும் காய்ச்சலான மலேரியா, எல்லா சீஸனிலும் வரும். ஆனால், இவை மழைக் காலத்தில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும். இந்த பாரசைட்டின் மற்றொரு முகம் யானைக்கால் வியாதி. இவை தவிர, பாக்டீரியா காய்ச்சலான டைபாய்டு மழை சீஸனில் சூடு பிடிக்கும். ஐந்து நாட்களைத் தாண்டியும் காய்ச்சல் தொடர்ந்தால், ரத்தப் பரிசோதனை மூலம் டைபாய்டை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.'' என்ற டாக்டர் சதீஷ், கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை அலசினார்.
>> மழைக் காலத்தில் இயல்பாகவே உடலின் ஜீரண சக்தி குறைந்துவிடுவதால், அதிகம் காரம், எண்ணெய், மசாலா கலந்த உணவுகளை ஒதுக்கிவிடலாம்.
>> வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமற்ற சூழலால் ஏற்படும் வாந்தி பேதியை இது தவிர்க்கும்.
>> உடல்நலக் குறைவானவர்களுக்கு இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த எளிமையான உணவுகளே உகந்தது.
>> குளிர் காலத்தில் நாம் வழக்கமாக அருந்தும் காபி, டீக்கு மாற்றாக, காய்கறி சூப் அருந்தலாம். சமையலுக்கு, கொதித்து ஆறியதை வடிகட்டி உபயோகிப்பதே உசிதமானது.
>> மழையில், பலரும் தலைக்குக் குளிப்பதைத் தவிர்த்துவிடுவது உண்டு. இதனால், தலையில் தொற்றுகள் அதிகமாகும். தலைக்குக் குளித்ததும், கேசத்தை நன்றாக உலர்த்த வேண்டும். சைனஸ், தலைப்பாரம், ஒற்றைத் தலைவலிப் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
>> சுற்றுப்புறத்தில் எலி நடமாட்டம் இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திவிடவேண்டும்.
>> குழந்தைகளை தேங்கிக்கிடக்கும் நீரில் விளையாடவிடுவது தவறு.
>> உலராத உடைகளை அணிவது, நனைந்த உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது போன்றவை பூஞ்சைத் தொற்றுக்கு வரவேற்பு சொல்லும்.
>> வெளியே சென்றுவிட்டு வந்ததும், பாதங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.
>> குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் என்றபோதிலும், ஓய்வுடன் கூடிய விடுமுறை அனைவருக்கும் நல்லது.
தூய்மை மற்றும் சுகாதாரம் பேணுவதை நம்மிடம் இருந்து துவக்கி, அந்த வட்டத்தை முடிந்தவரை விரிவுபடுத்துவதை மறக்க வேண்டாம்' என்று முத்தாய்ப்போடு முடித்தார் சதீஷ்குமார்.
நன்றி: டாக்டர் விகடன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?
மழைக்காலத்தில் வரும் தொற்று நோய்கள்:
டைபாய்ட் காய்ச்சல்
கிருமி : சல்மோனெலி டைபி (Salmonilla Typhi) இந்த கிருமி மிகவும் பொதுவானது.
பரவும் முறை: அசுத்தமான உணவு, குளிர்பானங்கள், குடிநீர் வழியே பரவும்.
ஆரம்ப அறிகுறிகள்: காய்ச்சல், பொதுவான மாறுபட்ட உடல் சோர்வு, உடல் நல மாற்றம், வயிற்று வலி, வயிற்றிலும் அல்லது மார்பிலும் சிலருக்கு அரிப்பு தோன்றும். "ரோஸ் ஸ்பாட்' என்றழைக்கப்படும் சிறு சிவப்புப் புள்ளிகளின் தோற்றம், வயிற்றில் குறிப்பிட்ட இடத்தில் பலவீனம், மலத்தில் ரத்தம், குளிர், பதற்றம், நிலையற்ற மனநிலை, தீவிர மயக்க நிலை, மெதுவான சோம்பல் நிலையுடன் சோர்வாகக் காணப்படும், உடலில் சோர்வு மற்றும் தளர்ச்சி, பலவீனம்.
பரிசோதனைகள்: முழுமையான ரத்தப் பரிசோதனை (CBC)
முதல் வாரம் - ரத்த வளர்சோதனை (Blood Culture)
இரண்டாவது வாரம் - ப்ளோரசன்ட் உடல் எதிர்பிகள் (Fluroscent Antibody)
மூன்றாவது வாரம் - ரத்த அணுக்கள் (குறைவுபடும்) (Low Platelet Count)
நான்காவது வாரம் - மலம் வளர் சோதனை (Stool Culture)
விளைவுகள்: குடலில் ரத்தக் கசிவு, குடலில் துளை ஏற்பட்டு ரத்த வெளியேற்றம், சிறுநீரகம் செயலிழத்தல்
தடுப்பு முறைகள்: குடிநீர்க் காய்ச்சிக் குடித்தல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல், உடல்நல முறைகளைப் பின்பற்றுதல்.
கிருமி : லெப்டோஸ்பைரா பாக்டீரியா (ஃஞுணீtணிண்ணீடிணூச் ஞச்ஞிtஞுணூடிச்)
பரவும் வழி : அதிக எண்ணிக்கையாக கொறிவிலங்கு (கீணிஞீஞுணtண்) பிராணிகளின் சிறுநீர் மூலம் பரவும்.
அறிகுறிகள் : 4 முதல் அல்லது 14 நாள் அன்று நோயின் அறிகுறி தென்படும்.
முதல்நிலை : (சளிக்காய்ச்சல் (ஊடூத) போல் தென்படும்) வறட்டு இருமல், அதிகமான காய்ச்சல், பயங்கர தலைவலி, உடல் வலி, வாந்தி, பேதி, உடலில் நடுக்கம்.
இரண்டாம் நிலை : மூளை காய்ச்சல், ஈரல் பாதிப்பும், மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிழப்பு.
பரிசோதனைகள் / நோயறியும் ஆய்வுகள் : - ரத்த அணtடிஞணிஞீடிஞுண் அறிதல், - முழுமையான ரத்தப் பரிசோதனை (இஆஇ), - பெருமூளைத் தண்டு வட மண்டலம் (இகுஊ ஊடூதிடிஞீ), - ஈரல் செரிமானப் பொருள் வகை அறிதல், - சிறுநீர் சோதனை
விளைவுகள்: - மூளைக் காய்ச்சல், ரத்த கசிவு: ஹெப்படைடிஸ் அ வைரஸ்
ஹெப்படைடிஸ் அ வைரஸ்
கிருமி : ஹெப்படைடிஸ் அ வைரஸ் Hep A.Virus
பரவும் முறை : வெளி உணவகங்களின் மூலம் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலம், மலக்கழிவுகளால் ஏற்படும். சாக்கடை நீர்க் கலப்பினாலோ, கழிவுப் பொருட்களினால் உண்டாகிய காய், கனிகள் உண்பதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு. நோய்த் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மலம் மூலம் பரவும்.
அறிகுறிகள் : தீவிரமற்ற வைரசு எனினும், அதன் தாக்கம் குறிப்பாக, பெரியவர்களுக்கும் பல மாதங்கள் வரை நீடிக்கும். கருமையான சிறுநீர், மயக்கம், தோலரிப்பு, பசியின்மை, காய்ச்சல், வெளிர் அல்லது வண்ணமில்லா மலம், மஞ்சள் நிறத் தோல், கண்கள் மஞ்சளாகி காமாலை காணப்படும்.
பரிசோதனை: மருத்துவ பரிசோதனையின் போது, ஈரல் வீக்கமும் அதன் பாதிப்பும் மருத்துவர் கண்டறிவார்.
ரத்த பரிசோதனைகள்: ரத்தத்திலுள்ள அகுகூ, அஃகூ அளவுகள் அதிகரித்திருக்கும், ரத்தத்தில் அணtடி ஏஅங காணப்படும், ரத்தத்தில் அணtடி ஏச்தி ணிஞூ ஐஞ்M வகை காணப்படும், ஈரல் செயல் சோதனை.
விளைவுகள்: ஆயிரத்தில் ஒருவருக்கு அச்சுறுத்தும் ஹெப்படைடிஸ் உயிர்க்கு அச்சமூட்டும்.
தடுப்பு முறைகள்: நோய்க் கிருமி பரவாமல் உரிய முறைகளை மேற்கொள்ளல். கைகளைச் சுத்தமாகக் கழுவவும். சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும். தடுப்பு ஊசி, இந்நோய் பரவியிருக்கும் இடங்களுக்குச் செல்லுமுன் இந்த தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் பாதுகாப்புக் கொடுக்கும். பயணிப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை: பால் பொருட்களைத் தவிர்த்தல். பச்சையாகவோ அல்லது குளிரூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீனைத் தவிர்க்கவும்.
- டாக்டர் பிரபுராஜ்
டைபாய்ட் காய்ச்சல்
கிருமி : சல்மோனெலி டைபி (Salmonilla Typhi) இந்த கிருமி மிகவும் பொதுவானது.
பரவும் முறை: அசுத்தமான உணவு, குளிர்பானங்கள், குடிநீர் வழியே பரவும்.
ஆரம்ப அறிகுறிகள்: காய்ச்சல், பொதுவான மாறுபட்ட உடல் சோர்வு, உடல் நல மாற்றம், வயிற்று வலி, வயிற்றிலும் அல்லது மார்பிலும் சிலருக்கு அரிப்பு தோன்றும். "ரோஸ் ஸ்பாட்' என்றழைக்கப்படும் சிறு சிவப்புப் புள்ளிகளின் தோற்றம், வயிற்றில் குறிப்பிட்ட இடத்தில் பலவீனம், மலத்தில் ரத்தம், குளிர், பதற்றம், நிலையற்ற மனநிலை, தீவிர மயக்க நிலை, மெதுவான சோம்பல் நிலையுடன் சோர்வாகக் காணப்படும், உடலில் சோர்வு மற்றும் தளர்ச்சி, பலவீனம்.
பரிசோதனைகள்: முழுமையான ரத்தப் பரிசோதனை (CBC)
முதல் வாரம் - ரத்த வளர்சோதனை (Blood Culture)
இரண்டாவது வாரம் - ப்ளோரசன்ட் உடல் எதிர்பிகள் (Fluroscent Antibody)
மூன்றாவது வாரம் - ரத்த அணுக்கள் (குறைவுபடும்) (Low Platelet Count)
நான்காவது வாரம் - மலம் வளர் சோதனை (Stool Culture)
விளைவுகள்: குடலில் ரத்தக் கசிவு, குடலில் துளை ஏற்பட்டு ரத்த வெளியேற்றம், சிறுநீரகம் செயலிழத்தல்
தடுப்பு முறைகள்: குடிநீர்க் காய்ச்சிக் குடித்தல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல், உடல்நல முறைகளைப் பின்பற்றுதல்.
கிருமி : லெப்டோஸ்பைரா பாக்டீரியா (ஃஞுணீtணிண்ணீடிணூச் ஞச்ஞிtஞுணூடிச்)
பரவும் வழி : அதிக எண்ணிக்கையாக கொறிவிலங்கு (கீணிஞீஞுணtண்) பிராணிகளின் சிறுநீர் மூலம் பரவும்.
அறிகுறிகள் : 4 முதல் அல்லது 14 நாள் அன்று நோயின் அறிகுறி தென்படும்.
முதல்நிலை : (சளிக்காய்ச்சல் (ஊடூத) போல் தென்படும்) வறட்டு இருமல், அதிகமான காய்ச்சல், பயங்கர தலைவலி, உடல் வலி, வாந்தி, பேதி, உடலில் நடுக்கம்.
இரண்டாம் நிலை : மூளை காய்ச்சல், ஈரல் பாதிப்பும், மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிழப்பு.
பரிசோதனைகள் / நோயறியும் ஆய்வுகள் : - ரத்த அணtடிஞணிஞீடிஞுண் அறிதல், - முழுமையான ரத்தப் பரிசோதனை (இஆஇ), - பெருமூளைத் தண்டு வட மண்டலம் (இகுஊ ஊடூதிடிஞீ), - ஈரல் செரிமானப் பொருள் வகை அறிதல், - சிறுநீர் சோதனை
விளைவுகள்: - மூளைக் காய்ச்சல், ரத்த கசிவு: ஹெப்படைடிஸ் அ வைரஸ்
ஹெப்படைடிஸ் அ வைரஸ்
கிருமி : ஹெப்படைடிஸ் அ வைரஸ் Hep A.Virus
பரவும் முறை : வெளி உணவகங்களின் மூலம் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலம், மலக்கழிவுகளால் ஏற்படும். சாக்கடை நீர்க் கலப்பினாலோ, கழிவுப் பொருட்களினால் உண்டாகிய காய், கனிகள் உண்பதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு. நோய்த் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மலம் மூலம் பரவும்.
அறிகுறிகள் : தீவிரமற்ற வைரசு எனினும், அதன் தாக்கம் குறிப்பாக, பெரியவர்களுக்கும் பல மாதங்கள் வரை நீடிக்கும். கருமையான சிறுநீர், மயக்கம், தோலரிப்பு, பசியின்மை, காய்ச்சல், வெளிர் அல்லது வண்ணமில்லா மலம், மஞ்சள் நிறத் தோல், கண்கள் மஞ்சளாகி காமாலை காணப்படும்.
பரிசோதனை: மருத்துவ பரிசோதனையின் போது, ஈரல் வீக்கமும் அதன் பாதிப்பும் மருத்துவர் கண்டறிவார்.
ரத்த பரிசோதனைகள்: ரத்தத்திலுள்ள அகுகூ, அஃகூ அளவுகள் அதிகரித்திருக்கும், ரத்தத்தில் அணtடி ஏஅங காணப்படும், ரத்தத்தில் அணtடி ஏச்தி ணிஞூ ஐஞ்M வகை காணப்படும், ஈரல் செயல் சோதனை.
விளைவுகள்: ஆயிரத்தில் ஒருவருக்கு அச்சுறுத்தும் ஹெப்படைடிஸ் உயிர்க்கு அச்சமூட்டும்.
தடுப்பு முறைகள்: நோய்க் கிருமி பரவாமல் உரிய முறைகளை மேற்கொள்ளல். கைகளைச் சுத்தமாகக் கழுவவும். சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும். தடுப்பு ஊசி, இந்நோய் பரவியிருக்கும் இடங்களுக்குச் செல்லுமுன் இந்த தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் பாதுகாப்புக் கொடுக்கும். பயணிப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை: பால் பொருட்களைத் தவிர்த்தல். பச்சையாகவோ அல்லது குளிரூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீனைத் தவிர்க்கவும்.
- டாக்டர் பிரபுராஜ்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» மழைக்கால நோய்கள்: சமாளிப்பது எப்படி?
» மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்
» பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைய ==புன்னை
» மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.
» மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.
» மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்
» பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைய ==புன்னை
» மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.
» மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|