தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 11:32 am

புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.
**********
கருமியின் நெஞ்சம் சாத்தானின் இருப்பிடம் .
**********
நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.
**********
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
**********
நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும்.
**********

படித்ததில் பிடிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 11:32 am

முட்டாள் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான்.
**********
நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும்.முடிவில் வெறுப்பை வளர்க்கும்.
**********
நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்.
நம்மைத்தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.
**********
முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன்
இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்.
**********
அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்;பேச்சுக்கள் வெறும் கிண்கிணி ஓசைகள்.
**********
முட்டையைக் கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி.
காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
**********
எப்படியும் செய்ய வேண்டிய ஒரு செயலை புன்முறுவலுடன் செய்வதற்குப் பெயர்தான் ஒத்துழைப்பு.
**********
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 11:35 am

ஒரு பழக்கத்தை சும்மா ஜன்னல் வழியே தூக்கி எறிந்து விட முடியாது.தாஜா செய்து ஒவ்வொரு படியாகக் கீழே இறக்கிக் கொண்டு வர வேண்டும்.
**********
பணம் பேசக் கூடியது மட்டுமல்ல பேசுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதும் ஆகும்.
**********
ஒவ்வொரு திறமை வாய்ந்த மனிதனின் மூளையிலும் முட்டாள் தனமான பக்கம் ஒன்று கட்டாயம் உண்டு.
**********
சிறு கேள்விகளுக்கு நீண்ட விடை அளிப்பவனிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவன் எதையோ மறைக்கிறான்.
**********
முகஸ்துதி உப்பைப் போன்றது.கொஞ்சம் உபயோகித்தால் தான் ருசியாய் இருக்கும்.அதிகமானால் கரிப்பாக இருக்கும்.
**********

படித்ததில் பற்றியது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by sawmya Tue Nov 05, 2013 11:37 am

உண்மையில்...உத்வேக வரிகள். பகிர்வுக்கு நன்றி அண்ணா..புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 11:38 am

இரண்டு நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்யாதீர்கள்.செய்தால் ஒரு நண்பனை இழப்பீர்கள்.
இரண்டு அன்னியர்களிடையே மத்தியஸ்தம் செய்யுங்கள்.செய்தால் ஒரு நண்பன் கிடைப்பான்.
**********
அதிகப் பேச்சு,பொய் இரண்டுமே நெருங்கிய நண்பர்கள்.
**********
நாம் அனைவரும் மரண தண்டனைக்குள்ளானவர்கள் தான்.தூக்கிடும் நாள் தான் வித்தியாசம்.
**********
செய்து காட்டுபவர்கள்தான் குழந்தைக்குத் தேவை.குறை காண்பவர்கள் அல்ல.
**********
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் மூடன்.
ஒரு தவறும் செய்யாதவன் மரக்கட்டை.
தன்னை அறியாமல் தவறு செய்து பின் திருத்திக் கொள்பவன் மனிதன்.
**********

நன்றி ;பதித்ததில் பற்றியது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 11:39 am

உண்மையில்...உத்வேக வரிகள். பகிர்வுக்கு நன்றி அண்ணா..
கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 11:41 am

பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட
உண்மையால் அறைவதே மேலானது.
**********
பிறருக்குப் பயன்படுங்கள்.
பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள்.
**********
முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது.
**********
முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.
**********
உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.
**********
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 11:44 am

தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:44 am

ஆன்மீகப் பார்வையில் ஸ்ரீஅன்னை

மனித வாழ்வில் முன்னேற்றம் என்பது படைப்பில் இறைவனது செல்வாக்கு இருப்பதற்கு அடையாளமாகும்.

முன்னேற்றம்: இதற்காகவே நாம் இப்புவிக்கு வந்துள்ளோம்.

முன்னேற்றமே புவி வாழ்வின் நோக்கம். உனது முன்னேற்றம் நின்றுவிட்டால் நீ இறந்துவிடுவாய். முன்னேறாத ஒவ்வொரு கணமும் நீ புதைகுழியை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கிறாய்.

இருக்கும் நிலையில் திருப்தியடைந்து ஆர்வமுறுவதை நிறுத்திய கணத்திலேயே நீ சாகத் தொடங்கிவிடுகிறாய். இயக்கமே வாழ்வு, முயற்சியே வாழ்வு, முன்னோக்கிச் செல்லுதல், வருங்கால வெளிப்படுத்துதல்களையும் சித்திகளையும் நோக்கி மேலேறுதல், அதுவே வாழ்வு. ஓய்வெடுக்க நினைப்பதைப்போல் ஆபத்தானது வேறொன்றுமில்லை.

ஒவ்வொரு நிமிடமும் ஏதோவொன்றைக் கற்கவும் ஒரு முன்னேற்றம் அடையவும் வேண்டியதிருக்கும், ஒவ்வொரு தருணத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்.

முன்னேற்றம்: யோக பாதையில் முன்னேறுவதற்காக ஒவ்வொரு நிமிடமும் தன்னையும் தன் உடைமைகள் எல்லாவற்றையும் கொடுத்துவிடத் தயாராக இருத்தல். முன்னேற்றத்திற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் செய்வதை மேலும் நன்றாகச் செய்யக் கற்றுக்கொள்ள முடியும்.

நீ எப்படி இருந்துள்ளாய் என்பதைப் பற்றி எண்ணாதே, நீ எப்படி இருக்கு விரும்புகிறாய் என்பதையே எண்ணு, நீ நிச்சயமாக முன்னேறுவாய்.

பின்னோக்கிப் பார்க்காதே, எப்போதும் முன்னோக்கியே நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார் - நீ முன்னேறுவது உறுதி.

நமது இதயத்தில் முன்னேற்றத் தீ எரிந்துகொண்டிருக்கச் செய்வோமாக. இன்று செய்ய முடியாததை இன்னொரு நாள் செய்வோம். முன்னேற்றத்திற்காகச் செய்யப்படும் முயற்சி ஒருபோதும் வீண்போவதில்லை.

முதலில் நாம் முன்னேறுவோம், பிறரை முன்னேறச் செய்ய அதுவே மிகச் சிறந்த வழி (இது ஆன்மீக பாதைக்குச் சொல்லியுள்ளார் என்பதைக் கருத்தில் நிறுத்துக).

எப்போதும் முன்னேறிக்கொண்டேயிருக்க விரும்புவோருக்கு மூன்று முக்கிய முன்னேற்ற வழிகள் உள்ளன.

1. தனது உணர்வு (consciousness) எல்லையை விரிவுபடுத்துதல்.

2. தனக்கு தெரிந்துள்ளதை இன்னும் நன்றாகவும் இன்னும் முழுமையாகவும் தெரிந்துகொள்ளுதல்.

3. இறைவனைக் கண்டுபிடித்து அவனுடைய சித்தத்திற்கு மேலும் மேலும் சரணடைதல்.

நன்றி: வைகறை
ஸ்ரீ அரவிந்த ஆசிரம காலாண்டு வெளியீடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:45 am

எவள் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி.
எவனிடத்தில் சுகம் உண்டாகிறதோ அவனே மகன்.
எவனிடத்தில் நம்பிக்கை இருக்குமோ அவனே நண்பன்.
எவ்விடத்தில் வாழ்வு இருக்குமோ அதுவே தேசம்.
எவன் குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ அவனே அரசன்....
எது தர்மத்தில் செலவழிந்ததோ அதுவே நம்முடையது.

-கிருபானந்தவாரியார் சுவாமிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:49 am

வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள்.
கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள்.

அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால்
சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது
சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய்.
இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு
தன்னம்பிக்கை ஊட்டும்; உடலின் சக்தி தேவையை
நிறைவேற்றும். உற்சாகமாக உணர்வீர்கள்.

உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் �எண்டோர்பின்�களால்
endorphins மனது புத்துணர்வு பெறும் என்கிறது மருத்துவ உலகம்.

தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காகக்
காத்திருக்கிறது என்று விழித்துக் கொள்ளுங்கள்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நாளின்
சந்தோஷங்களை அசைபோடுங்கள். யாரையேனும் காயப்
படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென முடிவெடுங்கள்.

ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள்.
உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள்.

கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும்
வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்.
காலம், கவலைகளை ஆற்றிவிடும்.

விருப்பமிருந்தால் ஒரு செல்லப் பிராணியை வளருங்கள்.
அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். எதிர்பார்ப்பில்லாத
அன்பு, அதனிடம் நிறையவே கிடைக்கும்!

புதிய நபர்களைப் பார்த்தால் பேசத் தயங்காதீர்கள். ஒரு புன்னகை,
ஒரு உரையாடல், ஒரு �ஹாய்�� இவையெல்லாம் உங்களுக்கு ஒரு
நல்லபனை சம்பாதித்துத் தரக் கூடும்.

எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல�
எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

ஓய்வெடுக்காத உடல், நோய்களின் கூடாரமாகிவிடும்.
எனவே, தேவையான அளவு ஓய்வெடுங்கள்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 8:03 am

கே இனியவன் wrote:எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல� 
எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
பொன் மொழிகள் நம் கண்மணிகள்  1380706_453359448115956_1543899917_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by mohaideen Wed Nov 06, 2013 11:56 am

அனைத்தும் மிக மிக மிக ............. அருமையான தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்


சூப்பர் சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by kanmani singh Wed Nov 06, 2013 11:58 am

அனைத்தும் மணி மணியான மொழிகள்.. நன்றி!

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by sawmya Wed Nov 06, 2013 12:36 pm

உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.

தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காகக்
காத்திருக்கிறது என்று விழித்துக் கொள்ளுங்கள்.
புதிய நபர்களைப் பார்த்தால் பேசத் தயங்காதீர்கள். ஒரு புன்னகை,
ஒரு உரையாடல், ஒரு �ஹாய்�� இவையெல்லாம் உங்களுக்கு ஒரு
நல்லபனை சம்பாதித்துத் தரக் கூடும்.
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி அனைத்தும் அருமை....அண்ணா...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 3:12 pm

அனைத்தும் அருமை....அண்ணா...
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:06 pm

எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
**********
நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
**********
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
**********
வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதை
வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.
**********
நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.ஆனால் நம் வாழ்விற்கு முடிவே இல்லாததுபோலக் காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
**********
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:09 pm

கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
**********
மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
**********
நீ தொலைத்தது நாட்களைத்தான்.
நம்பிக்கையை அல்ல.
**********
தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.
**********
நம்முடைய சந்தேகங்கள் நமக்கு துரோகிகள்.
நாம் வெற்றி பெற முடியாதபடி நம்மை பயமுறுத்தி தடுத்து விடுகின்றன.
**********
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை
ஒரு பொறுமைசாலி சாதித்து விடுவான்.
**********

நன்றி ;எல்லாமே தொகுப்புத்தான் பல தளங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:12 pm

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்
வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்
எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:13 pm

மக்கள் ஒரு அற்பனைச் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம்.
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதற்குப் பெயர் ஜனநாயகம்.
**********
கெட்ட பழக்கம் முதலில் யாத்ரிகனைப்போல வரும்.
பிறகு விருந்தாளியாகி,இறுதியில் அதுவே முதலாளி ஆகிவிடும்.
**********
முள்,கரண்டி,கத்தி ஆகியவற்றின் துணை கொண்டு உண்பது,மொழி பெயர்ப்பாளரை துணைக்கு வைத்துக் கொண்டு காதலிப்பதற்கு ஒப்பாகும்.
**********
எந்தப் பொருளையும் மலிவாக வாங்கக் கூடிய நேரம் போன வருடம்.
**********
இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தி அடைவது சரிதான்.
ஆனால் இருக்கிற திறமை போதுமென்று நினைப்பது சரியல்ல.
**********
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:16 pm

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.
**********
இன்றைய என் பசிக்கு உணவு அளிக்காது பிறகு சொர்க்கத்தைக் கொடுக்கும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
**********
மிதவாதி என்பவன் யார்?உட்கார்ந்து யோசிப்பவன்.என்ன,உட்காருவது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
**********
உடனடியாகச் சீர்திருத்த வேண்டியது எது?அடுத்த வீட்டுக்காரனின் குணம்.
**********
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:17 pm

சீட்டுக்கட்டை சரியாகக் கலைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்,நம் கைக்கு நல்ல சீட்டு கிடைக்கும் வரை.
**********
நீ சொல்வது சரிதான் என்று ஒருவர் என்னிடம் சொன்னால் உடனே அது சரியில்லையோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.
**********
ஒரு ஆளையோ,ஒரு தேசத்தையோ,ஒரு கொள்கையையோ வெறுக்க வேண்டும்.அதில்தான் ரொம்பப்பெருக்கு சந்தோசம்.
**********
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 07, 2013 4:20 pm

செப்பு மொழி
காமம் என்பது எப்போது ஆரம்பமானது?நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஆடை கட்டத் துவங்கியபோது.
***********
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தி ஆகி விடுகிறது.
**********
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறுகின்றன.
**********
வெற்றியில் நிதானம் போகிறது.
அதைத் தொடர்ந்து வெற்றியும் போகிறது.
**********
எப்போதும் ஒரே நிலையில் இருப்பதற்குப் பெயர்தான் நிம்மதி.
**********
கேட்டால் சிரிப்பு வர வேண்டும்.
சிரித்தால் அழுகை வர வேண்டும்.
அதுதான் நல்ல நகைச்சுவை.
**********
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு
எந்த விமரிசனத்தையும்
தூக்கி எறியும் தைரியம் வர வேண்டும்.
**********
எந்த வேலை உனக்குப் பழக்கமானதோ,
அந்த வேளையில் புதுமைகள் செய்யத் தவறாதே.
**********
, --கண்ணதாசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 07, 2013 4:21 pm

கடைசி வார்த்தை தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
**********
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
**********
மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*வளர்த்த நன்றியுள்ள நாய்
*தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
**********
இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
**********
என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 07, 2013 4:22 pm

வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
**********
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
**********
வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
**********
விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
**********
வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
**********
அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.
**********
'எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன் மொழிகள் நம் கண்மணிகள்  Empty Re: பொன் மொழிகள் நம் கண்மணிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum