Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சுந்தரகாண்டம் பகுதி-1
தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ராமனுக்கு தேவர்கள் மட்டுமல்ல, ரிஷிகள், மனிதர்களுடன் விலங்குகளும், பறவைகளும் கூட சேவை செய்யப் போகின்றன. அந்த விலங்கினங்களில் வானரங்களும் அடக்கம். பார்வதி! நீ ஒரு வானரப் பிள்ளையைப் பெற்றுத் தருவாயா? என பார்வதியிடம் கேட்டார் சர்வேஸ்வரன். நாதா! எனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், ஒரு வானரக் குழந்தையைப் பெற வேண்டும் எனக் கூறுகிறீர்களே! என்றதும் சர்வேஸ்வரன் சிரித்தார்.எல்லாம் காரணப்படியே நடக்கிறது. பார்வதி மறுத்தால் என்ன? ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தையில்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தைப் பார்த்து கேலி செய்தாள். இந்த பூமியில் பிறக்கும் எல்லோரும் அழகாக இருப்பதில்லை. குறிப்பாக கருத்த பெண்களை மாப்பிள்ளைகள் ஒதுக்குவதும், கருத்த ஆண்களை பெண்கள் ஒதுக்குவதுமான சூழ்நிலையால் பலரது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை நிர்ப்பந்தம் காரணமாக இவர்கள் வாழ்வில் இணைந்திருந்தாலும் கூட, எதையோ இழந்தது போல துக்கத்துடன் வாழ்கிறார்கள். இப்படி ஒரு பழக்கம் கூடவே கூடாது. அழகு, நிறம் ஆகியவற்றை விட மனதை உற்றுப் பார்க்க வேண்டும். மகரிஷியின் தோற்றத்தைப் பார்த்து சிரித்து கேலி செய்த புஞ்ஜிகஸ்தலைக்கு அவருக்குள் உறைந்து கிடந்த தவவலிமை புரியாமல் போய்விட்டது. ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ, என சாபமிட்டு விட்டார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். ரிஷியின் சாபம் எப்படி மாறும்? மேலும், எல்லாமே காரண காரியத்துடனேயே அல்லவா நடக்கிறது. அவள் சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீரைக் கண்டு கலங்கிய ரிஷி, கோபம் காரணமாக அவள் முகத்தை மாற்றி விட்டோமே என வருந்தி, பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன், என்ற விதிவிலக்கையும் அளித்தார்.அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு அஞ்ஜனை என்ற பெயர் அமைந்தது. கேஸரி என்றால் சிங்கம். அஞ்ஜனை என்றால் பேரழகு. ஒருநாள், தன் வடிவை மறைத்து, அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான்.இப்படி ஒரு சுந்தரியா? அவன் அவளை நெருங்கி ஆலிங்கனம் செய்தான். யாரோ தன்னை அணைப்பதை உணர்ந்த அந்தப்பெண், எந்த ஒரு உருவத்தையும் காண முடியாமல், ஒரு ஸ்திரீயிடம் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வது யார்? எனக் கதறினாள்.அப்போது வாயு பகவான் அவளுக்கு தரிசனம் தந்தார். பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் ஆலிங்கனம் செய்யவில்லை. உன் அழகில் மெய்மறந்து மனதால் மட்டுமே உன்னை ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. அன்பு ததும்பும் முகம் கொண்டவளே! நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய், என சொல்லி மறைந்தார்.அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுபுத்திரன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறக்கத் துவங்கி விட்டான். அழகில் சிறந்த அவனுக்கு மாருதி என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை. அவன் வேகமாக வான மண்டலத்தை சுற்றி வந்தான். அப்போது சூரியன் வெளிப்பட்டான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சிவந்த பழம் போல் அது காட்சியளித்தது. வானரமாயிற்றே! பழமென்றால் விட்டு வைக்குமா? அதிலும், சாதாரண வானரமே எண்பதடி பாயும். இவன் வாயு செல்வன்! கேட்கவா வேண்டும். சூரியனை நோக்கிப் பறந்தான்.அன்று கிரகணம். ராகு என்னும் நாகம் சூரியனைக் கவ்விப்பிடிக்க எத்தனித்து அவனை விரட்டிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், சூரியனைக் கவ்விப்பிடிக்கவும், மாருதி அங்கே வரவும் சரியாக இருந்தது. ராகுவை ஓட ஓட விரட்டியடித்தான். குரங்குகளுக்கு பிறர் கையிலுள்ளதை பிடுங்குவது ஜென்ம சுபாவம். விடுவானா நம் சின்ன மாருதி? ராகுவை விரட்டிக்கொண்டே இருந்தான்.இந்திரா! தேவேந்திரா! என்னைக் காப்பாற்று, இந்தக் குரங்கு என்னை விரட்டுகிறது, எனக் கதறிக் கொண்டே இந்திரலோகத் திற்குள் புகுந்தான் ராகு.அங்கே இந்திராணியுடன் ஜெகஜோதியாக வீற்றிருந்த தேவேந்திரன், தன் வஜ்ராயுதத்தை எடுத்து மாருதியின் மீது வீசினான். அது சக்தி வாய்ந்த ஆயுதம். மாருதி பச்சைப் பிள்ளையல்லவா! தாங்குவானா? அந்த ஆயுதம் அவன் மேல் பட்டு, கதறியபடியே கீழே விழுந்தான். ஒரு மலை முகட்டில் அவன் விழுந்த போது, தோள்பட்டை எலும்பு முறிந்து விட்டது. குழந்தை கதறுகின்ற சப்தம் கேட்டு அஞ்ஜனை ஓடோடி வந்தாள்.ஏ தேவேந்திரா! இது உனக்கே அடுக்குமா? உன் துன்புறுத்தலுக்கு என் பச்சைக்குழந்தை தானா கிடைத்தான்? பார்...பார்...ஒரு வழி செய்கிறேன், என்றவள் வாயு பகவானைப் பிõர்த்தித்தாள்.நடந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளை அடிபட்டுக் கிடக்கிறான். நீங்கள் அமைதியாக நிற்கிறீர்களே! என்றாள்.வாயுவுக்கும் கடும் கோபம். மகனை அன்போடு அணைத்தான். அந்த மலையில் இருந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். வாயு உடலுக்குள் நின்றாலும் கஷ்டம்... வெளியில் நின்றாலும் கஷ்டம்...உலக ஜீவன்களெல்லாம் திணறின. தேவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். தேவேந்திரன் உட்பட...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சுந்தரகாண்டம் பகுதி-2
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி சொல்லியனுப்பினார். அனைவரும் வாயுவிடம் ஓடிவந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கவே, அவர்கள் மீது இரக்கம் கொண்ட வாயு பகவான் மீண்டும் சஞ்சரிக்கலானார். தேவேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, வாயு! உன் புத்திரன் மாருதி சிரஞ்சீவியாய் (என்றும் நிலைத்திருப்பவர்) இருப்பான். என் வஜ்ராயுதம் யார் மீதாவது பட்டால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். இவனுக்கு அவ்வாறு ஏதும் ஆகவில்லை. எனவே, இவன் நினைக்கும் போது மட்டுமே மரணமடைவான். அதுவரை இவனுக்கு அழிவில்லை, என்று அன்பு பொங்கக் கூறினான்.தன் மைந்தனுக்கு கிடைத்த பேறு குறித்து வாயு மிகவும் மகிழ்ந்தான். குழந்தைகள் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இளமையிலேயே நடந்து கொள்ள வேண்டும். கல்லூரி, பள்ளிகளில் படிக்கிற குழந்தைகள் அங்கு நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற முடியாமல் போனாலும் கூட, பெற்றவர்கள் தங்கள் குழந்தை போட்டிகளில் கலந்து கொள்வதையே பெருமையாக நினைப்பார்கள் இல்லையா? அதுபோல், மாருதியால் சூரியனைப் பிடிக்க முடியாமல் போனாலும், அவனது திறமைக்கு கிடைத்த அரிய பரிசு கண்டு, கேஸரியும், அஞ்சனையும் மகிழ்ந்தார்கள். ஆஞ்சநேயரைப் பற்றிய இந்த அறிமுகம் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது. நாம் படித்துக் கொண்டிருப்பது சுந்தரகாண்டம் என்றாலும், அதன் கதாநாயகன் ஆஞ்சநேயரைப் பற்றிய அறிமுகம் அந்தக் காண்டத்தில் கிடைக்கிறது என்பதால் தான், இவ்வளவு நேரமும் கிஷ்கிந்தையில் நாம் இருந்தோம். இனி, போகிற உயிரைத் தடுத்து நிறுத்தும் சுந்தரகாண்டத்திற்குள் நுழைவோம். இந்த காண்டத்தின் சிறப்பை சொற்களால் விளக்க முடியாது. ஒரு பெண், அதிலும் திருமணமானவள், மாற்றானிடம் சிக்கியிருக்கிறாள் என்றால், அவளது மனநிலை எந்தளவுக்கு இருக்கும்...அவளது கண்ணீர் இலங்கையின் கடலில் கிடக்கும் பெரு நீரையும் தாண்டி விடாதா என்ன! அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் என்ன நினைப்பாள்...ஐயோ! இந்த உயிர் இப்படியே போய் விடாதா என்று தானே சிந்திப்பாள். இப்படி அந்த உயிர் பிரிய இருந்த வேளையில், ஆஞ்சநேயப் பெருமான் சீதாவின் முன்னால் போய் நிற்கிறார்.
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி சொல்லியனுப்பினார். அனைவரும் வாயுவிடம் ஓடிவந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கவே, அவர்கள் மீது இரக்கம் கொண்ட வாயு பகவான் மீண்டும் சஞ்சரிக்கலானார். தேவேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, வாயு! உன் புத்திரன் மாருதி சிரஞ்சீவியாய் (என்றும் நிலைத்திருப்பவர்) இருப்பான். என் வஜ்ராயுதம் யார் மீதாவது பட்டால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். இவனுக்கு அவ்வாறு ஏதும் ஆகவில்லை. எனவே, இவன் நினைக்கும் போது மட்டுமே மரணமடைவான். அதுவரை இவனுக்கு அழிவில்லை, என்று அன்பு பொங்கக் கூறினான்.தன் மைந்தனுக்கு கிடைத்த பேறு குறித்து வாயு மிகவும் மகிழ்ந்தான். குழந்தைகள் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இளமையிலேயே நடந்து கொள்ள வேண்டும். கல்லூரி, பள்ளிகளில் படிக்கிற குழந்தைகள் அங்கு நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற முடியாமல் போனாலும் கூட, பெற்றவர்கள் தங்கள் குழந்தை போட்டிகளில் கலந்து கொள்வதையே பெருமையாக நினைப்பார்கள் இல்லையா? அதுபோல், மாருதியால் சூரியனைப் பிடிக்க முடியாமல் போனாலும், அவனது திறமைக்கு கிடைத்த அரிய பரிசு கண்டு, கேஸரியும், அஞ்சனையும் மகிழ்ந்தார்கள். ஆஞ்சநேயரைப் பற்றிய இந்த அறிமுகம் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது. நாம் படித்துக் கொண்டிருப்பது சுந்தரகாண்டம் என்றாலும், அதன் கதாநாயகன் ஆஞ்சநேயரைப் பற்றிய அறிமுகம் அந்தக் காண்டத்தில் கிடைக்கிறது என்பதால் தான், இவ்வளவு நேரமும் கிஷ்கிந்தையில் நாம் இருந்தோம். இனி, போகிற உயிரைத் தடுத்து நிறுத்தும் சுந்தரகாண்டத்திற்குள் நுழைவோம். இந்த காண்டத்தின் சிறப்பை சொற்களால் விளக்க முடியாது. ஒரு பெண், அதிலும் திருமணமானவள், மாற்றானிடம் சிக்கியிருக்கிறாள் என்றால், அவளது மனநிலை எந்தளவுக்கு இருக்கும்...அவளது கண்ணீர் இலங்கையின் கடலில் கிடக்கும் பெரு நீரையும் தாண்டி விடாதா என்ன! அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் என்ன நினைப்பாள்...ஐயோ! இந்த உயிர் இப்படியே போய் விடாதா என்று தானே சிந்திப்பாள். இப்படி அந்த உயிர் பிரிய இருந்த வேளையில், ஆஞ்சநேயப் பெருமான் சீதாவின் முன்னால் போய் நிற்கிறார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
ராம ராம ராம என்கிறார். உயிர் திரும்பியது. தன் மணாளனின் பெயரை யாரோ உச்சரிக்கிறார்களே! சரி...இங்கே வந்திருக்கும் வானரன் யார்? ஒருவேளை அவனும் ராவணனால் அனுப்பப்பட்ட ராட்சஷனோ? சீதையின் மனம் தடுமாறுகிறது. மீண்டும் உயிர் போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது கணையாழியை எடுத்துக் காட்டுகிறார் ஸ்ரீ ஆஞ்சநேயன். ஆஹா...கண்டேன் என் ராமனை என்று சீதை அகமகிழ்ந்தாள்.இந்த கணையாழிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு.இதை ஜனகமகராஜா ராமனுக்கு சீதனமாக அளித்திருந்தார். ஒருநாள், ராமனுக்கும், சீதைக்கும் ஊடல். கடவுளாக இருந்தால் என்ன...மனிதனாகப் பிறந்து விட்டார்களே இருவரும்! பிறகு ஊடல் வராமல் போகுமா...சிறிது நேரத்தில் இருவருக்குமே கோபம் தணிகிறது. ஆனாலும், யார் முதலில் பேசுவது என்ற ஈகோ! பொதுவாக, பெண்களிடம் வைராக்கியம் அதிகம். நம் சீதாபிராட்டியும் அதற்கு விதிவிலக்கா என்ன! அவள் ராமனிடம் பேசவில்லை.அந்த மனுஷன் தானே வீண் வம்பிழுத்தார்! அவரே வந்து பேசட்டுமே, என தன் செந்தாமரைக் கண்ணின் ஓரத்தால் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.அவள் நம் மனைவிதானே! இவளுக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுத்தால் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்வாள். இருக்கட்டும், இருக்கட்டும், என்று எந்நேரமும் அவளை மார்பில் சுமந்து கொண்டிருக்கும் நாராயணனின் அம்சமான ராமன், மனிதனாகிப் போனதால் கோபப்படுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறான். ஒரு முக்கிய விஷயம்! ஆண்களுக்கு வைராக்கியம் பெண்களை விட குறைவென்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்! ராமபிரானால் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. நேரடியாக பேச தயக்கம்! எனவே, மாமனார் போட்ட மோதிரத்தை கழற்றி, சீதாவுக்கு தெரியாமல், ஒரு பலகையில் வைத்து விட்டு, என் மோதிரத்தை எங்கே! யாராவது பார்த்தீர்களா! அம்மா கோசலா! நீ பார்த்தாயா? சுமித்ராதேவி நீ பார்த்தாயா? அம்மா கைகேயி நீ கண்டாயா? அடேய் தம்பிகளே! நீங்கள் கண்டீர்களா? என வீட்டையே இரண்டுபடுத்திக் கொண்டிருந்தார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
நாம், காலையில் அலுவலகம் கிளம்பும் போது பேனா ஒரு பக்கம், சீசன் டிக்கெட் ஒரு பக்கம், போன் ஒரு பக்கம் என வைத்து விட்டு, இதையெல்லாம் எங்கே வைத்து தொலைத்தீர்கள்? என்று பெண்டாட்டியை அதிகாரம் செய்வோமே! அதுபோல், ராமனும் அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்.சீதாதேவியும் அவர்களோடு சேர்ந்து தேடினாள்.பலகையில் இருந்த மோதிரம் அவள் கண்ணில் பட்டு விட்டது. எடுத்தாள்! அப்பா போட்ட மோதிரமாச்சே! அந்தக் கரிசனை வேறு நம் சீதாபிராட்டிக்கு இருக்காதா என்ன! எடுத்த மோதிரத்தை ராமனிடம் கொண்டு வந்தாள். இந்த சண்டைக்கார மனுஷனிடம் பேசுவதாவது... மோதிரத்தை மட்டும் அவனிடம் நீட்டினாள். இப்போது, ராமபிரான் சீதையிடம் சரணடைந்து விட்டார்.ஆமாம்! மோதிரத்தை எடுத்தாய் அல்லவா! கையில் போட்டு விட வேண்டியது தானே, என்று பேச்சுக் கொடுத்தார்.கணவர் முதலில் பேசியதில் சீதாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அவரருகே வந்தாள். பேசாமலே மோதிரத்தைப் போட்டாள். பேசாவிட்டாலும், மோதிரத்தை போட்டுவிட்டாளே! இப்போது கோபம் தீர்ந்து விட்டதா? என்று சொல்லி, அவளை அப்படியே ஆலிங்கனம் (தழுவுதல்) செய்து கொண்டார். இப்போது அதே மோதிரத்தை ஆஞ்சநேயர் காட்டுகிறார். அதைப் பார்த்து சீதை சொன்னாளாம்!ஏ மோதிரமே! அன்று ஊடலின் போதும் நீ தான் எங்களைச் சேர்த்து வைத்தாய்! இன்று பிரிந்திருக்கும் போதும் நீ தான் எங்களைச் சேர்த்து வைக்க வந்திருக்கிறாய்... என்று
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சுந்தரகாண்டம் பகுதி-3
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் தேர்ந்தெடுத்து காயத்ரி மந்திரம் உருவாக்கப்பட்டது. கிஷ்கிந்தா காண்டத்துடன் 11 ஆயிரம் ஸ்லோகங்கள் முடிந்து சுந்தரகாண்டம் துவுங்குகிறது. இதன் முதல் ஸ்லோகம், ததோ ராவண நீதாயா: ஸீதாயா:என்று துவங்குகிறது. இதில் வரும் ராவண என்ற பதத்தில் உள்ள வ என்ற அக்ஷரமே காயத்ரியின் 12வது அக்ஷரம்.இந்த ஸ்லோகத்தில் பெரும் பொருள் புதைந்து கிடக்கிறது. ராவண நீதாயா: என்றால் ராவணனால் கொண்டு போகப்பட்ட என்று அர்த்தம். ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதை என்று நாம் அர்த்தம் கொள்ளவோ பேசவோ கூடாது. ஏனெனில் சீதாபிராட்டியை யாராலும் தொட இயலாது. ஏனெனில், அவள் அக்னி ஸ்வரூபம். யார் இந்த அக்னி என்றால், அக்னியே விஷ்ணு தான் என்கிறார்கள். அக்னியை யாராலும் தொட இயலாது. அக்னியான விஷ்ணுவை யாரால் தொட இயலும்! சீதையால் மட்டுமே முடியும். அவள் அக்னியில் இரண்டு முறை இறங்கியவள் என்பது தெரிந்த விஷயம்.இந்த ஸ்லோகத்தில் ராவண என்ற பதமும் வருகிறது.ராவணன் என்ற சொல்லுக்கு பிறருக்கு இம்சை தருவதில் சுகம் காண்பவன் என்று பொருள். தன்னால் தொடமுடியாது என்று தெரிந்தும் கூட, சீதையை இம்சை செய்தவன் அந்தக் கொடியவன்.அடுத்து ஸீதோயா என்ற பதம் வருகிறது. சீதா என்றால் ஆண் பெண் உறவில்லாமல் உண்டானது என்று பொருள். லட்சுமிதேவி ஜனகரின் மகளாகும் பொருட்டு, அவர் தங்கக் கலப்பை கொண்டு யாகத்திற்குரிய நிலத்தை உழும்போது அவர் முன் தோன்றினாள். மகாத்மாக்களின் இல்லங்களில் தான் லட்சுமி வாசம் செய்வாள்.
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் தேர்ந்தெடுத்து காயத்ரி மந்திரம் உருவாக்கப்பட்டது. கிஷ்கிந்தா காண்டத்துடன் 11 ஆயிரம் ஸ்லோகங்கள் முடிந்து சுந்தரகாண்டம் துவுங்குகிறது. இதன் முதல் ஸ்லோகம், ததோ ராவண நீதாயா: ஸீதாயா:என்று துவங்குகிறது. இதில் வரும் ராவண என்ற பதத்தில் உள்ள வ என்ற அக்ஷரமே காயத்ரியின் 12வது அக்ஷரம்.இந்த ஸ்லோகத்தில் பெரும் பொருள் புதைந்து கிடக்கிறது. ராவண நீதாயா: என்றால் ராவணனால் கொண்டு போகப்பட்ட என்று அர்த்தம். ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதை என்று நாம் அர்த்தம் கொள்ளவோ பேசவோ கூடாது. ஏனெனில் சீதாபிராட்டியை யாராலும் தொட இயலாது. ஏனெனில், அவள் அக்னி ஸ்வரூபம். யார் இந்த அக்னி என்றால், அக்னியே விஷ்ணு தான் என்கிறார்கள். அக்னியை யாராலும் தொட இயலாது. அக்னியான விஷ்ணுவை யாரால் தொட இயலும்! சீதையால் மட்டுமே முடியும். அவள் அக்னியில் இரண்டு முறை இறங்கியவள் என்பது தெரிந்த விஷயம்.இந்த ஸ்லோகத்தில் ராவண என்ற பதமும் வருகிறது.ராவணன் என்ற சொல்லுக்கு பிறருக்கு இம்சை தருவதில் சுகம் காண்பவன் என்று பொருள். தன்னால் தொடமுடியாது என்று தெரிந்தும் கூட, சீதையை இம்சை செய்தவன் அந்தக் கொடியவன்.அடுத்து ஸீதோயா என்ற பதம் வருகிறது. சீதா என்றால் ஆண் பெண் உறவில்லாமல் உண்டானது என்று பொருள். லட்சுமிதேவி ஜனகரின் மகளாகும் பொருட்டு, அவர் தங்கக் கலப்பை கொண்டு யாகத்திற்குரிய நிலத்தை உழும்போது அவர் முன் தோன்றினாள். மகாத்மாக்களின் இல்லங்களில் தான் லட்சுமி வாசம் செய்வாள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
ஜனகர் பெரிய மகாராஜா. ஆனால், ரிஷி...ராஜாவுக்கும், துறவிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஆனால், பதவியில் இருந்தாலும் அதோடு ஒட்டும் உறவும் இல்லாமல் இருந்ததால் அவர் ராஜரிஷி எனப்பட்டார். செல்வம் நிறைய இருந்தாலும் அதை பிறருக்காக செலவிட்டு, அதன் மேல் பற்றின்றி திகழ்ந்தாரே...அப்படிப்பட்ட நல்லவரின் வீட்டில் பிறந்தவள் அவள். அந்த பிராட்டியைத் தேடி ஆஞ்சநேயர் புறப்பட்டார். இங்கே பெரிய தத்துவம் புதைந்து கிடக்கிறது. ஜீவாத்மா என்பது பரமாத்மாவை தேடிச் செல்ல வேண்டும். ஆனால், பரமாத்மா இருக்குமிடம் ஜீவாத்மாவுக்கு தெரியவில்லை. தெரிந்தாலும் போக மனமில்லை. ஏனெனில், பொன்மான் போன்ற உலக இன்ப விஷயங்கள் ஜீவாத்மாவைப் புரட்டியெடுக்கின்றன. அதை உண்மையென்று நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றன. ஆபத்தில் சிக்கும் உயிர்களைக் காப்பாற்றுபவன் ஆச்சார்யன் என்ற குரு. நமக்கு ஒரு நல்ல குரு கிடைத்து விட்டால், அவர் இறைவனை அடையும் வழியைச் சொல்லித் தந்து விடுவார்.அதுபோல் சீதையாகிய ஜீவாத்மாவை, ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்க்கும் திவ்ய பணியைச் செய்ய ஆஞ்சநேயர் கிளம்புகிறார் இலங்கை நோக்கி! இதனால் தான் ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார். ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடையவர். அவர் விஸ்வரூபம் எடுத்தார். வானரர்களெல்லாம் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். சூரிய பகவான், இந்திரன், தன் தந்தை வாயு பகவான், பிரம்மா, பூதகணங்களை மனதால் வணங்கினார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
மகேந்திர பர்வத மலையின் உச்சியில் நின்ற அவர், அதை ஒரு அழுத்து அழுத்தினார்.அந்த மலை பிளந்தது போன்ற சப்தத்தை எழுப்பியது. ஆஞ்சநேயருக்கு மலை போன்ற துன்பங்களையும் தகர்க்கும் சக்தியுண்டு. மகேந்திர மலையை அழுத்தியவர், சஞ்சீவி மலையைச் சுமந்தவர். மலை போல் மனிதர்களுக்கு துன்பம் வரத்தான் செய்யும். அதைக் காலில் போட்டு அழுத்தவும் தெரிய வேண்டும். கையில் தூக்கி வைத்துக் கொண்டு சுகமான சுமையாகவும் கருத வேண்டும். நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என்று பிறருக்கு சேவையும் செய்ய வேண்டும். ஆஞ்சநேயர் தனக்காகவோ, தன் அம்மா அஞ்சனாவுக்காகவோ, தந்தை வாயுவுக்காகவோ, தன் அரசன் சுக்ரீவனின் நன்மை கருதியோ இலங்கைக்கு போகவில்லை. யாரோ ஒரு ராமன்...அயோத்தியில் இருந்து தங்கள் அரசனை நாடி வந்து தன் மனைவியை மீட்க உதவி கேட்டவன்.. அவனுக்காக ஆபத்தான கடலைத் தாண்ட வேண்டுமென கட்டாயமா என்ன? இன்றைய நிலையைப் பார்ப்போமே! சாலையில் ஒருவன் அடிபட்டுக் கிடந்தால், காவல்துறைக்குப் பயந்து, அவன் முகத்தைப் பார்க்காமலே ஓட்டம் பிடித்து விடுகிறோம். ஆனால், ஆஞ்சநேயன் முன்பின் தெரியாத ஒருவனின் மனைவியைத் தேடி புறப்படுகிறான். எவ்வளவு பெரிய மனது! எவ்வளவு பெரிய கைங்கர்யம் பாருங்கள். பிறருக்கு உதவி செய்யும் போது, அதனால் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட தைரியமாகச் செய்யுங்கள். அதனால் உயிர் போகும் நிலை வந்தாலும் கூட பரவாயில்லை, என்பது தான் ஆஞ்சநேயர் நமக்கு கற்றுத்தரும் பாடம். சுந்தரகாண்டம் உணர்த்துவதும் இதுவே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சுந்தரகாண்டம் பகுதி-4
ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் அல்லவா இப்போது வேகம் கொண்டிருக்கிறது. சீதாவைக் காண்போமா! அவளை ராமபிரானிடம் ஒப்படைப்போமா! ஒருவேளை இலங்கையில் சீதா இல்லையென் றால், ராமன் உயிர் தரிக்கமாட்டாரே! அந்தச்சூழலில் சுக்ரீவன் இறந்து விடுவான், லட்சுமணன் இறந்து போவான், இதைக் கேள்விப்படும் பரத, சத்ருக்கனர் மடிவர், அயோத்தி மக்களில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள். வானர வீரர்கள் தங்களை மாய்த்துக் கொள்வர். என் ஒருவனின் பாருட்டு, இத்தனை பேர் அழிவரா! ஸ்ரீராமா! நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.நிச்சயமாக நீயும் காப்பாற்றப்படுவாய்! நானும் காப்பாற்றப்படுவேன். ஏனெனில், நான் ராமநாமத்தை உச்சரிப்பவன்.இப்படி அவன் பறந்த வேளையில், சீதாவிடம் தான் ராமதூதன் என்பதை நிரூபிக்க, ராமபிரான் சொன்ன ஒரு சம்பவம் அவன் நெஞ்சிலே நிழலாடியது. அதை நினைத்தபடியே அவன் வேகமாகப் பறக்கிறான். அந்த சம்பவம் என்ன? கருணையில் ராமன் உயர்ந்தவனா? சீதா சிறந்தவளா? என்று ஒரு போட்டி வைத்தால், நம் பிராட்டியே வெற்றி பெறுவாள். ராமனையும் விட கருணையா? அவனே கருணாமூர்த்தியாயிற்றே! உலகிலுள்ள ரிஷிகளெல்லாம் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்பதற்காக, காட்டிற்கு போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டவன் ஆயிற்றே! அவனது கண்களில் கருணை சிந்துமாமே! ராமபிரான் குழந்தையாக இருந்த போது, அவரை அடிக்கடி அழைத்துப் பார்ப்பாராம் தசரத மகாராஜா. ஏன் தெரியுமா? கருணை பொங்கும் அவரது கண்ணழகை ரசிக்க...சிறிது நேரம் பார்த்து விட்டு, திரும்பிப்போ என்பாராம்.
ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் அல்லவா இப்போது வேகம் கொண்டிருக்கிறது. சீதாவைக் காண்போமா! அவளை ராமபிரானிடம் ஒப்படைப்போமா! ஒருவேளை இலங்கையில் சீதா இல்லையென் றால், ராமன் உயிர் தரிக்கமாட்டாரே! அந்தச்சூழலில் சுக்ரீவன் இறந்து விடுவான், லட்சுமணன் இறந்து போவான், இதைக் கேள்விப்படும் பரத, சத்ருக்கனர் மடிவர், அயோத்தி மக்களில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள். வானர வீரர்கள் தங்களை மாய்த்துக் கொள்வர். என் ஒருவனின் பாருட்டு, இத்தனை பேர் அழிவரா! ஸ்ரீராமா! நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.நிச்சயமாக நீயும் காப்பாற்றப்படுவாய்! நானும் காப்பாற்றப்படுவேன். ஏனெனில், நான் ராமநாமத்தை உச்சரிப்பவன்.இப்படி அவன் பறந்த வேளையில், சீதாவிடம் தான் ராமதூதன் என்பதை நிரூபிக்க, ராமபிரான் சொன்ன ஒரு சம்பவம் அவன் நெஞ்சிலே நிழலாடியது. அதை நினைத்தபடியே அவன் வேகமாகப் பறக்கிறான். அந்த சம்பவம் என்ன? கருணையில் ராமன் உயர்ந்தவனா? சீதா சிறந்தவளா? என்று ஒரு போட்டி வைத்தால், நம் பிராட்டியே வெற்றி பெறுவாள். ராமனையும் விட கருணையா? அவனே கருணாமூர்த்தியாயிற்றே! உலகிலுள்ள ரிஷிகளெல்லாம் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்பதற்காக, காட்டிற்கு போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டவன் ஆயிற்றே! அவனது கண்களில் கருணை சிந்துமாமே! ராமபிரான் குழந்தையாக இருந்த போது, அவரை அடிக்கடி அழைத்துப் பார்ப்பாராம் தசரத மகாராஜா. ஏன் தெரியுமா? கருணை பொங்கும் அவரது கண்ணழகை ரசிக்க...சிறிது நேரம் பார்த்து விட்டு, திரும்பிப்போ என்பாராம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
ராமனும் செல்வாராம். அப்போது பின்னழகை ரசிப்பாராம். இப்படி முன்னால் கண்ணழகு, பின்னால் நடையழகு என மாறி மாறிபகவானை அனுபவித்த பாக்கியசாலி அவர். அப்படிப்பட்ட கருணைக் கண்களுக்கு சொந்தக்காரரான ராமனை விட சீதா எந்த விதத்தில் உசத்தி?ஒருமுறை, ராமபிரான் சீதாவுடன் ஏகாந்தமாக (தனிமை) இருந்தார். மனைவியின் மடி மீது தலை வைத்து அஞ்சனவண்ணன் கண் மூடியிருக்கிறான். கணவரின் தூக்கம் கலைந்து விடக்கூடாதே என்று சீதா அசையவில்லை. இன்னொரு காரணம், அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம். தூக்கத்தில் கூட இரண்டு வகையை சுந்தரகாண்டம் காட்டுகிறது. அனுமான் இலங்கை சென்ற பிறகு, ராவணனின் மாளிகையை நோட்டமிட்டார். அங்கே ராவணனால் கடத்தி வரப்பட்ட பெண்களும், இன்னும் ஆசைநாயகியரும் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டு, படுத்திருந்த காட்சியைப் பார்த்து ஆஞ்சநேயன் தலை குனிந்து, இதையெல்லாம் பார்க்க என்ன பாவம் செய்தோமே! என்று கலங்கினான். அதே நேரம் ராவணின் தர்மபத்தினியான மண்டோதரி துயில்வதைப் பார்த்து, இவள் சீதையோ என்று சந்தேகமும் கொண்டானாம். அப்படி ஒரு அடக்கமான பெண்மணி மண்டோதரி. ராவணனுக்கு வாழ்க்கைப்பட்டதைத் தவிர வேறெந்த பாவமும் செய்யாத பெண்மணி அவள்.அதுபோல், இங்கே ராமன் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். சீதா அவனது அழகைப் பருகிக் கொண்டிருக்கிறாள். அப்போது இந்திரனின் மகனான ஜெயந்தன் காக வடிவெடுத்து, அங்கே வந்தான். அவன் சீதையின் அழகை ஒரு மரத்தில் இருந்தபடி பருகிக் கொண்டிருந்தான். பிறன் மனை காண்பது கொடிய பாவமல்லவா? அவர்களுக்கு சொர்க்கமும் கிடைக்காது, நரகமும் கிடைக்காது. நரகம் போனால் கூட ஏதாவது ஒரு காலத்தில் விடிவு கிடைத்து விடும். அங்கும் போகாதவன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பான். இங்கே இறந்த பிறகு, அங்கும் தினம் தினம் மரண பயத்தில் அலறியபடியே தொங்குவான். அப்படி ஒரு கொடிய பாவத்தை செய்து கொண்டிருந்தான் ஜெயந்தன். காக வடிவெடுத்ததால் அவனை காகாசுரன் என்றும் சொல்வார்கள். அந்தப் படுபாவி, நம் அன்புத்தாய் சீதாவின் மார்பைக் கொத்தினான். அன்னைக்கோ தர்ம சங்கடம். ரத்தம் வழிந்தது. ராமன் விழித்து விடக்கூடாது என்பதில் அந்நிலையிலும் அக்கறையாக இருந்தாள். ஆனால், ராமனின் கைகளால் தற்செயலாக வழிந்த ரத்தம் விழ, பிசுபிசுவென ஏதோ ஒட்டியதால் விழித்தெழுந்தார் ராமன். நிலைமையைப் புரிந்து கொண்டார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
தான் படுத்திருந்த தர்ப்பை படுக்கையில் இருந்து ஒரு புல்லை எடுத்து வீசினார். அது பாணமாய் மாறி அவனை விரட்டியது. கர்வம் கொண்டவன் அல்லவா ஜெயந்தன். அந்த பாணத்தில் இருந்து தப்பி விடலாமென பல இடங்களுக்கும் பறந்தான். பாணம் விரட்டியது. தான் விபரீதத்தில் சிக்கிக் கொண்டோம் என்பது புரிந்து விட்டது. நம் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. ஒரு மானிடன் வீசிய அம்பு தேவலோகத்துக்கு எப்படி வரும்? எனவே, தேவலோகம் நோக்கிப் பறந்தான். பாணம் அங்கும் வந்து விரட்டியது. அவனுக்கு மரண பயம் வந்து விட்டது. அம்மா இந்திராணியிடம் ஓடினான். என்னடா தப்பு செய்தாய்? என அவள் அவனை அதட்டினாள். அவளிடம் நடந்ததைச் சொன்னான். அடப்பாவி! லோகத்திற்கே படியளக்கும் லட்சுமி பிராட்டி சீதாவாக பூமியில் அவதரித்துள்ளதை நீ அறிவாய். அறிந்தும் தவறு செய்தாய். உனக்கு மன்னிப்பே இல்லை. உனக்கு அடைக்கலம் அளித்தால், தேவலோகமே அழிந்து போகும். என் பிள்ளைப்பாசத்தின் பொருட்டு, ஆயிரக்கணக்கான தேவர்களை நான் இழக்கமாட்டேன். நீ சாக வேண்டியவன் தான்! பிறர் மனைவியைத் தொட்ட கயவனே! நீ என் பிள்ளையே அல்ல, ஒழிந்து போ, என சொல்லிவிட்டாள். காகாசுரன் பறந்தான்... பறந்தான்... பறந்தான்... எங்கும் அவனுக்கு அடைக்கலம் தர நாதியில்லை. கடைசியில், ராமபிரானையே சரணடைவது என முடிவெடுத்தான். அவரது பாதங்களில் வந்து விழுந்தான்.ஸ்ரீராமா சரணம் சரணம்! நான் உம்மை அடைக்கலமடைந்தேன், நான் செய்த தவறுக்கு மன்னிப்பில்லை தான்! இருப்பினும், கருணைக்கடலான நீர் உயிர்பிச்சை இடுவீர் என நம்பி, உம்மை சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுங்கள், என்று கதறினான். அப்போது காகமாக இருந்த அவனது தலை, ராமனின் பாதம் இருந்த திசைக்கு எதிர்திசையில் இருந்தது. கருணைக்கடலான சீதாபிராட்டி, அந்த காகத்தின் தலையை ராமனின் பாதம் பக்கமாக திருப்பி வைத்தாள். அவள் நினைத்தால் தலையைத் திருகியிருக்கலாம். ஆனால், லோகமாதாவான அந்த திருமகள், தனக்கு துன்பமிழைத்தவனுக்கும் இப்படி ஒரு கருணையைச் செய்தாள். எப்பேர்ப்பட்ட உத்தமி இந்த சீதா? அவளைக் காப்பாற்ற வேண்டாமா? என்று அவளின் கல்யாண குணங்களைச் சிந்தித்தபடியே பறந்தார் ஆஞ்சநேயர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சுந்தரகாண்டம் பகுதி-5
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் வரும். நல்லது செய்யப் போனாலும் சிலருக்கு கெடுதலாகத் தெரியும். ஆஞ்சநேயர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி ராமபிரானுக்கு நன்மை செய்யச் செல்கிறார். சீதாபிராட்டியை அவரோடு சேர்த்து வைக்கப் போகிறார். பிரிந்திருக்கிற கணவன், மனைவியை சேர்த்து வைப்பது போல புண்ணியம் உலகில் வேறு ஏதுமில்லை. அவர்களைப் பிரிப்பது போல கொடிய பாவமும் வேறு ஏதுமில்லை. எந்தக் குடும்பத்திலாவது கணவன், மனைவி என்ன காரணத்தில் பிரிந்திருந்தாலும், அதையெல்லாம் மறந்து விட்டு சேர்த்து வைக்க பெரியவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல! இங்கே இன்னொரு தத்துவமும் விளக்கப்படுகிறது. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைய வழி தெரியாமல் சிரமப்படுகின்றன. இவ்வுலக வாழ்வின் தற்காலிக இன்பங்களை நிஜமெனக் கருதி, மாயையில் மூழ்கித் தவிக்கின்றன. இவர்களை பரமாத்மாவுடன் இணைத்து வைப்பவர் ஆச்சார்யர் எனப்படும் குரு தான். நல்ல குரு அமைவது ரொம்பவே கஷ்டம். குரு கிடைக்காதவர்கள், ஆஞ்சநேயரை தங்கள் குருவாகக் கொள்ளலாம். சீதையாகிய ஜீவாத்மாவை ராமனாகிய பரமாத்மாவுடன் சேர்த்து வைத்த கருணை குருவாக அவர் விளங்குகிறார். ஆச்சார்ய, சிஷ்ய சம்பந்தம் சுந்தரகாண்டத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயர் இப்போது கடலைக் கடந்து கொண்டிருக்கிறார். அதைக் கவனிக்கிறான் கடலரசனான சமுத்திர ராஜன். இவனை வளர்த்தவன் இக்ஷ்வாகு குலத்து அரசனான ஸகரன். இந்தக் குலத்தில் வந்தவர்களே தசரதர், ராமன் ஆகியோரெல்லாம். தன்னை வளர்த்த இக்ஷ்வாகு குலத்தவர்க்கு நன்றி தெரிவிக்க இதுதான் சமயமென நினைத்தான் சமுத்திரராஜன். அவன் தனக்குள் மைநாக பர்வதம் என்ற மலை, அடைக்கலமாக இடம் தந்திருந்தான்.
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் வரும். நல்லது செய்யப் போனாலும் சிலருக்கு கெடுதலாகத் தெரியும். ஆஞ்சநேயர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி ராமபிரானுக்கு நன்மை செய்யச் செல்கிறார். சீதாபிராட்டியை அவரோடு சேர்த்து வைக்கப் போகிறார். பிரிந்திருக்கிற கணவன், மனைவியை சேர்த்து வைப்பது போல புண்ணியம் உலகில் வேறு ஏதுமில்லை. அவர்களைப் பிரிப்பது போல கொடிய பாவமும் வேறு ஏதுமில்லை. எந்தக் குடும்பத்திலாவது கணவன், மனைவி என்ன காரணத்தில் பிரிந்திருந்தாலும், அதையெல்லாம் மறந்து விட்டு சேர்த்து வைக்க பெரியவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல! இங்கே இன்னொரு தத்துவமும் விளக்கப்படுகிறது. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைய வழி தெரியாமல் சிரமப்படுகின்றன. இவ்வுலக வாழ்வின் தற்காலிக இன்பங்களை நிஜமெனக் கருதி, மாயையில் மூழ்கித் தவிக்கின்றன. இவர்களை பரமாத்மாவுடன் இணைத்து வைப்பவர் ஆச்சார்யர் எனப்படும் குரு தான். நல்ல குரு அமைவது ரொம்பவே கஷ்டம். குரு கிடைக்காதவர்கள், ஆஞ்சநேயரை தங்கள் குருவாகக் கொள்ளலாம். சீதையாகிய ஜீவாத்மாவை ராமனாகிய பரமாத்மாவுடன் சேர்த்து வைத்த கருணை குருவாக அவர் விளங்குகிறார். ஆச்சார்ய, சிஷ்ய சம்பந்தம் சுந்தரகாண்டத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயர் இப்போது கடலைக் கடந்து கொண்டிருக்கிறார். அதைக் கவனிக்கிறான் கடலரசனான சமுத்திர ராஜன். இவனை வளர்த்தவன் இக்ஷ்வாகு குலத்து அரசனான ஸகரன். இந்தக் குலத்தில் வந்தவர்களே தசரதர், ராமன் ஆகியோரெல்லாம். தன்னை வளர்த்த இக்ஷ்வாகு குலத்தவர்க்கு நன்றி தெரிவிக்க இதுதான் சமயமென நினைத்தான் சமுத்திரராஜன். அவன் தனக்குள் மைநாக பர்வதம் என்ற மலை, அடைக்கலமாக இடம் தந்திருந்தான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
ஒரு காலத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அவை பல்வேறு இடங்களுக்கு பறந்து செல்லும் போது, தேவர்கள், பூதகணங்கள் மீது மோதி பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த இந்திரன், மலைகளைப் பிடித்து அவற்றின் இறக்கைகளை வெட்ட ஆரம்பித்தான். மைநாக மலையையும் அவன் விரட்ட, அது பயந்து வேகமாகப் பறந்தது. அது வாயு பகவானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டியது. வாயுவும் கருணை செய்து, பின்னால் ராமசேவையின் போது இந்த மலைக்கு வேலையிருக்கும் என்பதை மனதில் கொண்டு, கடலுக்குள் அடித்து தள்ளி ஒளித்து வைத்தது. இந்திரனும் அது நல்லதே என நினைத்து, கடலுக்கடியில் ஒளிந்திருக்கும் அசுரர்கள், இந்த மலையைத் தாண்டி வெளியே வந்து தேவர்களைத் துன்புறுத்துவது தடைபடும் என்பதால், மைநாக மலையை அப்படியே விட்டுவிட்டான். அதுவும் இந்திரனுக்கு பயந்து கடலுக்குள்ளேயே கிடந்தது. அந்த மலைக்கு கீழும், மேலுமாக வளரும் சக்தியும் உண்டு.சமுத்திரராஜன் அந்த மலையிடம், நண்பா! நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ராம காரியத்தின் பொருட்டு, ஸ்ரீஆஞ்சநேயர் லங்காபுரிக்கு பறந்து கொண்டிருக்கிறார். நீ சற்று மேலே வந்து. அவரை மறித்து உன் மேல் இளைப்பாறிச் செல்ல வகை செய். ஆஞ்சநேயர் கடலைத் தாண்டுவதால் களைப்படைந்திருப்பார். அவரை ஆசுவாசப்படுத்த வேண்டியது என் கடமை. மேலும், அவர் வாயுபுத்திரர். வாயு பகவான் உன்னைத் தூக்கி வந்து எனக்குள் ஒளித்து வைத்தார். அவ்வகையில், நீயும் வாயுவுக்கு நன்றி செய்ய கடமைப்பட்டிருக்கிறாய். அவருக்கு செய்யும் நன்றியை அவரது புத்திரருக்கு செய்தால் மேலும் சந்தோஷப்படுவார், என்றான்.யாருக்காவது மூச்சுத்திணறல் போன்ற சிரமப்படுத்தும் வியாதிகள் இருந்தால் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலை ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் அமர்ந்து பாடினால் சரியாகி விடும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஏனெனில், தன் புத்திரனை வணங்குவோருக்கு வாயு பகவான் நிச்சயம் கருணை செய்வார். மைநாக மலையும் உயர எழுந்தது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
ஆஞ்சநேயருக்கு அந்தமலை உபகாரம் செய்வதற்காக எழுகிறது என்பது தெரியாதல்லவா? ஏதோ ஒரு தடை ஏற்படுகிறதென கருதி, அவர் தன் மார்பால் அந்த மலையில் மோதினார். அந்த மலைக்கு வலித்தது. ஆஹா...இப்படி ஒரு பலவானா? மலையையே அசைக்கும் சக்தி வாய்ந்தவனாக இருக்கிறானே! என்று சந்தோஷப் பட்ட மைநாக மலை மானிட உருவமெடுத்து அவன் முன்னால் நின்று, தன்னைப் பற்றி விளக்கி, தனது விருந்தினராகத் தங்கிச் செல்ல வேண்டும் என்றது.ஆஞ்சநேயர் மிகுந்த மகிழ்ச்சியுடன், பர்வதராஜா! உன் உபசரிப்பை ஏற்கிறேன். ஆயினும், என்னால் தங்க இயலாது. இலங்கை செல்லும் வரை வழியில் எங்கும் தங்குவதில்லை என என் வானர நண்பர்களிடம் சத்தியம் செய்துள் ளேன். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. உன் உபசரிப்பை ஏற்றதற்கு அடையாளமாக உன் மேல் கைவைக்கிறேன், என்று சொல்லி மானிட வடிவில் நின்ற மலையின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து விட்டு, தொடர்ந்து பறந்தார். அப்போது இந்திரன் மலை முன்னால் தோன்றி, பர்வதராஜா! சிரஞ்சீவியால் ஆசிர்வதிக்கப்பட்டதால் நீ உயர்ந்த கதி பெற்று விட்டாய். இனி நீ உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம், எனச்சொல்லி பல வரங்களையும் தந்தான். ஆஞ்சநேய தரிசனம் கடலினும் ஆழமான கவலைகளைக் கூட கரைத்து ஆனந்தமளிக்கும் என்பதற்கு மைநாக மலையின் கதையே உதாரணம். இந்நேரத்தில், ஆஞ்சநேயரிடம் விஞ்சியிருப்பது பலமா, புத்திசாலித்தனமா என்று பரிட்சித்து பார்க்க தேவர்கள், கின்னரர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆசைப்பட்டார்கள். அந்தக் காலத்திலேயே ஆஞ்சநேயரைப் பற்றி இவர்கள் பட்டிமன்றம் நடத்தியிருப்பதாகக் கொள்ளலாம். இதற்கு நடுவர் வேண்டுமே! அவர்கள் நாகங்களின் தாயான சுரஸை என்பவளை அழைத்தனர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சுந்தரகாண்டம் பகுதி-6
சுரசா! வாயுபுத்திரன் ஆஞ்சநேயன் ஆகாயவழியில் வருகிறான். அவனுக்கு சற்றுநேரம் இடைஞ்சல் கொடு. நீ வைக்கும் தேர்வில், அவன் தப்பிப் பிழைக்கிறானா பார்ப்போம், என்றனர்.மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு கூட சோதனையைக் கொடுப்பதில் கடவுளுக்கு எப்போதுமே ஆனந்தம். அந்த சோதனையைக் கண்டு பயந்தோடுபவன் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகமாட்டான். சோதனையை எதிர்ப்பவனை ஓரளவு விரும்புவான். ஆனால், அந்த சோதனையை ஆனந்தமாக ஏற்று அனுபவிப்பவனுக்காக தன்னையே கொடுத்து விடுவான். சுந்தரகாண்டம் ஒரு ஆனந்த காண்டம். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று விட்ட சீதாதேவியின் மனதில் நம்பிக்கை கீற்றையும், ஆனந்ததத்தையும் உருவாக்கிய காண்டம். அங்கே (இலங்கை) அவள் ராவணனைக் கண்டு சற்றும் நடுங்காமல், அவனை எதிர்த்துப் பேசுவதில் ஆனந்தம் கண்டாள். இங்கே, ஆஞ்சநேயர் சுரஸையுடன் என்ன விளையாட்டு விளையாடப் போகிறார் என்பதை ஆனந்தமாக அனுபவிப்போமோ!சுரஸை ஆஞ்சநேயரை வழிமறித்தாள். கோரைப்பற்களும், கொடிய உருவமும் கொண்ட பூதகி வடிவில் அவர் முன் நின்றாள்.ஏ மாருதி! என் பெயர் சுரஸை. நீ எனக்கு இரையாக வேண்டும் என்பது தேவர்களின் கட்டளை. நீயாக என் வாய்க்குள் போய் விடுகிறாயா? இல்லை, நானே உன்னைக் கசக்கிப் பிழிந்து விழுங்கி விடட்டுமா? ஆஞ்சநேயர் அவளுக்கு மரியாதை கொடுத்தார்.யாராவது நம்மிடம் வம்புக்கு வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். நாமும் வரிந்து கட்டிக் கொண்டு போனால், சண்டை தீவிரமாகி விடும். அடிதடியில் போய் முடியும். வம்புக்காரர்களிடம் பொறுமை காட்ட வேண்டும். இன்முகம் காட்ட வேண்டும். அதே நேரம் அவர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.ஆஞ்சநேயர் நினைத்தால் சுரஸையை ஒரே அடியில் சாய்த்து விடுவார். ஆனால், அவள் பெண். பெண்களுக்கு அருள்பாலிப்பதில் ஆஞ்சநேயனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை. அந்த மகாலட்சுமியின் அம்சமான சீதாவையே அவன் காப்பாற்றியிருக்கிறான் என்றால், சாதாரண மானிடப்பிறவிகளான நாம் அவனைச் சரணடைந்தால் கேட்கவும் வேண்டுமோ!
சுரசா! வாயுபுத்திரன் ஆஞ்சநேயன் ஆகாயவழியில் வருகிறான். அவனுக்கு சற்றுநேரம் இடைஞ்சல் கொடு. நீ வைக்கும் தேர்வில், அவன் தப்பிப் பிழைக்கிறானா பார்ப்போம், என்றனர்.மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு கூட சோதனையைக் கொடுப்பதில் கடவுளுக்கு எப்போதுமே ஆனந்தம். அந்த சோதனையைக் கண்டு பயந்தோடுபவன் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகமாட்டான். சோதனையை எதிர்ப்பவனை ஓரளவு விரும்புவான். ஆனால், அந்த சோதனையை ஆனந்தமாக ஏற்று அனுபவிப்பவனுக்காக தன்னையே கொடுத்து விடுவான். சுந்தரகாண்டம் ஒரு ஆனந்த காண்டம். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று விட்ட சீதாதேவியின் மனதில் நம்பிக்கை கீற்றையும், ஆனந்ததத்தையும் உருவாக்கிய காண்டம். அங்கே (இலங்கை) அவள் ராவணனைக் கண்டு சற்றும் நடுங்காமல், அவனை எதிர்த்துப் பேசுவதில் ஆனந்தம் கண்டாள். இங்கே, ஆஞ்சநேயர் சுரஸையுடன் என்ன விளையாட்டு விளையாடப் போகிறார் என்பதை ஆனந்தமாக அனுபவிப்போமோ!சுரஸை ஆஞ்சநேயரை வழிமறித்தாள். கோரைப்பற்களும், கொடிய உருவமும் கொண்ட பூதகி வடிவில் அவர் முன் நின்றாள்.ஏ மாருதி! என் பெயர் சுரஸை. நீ எனக்கு இரையாக வேண்டும் என்பது தேவர்களின் கட்டளை. நீயாக என் வாய்க்குள் போய் விடுகிறாயா? இல்லை, நானே உன்னைக் கசக்கிப் பிழிந்து விழுங்கி விடட்டுமா? ஆஞ்சநேயர் அவளுக்கு மரியாதை கொடுத்தார்.யாராவது நம்மிடம் வம்புக்கு வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். நாமும் வரிந்து கட்டிக் கொண்டு போனால், சண்டை தீவிரமாகி விடும். அடிதடியில் போய் முடியும். வம்புக்காரர்களிடம் பொறுமை காட்ட வேண்டும். இன்முகம் காட்ட வேண்டும். அதே நேரம் அவர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.ஆஞ்சநேயர் நினைத்தால் சுரஸையை ஒரே அடியில் சாய்த்து விடுவார். ஆனால், அவள் பெண். பெண்களுக்கு அருள்பாலிப்பதில் ஆஞ்சநேயனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை. அந்த மகாலட்சுமியின் அம்சமான சீதாவையே அவன் காப்பாற்றியிருக்கிறான் என்றால், சாதாரண மானிடப்பிறவிகளான நாம் அவனைச் சரணடைந்தால் கேட்கவும் வேண்டுமோ!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
பூதகியாயினும், தன்னையே கொல்ல வந்தவளாயினும் ஆஞ்சநேயர் அவளைக் கையெடுத்து வணங்கினார்.தாயே! தசரத புத்திரரான ராமபிரான், தன் சகோதரன் லட்சுமணனோடும், மனைவி ஜானகியோடும் தண்டகாரண்யத்தில் இருந்தபோது, ராவணன் என்ற அசுரன் அவளை எடுத்துச் சென்று விட்டான். அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஸ்ரீராமன் என்னிடம் ஒப்படைத் துள்ளார். அவருடைய ராஜ்யமே உலகெங்கும் நடக்கிறது. அவ்வகையில், அவருக்கு உதவ வேண்டியது உன் கடமை. அது மட்டுமல்ல! ஒருவர் ஒரு பணியை நம்மை நம்பி ஒப்படைக்கும் போது, அதை முழுமையாக முடித்துத் தர வேண்டியதும் கடமை தானே! நம்பியவர்களை நட்டாற்றில் விட்டால், அது பெரிய பாவமல்லவா? அத்தகைய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விடாதே! உனக்கு இரையாவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஏனெனில், ஒருவரின் பசியைத் தீர்த்து வைக்க வேண்டியது இன்னொருவரின் கடமை. ஆனால், சீதையைப் பற்றி கணநேரத்தில் அறிந்து, ராமபிரானிடம் தகவல் சொல்லிவிட்டு, உன்னிடம் வந்து இரையாகிறேன், என்றார் மிகுந்த பணிவுடன். சுரஸை மறுத்தாள்.ஆஞ்சநேயா! எனக்கு பிரம்மா ஒரு வரம் தந்திருக்கிறார். என்னைத் தாண்டிச் செல்பவர்கள் யாராயினும் என் வாயில் புகுந்து வெளியேறிச் செல்ல வேண்டும். அதன்படி நீ நடந்து கொள், என்றாள். ஆஞ்சநேயர் சம்மதித்தார். தன் குறுகிய உருவத்தை பெரிதாக்கினார். அவள் அதையும் விட அதிகமாக வாயை அகலப்படுத்தினாள். ஆஞ்சநேயர் உள்ளே நுழையும் போதே தன் உருவத்தை மேலும் நீட்டித்தார். இப்படியாக இருவரும் மாறி மாறி அளவைக் கூட்ட ஆஞ்சநேயர் திடீரென தன் அளவை மிகமிகச் சுருக்கி கட்டை விரல் அளவுக்கு மாறி, அவள் காது வழியே வெளிப்பட்டார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
தட்சப்பிரஜாபதியின் புத்திரியான சுரஸையே! உன்னை மீண்டும் வணங்குகிறேன். பிரம்மாவிடம் நீ பெற்ற வரத்துக்கு பாதகமின்றி நடந்து உன்னிடமிருந்து வெளிப்பட்டேன். நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு, என்றார்.சுரஸை தன் சுயரூபமான தேவமங்கை வடிவம் காட்டி, ஆஞ்சநேயனே! நீ மாபெரும் வீரன். நீ செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், என ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாள். வீட்டில் குழந்தைகளிடம் பூதம் வருகிறது, பேய் வருகிறது, பிசாசு வருகிறது என்றெல்லாம் நாம் பயமுறுத்தக்கூடாது. அவை வந்தாலும், நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கற்றுத்தர வேண்டும். ஆஞ்சநேயர் சுரஸையிடம் தப்பித்துச் சென்ற இந்த வரலாறைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, கல்வியறிவும் விருத்தியடையும்.சுந்தரகாண்டம் எந்த நோயையும் தீர்க்கும் மாமருந்து. எந்த கிரக தோஷத்தையும் அது நீக்கி விடும். குழந்தைகளுக்கு தைரியத்தையும், கல்வி நலனையும் தரும். திருமணமாகாத கன்னிகள் இந்த அத்தியாயங்களைச் சேர்த்து வைத்து நாளுக்கு ஒன்று வீதம் படித்தால், ஸ்ரீராமன் போல் நல்ல மணவாளன் அமைவார்.இந்த பகுதியில், ஆஞ்சநேயர் சுரஸையிடம், தசரத புத்திரன் ராமனின் மனைவியை ராவணன் கடத்திச் சென்றதாகச் சொல்கிறார். ராமன் என்றாலே பிரபலம் என்றாலும், தசரதர் பெயரையும் ஏன் சொன்னார் தெரியுமா? தசரதர் ராமனையும் விஞ்சிய வீரர். தன் நாட்டில் சனி பார்வையால் பஞ்சம் வர இருந்த நேரத்தில் அவர் விண்ணுலகுக்கே தேரில் சென்று சனீஸ்வரனை எதிர்க்கச் சென்ற கடமை வீரர். கடமையின் காவலர்களாக அரசுப்பொறுப்பில் உள்ளவர்கள் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டம் காட்டுகிறது.தசரதர் என்பதே காரணப்பெயர் தான். அவரது நிஜப்பெயர் தர்மராஜா. விண்ணுலகம், பாதாளம் உள்ளிட்ட பத்து திசைகளில் ரதம் செலுத்தும் வல்லமை பெற்ற மாவீரர் தசரதர். அதனால் தான் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. அதுவே நிலைத்தும் விட்டது. அப்படிப்பட்ட மாவீரரின் மருமகளைத் தேடி தொடர்ந்து பறந்தார் ஆஞ்சநேயர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சுந்தரகாண்டம் பகுதி-7
ஆஞ்சநேயருக்கு பறக்கும் சக்தி இருக்கிறது என்பதில் ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது தெரியுமா? ஒரு பறவை பறக்கிறது என்றால், மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதற்கு ஏதாவது பிடிப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்போம். எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் தான் அது பறக்கிறது. ஆஞ்சநேயரும் அப்படித்தான். அவர் பற்றற்றவர். தனக்காக ஏதும் வேண்டாதவர். உலகில் யார் யார் சிரமப்படுகிறார்களோ, அவர்களுக்கு பறந்து வந்து உதவுபவர். அதற்காக எந்தக் கூலியையும் எதிர்பாராதவர்.ஆனால், நமக்கெல்லாம் பெரும் பற்று இருக்கிறது. செல்வத்தின் மீதான பற்று அது. பணம் கொடுத்தால் தான் எந்தக் காரியமும் இங்கே நடக்கும். ஆஞ்சநேயரைப் போல் பற்றற்ற வாழ்க்கை மேற் கொள்பவர்களுக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தி, பணத்தை தேடி அலையும் போதோ, அந்தப் பணத்தால் கிடைக்கும் சுகத்தாலோ கிடைப்பதில்லை.இப்படி பற்றில்லாமல் பறந்து சென்ற அந்த மாவீரன், இப்போது ஸிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கிக் கொண்டார். அவளுக்கு ஒரு விசேஷ சக்தியுண்டு. யாரையும் அவள் நேரடியாக பிடிக்க வேண்டியதில்லை. ஒரு உயிரின் நிழலைப் பிடித்தாலே போதும். அது அவளிடம் சிக்கி விடும்.ஸிம்ஹிகைக்கு கோரப்பசி. ஒன்றும் அகப்படவில்லையே என நினைத்திருந்தவளின் கையில் ஆஞ்சநேயரின் நிழல் சிக்கியது. மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த ஆஞ்சநேயரின் ஓட்டம் தடைபட்டுப் போயிற்று. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, திறந்திருந்த அவளது வாய்க்குள் நுழைந்தார். அவளது உயிர் ஸ்தானம் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடித்து தன் நகங்களால் கீறினார். அவள் வலியால் துடித்தாள். அவளது உயிர் அடங்குமுன், தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு அவள் வாயை மூடுவதற்குள் வெளியே வந்துவிட்டார். ஆகாயத்தில் இருந்து அந்த ராட்சஷி கதறியபடியே கடலுக்குள் விழுந்து உயிர்விட்டாள். தொடர்ந்து பறந்த அவரது கண்களில் லங்காபுரி தென்பட்டது. அந்நகரின் அழகு அவரை வெகுவாகக் கவர்ந்தது. லங்காபுரிக்கு சற்று தள்ளியிருந்த ஸ்வேல மலை மேல் இறங்கிய அவர், அங்கிருந்தபடியே லங்காபுரியை நன்கு நோட்டமிட்டார். அதன் செல்வ வளம் அவரை ஆச்சரியப்பட வைத்தது.
ஆஞ்சநேயருக்கு பறக்கும் சக்தி இருக்கிறது என்பதில் ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது தெரியுமா? ஒரு பறவை பறக்கிறது என்றால், மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதற்கு ஏதாவது பிடிப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்போம். எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் தான் அது பறக்கிறது. ஆஞ்சநேயரும் அப்படித்தான். அவர் பற்றற்றவர். தனக்காக ஏதும் வேண்டாதவர். உலகில் யார் யார் சிரமப்படுகிறார்களோ, அவர்களுக்கு பறந்து வந்து உதவுபவர். அதற்காக எந்தக் கூலியையும் எதிர்பாராதவர்.ஆனால், நமக்கெல்லாம் பெரும் பற்று இருக்கிறது. செல்வத்தின் மீதான பற்று அது. பணம் கொடுத்தால் தான் எந்தக் காரியமும் இங்கே நடக்கும். ஆஞ்சநேயரைப் போல் பற்றற்ற வாழ்க்கை மேற் கொள்பவர்களுக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தி, பணத்தை தேடி அலையும் போதோ, அந்தப் பணத்தால் கிடைக்கும் சுகத்தாலோ கிடைப்பதில்லை.இப்படி பற்றில்லாமல் பறந்து சென்ற அந்த மாவீரன், இப்போது ஸிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கிக் கொண்டார். அவளுக்கு ஒரு விசேஷ சக்தியுண்டு. யாரையும் அவள் நேரடியாக பிடிக்க வேண்டியதில்லை. ஒரு உயிரின் நிழலைப் பிடித்தாலே போதும். அது அவளிடம் சிக்கி விடும்.ஸிம்ஹிகைக்கு கோரப்பசி. ஒன்றும் அகப்படவில்லையே என நினைத்திருந்தவளின் கையில் ஆஞ்சநேயரின் நிழல் சிக்கியது. மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த ஆஞ்சநேயரின் ஓட்டம் தடைபட்டுப் போயிற்று. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, திறந்திருந்த அவளது வாய்க்குள் நுழைந்தார். அவளது உயிர் ஸ்தானம் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடித்து தன் நகங்களால் கீறினார். அவள் வலியால் துடித்தாள். அவளது உயிர் அடங்குமுன், தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு அவள் வாயை மூடுவதற்குள் வெளியே வந்துவிட்டார். ஆகாயத்தில் இருந்து அந்த ராட்சஷி கதறியபடியே கடலுக்குள் விழுந்து உயிர்விட்டாள். தொடர்ந்து பறந்த அவரது கண்களில் லங்காபுரி தென்பட்டது. அந்நகரின் அழகு அவரை வெகுவாகக் கவர்ந்தது. லங்காபுரிக்கு சற்று தள்ளியிருந்த ஸ்வேல மலை மேல் இறங்கிய அவர், அங்கிருந்தபடியே லங்காபுரியை நன்கு நோட்டமிட்டார். அதன் செல்வ வளம் அவரை ஆச்சரியப்பட வைத்தது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
ஒரு காலத்தில் குபேரனின் தேசமாக இது விளங்கியது. குபேரனின் நாடு என்றால் கேட்கவா வேண்டும் செழிப்புக்கு?இங்குள்ள ராட்சதர்களுக்கு ராமபிரான் பெருமளவு செல்வத்தைக் கொடுத்து சீதையை மீட்டுச்செல்ல இயலாது. ஏனெனில், இங்கேயே அளவுக்கு மீறி செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இதில், மற்றவர்கள் தருவதை வாங்க வேண்டுமென்ற அவசியமே இல்லையே, என்று ஆஞ்சநேயரே நினைக்குமளவுக்கு லங்காபுரி சகல ஐஸ்வரியங்களுடன் திகழ்ந்தது.இந்த பணம் இருக்கிறதே...இது யார் புத்தியையும் மாற்றிவிடும், சாட்சாத் ஆஞ்சநேயப்பெருமானே, இலங்கையின் செல்வவளத்தை இவ்வளவு ஆய்வு செய்கிறான் என்றால் மற்றவர்களைக் கேட்கவா வேண்டும்? இப்போது, ஆஞ்சநேயர் இலங்கையின் செழிப்பு குறித்த நினைவை அகற்றி விட்டு, சீதாதேவி எங்கிருக்கிறாள் என்ற கவலை தொற்ற அதுபற்றி யோசிக்க ஆரம்பித்தார். இலங்கைக்குள் நுழைய அவர் ஆயத்தமானார். பகலில் உள்ளே சென்றால் ராட்சதர்கள் பிடித்து விடுவார்கள். மிக மிக குறுகிய வடிவெடுத்துச் சென்றால், மாடமாளிகைகளில் அவளைத் தேடுவது கஷ்டம். எனவே, இரவுப்பொழுதை தேர்ந்தெடுத்து உருவத்தை ஓரளவு சுருக்கிக் கொண்டு நுழையலாம் என காத்திருந்தார்.இவ்வளவு சிரமப்பட்டு இலங்கை வந்த பிறகு, ஏதாவது அவசரப்பட்டு செய்தால் என்னை புத்தியில்லாதவன் என உலகம் தூற்றும். அப்படி ஒரு அவப்பெயரை வாங்கி விடக்கூடாது, என்று ஆஞ்சநேயர் நினைத்தார்.ஒரு வழியாக இரவும் வந்தது. மாருதி தன் உருவத்தை ஒரு பூனையின் அளவுக்கு சுருக்கிக் கொண்டார். பூனை ஒன்று தான் சந்தடியில்லாமல் பதுங்கி வந்து பாலை பருகிவிட்டு ஓடிவிடும் பிராணி. அதனால் தான் சத்தமே இல்லாமல் உள்ளே நுழைய பூனையளவு உருவத்தை ஆஞ்சநேயர் விரும்பியிருக்கிறார்.பின்னர் மிக வேகமாக நகரத் திற்குள் நுழைந்தார். அந்த நகரத்திலுள்ள அரண்மனைகள் மின்னின. ஏனெனில், எங்கும் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட தூண்கள் அதில் இருந்தன. ஜன்னல் கதவுகளைக் கூட தங்கத்தால் செய்திருந்தார்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
இதுபோன்று தான் ஆகாயத்திலுள்ள கந்தர்வ லோகம் இருக்குமாம். ஆனால், இவ்வாறு இருப்பது நல்லதல்ல என்பார்கள். சில நேரங்களில் வானத்தில் ஒரு வகை மேகக்கூட்டம் வரும். அது பார்ப்பதற்கு ரத்தினங்களில் இழைக்கப்பட்ட கோபுரம் போன்றும், அரண்மனைகள் போன்ற உருவத்திலும் வந்தால் அது பூமிக்கு நல்லதல்ல. மனிதர்கள், மிருகங்கள் இந்த மேகம் வரும் காலத்தில் பூமியில் விழுவார்கள். அவர்களின் ரத்தத்தை பூமி உறிஞ்சி விடும் என்பது சாஸ்திரம். இதை ஏன் இவ்விடத்தில் வால்மீகி சொல்கிறார் என்றால், தங்கமும், வைரமும் இழைக்கப்பட்ட இந்த இலங்கையும் இன்னும் சில நாட்களில் செந்நீர்க் காடாக மாறப் போகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு.அதிலும் சந்திரன் வானத்தில் தோன்றியவுடன், அவனது கிரணங்கள் பட்டு அந்த நகரம் இன்னும் ஜொலித்தது.இப்படிப்பட்ட அழகிய நகரை ரசித்துப் பார்த்து அவர் உள்ளே நுழையும் சமயத்தில், இங்கும் வந்து நின்றாள் கோர ரூபமுடைய ஒரு பெண்.அவள் கரகரத்த குரலுடன், ஏ குரங்கே! இங்கே எதற்கு வந்தாய்? யார் நீ? எங்கே போகிறாய்? என அதட்டினாள். ஆஞ்சநேயர் அந்தப் பெண்ணிடம், மாதரசியே! என்னைத் தடுத்து நிறுத்தி, இவ்வளவு கேள்விகள் கேட்கும் உன்னை யாரென்று தெரிந்து கொள்ளலாமா? என்றார். அவளுக்கு கோபம் அதிகமாகி விட்டது.நான் சொல்வதை சற்றும் பொருட்படுத்தாமல் என்னையே எதிர்த்து கேள்வி கேட்கிறாயா? ஏ குரங்கே! நான் இலங்கையைப் பாதுகாக்க ராவணேஸ்வரனால் நியமிக்கப்பட்ட காவல் தேவதை. என்னை மீறி யாரும் இந்நகருக்குள் செல்ல முடியாது. மீறினால் உயிர் போய்விடும், என்று அதட்டினாள்.இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆஞ்சநேயரை அவர் வரும் வழியில் தடுத்த எல்லாருமே பெண்கள். எதற்காக பெண்கள் மட்டும் ஆஞ்சநேயரைத் தடுக்கிறார்கள்?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
சுந்தரகாண்டம் பகுதி-8
தன்னை மறித்த லங்காதேவியை ஒரே அடியில் அவர் வீழ்த்தினார். எப்படி அடித்தாராம் தெரியுமா?பெண்களிடம் ஆண்கள் வீரத்தைக் காட்டக்கூடாது. லட்சுமணன் கூட அவசரப்பட்டிருக்கிறான், சூர்ப்பனகை விஷயத்திலே. அதனால் தான், இன்று இவ்வளவு விபரீதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அவளை சமாதானம் செய்து பார்த்தார்கள் ராம, லட்சுமணர்கள். அவள் கேட்பதாக இல்லை. அதற்காக, அவசரப்பட்டு நோஸ்கட் பண்ணியிருக்க வேண்டுமா! தப்புத்தானே!ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆஞ்சநேயர் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். லங்காதேவியை அவரும் அடித்தார். ஏனெனில், அவள் அடிபட வேண்டும் என்பது விதி. அதுவும் எப்படி அடித்தார் தெரியுமா? அவள் பெண் என்பதால், வலது கையால் அடித்தால் தாங்கமாட்டாள் என்று, இடது கையால் அடித்தாராம். இடது கைக்கு சக்தி குறைவு தானே! அதனால் வலியோடு போயிற்று. அவளது உயிருக்கு ஆபத்து வரவில்லை. மேலும், அவளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கவே அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டார். சுரஸையையும் அவர் கொல்லவில்லை. அவள் சொன்ன நிபந்தனையை நிறைவேற்றி, அவளது ஆசியையும் பெற்றார். பெண்களிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுந்தரகாண்டம் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார். லங்காதேவி ஆஞ்சநேயரிடம் அடிபட்டாள். உடனே, தன் ராட்சஷ ரூபம் மறந்து, ரூப லாவண்யம் மிக்க பேரழகியாக அவர் முன் நின்றாள். வானர வீரரே! பிரம்மா எனக்கிட்ட சாபத்தால் இங்கு நான் தங்கியிருந்தேன். என்று ஒரு வானரன் உன்னை வெல்கிறானோ, அப்போது நீ விமோசனம் பெறுவாய். அப்போது, இலங்கையில் ஆளும் ராட்சஷர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன்படியே இன்று நடந்தது. பிரம்மாவின் வாக்குப்படி, நீ ராட்சஷர்களை அழிப்பாய், என்று சொல்லி இலங்கையை விட்டுப் புறப்பட்டு சென்று விட்டாள்.இதன்பிறகும், ஆஞ்சநேயருக்கு பெண்களைக் குறித்த அனுபவம் ஏற்படப்போகிறது.
தன்னை மறித்த லங்காதேவியை ஒரே அடியில் அவர் வீழ்த்தினார். எப்படி அடித்தாராம் தெரியுமா?பெண்களிடம் ஆண்கள் வீரத்தைக் காட்டக்கூடாது. லட்சுமணன் கூட அவசரப்பட்டிருக்கிறான், சூர்ப்பனகை விஷயத்திலே. அதனால் தான், இன்று இவ்வளவு விபரீதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அவளை சமாதானம் செய்து பார்த்தார்கள் ராம, லட்சுமணர்கள். அவள் கேட்பதாக இல்லை. அதற்காக, அவசரப்பட்டு நோஸ்கட் பண்ணியிருக்க வேண்டுமா! தப்புத்தானே!ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆஞ்சநேயர் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். லங்காதேவியை அவரும் அடித்தார். ஏனெனில், அவள் அடிபட வேண்டும் என்பது விதி. அதுவும் எப்படி அடித்தார் தெரியுமா? அவள் பெண் என்பதால், வலது கையால் அடித்தால் தாங்கமாட்டாள் என்று, இடது கையால் அடித்தாராம். இடது கைக்கு சக்தி குறைவு தானே! அதனால் வலியோடு போயிற்று. அவளது உயிருக்கு ஆபத்து வரவில்லை. மேலும், அவளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கவே அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டார். சுரஸையையும் அவர் கொல்லவில்லை. அவள் சொன்ன நிபந்தனையை நிறைவேற்றி, அவளது ஆசியையும் பெற்றார். பெண்களிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுந்தரகாண்டம் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார். லங்காதேவி ஆஞ்சநேயரிடம் அடிபட்டாள். உடனே, தன் ராட்சஷ ரூபம் மறந்து, ரூப லாவண்யம் மிக்க பேரழகியாக அவர் முன் நின்றாள். வானர வீரரே! பிரம்மா எனக்கிட்ட சாபத்தால் இங்கு நான் தங்கியிருந்தேன். என்று ஒரு வானரன் உன்னை வெல்கிறானோ, அப்போது நீ விமோசனம் பெறுவாய். அப்போது, இலங்கையில் ஆளும் ராட்சஷர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன்படியே இன்று நடந்தது. பிரம்மாவின் வாக்குப்படி, நீ ராட்சஷர்களை அழிப்பாய், என்று சொல்லி இலங்கையை விட்டுப் புறப்பட்டு சென்று விட்டாள்.இதன்பிறகும், ஆஞ்சநேயருக்கு பெண்களைக் குறித்த அனுபவம் ஏற்படப்போகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
காவல் தெய்வமே அனுமதி தந்து விட்டதால், இலங்கைக்குள் புகுந்த அவர் சீதாதேவியை தேடி வீடு வீடாக அலைகிறார். எங்கும் அவள் இல்லாமல் போனதால், ராவணனின் அரண்மனைக்கே வந்து விடுகிறார். அப்போது, அங்கே அவனது ஆசைநாயகியர் அலங்கோலமாக கிடக்கிறார்கள். அதைப் பார்த்து அவர் கண்களை மூட வேண்டிய நிலைமை வந்துவிட்டது. பெண்கள் தூங்கும் போது அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் அடக்க ஒடுக்கமாக தூங்கிப் பழகினால் தான், வெளியிடங்களில் தங்கும் போதும் அதே பழக்கம் வரும். நாம் ரயில்வே ஸ்டேஷன்களிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும் இரவு நேரத்தில் சென்றால், பல பெண்கள் தாறுமாறாக படுத்திருப்பதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கற்றுக் கொடுக்காமையே ஆகும்.ராவணனின் அரண்மனையில் படுத்திருந்த பெண்களின் நிலையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்களை மூடிக் கொண்டு, ராமா! நான் என்ன பாவம் செய்தேனோ! உன் திருஉருவத்தை மட்டுமே எந்நேரமும் தரிசித்துக் கொண்டிருந்த என் கண்கள், இந்த அலங்கோலக் காட்சிகளையெல்லாம் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே! என்று சொன்னாராம்.இது மட்டுமா! சீதாதேவியை ஒரு வழியாக அவர் அசோகவனத்திலே பார்த்த போது, அவளை ராட்சஷிகள் ராவணனோடு இணையும்படி துன்பப்படுத்திக் கொண்டிருந்தனர். மிரட்டினர். அதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். அவர்கள் தூங்கிய பிறகு, சீதையை சந்தித்த அவர், அம்மா! இந்த ராட்சஷிகளை நான் அடிக்கட்டுமா? என்றார்.அப்போது கருணைக்கடலான சீதா சொன்னாள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
அடேய் ஆஞ்சநேயா! உனக்கு பெண்களை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? தங்கள் தலைவன் இட்ட கட்டளையைச் சரிவர செய்கிறார்கள். அவ்வளவுதானே! பாவம் செய்தாலும் சரி..நன்மையே செய்தாலும் சரி..ஒருவரை தயையுடன் ஆட்கொள்வது தான் சிறந்த தர்மம். இதைப் புரிந்து கொள். மேலும், உலகத்தில் தப்பே செய்யாதவர்கள் கிடையாது, என்றாள். ஆஞ்சநேயருக்கு இன்னும் வருத்தம் வந்து விட்டது.இவ்வளவு கஷ்டப்பட்டு கடலைத் தாண்டி குதித்து வந்திருக்கிறேன். இந்த அம்மா தப்பு செய்யாதவனே கிடையாது என்கிறார்களே. நான் என்ன தப்பு செய்தேன்? என்று அவளிடமே கேட்டுவிட்டார். இவர்களை அடிக்க நினைத்தது நீ செய்த தப்பு, என்றாள் பிராட்டி.சரி...என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போங்கள். என் தலைவன் ராமன் என்ன தப்பு பண்ணினான்? என்று அடுத்த கேள்வியை கேட்டார்..மனைவியை ஒருவன் கடத்திப் போய் விட்டானே! அவளை மீட்க அவரே நேரில் வராமல், உன்னை அனுப்பி வைத்தாரே! அது அவர் செய்த தப்பு, என்கிறாள்.ஏன்... அவளே கூட தவறு செய்திருக்கிறாளே! பொன்மானைக் கேட்டது பெரிய தப்பு. கொழுந்தனை சந்தேகப்பட்டது மன்னிக்க முடியாத தப்பு. அதனால் தான் இப்படி சொல்கிறாள்.ஆக, தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் கூட பெண்களை கைநீட்டக்கூடாது என்று சுந்தரகாண்டம் நமக்கு உணர்த்துகிறது. இதனால் தான் கணவனும், மனைவியும் பிரிந்திருந்தால், சுந்தரகாண்டத்தில் தினமும் ஒரு ஸர்க்கம் படி என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மனைவியோ, கணவனோ...யார் தப்பு செய்திருந்தாலும் சரி...தப்பு செய்யாதவர் யாருமில்லை என்ற உண்மையை உணரவும், பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ளவும் சுந்தரகாண்டம் நமக்கு வழிகாட்டுகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுகம் தரும் சொர்க்கம் - " சுந்தரகாண்டம் "
நற்பதிவு... தொடர்... படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது... பாராட்டுகள்
தொடருங்கள்
தொடருங்கள்
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சுகம் தரும் இல்லம்
» நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
» சுகம் தரும் இல்லம்
» சுகம் தரும் கிராம்பு
» சுகம் தரும் சுக்கு
» நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
» சுகம் தரும் இல்லம்
» சுகம் தரும் கிராம்பு
» சுகம் தரும் சுக்கு
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|