Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலக கை கழுவும் தினம் -அக்டோபர் 15
Page 1 of 1 • Share
உலக கை கழுவும் தினம் -அக்டோபர் 15
சர்வதேச கை கழுவும் தினம்
நாம் அன்றாடம் கேள்விப்படும் சர்வதேச தினங்களின் வரிசையில் இப்போது கை கழுவும் தினமும் சேர்ந்து கொண்டுள்ளது. கை கழுவுவதற்கு என்று ஒரு தினமா என்று அனேகர் ஆச்சரியப்படக்கூடும். ஆனால், சர்வதேச தினமொன்றை அனுஷ்டிப்பதன் மூலம் வலியுறுத்தப்பட வேண்டிய முக்கியமானதொரு விடயமாகிவிட்டிருக்கிறது ‘கை கழுவுதல்’உலக கை கழுவும் தினம்.
சிறுவர் முதல் பெரியோர் வரை கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே கை கழுவுவதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். சிறார்கள் ஒழுங்காகக் கை கழுவினால் அவர்களது வாழ்க்கை ஒளிமயமானதாக இருக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். இன்று குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகமானதாக உள்ளது. சிசு மரண வீதமும் அதிகமானதாகும்.
100க்கு 10 வீத மரணத்திற்கு காரணம் 3 முதல் 4 நாட்களுக்குள் ஆஸ்பத்திரியில் ஏற்படும் தொற்றுக்களே. ஆஸ்பத்திரியில் இருக்கும் குழந்தைகளையும் நோயாளிகளையும் பார்க்க செல்லும் உறவினர்களும் இதற்கு காரணமாக உள்ளனர். அசுத்தம் காரணமாகவும், கை தூய்மை அற்றதாக இருப்பதும் நோய் தொற்றுவதற்கு ஏதுவாக அமைகின்றது.
முக்கியமாக கர்ப்பிணி தாய்மார் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவுதல் வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் பல அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இது அவர்களுக்கு ஏற்படும் நோயல்ல பாலூட்டும் தாய்மார் வெளியே சென்று வந்த பின்னும் பால் கொடுக்கும்போதும் உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள் அவர்கள் சிறுநீர், மலம் கழித்த பின்னரும் கைகளை கழுவுதல் மிக அவசியம்.
வயிற்றோட்டம் போன்ற நோய் தொற்றுதலிருந்து நம்மையும், குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். நோய் தொற்றுவதால் மரணமும் ஏற்படலாம். குடும்பமே இதில் பாதிக்கப்படுகிறது. நோய் அணுகாமல் பாதுகாத்துக்கொள்வது ஒவ்வொரு தாயினதும் மிகப் பெரிய பொறுப்பாகும்.
கைககழுவுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக மக்களிடம் தெளிவை ஏற்படுத்தவே உலக கைகழுவும் தினம் 2008 ஆம் ஆண்டுமுதல் அனுஷ்டிக்கப்படுகின்றது. குழந்தைகள் மத்தியிலும், பாடசாலை மட்டத்திலும் முதன் முதலாக இப்பழக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருட தொனிப்பொருளாக தாய்மார் மத்தியில் இந்நாளை ஊக்குவித்தல் அமைகின்றது.
தாய் - சேய் பாதுகாப்பு, கர்ப்பிணி பெண்கள், சிறு குழந்தைகள் (5 வயது தொடக்கம்) முழு குடும்பத்தையும் பாதுகாக்கும் பாரிய பொறுப்பும் சுகாதார அமைச்சுக்கு உள்ளது.
சுகாதார ஊழியர்கள் மக்களைத் தெளிவுப்படுத்தும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தெளிவூட்டுகிறார்கள்.
இந்த வேலைத்திட்டத்தை முதலில் காலி, கம்பஹா மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளனர். கொழும்பு வடக்கு பிரதேச சபை ஊழியர்களும் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை பார்க்கப் போகும்போது சவர்க்காரமிட்டு கைகழுவிவிட்டு போக வேண்டும். அதேபோல் அவர்களை பார்த்துவிட்டு வந்த பின்னரும் கை கழுவ வேண்டும். ஒவ்வொரு ஊடகவியலாளரும் இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உறுதுணை புரிய வேண்டும்.
குறைந்த நிறையுடன் பிறக்கும் குழந்தைகள் இலகுவில் நோயினால் பாதிக்கப்படுவர். இவர்களை பராமரித்து குழந்தை மரணத்தை தவிர்க்க வேண்டும். ஆசியாவிலே அதாவது இலங்கையிலேயே தாய்சேய் மரணம் மிக குறைவாக காணப்படுகிறது. சுகாதார அமைச்சும், சுகாதாரக் கல்வி நிறுவனமும் யுனிலிவர் நிறுவனமும் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விசேட வைத்திய நிபுணர்கள், யுனிலிவர் நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் என்ற வகையிலும் சுகாதார அமைச்சு என்ற வகையிலும் பணத்தை செலவழிப்பது மாத்திரமன்றி இதனால் நல்ல பலாபலனை இந்நாடு பெற வேண்டும். இதுவே சுகாதார அமைச்சின் குறிக்கோளாகும்.
http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/18/?fn=f1211182
நாம் அன்றாடம் கேள்விப்படும் சர்வதேச தினங்களின் வரிசையில் இப்போது கை கழுவும் தினமும் சேர்ந்து கொண்டுள்ளது. கை கழுவுவதற்கு என்று ஒரு தினமா என்று அனேகர் ஆச்சரியப்படக்கூடும். ஆனால், சர்வதேச தினமொன்றை அனுஷ்டிப்பதன் மூலம் வலியுறுத்தப்பட வேண்டிய முக்கியமானதொரு விடயமாகிவிட்டிருக்கிறது ‘கை கழுவுதல்’உலக கை கழுவும் தினம்.
சிறுவர் முதல் பெரியோர் வரை கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே கை கழுவுவதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். சிறார்கள் ஒழுங்காகக் கை கழுவினால் அவர்களது வாழ்க்கை ஒளிமயமானதாக இருக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். இன்று குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகமானதாக உள்ளது. சிசு மரண வீதமும் அதிகமானதாகும்.
100க்கு 10 வீத மரணத்திற்கு காரணம் 3 முதல் 4 நாட்களுக்குள் ஆஸ்பத்திரியில் ஏற்படும் தொற்றுக்களே. ஆஸ்பத்திரியில் இருக்கும் குழந்தைகளையும் நோயாளிகளையும் பார்க்க செல்லும் உறவினர்களும் இதற்கு காரணமாக உள்ளனர். அசுத்தம் காரணமாகவும், கை தூய்மை அற்றதாக இருப்பதும் நோய் தொற்றுவதற்கு ஏதுவாக அமைகின்றது.
முக்கியமாக கர்ப்பிணி தாய்மார் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவுதல் வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் பல அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இது அவர்களுக்கு ஏற்படும் நோயல்ல பாலூட்டும் தாய்மார் வெளியே சென்று வந்த பின்னும் பால் கொடுக்கும்போதும் உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள் அவர்கள் சிறுநீர், மலம் கழித்த பின்னரும் கைகளை கழுவுதல் மிக அவசியம்.
வயிற்றோட்டம் போன்ற நோய் தொற்றுதலிருந்து நம்மையும், குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். நோய் தொற்றுவதால் மரணமும் ஏற்படலாம். குடும்பமே இதில் பாதிக்கப்படுகிறது. நோய் அணுகாமல் பாதுகாத்துக்கொள்வது ஒவ்வொரு தாயினதும் மிகப் பெரிய பொறுப்பாகும்.
கைககழுவுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக மக்களிடம் தெளிவை ஏற்படுத்தவே உலக கைகழுவும் தினம் 2008 ஆம் ஆண்டுமுதல் அனுஷ்டிக்கப்படுகின்றது. குழந்தைகள் மத்தியிலும், பாடசாலை மட்டத்திலும் முதன் முதலாக இப்பழக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருட தொனிப்பொருளாக தாய்மார் மத்தியில் இந்நாளை ஊக்குவித்தல் அமைகின்றது.
தாய் - சேய் பாதுகாப்பு, கர்ப்பிணி பெண்கள், சிறு குழந்தைகள் (5 வயது தொடக்கம்) முழு குடும்பத்தையும் பாதுகாக்கும் பாரிய பொறுப்பும் சுகாதார அமைச்சுக்கு உள்ளது.
சுகாதார ஊழியர்கள் மக்களைத் தெளிவுப்படுத்தும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தெளிவூட்டுகிறார்கள்.
இந்த வேலைத்திட்டத்தை முதலில் காலி, கம்பஹா மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளனர். கொழும்பு வடக்கு பிரதேச சபை ஊழியர்களும் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை பார்க்கப் போகும்போது சவர்க்காரமிட்டு கைகழுவிவிட்டு போக வேண்டும். அதேபோல் அவர்களை பார்த்துவிட்டு வந்த பின்னரும் கை கழுவ வேண்டும். ஒவ்வொரு ஊடகவியலாளரும் இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உறுதுணை புரிய வேண்டும்.
குறைந்த நிறையுடன் பிறக்கும் குழந்தைகள் இலகுவில் நோயினால் பாதிக்கப்படுவர். இவர்களை பராமரித்து குழந்தை மரணத்தை தவிர்க்க வேண்டும். ஆசியாவிலே அதாவது இலங்கையிலேயே தாய்சேய் மரணம் மிக குறைவாக காணப்படுகிறது. சுகாதார அமைச்சும், சுகாதாரக் கல்வி நிறுவனமும் யுனிலிவர் நிறுவனமும் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விசேட வைத்திய நிபுணர்கள், யுனிலிவர் நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் என்ற வகையிலும் சுகாதார அமைச்சு என்ற வகையிலும் பணத்தை செலவழிப்பது மாத்திரமன்றி இதனால் நல்ல பலாபலனை இந்நாடு பெற வேண்டும். இதுவே சுகாதார அமைச்சின் குறிக்கோளாகும்.
http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/18/?fn=f1211182
Last edited by முழுமுதலோன் on Tue Oct 15, 2013 8:09 am; edited 1 time in total (Reason for editing : படம் சரியாக வரவில்லை)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உலக கை கழுவும் தினம் -அக்டோபர் 15
அவசியமான தினம்தான்.. குழந்தைகளுக்கு அறிவுறுத்துவோம்!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» முகம் கழுவும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
» முகம் கழுவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்..
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» அக்டோபர் மாத பொது அறிவு
» முகம் கழுவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்..
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» அக்டோபர் மாத பொது அறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|