Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இலக்கிய சுவை
Page 1 of 1 • Share
இலக்கிய சுவை
என்னுள் நீ
******************
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி:
வாலி வதை செய்யப்பட்டவுடன் அவன் மனைவி தாரை புலம்புகிறாள்:
''செருவார் தோள!நின்
சிந்தையேன் எனின்
மருவா வெஞ்சரம்
எனையும் எவ்வு மால்
ஒருவேன் உள் உனை
ஆகின உய்தியால்
இருவேம் உள் இரு
வேம் இருந்திலேம்.''
இப்பாடலின் பொருள்: உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்றால் உன்னைக் கொன்ற பாணம் என்னையும் கொன்றிருக்க வேண்டும்.இப்போது,நான் மட்டும் இருக்கிறேன்.
என்னுள் நீ இருக்கிறாய் என்றால் என்னைக் கொன்று தானே உன்னைக் கொன்றிருக்க வேண்டும்?நான் தான் உயிரோடு இருக்கிறேனே?அப்படியானால் நீயும் உயிரோடு இருக்க வேண்டும்.இல்லையே,நீ மாண்டு போய் விட்டாயே?
அப்டியானால் ஒருவரில் ஒருவர் மாறிப் புகுந்திருந்தோம் என்பது வெறும் வார்த்தை.
''இருவேம் உள் இருவேம் இருந்திலேம் ''என்பதில்,சோக பாவமும்,அழகு பாவமும் போட்டியிட்டு வெளிப்படுகின்றன.மரணத்திற்குக் கூட உயிர் ஊட்டி விட்டது கம்பனின் இலக்கியம்!.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
******************
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி:
வாலி வதை செய்யப்பட்டவுடன் அவன் மனைவி தாரை புலம்புகிறாள்:
''செருவார் தோள!நின்
சிந்தையேன் எனின்
மருவா வெஞ்சரம்
எனையும் எவ்வு மால்
ஒருவேன் உள் உனை
ஆகின உய்தியால்
இருவேம் உள் இரு
வேம் இருந்திலேம்.''
இப்பாடலின் பொருள்: உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்றால் உன்னைக் கொன்ற பாணம் என்னையும் கொன்றிருக்க வேண்டும்.இப்போது,நான் மட்டும் இருக்கிறேன்.
என்னுள் நீ இருக்கிறாய் என்றால் என்னைக் கொன்று தானே உன்னைக் கொன்றிருக்க வேண்டும்?நான் தான் உயிரோடு இருக்கிறேனே?அப்படியானால் நீயும் உயிரோடு இருக்க வேண்டும்.இல்லையே,நீ மாண்டு போய் விட்டாயே?
அப்டியானால் ஒருவரில் ஒருவர் மாறிப் புகுந்திருந்தோம் என்பது வெறும் வார்த்தை.
''இருவேம் உள் இருவேம் இருந்திலேம் ''என்பதில்,சோக பாவமும்,அழகு பாவமும் போட்டியிட்டு வெளிப்படுகின்றன.மரணத்திற்குக் கூட உயிர் ஊட்டி விட்டது கம்பனின் இலக்கியம்!.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
Re: இலக்கிய சுவை
அரசும் வேம்பும்
************************
ராமநாதபுரம் சேதுபதியின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் சிலேடைப்புலி என்ற பட்டம் பெற்ற வேம்பத்தூர் பிச்சுவையர் .ஒரு சமயம் புலவர் சபை கூடியது.எல்லா இருக்கைகளிலும்புலவர்கள் அமர்ந்து விட்டனர்.தாமதமாகப் பிச்சுவையர் வந்தார்.
''வேம்புக்கு இங்கு இடம் இல்லையே!''என்று சேதுபதி வேடிக்கையாகக் கூறினார்.உடனே பிச்சுவையர்,''வேம்பு அரசின் அருகில் தானே இருக்கும்.''என்று கூறி சேதுபதியின் அருகில் போய் அமர்ந்து கொண்டார்.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
************************
ராமநாதபுரம் சேதுபதியின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் சிலேடைப்புலி என்ற பட்டம் பெற்ற வேம்பத்தூர் பிச்சுவையர் .ஒரு சமயம் புலவர் சபை கூடியது.எல்லா இருக்கைகளிலும்புலவர்கள் அமர்ந்து விட்டனர்.தாமதமாகப் பிச்சுவையர் வந்தார்.
''வேம்புக்கு இங்கு இடம் இல்லையே!''என்று சேதுபதி வேடிக்கையாகக் கூறினார்.உடனே பிச்சுவையர்,''வேம்பு அரசின் அருகில் தானே இருக்கும்.''என்று கூறி சேதுபதியின் அருகில் போய் அமர்ந்து கொண்டார்.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
Re: இலக்கிய சுவை
அறிவில்லாதவன்
******************************
ஒரு புலவர்,தன மகனைப் பார்த்து,'அறிவில்லாதவனே,'என்று திட்டினார். அவனோ சிரித்துக் கொண்டேஇருந்தான்.
புலவருக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது.''நான் உன்னை அறிவில்லாதவன் என்று கூறியும் கொஞ்சம் கூடவெட்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாயே?''என்று கேட்டார்.
மகன் சொன்னான்,''நீங்கள் என்னைப் பாராட்டும்போது எனக்கு எப்படிக் கோபம் வரும்?''புலவருக்கு திகைப்பு.மகன் சொன்னான் ,''அப்பா,நீங்கள் ஒரு புலவர்.நீங்களே என்னை அறிவில் ஆதவன் என்று சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியே.''
**********************************
யார் வாழ்ந்தார்?
கோவில் குருக்கள் சொன்னார்,
''திரு நீறிட்டார் தாழ்ந்தார்.இடாதார் வாழ்ந்தார்.''
கேட்டவர் திகைத்தார்.குருக்கள் விளக்கம் சொன்னார்,
''திருநீறு இட்டு யார் தாழ்ந்தார்?இடாது யார் வாழ்ந்தார்?''
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
******************************
ஒரு புலவர்,தன மகனைப் பார்த்து,'அறிவில்லாதவனே,'என்று திட்டினார். அவனோ சிரித்துக் கொண்டேஇருந்தான்.
புலவருக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது.''நான் உன்னை அறிவில்லாதவன் என்று கூறியும் கொஞ்சம் கூடவெட்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாயே?''என்று கேட்டார்.
மகன் சொன்னான்,''நீங்கள் என்னைப் பாராட்டும்போது எனக்கு எப்படிக் கோபம் வரும்?''புலவருக்கு திகைப்பு.மகன் சொன்னான் ,''அப்பா,நீங்கள் ஒரு புலவர்.நீங்களே என்னை அறிவில் ஆதவன் என்று சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியே.''
**********************************
யார் வாழ்ந்தார்?
கோவில் குருக்கள் சொன்னார்,
''திரு நீறிட்டார் தாழ்ந்தார்.இடாதார் வாழ்ந்தார்.''
கேட்டவர் திகைத்தார்.குருக்கள் விளக்கம் சொன்னார்,
''திருநீறு இட்டு யார் தாழ்ந்தார்?இடாது யார் வாழ்ந்தார்?''
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
Re: இலக்கிய சுவை
நிலையாமை
வாழ்க்கையின் நிலையாமை குறித்து சித்தர்கள் பல பாடல்கள் எழுதியுள்ளனர்.அவற்றின் நோக்கம் வாழ்க்கையைக் கண்டு பயந்து ஓடுவதற்கு அல்ல .நம் வாழ்வில் நாம் நிதானத்துடன் நடந்து கொள்ள அவை பயன்படும் .இதோ ஒரு பாடல்:
ஊரைக்கூட்டி ஒலிக்கஅழுதிட்டு
பேரை நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூறையங்காட்டிடையே கொண்டு போய் சுட்டிட்டு
நீரில் மூழ்கி நினைப் பொழிவரே.
அதாவது ஒருவன் இறந்துவிட்டால்,ஊரில் அனைவருக்கும் தகவல் சொல்லி விட்டு,சப்தம் போட்டு அழுதுவிட்டு.இதுவரை ஒரு பேர் சொல்லி அழைத்து வந்த அவருக்கு பிணம் என்று பெயரிட்டு,சுடுகாட்டிலே கொண்டு போய் பொசுக்கிவிட்டு,நீரில் முழுகிக் குளித்துவிட்டு அதோடு அவர் பற்றிய நினைப்பை ஒழித்துவிட்டு தம் வாழ்க்கையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.
வாழ்க்கையின் நிலையாமை குறித்து சித்தர்கள் பல பாடல்கள் எழுதியுள்ளனர்.அவற்றின் நோக்கம் வாழ்க்கையைக் கண்டு பயந்து ஓடுவதற்கு அல்ல .நம் வாழ்வில் நாம் நிதானத்துடன் நடந்து கொள்ள அவை பயன்படும் .இதோ ஒரு பாடல்:
ஊரைக்கூட்டி ஒலிக்கஅழுதிட்டு
பேரை நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூறையங்காட்டிடையே கொண்டு போய் சுட்டிட்டு
நீரில் மூழ்கி நினைப் பொழிவரே.
அதாவது ஒருவன் இறந்துவிட்டால்,ஊரில் அனைவருக்கும் தகவல் சொல்லி விட்டு,சப்தம் போட்டு அழுதுவிட்டு.இதுவரை ஒரு பேர் சொல்லி அழைத்து வந்த அவருக்கு பிணம் என்று பெயரிட்டு,சுடுகாட்டிலே கொண்டு போய் பொசுக்கிவிட்டு,நீரில் முழுகிக் குளித்துவிட்டு அதோடு அவர் பற்றிய நினைப்பை ஒழித்துவிட்டு தம் வாழ்க்கையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.
Re: இலக்கிய சுவை
புதையல்
***************
புலவர் ஒருவர் பாட்டிலேயே விடுகதை ஒன்று போட்டார்.அதற்குவிடை தெரிகிறதா என்று பாருங்கள்.
முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும்.
முன் எழுத்து இல்லாவிட்டால்,பெண்ணே ஆகும்.
பிற்பாதி போய்விட்டால் ஏவல் சொல்லாம்.
பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம்.'
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி.
தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்றாம்.
பொற்பார் திண்புய முத்து சாமி மன்னா!
புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!
விடை கண்டு பிடித்து விட்டீர்களா?விடைதான் கவிதையிலேயே இருக்கிறதே!ஆம்,புதையல் என்பதுதான் விடை.எப்படி?
புதையல் என்ற வார்த்தையில் முதல் பாதியை நீக்கிவிட்டால்இருப்பது அல்.அல் என்றால் இருள்.முதல் எழுத்து பு வை நீக்கி விட்டால் மிஞ்சுவது தையல்.தையல் என்றால் பெண்.
இச்சொல்லின் பிற்பகுதியை எடுத்துவிட்டால் புதை என்னும் கட்டளைச் சொல் ஆகிவிடும்.பிற்பாதியோடு முதல் எழுத்து சேர்ந்தால் புயல் என்று வரும்.அதன் பொருள் மேகம்.
முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால் புல்.புதையலில் இரண்டாம் எழுத்து தை என்பது ஒரு மாதமாகும்.
புதையல்...... என்ற ஒரு சொல்லிலே எத்தனை பொருள் உள்ள வார்த்தைகள் உள்ளன என்ற அழகை அழகாகப் பாடியுள்ளார் புலவர்.
நன்றி இருவருள்ளம் தளம்
***************
புலவர் ஒருவர் பாட்டிலேயே விடுகதை ஒன்று போட்டார்.அதற்குவிடை தெரிகிறதா என்று பாருங்கள்.
முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும்.
முன் எழுத்து இல்லாவிட்டால்,பெண்ணே ஆகும்.
பிற்பாதி போய்விட்டால் ஏவல் சொல்லாம்.
பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம்.'
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி.
தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்றாம்.
பொற்பார் திண்புய முத்து சாமி மன்னா!
புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!
விடை கண்டு பிடித்து விட்டீர்களா?விடைதான் கவிதையிலேயே இருக்கிறதே!ஆம்,புதையல் என்பதுதான் விடை.எப்படி?
புதையல் என்ற வார்த்தையில் முதல் பாதியை நீக்கிவிட்டால்இருப்பது அல்.அல் என்றால் இருள்.முதல் எழுத்து பு வை நீக்கி விட்டால் மிஞ்சுவது தையல்.தையல் என்றால் பெண்.
இச்சொல்லின் பிற்பகுதியை எடுத்துவிட்டால் புதை என்னும் கட்டளைச் சொல் ஆகிவிடும்.பிற்பாதியோடு முதல் எழுத்து சேர்ந்தால் புயல் என்று வரும்.அதன் பொருள் மேகம்.
முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால் புல்.புதையலில் இரண்டாம் எழுத்து தை என்பது ஒரு மாதமாகும்.
புதையல்...... என்ற ஒரு சொல்லிலே எத்தனை பொருள் உள்ள வார்த்தைகள் உள்ளன என்ற அழகை அழகாகப் பாடியுள்ளார் புலவர்.
நன்றி இருவருள்ளம் தளம்
Similar topics
» தமிழ் இலக்கிய சுவைகள்
» ஒன்பான் சுவை
» கவிதை - க. ச. கோபாலகிருஷ்ணன், நிறை இலக்கிய வட்டம், ஹைதெராபாத்.
» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
» "நகை " - "சுவை "
» ஒன்பான் சுவை
» கவிதை - க. ச. கோபாலகிருஷ்ணன், நிறை இலக்கிய வட்டம், ஹைதெராபாத்.
» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
» "நகை " - "சுவை "
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|