தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்றும் "16"

View previous topic View next topic Go down

என்றும் "16" Empty என்றும் "16"

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 11:40 am


என்றும் இளமை

மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய 30 வயதைத் தாண்டிய பலரும் கடைப்பிடிக்கும் தவறான வாழ்க்கை முறையால் பலவித உடல் நோய்களுக்கு ஆளாகி உடல் நலமும் மனநலமும் கெட்டு வாழ்வின் மகிழ்ச்சியைத் தொலைத்து உள்ளார்கள்.

* உணவு உண்பதற்கென்று சரியான, அமைதியான, நேரத்தை ஒதுக்க வேண்டும். அதனால் அஜீரண கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். உண்ட உணவு நன்றாக செரித்த பின் அடுத்த வேளை பசி எடுத்து உண்டால், நோயும் மருந்தும் இல்லாத நலமான வாழ்வு வாழலாம்.

* நாம் உண்ணும் உணவில் சர்க்கரைச் சத்து , கொழுப்புச் சத்து, புரதச் சத்து வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் என ஆறு பகுதிகள் உள்ளன. சரிசம விகிதத்தில் உண்ணும் உணவு முறையைக் கையாள வேண்டும்.

* மாவுச் சத்து நிறைந்த உணவை அளவாகவும், கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவைக் குறைவாகவும், நார்ச்சத்துள்ள உணவை அதிகமாகவும் உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள் ஆகிய வற்றை மதிய, இரவு உணவுகளில் அதிகமாக சேர்த்து உண்ண வேண்டும்.

* பாட்டிலில் அடைக்கப் பட்ட செயற்கை பானங்கள், உடலுக்கு ஒவ்வாத தீமை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்களும் கொண்டவை. அவற்றைத் தவிர்த்து வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்த நீர்மோர், பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றைஅருந்தலாம்.

* ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்புக்கு ஏற்ப, அவர் களுக்குத் தேவையான உணவின் அளவு மாறுபடும். இருபது வயதுவரை வளர்வதற் காகவும் அதற்குப் பிறகு வாழ்வதற்காகவும் உணவு உட்கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் தொலைக் காட்சி மற்றும் சினிமா பார்க்கும்போது வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போதும், சுற்றத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுது போக்கும்போதும், படிக்கும்போதும், வீட்டில் ஓய்வாக இருக்கும்போதும் நொறுக்குத் தீனி தின்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். நொறுக்குத்தீனி உண்பது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.

* உணவு உண்பதற்கு முன் சிறிதளவு தண்ணீர் அருந்த வேண்டும். உணவு உண்டபின் ஒரு மணி கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது.

* உணவு உண்ட சுமார் இரு மணி நேரத்திற்குள், உடற்பயிற்சி செய்யக்கூடாது. இரவு உணவிற்குப் பின் சுமார் அரை மணி நேரம் கழித்துதான் படுக்கச் செல்ல வேண்டும். அவ்வாறு படுக்கச் செல்வதற்கு முன் பல்லை நன்றாக துலக்க வேண்டும்.

* அசைவ உணவு உண்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மீனை சேர்த்துக் கொள்வதால் உடல் நலம் பயக்கும். சைவ உணவு உண்பவர்கள் தினமும் 400 முதல் 600 மில்லி வரை பாலை தவறாமல் உபயோகிக்கலாம். காய்கறி, கீரை, பழவகைகளை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* புகையிலையால் ஏற்படும் சில கடுமையான நோய்கள்:

1. வாய், தொண்டை, சுவாசக்குழாய் நுரையீரலில் ஏற்படும் புற்று நோய்.
2. நிரந்தர சுவாசக் குழாய் அடைப்பு நோய். (COPD). புகைப்பிடிப்போருக்கு வயதான காலத்தில் தவறாமல் ஏற்படும்.
3. ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் ரத்த அழுத்த நோய், மாரடைப்பு நோய், காலிழப்பு, கண்பார்வை இழப்பு மற்றும் பக்கவாத நோய்.
புகை பிடித்தல், புகையிலை மெல்லுதல், பொடி போடுதல் ஆகிய பழக்கங்களை அறவே விட்டொழிக்க வேண்டும்.

* மதுவை உண்டால் அது நம்மையே அடிமைப்படுத்தும் அபாயம் உள்ளது. மனக் கட்டுப்பாட்டை இழந்து பலரும் மதுவின் பிடியில் சிக்குவதால், அதன் பக்கமே போகாமல் இருந்தால், மதுவிற்கு அடிமையாகி விடுவோமோ என்றபயமின்றி வாழலாம்.

* மது தீராத ஈரல் நோயை ஏற்படுத்தும் மேலும், அதிகமாக மது அருந்துவதால் இதயம், நுரையீரல், கணையம், கண், நரம்பு மண்டலம் போன்றமுக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.

* கூடாத சேர்க்கையால் இளைஞர்கள் போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாகி, தங்கள் வளமான எதிர்காலத்தை அழித்துக் கொள்கிறார்கள்.

* நவீன வாழ்க்கை முறையால் உடலுழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும் தொலைக் காட்சி, வானொலி, தொலைபேசி, கைப்பேசி ஆகியவற்றாலும் தானியங்கி வாகனங்களாலும் பெரும்பாலும் நடந்து செல்வதைத் தவிர்த்து நாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்.

* வீட்டில் இருக்கும்போது தேவைக்கு அதிகமாக நொறுக்குத் தீனி உண்பதால், உடல் பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்வலி மற்றும் மூட்டு நோய் போன்றஅவதிகளுக்கு ஆளாகிறோம். நடத்தல், ஓடுதல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் உடலுக்கு நல்லது.

* தினமும் முப்பது நிமிடங்கள் வேகமாக நடப்பதால், உலகிலுள்ள எந்த மருந்தையும் விட அதிக நன்மை பெறலாம். 

உடற்பயிற்சியின் பயன்களை இன்று மக்கள் அதிகம் உணரத் தொடங்கியுள்ளனர்.
சுவாசம் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி
வேகமான நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், நீச்சல் போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் ஏற்படுகிறது.
இதயம், நுரையீரல் ஆகியவற்றின் செயல் திறன் முன்னேற்றம் அடைகிறது. உடல் வலிமை பெறுகிறது.

யோகா எவ்வாறு உதவுகிறது?

* யோகப் பயிற்சி செய்யும் பலர் புத்துணர்வுடன் இளமையாக இருக்கின்றனர்.

* முதுமையிலும் நன்றாக குனிந்து நிமிர முடிகிறது. உடல் தோற்றம் பொலிவாகும்.

* மூட்டுகள் இறுகிப் போவதை தவிர்க் கின்றது. இறுகிய மூட்டுகளையும் இலகுவாக செய்கின்றன.

* உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எளிதில் சளி, காய்ச்சல், ஏற்படுவது குறைகிறது. சருமத்தின் ஜவ்வுத் தன்மையை பாதுகாக்கிறது.

* வயதானவர்கள் தியானம் செய்து வரும் போது ஞாபக சக்தி குறைவது தடுக்கப்படுகிறது.

* இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

* மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

* மனநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

* நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 — with T.r. Rajmohan Rajmohan.

என்றும் "16" 1382426_204058836438651_115909705_n
https://www.facebook.com/arogiyam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என்றும் "16" Empty Re: என்றும் "16"

Post by முரளிராஜா Fri Dec 06, 2013 7:47 am

நோயின்றி வாழ சிறப்பான வழிமுறைகளை பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்றும் "16" Empty Re: என்றும் "16"

Post by ஸ்ரீராம் Fri Dec 06, 2013 10:16 am

நல்லொதொரு பகிர்வு அண்ணா
மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

என்றும் "16" Empty Re: என்றும் "16"

Post by kanmani singh Fri Dec 06, 2013 11:53 am

நன்று.. நன்று!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

என்றும் "16" Empty Re: என்றும் "16"

Post by செந்தில் Fri Dec 06, 2013 7:12 pm

கைதட்டல் பயன்மிக்க பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்றும் "16" Empty Re: என்றும் "16"

Post by மகா பிரபு Sat Dec 07, 2013 10:24 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என்றும் "16" Empty Re: என்றும் "16"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum