Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் நண்பனின் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
என் நண்பனின் கவிதைகள்
அபலையின் அடுத்த அத்தியாயம்
***************************
விலகி சென்றவனை நெஞ்சில் ஏந்தி
விட்டுச் சென்ற மகனை கையில் ஏந்தி
வாழ்ந்த நினைவுகள் மனதில் மோதிட
வாழப் போகும் நிலையை நினைத்து
வீதியில் நிற்கிறாள் மங்கை ஒருத்தி !
வழியே வந்தாள் வயதில் முதிர்ந்தவள்
விழிகள் பிதுங்க வினவினாள் காரணம் !
வழிந்த விழிகளுடன் செப்பினாள் அவளும்
வாழ்வின் நிலையை விளக்கினாள் அபலை
வருத்தம் தெறித்தது கேட்டவள் கண்ணில் !
முதியவள் தேற்றினாள் முதல் உதவியாய்
முதுமை முற்றியதால் அனுபவம் பேசியது
முழுமதியாள் முகமும் மாறியது ஆறுதலால் !
முழுகதையும் சொல்லியதால் முன்னவளின்
முற்காலம் மறந்தது தற்கால நொடிப்பொழுது !
அழைத்து சென்றாள் வயதில் தழைத்தவள்
அன்புடன் சொன்னாள் தங்கிடுக என்னுடனே
அரைவயிறு நிறையும் அன்றாடம் நமக்கும்
அடுப்படி நடக்கும் தினப்படி கிடைத்திட்டால்
அடுத்த நாளை நினையாமல் இருந்திட்டால் !
மகனையும் வளர்த்திடு மறுவாழ்வு பெற்றிட
மனதையும் ஆற்றிடு மறு உலகம் கண்டிட !
மறவாமல் சொல்லிடு விட்டவனின் கதையை
மனதிலும் ஏற்றிடு தந்தையின் பாதையை
மனதாலும் நினையாதே மாசில்லாமல் வாழ்ந்திட !
கோதிய தலையுடன் கோதையவள் எழுந்தாள்
கோமகள் அவள் அடுத்த அத்தியாயம் தொடங்க !
பழனி குமார் -சென்னை
எழுத்து .கொம்
***************************
விலகி சென்றவனை நெஞ்சில் ஏந்தி
விட்டுச் சென்ற மகனை கையில் ஏந்தி
வாழ்ந்த நினைவுகள் மனதில் மோதிட
வாழப் போகும் நிலையை நினைத்து
வீதியில் நிற்கிறாள் மங்கை ஒருத்தி !
வழியே வந்தாள் வயதில் முதிர்ந்தவள்
விழிகள் பிதுங்க வினவினாள் காரணம் !
வழிந்த விழிகளுடன் செப்பினாள் அவளும்
வாழ்வின் நிலையை விளக்கினாள் அபலை
வருத்தம் தெறித்தது கேட்டவள் கண்ணில் !
முதியவள் தேற்றினாள் முதல் உதவியாய்
முதுமை முற்றியதால் அனுபவம் பேசியது
முழுமதியாள் முகமும் மாறியது ஆறுதலால் !
முழுகதையும் சொல்லியதால் முன்னவளின்
முற்காலம் மறந்தது தற்கால நொடிப்பொழுது !
அழைத்து சென்றாள் வயதில் தழைத்தவள்
அன்புடன் சொன்னாள் தங்கிடுக என்னுடனே
அரைவயிறு நிறையும் அன்றாடம் நமக்கும்
அடுப்படி நடக்கும் தினப்படி கிடைத்திட்டால்
அடுத்த நாளை நினையாமல் இருந்திட்டால் !
மகனையும் வளர்த்திடு மறுவாழ்வு பெற்றிட
மனதையும் ஆற்றிடு மறு உலகம் கண்டிட !
மறவாமல் சொல்லிடு விட்டவனின் கதையை
மனதிலும் ஏற்றிடு தந்தையின் பாதையை
மனதாலும் நினையாதே மாசில்லாமல் வாழ்ந்திட !
கோதிய தலையுடன் கோதையவள் எழுந்தாள்
கோமகள் அவள் அடுத்த அத்தியாயம் தொடங்க !
பழனி குமார் -சென்னை
எழுத்து .கொம்
Last edited by கே இனியவன் on Fri Sep 27, 2013 8:32 pm; edited 1 time in total
Re: என் நண்பனின் கவிதைகள்
புரிந்தவர் சொல்லுங்கள்
***********************
பலமுறை சொல்லியும் கேட்பதில்லை
போதையில் ஓட்டுவதும் நிற்பதில்லை !
பாதையில் வாகனங்கள் ஓடுவதில்லை
பாதிப்பவரின் ஒப்பாரியும் ஓயவில்லை !
சட்டங்கள் இயற்றியும் இனிபயனில்லை
வளைந்திடும் காவலரும் மாறவில்லை !
குடியால் விளையும் விபத்துகள் அதிகம்
குலைந்து வீழ்கிறது குடும்பமும் அதிகம் !
விதியை மீறுகின்றனர் விளையாட்டாய்
வீதியில் நிற்கின்றனர் பின் விழுதுகளும் !
படித்தவரே செய்கின்றனர் பாரினிலே
படித்து சொன்னாலும் கேட்பதில்லே !
தெரிந்தும் புரிகின்றனர் குற்றமதை
தெளிந்ததும் மீண்டும் செய்கின்றனர் !
அறிந்தும் செய்பவர்கள் அறிவாளிகளா
அறியாமல் செய்பவர் அறிவிலிகளா !
புரிந்தவர் சொல்லுங்கள்
புரியாத உள்ளங்களுக்கு !
பழனி குமார்-சென்னை
எழுத்து.காம்
***********************
பலமுறை சொல்லியும் கேட்பதில்லை
போதையில் ஓட்டுவதும் நிற்பதில்லை !
பாதையில் வாகனங்கள் ஓடுவதில்லை
பாதிப்பவரின் ஒப்பாரியும் ஓயவில்லை !
சட்டங்கள் இயற்றியும் இனிபயனில்லை
வளைந்திடும் காவலரும் மாறவில்லை !
குடியால் விளையும் விபத்துகள் அதிகம்
குலைந்து வீழ்கிறது குடும்பமும் அதிகம் !
விதியை மீறுகின்றனர் விளையாட்டாய்
வீதியில் நிற்கின்றனர் பின் விழுதுகளும் !
படித்தவரே செய்கின்றனர் பாரினிலே
படித்து சொன்னாலும் கேட்பதில்லே !
தெரிந்தும் புரிகின்றனர் குற்றமதை
தெளிந்ததும் மீண்டும் செய்கின்றனர் !
அறிந்தும் செய்பவர்கள் அறிவாளிகளா
அறியாமல் செய்பவர் அறிவிலிகளா !
புரிந்தவர் சொல்லுங்கள்
புரியாத உள்ளங்களுக்கு !
பழனி குமார்-சென்னை
எழுத்து.காம்
Re: என் நண்பனின் கவிதைகள்
இறந்தவர்களின் குடும்பம்தான் வருத்தமடைகிறது...பலமுறை சொல்லியும் கேட்பதில்லை
போதையில் ஓட்டுவதும் நிற்பதில்லை !
பாதையில் வாகனங்கள் ஓடுவதில்லை
பாதிப்பவரின் ஒப்பாரியும் ஓயவில்லை !
Re: என் நண்பனின் கவிதைகள்
சட்டங்கள் இயற்றியும் இனிபயனில்லை
வளைந்திடும் காவலரும் மாறவில்லை !
குடியால் விளையும் விபத்துகள் அதிகம்
குலைந்து வீழ்கிறது குடும்பமும் அதிகம் !
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: என் நண்பனின் கவிதைகள்
உலகமும் வாழ்த்திடும்
சிந்தையில் ஊற்றெடுக்கும்
சீர்மிகு சிந்தனைகளை
தீந்தமிழ் சொல்லெடுத்து
பைந்தமிழ் பாமாலையாய்
வாசமிகு பூமாலையாய்
சமுதாய அக்கறையுடன்
சீர்திருத்தும் எண்ணமுடன்
பகுத்தறிவுடன் தொகுத்திட்டு
எண்ணத்தில் எழுபவைகளை
ஏர்பூட்டிய காளைகளாய்
எழுத்து தளத்தில் உழுதிட்டால்
விந்தைமிகு விளைச்சலால்
சந்தையில் விலைபோகும்
வியத்தகு பயனும்தரும்
உள்ளமும் குளிர்ந்திடும்
உலகமும் வாழ்த்திடும்
பிறந்திட்ட பயன்தன்னை
நாமும் அடைந்திடலாம் !
பழனி குமார்
சிந்தையில் ஊற்றெடுக்கும்
சீர்மிகு சிந்தனைகளை
தீந்தமிழ் சொல்லெடுத்து
பைந்தமிழ் பாமாலையாய்
வாசமிகு பூமாலையாய்
சமுதாய அக்கறையுடன்
சீர்திருத்தும் எண்ணமுடன்
பகுத்தறிவுடன் தொகுத்திட்டு
எண்ணத்தில் எழுபவைகளை
ஏர்பூட்டிய காளைகளாய்
எழுத்து தளத்தில் உழுதிட்டால்
விந்தைமிகு விளைச்சலால்
சந்தையில் விலைபோகும்
வியத்தகு பயனும்தரும்
உள்ளமும் குளிர்ந்திடும்
உலகமும் வாழ்த்திடும்
பிறந்திட்ட பயன்தன்னை
நாமும் அடைந்திடலாம் !
பழனி குமார்
Re: என் நண்பனின் கவிதைகள்
மயான பூமி
பிறக்கும் மனிதரின் இறுதி இருப்பிடம்
இறக்கும் மாந்தரின் இலவச உறைவிடம் !
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இணையுமிடம்
ஏழை பணக்காரன் ஒன்றாய் படுக்குமிடம் !
சாதிகள் அறிந்திடா உண்மை சமத்துவபுரம்
சச்சரவே எழாத அமைதியே உறங்குமிடம் !
நண்பர் பகைவர் இணைந்திடும் ஒரேஇடம்
அனைத்துக் கட்சிகள் கூட்டணி சேருமிடம் !
நிரந்தர ஓய்வுடன் நிம்மதி கிடைக்குமிடம்
பிறந்தவர் எவரும் தவறாமல் செல்லுமிடம் !
மாளிகையில் வாழ்ந்தவனும் மண்ணாக
வீதியில் வாழ்ந்தவனும் இணையாக !
வாழ்க்கை பயணத்தின் இறுதி இலக்கு
வாழ்பவர் அனைவரும் அறிந்த ஒன்று !
இன்பம் துன்பம் உணர்ந்திடா உலகமது
பாவம் புண்ணியம் அறிந்திடா பூமியது !
வயது வரம்பே இல்லாத அனுமதி அங்கு
பார்வையாளரே இல்லாத அரங்கமது !
வாழ்ந்து முடிந்தவர் சென்றிடும் புதிய பூமி
வாழும் மனிதர் வழியனுப்பும் மயான பூமி !
பழனி குமார்
பிறக்கும் மனிதரின் இறுதி இருப்பிடம்
இறக்கும் மாந்தரின் இலவச உறைவிடம் !
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இணையுமிடம்
ஏழை பணக்காரன் ஒன்றாய் படுக்குமிடம் !
சாதிகள் அறிந்திடா உண்மை சமத்துவபுரம்
சச்சரவே எழாத அமைதியே உறங்குமிடம் !
நண்பர் பகைவர் இணைந்திடும் ஒரேஇடம்
அனைத்துக் கட்சிகள் கூட்டணி சேருமிடம் !
நிரந்தர ஓய்வுடன் நிம்மதி கிடைக்குமிடம்
பிறந்தவர் எவரும் தவறாமல் செல்லுமிடம் !
மாளிகையில் வாழ்ந்தவனும் மண்ணாக
வீதியில் வாழ்ந்தவனும் இணையாக !
வாழ்க்கை பயணத்தின் இறுதி இலக்கு
வாழ்பவர் அனைவரும் அறிந்த ஒன்று !
இன்பம் துன்பம் உணர்ந்திடா உலகமது
பாவம் புண்ணியம் அறிந்திடா பூமியது !
வயது வரம்பே இல்லாத அனுமதி அங்கு
பார்வையாளரே இல்லாத அரங்கமது !
வாழ்ந்து முடிந்தவர் சென்றிடும் புதிய பூமி
வாழும் மனிதர் வழியனுப்பும் மயான பூமி !
பழனி குமார்
Re: என் நண்பனின் கவிதைகள்
தமிழர் கூட்டமைப்பு வெற்றி ஈழத்தில் ...
வெற்றி செய்தி கிட்டியதால்
இன்பம் இமயத்தை எட்டியது !
சிங்களவனின் ஆட்டத்தை அடக்கிய
சிங்கத் தமிழனின் கொண்டாட்டம் !
இடைக்கால வெற்றிதான் எனினும்
இறுதிக்கால துவக்கமே ராஜபக்சேவிற்கு
துள்ளிடும் தமிழனின் நிலைஅங்கு
துயர்களை மறந்திடும் நிகழ்வானது !
மகிழும் எம்இனத்தவரின் மனமும்
நிலைத்திட விழைகிறேன் அங்கே !
முடிவல்ல இதுவேஎன அறிவோம்
முடிவின் தொடக்கம் ஆரம்பமே !
தலைமை ஏற்பவரும் மாறாது தமிழன்
நிலையை மாற்ற வேண்டுகிறேன் !
வேண்டியதும் மாகாணத் தேர்தலைதானே
வேங்கையவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் !
உரிமைதானே கேட்டான் தமிழன் அன்றும்
உயிர்களை பறித்தானே வெறிநாய் வென்றிட !
விவேகம் வேண்டும் விக்னேஸ்வரருக்கு
வீரமும் விளைந்திட வேண்டும் அவருக்கு !
சிங்களவனின் கைப்பாவையாக ஆகாமல்
சீறிடும் தமிழனாய் ஆண்டிட வேண்டும் !
ஈழத் தமிழனின் இரண்டாம் அத்தியாயம்
வேழ பலத்துடன் துவங்கிட வேண்டும் !
தமிழனின் கொடி நிலையாய் பறந்திட
தமிழர்கள் நாங்கள் வேண்டுகிறோம் !
வாழ்த்துக்கள் ஈழத்தமிழர்க்கு
தொடங்கிடுக புது வாழ்வை !
நாட்டிடுக வெற்றிக்கொடியினை
வளரும் தலைமுறை வாழ்ந்திட !
பழனி குமார்
வெற்றி செய்தி கிட்டியதால்
இன்பம் இமயத்தை எட்டியது !
சிங்களவனின் ஆட்டத்தை அடக்கிய
சிங்கத் தமிழனின் கொண்டாட்டம் !
இடைக்கால வெற்றிதான் எனினும்
இறுதிக்கால துவக்கமே ராஜபக்சேவிற்கு
துள்ளிடும் தமிழனின் நிலைஅங்கு
துயர்களை மறந்திடும் நிகழ்வானது !
மகிழும் எம்இனத்தவரின் மனமும்
நிலைத்திட விழைகிறேன் அங்கே !
முடிவல்ல இதுவேஎன அறிவோம்
முடிவின் தொடக்கம் ஆரம்பமே !
தலைமை ஏற்பவரும் மாறாது தமிழன்
நிலையை மாற்ற வேண்டுகிறேன் !
வேண்டியதும் மாகாணத் தேர்தலைதானே
வேங்கையவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் !
உரிமைதானே கேட்டான் தமிழன் அன்றும்
உயிர்களை பறித்தானே வெறிநாய் வென்றிட !
விவேகம் வேண்டும் விக்னேஸ்வரருக்கு
வீரமும் விளைந்திட வேண்டும் அவருக்கு !
சிங்களவனின் கைப்பாவையாக ஆகாமல்
சீறிடும் தமிழனாய் ஆண்டிட வேண்டும் !
ஈழத் தமிழனின் இரண்டாம் அத்தியாயம்
வேழ பலத்துடன் துவங்கிட வேண்டும் !
தமிழனின் கொடி நிலையாய் பறந்திட
தமிழர்கள் நாங்கள் வேண்டுகிறோம் !
வாழ்த்துக்கள் ஈழத்தமிழர்க்கு
தொடங்கிடுக புது வாழ்வை !
நாட்டிடுக வெற்றிக்கொடியினை
வளரும் தலைமுறை வாழ்ந்திட !
பழனி குமார்
Re: என் நண்பனின் கவிதைகள்
துப்பாதீர் பொது இடங்களில்
பரிணாம வளர்ச்சி பல்துறையில் இன்று
பரிதாப நிலையோ பலஇடங்கள் இன்றும் !
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு இன்று
வியத்தகு அஞ்ஞானம் வீதிகளில் இன்றும் !
சுற்றிலும் நம்மை சுத்தமாய் வைத்திட
சுயமாக நினைப்பவர் பூமியில் உள்ளோர்
அதிகமாக இல்லை அகிலத்தில் என்பதால்
அறிவுறுத்த காரணம் கவிதையாய் இங்கு !
காற்றிலும் தூசு அருந்தும் நீரிலும் மாசு
கடலிலும் மாசு கங்கையிலும் தூசு !
தூய்மை இடத்திலும் நாக்கை சுழற்றி
துப்பிடும் எச்சிலால் பரவிடும் மாசு !
நினைப்பதில்லை விளையும் தீமையை
உரைப்பதில்லை உலவிடும் சிலருக்கு !
வெள்ளை சுவற்றையும் மாற்றிடுவர்
வண்ண மயமாக்குவர் மதியற்றோர் !
திரும்பிப் பார்க்காமலே துப்பிடுவர்
அருகில் வருபவன் அழுக்காவான் !
அடுத்தவர் பற்றி கவலையில்லை
அசுத்தம் செய்வது கைவந்தகலை !
பொது இடங்களில் துப்பும் அறிவிலிகள்
ஆறறிவு இல்லாத ஐந்தாம் படைகள் !
சொல்லியும் திருந்திடா திருந்தாதவர்
எல்லாம் இருந்தும் இல்லாத இதயங்கள் !
பழனி குமார்
பரிணாம வளர்ச்சி பல்துறையில் இன்று
பரிதாப நிலையோ பலஇடங்கள் இன்றும் !
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு இன்று
வியத்தகு அஞ்ஞானம் வீதிகளில் இன்றும் !
சுற்றிலும் நம்மை சுத்தமாய் வைத்திட
சுயமாக நினைப்பவர் பூமியில் உள்ளோர்
அதிகமாக இல்லை அகிலத்தில் என்பதால்
அறிவுறுத்த காரணம் கவிதையாய் இங்கு !
காற்றிலும் தூசு அருந்தும் நீரிலும் மாசு
கடலிலும் மாசு கங்கையிலும் தூசு !
தூய்மை இடத்திலும் நாக்கை சுழற்றி
துப்பிடும் எச்சிலால் பரவிடும் மாசு !
நினைப்பதில்லை விளையும் தீமையை
உரைப்பதில்லை உலவிடும் சிலருக்கு !
வெள்ளை சுவற்றையும் மாற்றிடுவர்
வண்ண மயமாக்குவர் மதியற்றோர் !
திரும்பிப் பார்க்காமலே துப்பிடுவர்
அருகில் வருபவன் அழுக்காவான் !
அடுத்தவர் பற்றி கவலையில்லை
அசுத்தம் செய்வது கைவந்தகலை !
பொது இடங்களில் துப்பும் அறிவிலிகள்
ஆறறிவு இல்லாத ஐந்தாம் படைகள் !
சொல்லியும் திருந்திடா திருந்தாதவர்
எல்லாம் இருந்தும் இல்லாத இதயங்கள் !
பழனி குமார்
Re: என் நண்பனின் கவிதைகள்
சங்கமிக்கும் வண்ணங்கள்
தங்க மணற் பரப்பும்
நீல கடல் விரிப்பும்
கைக் கோர்க்கும்
அருமை காட்சியிது !
விழிகளுக்கு விருந்து
விந்தையான மருந்து
களைத்த இதயங்களுக்கு
களிப்பூட்டும் காட்சியிது !
சரியான நிறங்கள்
சங்கமிக்கும் சான்று
பூமியில் நிகழ்ந்திடும்
இயற்கை காட்சியிது !
பாலையும் சோலையும்
பார்வையில் இணையும்
அரிதான நிலைபோல
அழகான காட்சியிது !
பழனி குமார்
தங்க மணற் பரப்பும்
நீல கடல் விரிப்பும்
கைக் கோர்க்கும்
அருமை காட்சியிது !
விழிகளுக்கு விருந்து
விந்தையான மருந்து
களைத்த இதயங்களுக்கு
களிப்பூட்டும் காட்சியிது !
சரியான நிறங்கள்
சங்கமிக்கும் சான்று
பூமியில் நிகழ்ந்திடும்
இயற்கை காட்சியிது !
பாலையும் சோலையும்
பார்வையில் இணையும்
அரிதான நிலைபோல
அழகான காட்சியிது !
பழனி குமார்
Re: என் நண்பனின் கவிதைகள்
இல்லறத்தின் நல்லறம்
இருமனங்கள் இணைந்து ஒருமனமாய்
இதயங்கள் இணைவது திருமணமாய் !
கரம்பிடிக்கும் மனைவியை காப்பதும்
கரம்பற்றிய கணவனுடன் வாழ்வதும்
உள்ளங்களில் எழுதிடும் ஒப்பந்தம் !
குடும்பத்தின் சுமைகளை சுமப்பதும்
சுமைகளை சுகமாய் மாற்றுவதும்
இணைந்த இதயங்களின் கையிலே !
நம்பி வந்தவளை சுமப்பதும் சுகமே
சொல்லாமல் விளங்குவதும் இங்கே !
தான் நடந்தாலும் பரவாயில்லை என
தாரம் அமர்ந்த தள்ளு வண்டியினை
பாரம் பார்க்காமல் பால் மனதுடனே
விரைந்து செல்லும் விவேகி இவரே
திருமணத்தால் விளைந்த நன்மகன் !
வாழ்க இவர்களின் இல்லறம் என்றும்
வளர்க இதயத்தின் நல்லறம் என்றும் !
பழனி குமார்
இருமனங்கள் இணைந்து ஒருமனமாய்
இதயங்கள் இணைவது திருமணமாய் !
கரம்பிடிக்கும் மனைவியை காப்பதும்
கரம்பற்றிய கணவனுடன் வாழ்வதும்
உள்ளங்களில் எழுதிடும் ஒப்பந்தம் !
குடும்பத்தின் சுமைகளை சுமப்பதும்
சுமைகளை சுகமாய் மாற்றுவதும்
இணைந்த இதயங்களின் கையிலே !
நம்பி வந்தவளை சுமப்பதும் சுகமே
சொல்லாமல் விளங்குவதும் இங்கே !
தான் நடந்தாலும் பரவாயில்லை என
தாரம் அமர்ந்த தள்ளு வண்டியினை
பாரம் பார்க்காமல் பால் மனதுடனே
விரைந்து செல்லும் விவேகி இவரே
திருமணத்தால் விளைந்த நன்மகன் !
வாழ்க இவர்களின் இல்லறம் என்றும்
வளர்க இதயத்தின் நல்லறம் என்றும் !
பழனி குமார்
Re: என் நண்பனின் கவிதைகள்
நாட்டிடுக வெற்றிக்கொடியினை
வளரும் தலைமுறை வாழ்ந்திட !
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» ஒரு நண்பனின் அலரல்
» கவிதைகள்
» உங்கள் முதல் நண்பனின் பெயர் என்ன?
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவிதைகள் சில
» கவிதைகள்
» உங்கள் முதல் நண்பனின் பெயர் என்ன?
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவிதைகள் சில
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|