தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு

View previous topic View next topic Go down

தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு Empty தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு

Post by Muthumohamed Sat Sep 28, 2013 2:28 pm

[You must be registered and logged in to see this image.]
தேனி மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியும் வரலாற்று பின்னணியில் உருவானது.
அதற்கு அடையாளமாக கல்வெட்டு, கோயில்கள் என பல உள்ளன. தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது அ.வாடிப்பட்டி என்ற ஊராட்சி. அவ்வூராட்சிக்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டு.
    
ஒரு ஊருக்கு முன்னால் உள்ள ஒரு எழுத்தால் வரலாற்றில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, அ.வாடிப்பட்டி ஊராட்சி. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டை பல பகுதிகளாகப் பிரித்து, அந்த பகுதிகளையும் பாளையங்களாக பிரித்தனர். பாளையத்தை நிர்வகிக்கவும், நிர்வாக பிரதிநிதியாகவும் பாளையக்காரர் என்ற பட்டம் கொடுத்து ஆட்சி புரிந்தனர். அப்படி ஆட்சி புரிந்த பாளையக்காரர்கள் அப்பிநாயக்கர், குப்பிநாயக்கர் என்ற இருவர்கள்.
அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் நாட்டை கைப்பற்றி பாளையக்காரர்களின் ஆட்சிமுறையை ஒழித்து விட்டு ஜமீன்தாரர்கள் ஆட்சி முறையை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கிய போது  கண்டமனார் ஜமீனுக்கும், உத்தமநாயக்கனூர் ஜமீனுக்கும் எல்லைகள் பிரிக்கப்பட்டது. அந்த எல்லைகளுக்கு நுழைவு வாயிலாக அ.வாடிப்பட்டி திகழ்ந்துள்ளது. இதனை பண்டையக்காலத்தில் வாடிவாசல் என்று அழைத்துள்ளனர். இப்படி அழைக்கப்பட்ட வாடிவாசல்கள் தாதம்பட்டி வாடிப்பட்டி, முத்துலாபுரம் வாடிப்பட்டி, தேவதானப்பட்டி வாடிப்பட்டி, அப்பித்துநாயக்கர் வாடிப்பட்டி என்று அழைக்கப்பட்டது. அப்பித்து நாயக்கர் ஆண்ட பூமியாதலால் அப்பித்துநாயக்கன் வாடிப்பட்டி என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. பெரும்பாலும் நாயக்கர் சமூக மக்கள் கால்நடைகளான ஆடு, மாடுகளை பட்டி போட்டு  வளர்த்து வந்ததால் அவர்கள் வசித்த பகுதி பட்டி என்று அழைக்கப்படுகிறது.
    
கடந்த 03-08-1925 ஆம் ஆண்டு ராவ் சாகிப் வேதநாயகம் என்பவர் உசிலம்பட்டி தாலுகாவில் அம்மை நோய் பற்றி அறிவிப்பு செய்து அந்த அறிவிப்பில் அ.வாடிப்பட்டி என்று கடிதம் எழுதியுள்ளார். அதன் பின்னர் அ.வாடிப்பட்டி என்றே அழைக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு வரை குள்ளப்புரம் ஊராட்சியின் கீழ் வாடிப்பட்டி ஒரு வார்டாக இயங்கி வந்துள்ளது. தாதிநாயக்கர் என்பவர் குள்ளப்புரம் ஊராட்சியில் இருந்து அ.வாடிப்பட்டியை பிரித்துள்ளார். அதன் பின்னர் அ.வாடிப்பட்டி, எ.வாடிப்பட்டி, ஏ.வாடிப்பட்டி போன்ற பெயர்களில் இந்த ஊர் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊரில் வருடாவருடம் சாதி மத பேதமின்றி ஆயிரம் பழம் கும்பிடுதல் என்ற வழக்கம் உள்ளது. அப்பிநாயக்கர், குப்பிநாயக்கர் வாழ்ந்த பகுதியை குறிக்கும் விதமாக மண்டுக்கல் ஒன்று உள்ளது. அந்தக்கல் காலத்தின் சுவடாக ஊராட்சி மன்றத்தின் முன் இன்றளவும் உள்ளது. இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், அப்பித்திநாயக்கன் வாடிப்பட்டி என்ற ஊரை காலப்போக்கில் ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப அ.வாடிப்பட்டி, ஆ.வாடிப்பட்டி, எ.வாடிப்பட்டி, ஏ.வாடிப்பட்டி என்ற பல பெயர்களில் அழைத்து மக்களை குழப்பி வருகின்றனர். டி.வாடிப்பட்டி என்றால் தேவதானப்பட்டி அருகே உள்ள வாடிப்பட்டியும், எம்.வாடிப்பட்டி என்றால் வத்தலக்குண்டு அருகே உள்ள வாடிப்பட்டியும், டி.வாடிப்பட்டி என்றால் தாதம்பட்டி வாடிப்பட்டி என்றும் மக்கள் ஒரு எழுத்தால் குழம்புகின்றனர். இந்த குழப்பததை தவிர்க்க அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்து அ.வாடிப்பட்டி என்று இப்பொழுது அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். ஒரு எழுத்தால் ஒரு ஊரின் வரலாறே மாறியிருப்பது வியப்பின் சரித்திரக் குறியீடு தான்.

படம்: அப்பிநாயக்கர் - குப்பிநாயக்கர் பற்றிய கல்வெட்டு
கட்டுரையாளர் : வைகை அனீஷ் 
நன்றி
இந்நேரம் தளம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு Empty Re: தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு

Post by Manik Sat Sep 28, 2013 4:26 pm

அனைவரும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு Empty Re: தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு

Post by sawmya Sun Sep 29, 2013 9:44 am

நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு Empty Re: தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு

Post by முரளிராஜா Fri Nov 29, 2013 7:13 am

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி முத்து
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு Empty Re: தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum