தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

View previous topic View next topic Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 11:20 am

அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ...
தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

கொட்டும் மழையில் உடல்விறைக்க...
உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் வெளிவர ....
உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!!
அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

நச்சுபொருளுடன் நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் நச்சு பொருளை....
உண்டு மடியாத -உன் மனதைரியம்...!!!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
தன் கையில் நஞ்சை அருந்தாத......
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!

( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 11:45 am

உடல் நாற்றம் மறைக்க
உள்ள வாசனையெல்லாம்
உடல் முழுக்க பூசி -உன்
உண்மை அழகை கெடுக்கும்
சுத்த வாங்களே....!!!
உன் வீட்டு கழிவு கிடங்கு
உடைந்து விட்டால் -உன்
மூக்கை நீயே பொற்றி...
வாந்தியும் எடுக்கிறாய் ...!!!

கழிவு அகற்றும் தொழிலாளியை
சற்று நினைத்துப்பார் -உன் கழிவை
தன் கழிவாக தன்னுடல் மேல்
சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும்
சந்திர ஒளியனைபார் ....!!!

மனிதா உன்னிடம் நான் கேட்பது ...?
அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை
வார்த்தையால் -கொடு ...
மனிதனாக அவர்களை பார் ...
அடிமை தொழில் செய்யும் அடிமையாக
பார்க்காதே ...!!!

செய்த வேலைக்கு ஊதியத்தை ...
மனமகிழ கொடு ...!!!
முற்பிறப்பில் அவர்கள் செய்தபாவம்..
என்று -பொருத்தமற்ற ஆன்மீகத்தை
பேசும் ஞானவான்களே ...?
அவர்கள் அழிவை உடலில் சுமக்கிறார்கள்
நீ மனதில் சுமர்ந்து கொண்டே இருக்கிறாய் ...!!!

( கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு இக் கவிதை
சமர்ப்பணம் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 6:47 pm

உழவனுக்கும் கழிவகற்றுவனுக்கும் தாங்கள் கவிதை செய்தமைக்குப் பாராட்டுகள்...

அவர்களின் ஏழ்மை நீங்கட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 6:56 pm

நன்றி நன்றி பெரும் சந்தோஷம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by சரண் Sun Sep 15, 2013 9:00 am

அருமையான கவிதை வரிகள்.

சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 11:49 am

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 4:45 pm

சிற்பங்களை
வடிக்கும் சிற்பியே ...
உன் மனதை ...
கிழித்துப்பார்க்க ஆசை ...
பொன்முட்டையிடும்
வாத்து கதைபோல் ..
ஆகிவிடும் என் ஆசை ....!!!

எத்தனை எத்தனை
கற்பனைகள் ...
எத்தனை எத்தனை
நலினங்கள் ...
அத்தனையும் - உன் .
மனதில் வித்தையாய்
வடிக்கிறாய் -சிற்பியே ....!!!

நீ இல்லாத இடமேது ...?
கடவுளை கண்டேன் - உன்
கைவண்ணத்தில்
கடந்துசெல்லும் படியிலும்கண்டேன்
உன் கைவண்ணத்தை ...!!!.
தூக்கி செல்லும் வாகனத்தில் கண்டேன்
உன் கற்பனையை ....!!!

செதுக்குவது கல் அல்ல ...
நானும் நீயும் விரும்பும் உயிர் ...!!!
நீ
செதுக்கும் போது வருவது....
ஓசையல்ல...
உயிருக்கு உடல் ...!!!

(இந்த கவிதையை சிற்பாச்சாரியார்களுக்கு சமர்ப்பணம் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 23, 2013 3:09 pm

நித்தம் நித்தம் வேலை செய்து
அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம்
நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற
வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி
அங்காடி குடும்பம் நாங்கள் .....!!!

மழை பெய்தால் வேலையில்லை
கடும் காற்றாடித்தால் வேலையில்லை
முதலாளி வராவிட்டால் வேலையில்லை
வேலையில்லாவிட்டால் வேலையில்லை
நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும்
தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!!

ஆலயம் செல்வதில்லை -ஆனாலும்
ஆண்டவனிடம் மன்றாடுவோம்
இன்று மழைவரக்கூடாது
கடும் காற்று அடிக்க கூடாது
முதலாளி சுகநலத்தோடு வாழனும்
ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம்

நோய் என்று இருக்க மாட்டோம்
வந்தாலும் சோரமாட்டோம்
ஒரு வேளை சோறு நாம் உருண்டால்
தானே உண்டதுண்டு -உலகிலேயே
அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்
நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!!

எங்களுக்கும் காலம் வரும்
தேர்தல் வரும் காலம் பொற்காலம்
இலவச உணவு உடுக்க உடை
படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர்
எங்களின் இயலாமையை நன்றாக பயன்
படுத்தும் அரசியல் வாதிகள் .....!!!

ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும்
ஒருசட்டம் கூட தினக்கூலியை
காப்பாற்றவில்லை
தினகூலியை காப்பாற்ற அரசியல் வாதியும்
விரும்புவதுமில்லை.....!!!

எம் மத்தியில்
ஒருவன் வீறு கொண்டு எழுவான்
தலைவனாவான் காலப்போக்கில்
அவனின் காது தங்க காதாகிவிடும்
நாம் கத்தும் அவலக்குரல் கேட்காது ....!!!
நாங்கள் என்றும் தினகூலிகளே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 6:57 pm

வாழ்க்கையின் பயணத்துக்கு
இறைவன் பார்த்த சாரதி
சாரதியாய் இருக்கிறார்
என்பது அவரவர் நம்பிக்கை ...!!!

நாளாந்த பிழைப்புக்காய்
நாம் பயணிக்கும் வாகன சாரதி
கண்கண்ட சாரதி ...
இயந்திரத்தின் வெப்பத்தை
தன் அடியில் தாங்கி
வீதியோரம் வரும் தூசியை
விரும்பாமல் கண்ணில் வாங்கி
முறையற்ற முறையில் வீதியில்
பயணிக்கும் பயணிகளின்
துன்பத்தை தன் இதயத்தில்
ஏற்று -எம் பயணம் வரை
எம் உயிரை பாதுகாக்கும்
வாகன சாரதிதான் -நான்
கண்ட பார்த்த சாரதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்  Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum