தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தித்தால் சிகரம் எட்டும்!

View previous topic View next topic Go down

சிந்தித்தால் சிகரம் எட்டும்! Empty சிந்தித்தால் சிகரம் எட்டும்!

Post by sawmya Tue Nov 05, 2013 11:34 am

சிந்தித்தால் சிகரம் எட்டும்!

சிந்தித்தால் சிகரம் எட்டும்! Vt4r

நம் சிந்தனையின் பிம்பமாக செயலின் வடிவமாக சாதனையின் அடையாளமாக இருக்கிறோம். சிந்தனையில் இருந்துதான் அறிவு தோன்றுகிறது. அது பண்பட்ட பல கேள்வி களை எழுப்பி விடை காண வைக்கும்.

ஏன் எதற்கு எப்படி என்ற வினாவை எழுப்பி அறிவைப் பயன்படுத்தச் செய்யும். சிந்தனை இல்லா விட்டால் உலகத்தில் இயங்குகின்ற சக்தியே இருக்காது. சிந்தனையின் மூலமே முன்னேற்றம் காண முடியும்.

ஒன்றைப் பற்றி தொடர்ந்து எண்ணிக் கொண்டிருப்பதும், ஆராய்ந்து கொண்டிருப் பதும் தான் சிந்தனை. இதன் மூலம்தான் செயலைச் செய்ய முடியும். சிந்தனை தான் நமது வாழ்வின் அஸ்திவாரம். வாழ்வே இதனால் தான் ஆக்கப்பட்டது என்கிறார் புத்தர்.

நாம் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் மனிதர்களுடைய சிந்தனையிலிருந்து பிறந்தது தான். அவர்களுடைய சிந்தனையே செயலாக மாறி கண்டுபிடிப்புகளாகத் தோன்றின.

நாம் யாராக இருந்தாலும் எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் சிந்தனையை உயர்வாகக் கொண்டிருக்க வேண்டும். சிந்தித்துச் செயல்படுவதின் மூலமே சிறப்பாக வாழ முடியும்.

சிந்தனை மட்டும் இருந்து செயலைச் செய்யாவிட்டால் அதனால் எந்தவித பயனும் ஏற்படாது. ஜப்பான் நாட்டின் மேன்மையான வளர்ச்சிக்குக் காரணமே அந்த தேச மக்களின் உயர்வான சிந்தனைதான்.

சிந்தனையின் சிறப்பினால்தான் ஒவ்வொரு நாடும் வளர்ச்சிப் பெற்றுக்கொண்டே இருக்க முடியும். மனிதனின் உயர்வானது எது என்று நபிகள் நாயகத்திடம் கேட்டபோது சிந்தனை என்று பதில் சொன்னார்.

நம்முடைய சிந்தனை ஆக்கப்பூர்வமான அறிவு நிரம்பியதாக இருந்தால் அனைவருக்கும் பயன்படும். அன்றாடம் செய்து கொள்ளும் முகச்சவரத்தை உருவாக்கித் தந்தவர் கில்லட்.

அவருடைய நல்ல சிந்தனையின் பயனாகக் கண்டுபிடிக்கப்பட்ட கருவிதான் ரேசர். இதற்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய சிந்தனைதான். முகத்தில் இருக்கும் முடியை வலி தெரியாமல் வழித்துக் கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்தனை செய்ததின் பலன் தான் ரேசர் முறையை கண்டுபிடிக்க முடிந்தது.

எடுப்பு, தொடுப்பு, முடிப்பு மூன்றும் முதல் தரமாக அமைய வேண்டுமானால் சிந்தனை சீராக இருக்க வேண்டும். சிந்தனையில் தெளிவு இருந்தால் நமக்கு வரும் சோதனையைக்கூட சாதனையாக மாற்றிவிட முடியும். நாம் நினைத்தால் நல்ல சிந்தனையை மட்டுமே வளர்த்துக் கொள்ள முடியும்.

குளோரோபாமைக் கண்டுபிடித்தவர் சிம்சன். இவர் மனிதர்கள் படும் நோயின் வேதனையைக் கண்டு கண் கலங்கினார். அவருடைய காலத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் முதலில் உயில் எழுதி வைத்து விடவேண்டும். உயிருக்கு உத்திரவாதமற்ற சிகிச்சையாகக் கருதப்பட்டது அறுவை சிகிச்சை.

இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று சிம்சன் சிந்தனைச் செய்தார். பலவிதமான ஆராய்ச்சியில் மூழ்கினார். அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்கும் வழியை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஒரே முடிவை எடுத்து தீவிரமாக சிந்தனையில் ஆழ்ந்தார்.

நாட்கள் ஓடின. வருடங்கள் கடந்தன. தன்னுடைய சிந்தனையின் மூலமே ஆராய்ச்சியை விடாமல் செய்தார். அதன் பயன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட எவரும் உயிர் வாழ முடியும்.

அறுவையின் போது கூட வலி இல்லாமல் இருக்க இயலும் என்று நிரூபித்துக் காட்டினார். இந்த கண்டுபிடிப்புக்குக் காரணம் அவருடைய ஒரே சிந்தனைதான். எந்த விஞ்ஞானியும் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் செயல்பட்டமையால்தான். மருந்துகளும் அறுவைசிகிச்சைக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள், அற்புதமான அறிவியல் சாதனையை நிகழ்த்தி யவர்கள் எல்லாம் சஞ்சலமற்ற சலனமற்ற திடமான உறுதியான ஒருமைப்பாடு சிந்தனையைக் கொண்டவர்களாக இருப்பதைக் காண முடியும்.

முன்னேற்றமான வளவாழ்வை திட்டமிட்டு அடைவதற்கு சிந்தனையின் ஒருமைப்பாடு மட்டுமே துணைபுரியும். சிந்தனை சலனப்படும்பொழுது அது பலவீனம் அடையும்.

சலனமற்ற ஒரே நிலையில் நிரந்தரமாகச் சிந்தனை இருக்கும் பொழுது பேராற்றலை உற்பத்திச் செய்யும். சிந்தனை ஒருமுகப்பட்டு ஒரே இலக்கு நோக்கிப் பாய்ந்து செல்லும் போது அதற்கு அப்பாற்பட்டு எதுவுமே இருக்க முடியாது.

இயேசுநாதர் நாற்பது நாட்கள் தனித்திருந்து சிந்தனைச் செய்து இருக்கிறார். உலகை வெற்றி கண்டவர் அனைவரும் சிந்தனை செய்திருக்கும்பொழுது, வாழ்வை வெற்றிகாண விரும்பும் நாம் காட்டாயம் சிந்திக்க வேண்டும்.

சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும். சிந்தனையே ஆழமான அறிவுக்கு வித்தாக அமையும். அந்த அறிவின் தன்மை வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.

சிந்தனையிலிருந்து பயனுள்ள அறிவை வெளியில் கொண்டு வந்து செயலில் காட்டினால்தான் வெற்றி பெறமுடியும். சிந்தனைப் பெருகும் போது அறிவு வளரும்.

அறிவு தெளிவு பெறும்போது மனநிலையில் வரவேற்கத் தகுந்த பல மாறுதல்களை உண்டு பண்ணும். அதன்மூலம் முன்பு செய்து இருக் காத பல காரியங் களைச் செய்ய முடியும். எண்ணற்ற சாதனைகளை சாதிக்க இயலும்.

சஞ்சலத்தைத் தாண்டி கவலையை அகற்றி விதியின் விபரீதப் போக்கை மாற்றி மகிழ்ச்சியுடன் வாழச் செய்வது சிந்தனைதான். புதுமை யான நற்கருத்துகள் உதயமாகி அவற்றின் மூலம் நாம் பயனடை வதற்கு ஆக்கவழியான சிந்தனை மிகவும் அவசியம் வேண்டும்.

இன்ப வாழ்க்கை வாழ வேண்டுமானால் சிந்தனை எவ்வளவு அவசியமாக தேவையோ அவ்வளவுக்குச் செயலாற்றலும் தேவை என்கிறார் அறிஞர் ஹாஸ்லிட். இது இவர் கண்ட முடிவு மட்டுமே அல்ல! உலகத்தின் முடிவும் இதுதான்.

சிந்தனையும் செயலும் இணைந்து இயங்குகின்றபோதுதான் நாம் மேற்கொண்ட காரியத்தில் வெற்றி பெற முடியும். சாதாரண மனிதன் கூட தன்னுடைய சக்தி யினை ஒருமுகப் படுத்தி முயற்சிப்பதின் மூலம் சாதனைப் பெற முடியும்.

சிந்தனையை ஒரு முகப்படுத்துவதுதான் உறுதியான பலன் தரத்தக்க வெற்றிக்கு வழி காட்டுகின்றநல்ல குணமாகும்.

நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச் சிந்தனையும் தானாகவே தோன்றாது. நல்ல சிந்தனையை நினைக்க வேண்டிய அதிகாரமும் உரிமையும் நம்மிடம் இருக்கும் பொழுது எப்படி வெற்றி பெற முடியாமல் போகும்?

நல்ல சிந்தனை மட்டுமே நிலைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் கெட்ட சிந்தனை எப்படியும் இடம் பெறாது.

ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாலே போதும். அதுதானாகவே வெற்றி பெற்று விடும்.

- மெர்வின்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சிந்தித்தால் சிகரம் எட்டும்! Empty Re: சிந்தித்தால் சிகரம் எட்டும்!

Post by ஸ்ரீராம் Fri Nov 08, 2013 9:17 am

ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாலே போதும். அதுதானாகவே வெற்றி பெற்று விடும்.
அருமை அருமை சகோதரி. மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிந்தித்தால் சிகரம் எட்டும்! Empty Re: சிந்தித்தால் சிகரம் எட்டும்!

Post by mohaideen Fri Nov 08, 2013 11:21 am

மிக நல்ல கருத்துக்கள்.சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிந்தித்தால் சிகரம் எட்டும்! Empty Re: சிந்தித்தால் சிகரம் எட்டும்!

Post by kanmani singh Fri Nov 08, 2013 11:27 am

சூப்பர் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சிந்தித்தால் சிகரம் எட்டும்! Empty Re: சிந்தித்தால் சிகரம் எட்டும்!

Post by sawmya Sat Nov 09, 2013 12:41 pm

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சிந்தித்தால் சிகரம் எட்டும்! Empty Re: சிந்தித்தால் சிகரம் எட்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum