Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் இலக்கியத்தில் சுவை மிகு காட்சிகள்
Page 1 of 1 • Share
தமிழ் இலக்கியத்தில் சுவை மிகு காட்சிகள்
நாள் கிழமையைக் கண்டுபிடித்தவன் தமிழனா? எகிப்தியனா?
ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு மாதத்திற்கு சுமார் 30 நாட்கள் என்று நமக்கு வகைப்படுத்திக் கொடுத்தது எகிப்தியர்கள் என்று மேலைநாட்டார் கூறுவர். ஏனெனில் எகிப்திய பிரமிடுகளிலும் அங்கே கிடைத்த எழுத்துக்களிலும் தான் இதற்கான பழமையான ஆதாரங்கள் உள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். இதே போல ஞாயிறு முதல் சனி வரையுள்ள ஏழு கிழமைகளையும் எகிப்தியர்கள் தான் கண்டு பிடித்ததாகவும் கூறுவர். ஆனால் இதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை என்பதை வடமொழி, தமிழ் மொழி இலக்கியங்களைப் படித்தோர் அறிவர்.
இன்றைக்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகளூக்கு முன்பு வாழ்ந்த, "நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த" ஞானசம்பந்தன் பாடிய ஒரு தேவாரப்பாடலில்,
"ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே
--(கோளறு திருப்பதிகம்)
என்ற வரிகள் வருகின்றன. இதில் மிகவும் அழகாக ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்திய இலக்கியத்தில் இப்படி கிழமைகளை முறையாக கூறும் ஒரே இடம் இதுதான் என்றால் அது மிகையல்ல. இன்று மேலைநாட்டு காலண்டர்கள், பின்பற்றும் அதே வரிசையில் ஞானசம்பந்தர் பாடியுள்ளார். சனிக்கிழமைக்கும் பின்னர் வரும் "பாம்பு இரண்டும் உடனே" என்பது ராகு, கேது என்னும் நிழல் கிரகங்களை (சாயா கிரகங்கள்) குறிக்கும்.
ஞானசம்பந்தருக்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் எகிப்தியர்கள். அப்படி இருக்கையில் தமிழன்தான் கிழமைகளைக் கண்டுபிடித்தான் என்று எப்படிக் கூற முடியும்?
இதோ ஆதாரங்கள்:-
(1) தேவாரப்பாடலில் தான் இப்படிக்கிழமைகள் முறையாகக் கூறப்பட்டுள்ளன.
(2) ரிக் வேதத்தில் கூட ஆண்டுக்கு 360+5 நாட்கள், 12 மாதங்கள் என்ற குறிப்பு உள்ளது. கதிர்காமம் முதல் காத்மாண்டு வரையும் துவாரகா முதல் டாக்கா வரையிலும் ஒரே பண்பாடு நிலவியதை நாம் அறிவோம். சூரியனையும் சந்திரனையும் இணைத்துப் பேசுவது இந்திய இலக்கிய மரபாகும். புறநானூற்றுப்பாடல், முதல் (புறம் 228, மதுரக்காஞ்சி 193-196, அகநானூறு 204) சிலப்பதிகார வாழ்த்துப்பகுதி வரை ஏராளமான இடங்களில் இதைக் காணலாம். இதே போல ரிக்வேதத்திலுள்ள புருஷ சூக்தம் முதல் காளிதாசன் படைத்த ரகுவம்சம், விக்ரம ஊர்வசீயம் வரை பல இலக்கியங்களிலும் சூரியனுக்கு அடுத்தாற்போல சந்திரனை வரிசைப்படுத்தியிருப்பதைக் காணலாம். உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இத்தகைய விஷயங்களை இந்த எண்ணிக்கையில் காணமுடிவதில்லை. தமிழ், வடமொழிக் கல்வெட்டுக்களிலும் கூட "சூரிய-சந்திரன் உள்ளவரை இது அழியாது" என்ற வரிகளைக் காண்கிறோம்.
(3) கிழமை வரிசையில் வியாழனுக்கு அடுத்தாற்போல வெள்ளியை வைப்பதும் உலகில் வடமொழி, தென்மொழி இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றது. வியாழனை "தேவகுரு" என்றும் வெள்ளியை "அசுர குரு" என்றும் நமது இலக்கியம் வரிசைப் படுத்தியுள்ளது. மேலும் எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய தெய்வங்கள் இன்று மியூசியங்களில் மட்டுமே உள்ளன. ஆனால் நவக்கிரகங்களோவெனில் இன்றும் கோவில்களில் வழிபடப் படுகின்றன. ஆகவே நாம்தான் இதைக் கண்டுபிடித்தோம் என்றால் மிகையாகாது.
நன்றி: ச.சுவாமிநாந்தன்,, எம்.ஏ., (பிரித்தானியா)
ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு மாதத்திற்கு சுமார் 30 நாட்கள் என்று நமக்கு வகைப்படுத்திக் கொடுத்தது எகிப்தியர்கள் என்று மேலைநாட்டார் கூறுவர். ஏனெனில் எகிப்திய பிரமிடுகளிலும் அங்கே கிடைத்த எழுத்துக்களிலும் தான் இதற்கான பழமையான ஆதாரங்கள் உள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். இதே போல ஞாயிறு முதல் சனி வரையுள்ள ஏழு கிழமைகளையும் எகிப்தியர்கள் தான் கண்டு பிடித்ததாகவும் கூறுவர். ஆனால் இதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை என்பதை வடமொழி, தமிழ் மொழி இலக்கியங்களைப் படித்தோர் அறிவர்.
இன்றைக்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகளூக்கு முன்பு வாழ்ந்த, "நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த" ஞானசம்பந்தன் பாடிய ஒரு தேவாரப்பாடலில்,
"ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே
--(கோளறு திருப்பதிகம்)
என்ற வரிகள் வருகின்றன. இதில் மிகவும் அழகாக ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்திய இலக்கியத்தில் இப்படி கிழமைகளை முறையாக கூறும் ஒரே இடம் இதுதான் என்றால் அது மிகையல்ல. இன்று மேலைநாட்டு காலண்டர்கள், பின்பற்றும் அதே வரிசையில் ஞானசம்பந்தர் பாடியுள்ளார். சனிக்கிழமைக்கும் பின்னர் வரும் "பாம்பு இரண்டும் உடனே" என்பது ராகு, கேது என்னும் நிழல் கிரகங்களை (சாயா கிரகங்கள்) குறிக்கும்.
ஞானசம்பந்தருக்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் எகிப்தியர்கள். அப்படி இருக்கையில் தமிழன்தான் கிழமைகளைக் கண்டுபிடித்தான் என்று எப்படிக் கூற முடியும்?
இதோ ஆதாரங்கள்:-
(1) தேவாரப்பாடலில் தான் இப்படிக்கிழமைகள் முறையாகக் கூறப்பட்டுள்ளன.
(2) ரிக் வேதத்தில் கூட ஆண்டுக்கு 360+5 நாட்கள், 12 மாதங்கள் என்ற குறிப்பு உள்ளது. கதிர்காமம் முதல் காத்மாண்டு வரையும் துவாரகா முதல் டாக்கா வரையிலும் ஒரே பண்பாடு நிலவியதை நாம் அறிவோம். சூரியனையும் சந்திரனையும் இணைத்துப் பேசுவது இந்திய இலக்கிய மரபாகும். புறநானூற்றுப்பாடல், முதல் (புறம் 228, மதுரக்காஞ்சி 193-196, அகநானூறு 204) சிலப்பதிகார வாழ்த்துப்பகுதி வரை ஏராளமான இடங்களில் இதைக் காணலாம். இதே போல ரிக்வேதத்திலுள்ள புருஷ சூக்தம் முதல் காளிதாசன் படைத்த ரகுவம்சம், விக்ரம ஊர்வசீயம் வரை பல இலக்கியங்களிலும் சூரியனுக்கு அடுத்தாற்போல சந்திரனை வரிசைப்படுத்தியிருப்பதைக் காணலாம். உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இத்தகைய விஷயங்களை இந்த எண்ணிக்கையில் காணமுடிவதில்லை. தமிழ், வடமொழிக் கல்வெட்டுக்களிலும் கூட "சூரிய-சந்திரன் உள்ளவரை இது அழியாது" என்ற வரிகளைக் காண்கிறோம்.
(3) கிழமை வரிசையில் வியாழனுக்கு அடுத்தாற்போல வெள்ளியை வைப்பதும் உலகில் வடமொழி, தென்மொழி இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றது. வியாழனை "தேவகுரு" என்றும் வெள்ளியை "அசுர குரு" என்றும் நமது இலக்கியம் வரிசைப் படுத்தியுள்ளது. மேலும் எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய தெய்வங்கள் இன்று மியூசியங்களில் மட்டுமே உள்ளன. ஆனால் நவக்கிரகங்களோவெனில் இன்றும் கோவில்களில் வழிபடப் படுகின்றன. ஆகவே நாம்தான் இதைக் கண்டுபிடித்தோம் என்றால் மிகையாகாது.
நன்றி: ச.சுவாமிநாந்தன்,, எம்.ஏ., (பிரித்தானியா)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழ் இலக்கியத்தில் சுவை மிகு காட்சிகள்
என்னது கிழமைகளை கண்டு பிடித்தது தமிழர்களா?
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: தமிழ் இலக்கியத்தில் சுவை மிகு காட்சிகள்
ஆமாம் தம்பிragu wrote:என்னது கிழமைகளை கண்டு பிடித்தது தமிழர்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழ் இலக்கியத்தில் சுவை மிகு காட்சிகள்
தமிழனுக்கு நிகர் தரணியில் யாருண்டு? தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தமிழ் இலக்கியத்தில் சுவை மிகு காட்சிகள்
உண்மை ... தமிழனுக்கு நிகர் தமிழன்தான் சகோதரிkanmani singh wrote:தமிழனுக்கு நிகர் தரணியில் யாருண்டு? தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழ் இலக்கியத்தில் சுவை மிகு காட்சிகள்
அறிவியலில் உயர்ந்தவன் தமிழன்தான்... இன்னும் பல சான்றுகள் இருக்கிறது...
வாழ்க தமிழன்...
வாழ்க தமிழன்...
Similar topics
» தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை
» தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா - தமிழ் கற்போம்
» தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா - தமிழ் கற்போம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|