Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள்: பாரதியாரின் அனுதாபம்
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள்: பாரதியாரின் அனுதாபம்
கர்சன் பிரபு வைஸ்ராயாக இருந்த காலத்தில், 'வங்கப் பிரிவினை' ஏற்பட்டது. வங்கப் பிரிவினைக்குக் காரண கர்த்தாவாக இருந்தவரே, கர்சன் பிரபு தான்.
பாரதியார், 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது, 'வங்கப் பிரிவினை - கர்சன் பிரபு, அகந்தையின் பேரில், இந்தியர்களுக்குச் செய்து விட்டுப் போன அநீதி...' என்று. ஆணித்தரமாக எழுதியதுடன், கர்சனின் யோக்கியதையைப் பற்றி டி.ஸ்மிட்டன் என்ற ஆங்கிலேயர் எழுதியதையும் வெளியிட்டு, கர்சன் பிரபுவின் முகமூடியைக் கிழித்தவர் பாரதியார்.
ஆனால், லார்டு கர்சனின் மனைவி இறந்த போது, பாரதியார் அனுதாபமடைந்து வருந்தினார்.
அக்காலத்தில், தேசபக்தியின் சின்னமாக விளங்கிய, 'அமிர்த பஜார்' பத்திரிகையோ, கர்சனின் மனைவி இறப்பு குறித்து, மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
இதைக் கண்டு, பாரதியார் உள்ளம் வேதனைப்பட்டு, 'அமிர்த பஜார்' இதழின் செயலை, கண்டிக்கவும் செய்தார். இதுகுறித்து, 'இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதியது:
தேசாபிமானத்திற்கும், நல்லறிவுக்கும் பெயர் பெற்ற கல்கத்தா, 'அமிருத பஜார்' பத்திரிகையைப் பற்றி, கண்டன வார்த்தை எழுதும்படி நேர்ந்ததை எண்ணி வருத்தமடைகிறோம். ஆனால், கூடப் பிறந்த சகோதரனாக இருந்த போதிலும், அவனுடைய குணங்களை மறைத்து வைப்பது, முறையாகாது. ஆதலால், எத்தனையோ மதிப்புக்கிடமாகிய, 'அமிருத பஜார்' பத்திரிகை கூட, ஒரு பிழை செய்யும் பட்சத்தில், அதை எடுத்துக்காட்டுவது நம்முடைய கடமையாகிறது.
லேடி கர்சன் சென்ற வாரம் மரணமடைந்ததைப் பற்றி, இப்பத்திரிகை எழுதிய போது, 'இந்தியர்களை லார்டு கர்சன் கஷ்டப்படுத்தியதன் காரணமாகத் தான் அவர், இந்த இளம் வயதிலேயே, மனைவியை, இழந்து விட்டார். இது, சரியான தெய்வ தண்டனை...' என்று கூறுகிறது. இது, கவுரவமற்ற மனிதர்கள் பேச்சைப் போல் உள்ளது.
நம், பரம சத்ருவாக இருந்த போதிலும், அவருக்கு, மனைவி இறத்தல் போன்ற கஷ்டம் நேரிடும்போது, நாம், அவன் செய்த தீமைகளை எடுத்துக் காட்டி, சந்தோஷமடைவது, பேடித்தனமான செய்கை. லார்டு கர்சன் நமக்கு செய்த தீமைகளின் பொருட்டு, அவரை வேண்டிய மட்டும் கண்டனம் செய்யலாம். அவரது செயலை கண்டிக்காமல், நம்மை இம்சித்ததின் பொருட்டு, அவருக்கு, மரியாதை செய்யும் பிரிட்டிஷ் அரசை கண்டனம் செய்து பேசலாம். அதை விட்டு விட்டு, 'ஏ... லார்டு கர்சன், நீ என்னைத் தொந்தவு செய்தாயல்லவா... அதற்காகத் தான், உன் மனைவி செத்துப் போனாள்...' என்று குழந்தைத்தனமாக, 'அமிர்த பஜார்' பத்திரிகை பேசுவது, அதன் பெருமைக்கு, இழுக்கானது. உண்மையான ஆசிரியன், தன் விரோதிகளுக்குக் கூட, துக்கமேற்படும் பட்சத்தில், இரக்கம் அடைவானே தவிர, சந்தோஷமடைய மாட்டான்.
— இந்தியா: 28-7-1906.
நன்றி தினமலர்
பாரதியார், 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது, 'வங்கப் பிரிவினை - கர்சன் பிரபு, அகந்தையின் பேரில், இந்தியர்களுக்குச் செய்து விட்டுப் போன அநீதி...' என்று. ஆணித்தரமாக எழுதியதுடன், கர்சனின் யோக்கியதையைப் பற்றி டி.ஸ்மிட்டன் என்ற ஆங்கிலேயர் எழுதியதையும் வெளியிட்டு, கர்சன் பிரபுவின் முகமூடியைக் கிழித்தவர் பாரதியார்.
ஆனால், லார்டு கர்சனின் மனைவி இறந்த போது, பாரதியார் அனுதாபமடைந்து வருந்தினார்.
அக்காலத்தில், தேசபக்தியின் சின்னமாக விளங்கிய, 'அமிர்த பஜார்' பத்திரிகையோ, கர்சனின் மனைவி இறப்பு குறித்து, மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
இதைக் கண்டு, பாரதியார் உள்ளம் வேதனைப்பட்டு, 'அமிர்த பஜார்' இதழின் செயலை, கண்டிக்கவும் செய்தார். இதுகுறித்து, 'இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதியது:
தேசாபிமானத்திற்கும், நல்லறிவுக்கும் பெயர் பெற்ற கல்கத்தா, 'அமிருத பஜார்' பத்திரிகையைப் பற்றி, கண்டன வார்த்தை எழுதும்படி நேர்ந்ததை எண்ணி வருத்தமடைகிறோம். ஆனால், கூடப் பிறந்த சகோதரனாக இருந்த போதிலும், அவனுடைய குணங்களை மறைத்து வைப்பது, முறையாகாது. ஆதலால், எத்தனையோ மதிப்புக்கிடமாகிய, 'அமிருத பஜார்' பத்திரிகை கூட, ஒரு பிழை செய்யும் பட்சத்தில், அதை எடுத்துக்காட்டுவது நம்முடைய கடமையாகிறது.
லேடி கர்சன் சென்ற வாரம் மரணமடைந்ததைப் பற்றி, இப்பத்திரிகை எழுதிய போது, 'இந்தியர்களை லார்டு கர்சன் கஷ்டப்படுத்தியதன் காரணமாகத் தான் அவர், இந்த இளம் வயதிலேயே, மனைவியை, இழந்து விட்டார். இது, சரியான தெய்வ தண்டனை...' என்று கூறுகிறது. இது, கவுரவமற்ற மனிதர்கள் பேச்சைப் போல் உள்ளது.
நம், பரம சத்ருவாக இருந்த போதிலும், அவருக்கு, மனைவி இறத்தல் போன்ற கஷ்டம் நேரிடும்போது, நாம், அவன் செய்த தீமைகளை எடுத்துக் காட்டி, சந்தோஷமடைவது, பேடித்தனமான செய்கை. லார்டு கர்சன் நமக்கு செய்த தீமைகளின் பொருட்டு, அவரை வேண்டிய மட்டும் கண்டனம் செய்யலாம். அவரது செயலை கண்டிக்காமல், நம்மை இம்சித்ததின் பொருட்டு, அவருக்கு, மரியாதை செய்யும் பிரிட்டிஷ் அரசை கண்டனம் செய்து பேசலாம். அதை விட்டு விட்டு, 'ஏ... லார்டு கர்சன், நீ என்னைத் தொந்தவு செய்தாயல்லவா... அதற்காகத் தான், உன் மனைவி செத்துப் போனாள்...' என்று குழந்தைத்தனமாக, 'அமிர்த பஜார்' பத்திரிகை பேசுவது, அதன் பெருமைக்கு, இழுக்கானது. உண்மையான ஆசிரியன், தன் விரோதிகளுக்குக் கூட, துக்கமேற்படும் பட்சத்தில், இரக்கம் அடைவானே தவிர, சந்தோஷமடைய மாட்டான்.
— இந்தியா: 28-7-1906.
நன்றி தினமலர்
Re: வரலாற்று நிகழ்வுகள்: பாரதியாரின் அனுதாபம்
அவர்தான் தமிழன்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: வரலாற்று நிகழ்வுகள்: பாரதியாரின் அனுதாபம்
அதனால் தான் முண்டாசுக் கவிஞன் தேச கவிஞன் என போற்றப் படுகிறார்
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|