தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பகிர்தல்

View previous topic View next topic Go down

பகிர்தல் Empty பகிர்தல்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 3:03 pm

பகிர்தல்
***************
கடந்த காலத்தில் தங்களுக்கு உணவும், உறைவிடமும் தந்த பூங்கா தான் என்றாலும் இரண்டு வருடம் கழித்து அந்த பூங்காவிற்கு செல்லும் போது மிகவும் சந்தோஷமாய் சென்றார்கள் அந்த இரு நண்பர்கள்.

இரண்டு ஆண்டுகளிற்கு முன் எத்தனையோ நாட்கள் அந்த பூங்காவிலேயே படுத்துறங்கி , அங்குள்ள நீரை குடித்து பசியாறி, தங்கள் சோகங்களையும், கனவுகளையும் பரிமாறிக் கொண்டவர்கள். உறவுகள் உதாசீனம் செய்து உதறித் தள்ளிய இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த பூங்காவாயிற்றே. பள்ளிக்காலம் முதல் நட்போடு தொடங்கிவர்களுக்கு வேதனைகளும், சோதனைகளும் கூட சேர்ந்தே தான் வந்தது. இன்று நல்ல நிறுவனத்தில் அவர்களின் திறமைக்கு வேளை கிடைத்து விட்டது. பழசை மறந்தவர்களுக்கு மனிதத்தன்மை இருக்காது என்ற உணர்வே அவர்களுடைய பூங்கா பயணம்.

பூங்காவை அடைந்ததும் பூரித்து போனார்கள் இருவரும். மனசுக்கு இறக்கை கட்டி விட்டது போன்ற உணர்வு. அன்று தங்கள் வாழ்க்கையை போலவே முறையற்று கிடந்த பூங்கா இன்று நல்ல பராமரிப்போடு இருந்தது. காற்றின் அதிகமான ஆரவாரம் அவர்களை வாழ்த்தி வரவேற்பது போல உணர்ந்து, மகிழ்ந்து போய் அமர்ந்திருந்தார்கள். மரங்களோடும், செடி கொடிகளோடும், புற்களோடும் , பறவைகளோடும் ஏதேதோ பேசி லயித்திருந்தார்கள்.

பல நேரங்களில் மனிதர்களோடு பேசுவதை விட, மனிதர்களோடு பகிர்ந்து கொள்வதைவிட மரம், செடி கொடிகளோடு பகிர்ந்து கொள்வது சுகமாய்தான் இருக்கிறது.

Posted by Ram Ananth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பகிர்தல் Empty Re: பகிர்தல்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 3:05 pm

வெள்ளெழுத்து
***********************
ஒட்டு வீட்டின் சிறிய திண்ணை. அதில் வயோதிகத் தளர்ச்சியுடன் ஒரு முதியவர். தியாகி சொக்கநாதன் அவர் பெயர். வெள்ளையனே வெளியேறு என்று சுதந்திரப் போராட்ட வீரராய் இருந்தவர் இன்று தன் மகனால் வீட்டிலிருந்து வெளியேறு என்று திண்ணையில் கிடத்தப்பட்டவர். இரு வேளை உணவு, காந்தி மண்டபத்திற்கு செல்லுதல் அவரின் அன்றாட வழக்கம். அன்றைய காலைப்பொழுது அவர் பேரன் ஓடி வந்து...

"தாத்தா இன்னிக்கு பேப்பர படிக்கவா ?" என்றான்.

வாஞ்சையுடன் பேரனை அணைத்துக் கொண்டு, "சாப்பிட்டியா...? பாடம் படிச்சியா? என்று கேட்டார். பிறகு மழலையில் பாடும் தன் பேரனை "வந்தே மாதரம்" பாடச் சொல்லி மகிழ்ந்தார்.

பேரன் பேப்பர் படிக்கத் தொடங்கினான். அவர் அவனை தடுத்து,

"வேணாம்ப்பா...இனிமே நீ பேப்பர் படிக்க வேண்டாம். தியாகம், வேள்வி,அஹிம்சை,பற்று இப்படியெல்லாம் பழகி கொலை, கொள்ளை,கற்பழிப்பு,சுயநலம்னு குட்டிச்சுவராகி போன அவலங்களையே கேட்டு கேட்டு காது கஷ்ட்டப்படுது. இதையெல்லாம் எழுதாம ஒரு பத்திரிக்கை வந்தா,அநேகமா அந்த பத்திரிக்கையோட பேர மட்டும் தான் போடா முடியும். ஆனா ஒன்னுடா பேராண்டி...நேத்து வெள்ளைக்காரன் வந்துட்டானேன்னு வருத்தப்பட்டேன். ஆனா இன்னிக்கு கண்ணுல வெள்ளழுத்து வந்ததால சந்தோஷப்படறேன், இந்த ரத்தச்சேதியெல்லாம் படிக்காம இருக்கமுடியுதேன்னு" என்று திண்ணையில் சாய்ந்து கொண்டார்.

அன்று ஆகஸ்டு-15 என்பதால் சிறிது நேரத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு கொடி ஏற்றச்செல்லவேண்டும். சுதந்திர தினம் மட்டுமே அனைவராலும் அறியப்படும், கௌரவிக்கப்படும் தியாகியருள் அவரும் ஒருவர்!

Posted by Ram Ananth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பகிர்தல் Empty Re: பகிர்தல்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 3:06 pm

சிலை
*************
ஒரு சனிக்கிழமை அதிகாலை. தந்தையும், மகனும் சாலையோரம் நடந்துசென்று கொண்டிருந்தனர். சிறுவன் கேள்விகளாய் கேட்டு கொண்டே நடந்தான்.

"அப்பா.. ஏம்ப்பா காந்தி தாத்தா சிலைய நடுரோட்டுல வச்சிருக்காங்க"

"அவரு நம்ம இந்தியாவுக்கு வெள்ளைக்காரங்களோட போராடி சுதந்திரம் வாங்கி தந்தாரில்ல...நாட்டுக்கு நல்லது செஞ்சவர். அதனால அவருக்கு மரியாத செய்ய, மக்கள் மறக்காம இருக்கவும் சிலை வச்சிருக்காங்க"

"இல்லப்பா... எனக்கு பிடிக்கல"

"ஏண்டா கண்ணு?"

"பாவம்பா...அவரு சட்டை கூட போடல. ஆனா வெயில்ல நிக்கணும், மழையிலையும் நிக்கணும். பல நேரம் காக்கா குருவியெல்லாம் அவர் தலையில உட்கார்ந்து டூ பாத்ரூம் போயிடுது. நாட்டுக்கு நல்லது செஞ்சார்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்குப்பா இந்த தண்டனை!"

தந்தையிடம் பதில் இல்லை.

Posted by Ram Ananth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பகிர்தல் Empty Re: பகிர்தல்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 3:08 pm

சாமியிருக்கா?
************************
அருள் தரும் குருவம்மன் கோயில் திருவிழா என்பதால் அசுரம்பட்டி கிராமமே ஒருசேரக் கூடியிருந்தது. தோரணங்களும், ராட்டிணங்களும்,வண்ண விளக்குகளும்,கச்சேரி,கூத்து என பொழுது போக்கு நிகழ்ச்சிகளுமாய் கலகலவென மக்கள் பல ஊர்களிலிருந்து வெள்ளமாய் வர விமரிசையாக விழா நடந்துகொண்டிருந்தது.

குருவம்மன் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் கோயிலுக்கு உள்ளே ஒரு அறையில் வேண்டுதல் செய்தால் நிச்சயம் நடக்குமென அந்த கிராமமே நம்பியது. குழந்தை இல்லாதவர்க்கு குறை தீர்ந்து, கன்னிகளுக்கு கல்யாணம், தொழில் துறையில் லாபம் என்று அந்த அறையில் வேண்டினால் ஈடேறும் என மக்கள் அபரிமிதமான எண்ணம் கொண்டிருந்தனர்.

சந்தோஷத்துடன் காணப்பட்ட மக்களின் கூட்டத்தை விடுத்தது கோயிலின் பின்புறமுள்ள மாமரத்தடியில் ஒரு ஜோடிகள் தனித்திருந்தது. காதலி காதலனை பார்த்து...

"இந்த குருவம்மன் ரொம்ப சக்தியானது. நம்ம காதல் நிறைவேற வேண்டிக்கலான்னு இருக்கேன். நிச்சயம் நாம ஒண்ணா சேரலாம்"

"எப்ப வேண்டிக்கப் போற?"

"கூட்டம் குறைஞ்சதும் ஒரு பத்து மணிக்கு போல... யாரோ வர்ற மாதிரி இருக்கு ...சரி நாளைக்கு பிள்ளையார் கோயில் தெப்ப குளத்துக்கு பக்கம் சந்திக்கலாம்" என்று கலைந்தனர்.

மறுநாள் தெப்பக்குளக் கரையில் வெகு நேரம் காத்திருந்த அந்த காதலன் காதலியை காணாது கிராமத்துக்குள் நடந்தான். குருவம்மன் கோயிலுக்கு அருகில் கூட்டமாக இருந்தது. திருவிழா முடிந்தும் கூட்டம் தணியவில்லையே என்று கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்த காதலன் அதிர்ந்து போனான். காதலி இறந்து கிடந்தாள்.

காரணம் சொன்னார்கள், "குருவம்மன் கோயிலுக்குள்ள வேண்டுதல் அறையில் அவள் வேண்டிக்கொண்டிருந்ததை கவனிக்காது அந்த வயசான பூசாரி கதவை பூட்டிக்கொண்டு போய்விட்டாராம்"

காதலி மடிந்து போனாள். காதலன் இடிந்து போனான்.

Posted by Ram Ananth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பகிர்தல் Empty Re: பகிர்தல்

Post by sawmya Wed Oct 23, 2013 3:21 pm

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பகிர்தல் Empty Re: பகிர்தல்

Post by ரானுஜா Wed Oct 23, 2013 4:23 pm

காந்த்தி கதை அருமை

2வதுகதை புரியல
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பகிர்தல் Empty Re: பகிர்தல்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 7:14 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பகிர்தல் Empty Re: பகிர்தல்

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 11:24 am

அனைத்தும் அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பகிர்தல் Empty Re: பகிர்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum