Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அதிகம் பயனளிக்கவல்ல புடலங்காய் பொரியல்
Page 1 of 1 • Share
அதிகம் பயனளிக்கவல்ல புடலங்காய் பொரியல்
புடலங்காய் பொரியல்
தேவையானவை:
புடலங்காய்- 4
தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 11/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 2
செய்முறை:
1. புடலங்காயை நன்றாக அலம்பிக்க் கொண்டு நடுவே இரண்டாகக் கீறி விதைகளை நீக்கவும்.
2. வட்டமாக(அரை வட்டமாக வரும்) நறுக்கிக் கொள்ளவும்.
3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து தண்ணீர் சிறிதளவு விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
4. மூடியைத் திறந்து அவ்வப்போது கிளறி விடவும்.
5. காய் வெந்தவுடன் தேஙாய்த்துருவலைப் போட்டுப் பரிமாறவும்.
இன்னொரு முறை:
தேங்காய்த் துருவலிற்குப் பதில் 1 தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்தும் காரசாரமாகப் புடலங்காய் பொரியலைச் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மிளகாய்வற்றல் தேவையில்லை.
கூடுதல் செய்திகள்:
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.
புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
எளிதில் செய்து விடக் கூடிய இந்தப் பொரியல் வத்தக்குழம்பு, சாம்பார், மோர்க்குழம்பு, பொரிச்சகரை போன்ற எதனுடனும் உண்ண நன்றாக இருக்கும்.
புடலங்காயின் பயன்கள்:
* புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ம்ற்றும் நிறைய புரதம் உள்ளது
* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
* வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.
* மூலநோய்க்காரர்களுக்குப் புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
* நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுக்கும்.
* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.
* கண் பார்வையைத் தூண்டும்.
* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..
* குடல் புண்ணை ஆற்றும்.
* வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்புகள் குறையும்.
* புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர் புடலங்காயைத் தவிர்ப்பது நல்லது.
* புடலங்காய் எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
அதிகம் பயனளிக்கவல்ல, சிறப்புத்தன்மைகள் கொண்ட புடலங்காயை அடிக்கடிப் பயன்படுத்தி குடும்ப ஆரோக்கியத்தைப் பேணலாம்.
By Seetha •http://kayasandigai.wordpress.com/
தேவையானவை:
புடலங்காய்- 4
தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 11/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 2
செய்முறை:
1. புடலங்காயை நன்றாக அலம்பிக்க் கொண்டு நடுவே இரண்டாகக் கீறி விதைகளை நீக்கவும்.
2. வட்டமாக(அரை வட்டமாக வரும்) நறுக்கிக் கொள்ளவும்.
3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து தண்ணீர் சிறிதளவு விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
4. மூடியைத் திறந்து அவ்வப்போது கிளறி விடவும்.
5. காய் வெந்தவுடன் தேஙாய்த்துருவலைப் போட்டுப் பரிமாறவும்.
இன்னொரு முறை:
தேங்காய்த் துருவலிற்குப் பதில் 1 தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்தும் காரசாரமாகப் புடலங்காய் பொரியலைச் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மிளகாய்வற்றல் தேவையில்லை.
கூடுதல் செய்திகள்:
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.
புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
எளிதில் செய்து விடக் கூடிய இந்தப் பொரியல் வத்தக்குழம்பு, சாம்பார், மோர்க்குழம்பு, பொரிச்சகரை போன்ற எதனுடனும் உண்ண நன்றாக இருக்கும்.
புடலங்காயின் பயன்கள்:
* புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ம்ற்றும் நிறைய புரதம் உள்ளது
* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
* வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.
* மூலநோய்க்காரர்களுக்குப் புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
* நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுக்கும்.
* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.
* கண் பார்வையைத் தூண்டும்.
* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..
* குடல் புண்ணை ஆற்றும்.
* வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்புகள் குறையும்.
* புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர் புடலங்காயைத் தவிர்ப்பது நல்லது.
* புடலங்காய் எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
அதிகம் பயனளிக்கவல்ல, சிறப்புத்தன்மைகள் கொண்ட புடலங்காயை அடிக்கடிப் பயன்படுத்தி குடும்ப ஆரோக்கியத்தைப் பேணலாம்.
By Seetha •http://kayasandigai.wordpress.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அதிகம் பயனளிக்கவல்ல புடலங்காய் பொரியல்
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|