தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகுக்கும் அடிப்படையாகும் உணவு!

View previous topic View next topic Go down

அழகுக்கும் அடிப்படையாகும் உணவு! Empty அழகுக்கும் அடிப்படையாகும் உணவு!

Post by முழுமுதலோன் Tue Dec 03, 2013 9:20 am


அழகுக்கும் அடிப்படையாகும் உணவு!



கரிசலாங்கண்ணியும் பொன்னாங்கண்ணியும் அழகுக்கு உதவுபவை என்பதில் சந்தேகமில்லை. கீரையைப் பறித்துப் பதப்படுத்தித் தலைக்குத் தேய்க்கவோ, மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து முகத்துக்குத் தடவவோ இன்று யாருக்கும் நேரமோ, பொறுமையோ கிடையாது. எல்லாவற்றிலும் அவசரமாகப் பலன் எதிர்பார்க்கும் மக்கள், அழகு விஷயத்திலும் அப்படித்தான். இன்ஸ்டன்ட் அழகைக் கொடுப்பதால்தான் மக்கள் கூட்டம் பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறது. 

ஆனால், அழகு என்பது அவசரத்தில் வாய்ப்பதில்லை. அதற்காக காடு, மலை, கடல் தாண்டி, மூலிகைகளைத் தேடிக்கொண்டு வந்தோ, பார்லர்களில் போய் காஸ்ட்லியான சிகிச்சைகளை செய்து கொண்டோதான் அழகாக வேண்டும் என்றில்லை. உணவே மருந்து மட்டுமல்ல... உணவுதான் அழகுக்கும் அடிப்படை என்கிறார் அழகு மற்றும் உணவியல் நிபுணர் ஹேமா லஷ்மணன்.

நமக்கு கைக்கெட்டிய தூரத்தில் - அதாவது, சமையலறையில் தினசரி நமது கண்களில் பட்டுக் கொண்டிருக்கும் பொருள்களை சரியாக உபயோகித்தாலே அழகு தேடி வரும் என்கிறவர், அப்படி சில பொருள்களையும் அவற்றின் பலன்களையும் பட்டியலிடுகிறார்.

மாதுளை

இயற்கை நமக்களித்துள்ள மிகப்பெரிய வரப் பிரசாதம் இது. மாதுளையின் சாறெடுத்து, சிறிது தண்ணீர் கலந்து குடித்தால், ரத்தசோகை காணாமல் போகும். சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒரே நேரத்தில் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். செரிமானத்தை சீராக்கி, உடல் சூட்டை தணித்து, பலவீனம் போக்கி, ரத்த விருத்திக்கு உதவும். மாதுளம் பழத்தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து, அரை டீஸ்பூன் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்தால் உடல் வலிமையும் வனப்பும் பெறும்.

மருதாணிப் பொடியுடன், சிறிதளவு மாதுளை ஜூஸ், காபி தூள், சிறிது புரோட்டீன் பவுடர், எலுமிச்சைச் சாறு எல்லாம் கலந்து ஒரு நாள் முழுக்க ஊற வைத்து, தலையில் தடவிக் குளித்தால், கூந்தல் அழகான ‘பர்கண்டி’ கலர் பெறும்.

மாதுளையை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு உதடுகள் இயற்கையான சிவப்பழகும் பளபளப்பும் பெறும். மாதுளை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு வரும் என நினைப்போர், அதை முழுதாக அப்படியே வெந்நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்து, பிறகு உடைத்துச் சாப்பிடலாம்.

பப்பாளி

பப்பாளியை அழகு தரும் பழம் என்றே சொல்லலாம். பருமனை நீக்கி, மேனிக்கு மெருகூட்டுவதில் 
பப்பாளிக்கு இணையே இல்லை. பப்பாளியின் இலையும் மருத்துவ குணம் வாய்ந்தது. பப்பாளி இலையைக் காய வைத்து அரைத்துக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் அளவு எடுத்து, 1 டீஸ்பூன் மாதுளை சாறு கலந்து, முகத்துக்கு பேக் மாதிரி போட்டுக் கழுவினால், முகம், கழுத்துப் பகுதிகளில் உள்ள கருமை போகும். அலர்ஜி இல்லாதவர்கள் மட்டும் இதைச் செய்யவும்.

கொய்யா

ஒரு ஸ்லைஸ் கொய்யா, ஒரு ஸ்லைஸ் ஆப்பிள், ஒரு ஸ்லைஸ் பேரிக்காய் மூன்றையும் தினம் 5 முறைகள் இடைவெளி விட்டு சாப்பிட்டால் 
உங்கள் சருமம் கண்ணாடி போல மின்னும்.

தனியா

தனியாவை சுத்தம் செய்து, இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அந்தத் தண்ணீரை குடித்தால், உடல் குளிர்ச்சியடையும். தனியாவை பொடித்து வைத்துக் கொண்டு, சமைக்கிற எல்லாவற்றிலும் சிறிது சேர்த்துச் சாப்பிடுகிற பழக்கம் இருந்தால், செரிமானமும் சீராகும்.

கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். கடுகை மிகக்குறைந்த அளவுதான் உபயோகிக்க வேண்டும். அது வெடித்து, அதிலுள்ள சல்ஃபர் வெளியேற வேண்டும். கடுகெண்ணெய் மிகச்சிறந்த வலி நிவாரணி. கழுத்தைச் சுற்றிலும், இடுப்பைச் சுற்றியும் கருப்பு உள்ளவர்கள், கடுகெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து துடைத்தால், கருமை நீங்கி, சருமம் பளிச்சென மாறும்.

ஜாதிக்காய்

வயிற்றுப் பிரச்னைகளுக்கு மருந்து. நரம்புகள் வலிமை பெறும். ஜாதிக்காயைப் பொடித்து, கால் டீஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டால், வாயுத்தொல்லை இருக்காது. 

ஜாதிக்காயை பால் விட்டு அரைத்து, கண்களுக்கு அடியில் வாரம் 2 முறை, 3 மாதங்களுக்குச் செய்து வந்தால், கருமை மறையும்.

கொத்தமல்லி

கொத்தமல்லியை சமைக்கிற எல்லாவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம். கொத்தமல்லிச்சாறு பருக்களையும் பரு வந்த தழும்புகளையும் போக்கக்கூடியது.

அழகுக்கும் அடிப்படையாகும் உணவு! 1425647_343528685784056_1138339815_n
https://www.facebook.com/MaruttuvaKurippukal?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழகுக்கும் அடிப்படையாகும் உணவு! Empty Re: அழகுக்கும் அடிப்படையாகும் உணவு!

Post by ஸ்ரீராம் Sun Dec 08, 2013 4:55 pm

நல்ல பயனுள்ள பகிர்வு அண்ணா. நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum