Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
மாங்காய் தொக்கு வருடம் முழுவதும் சாப்பிட ஆசையா? இரண்டு மூன்று மாங்காய்களை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து வெந்நீரில் ஊற வைத்து, வழக்கம்போல நல்லெண்ணெய் தாளித்து, தொக¢கு செய்து கொள்ளலாம்.
காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டதா? இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து கட்லெட்டாக செய்துவிடலாம். மாலை சிற்றுண்டி ரெடி!
பர்ஃபி, மைசூர்பாக் போன்ற ஸ்வீட்ஸ் செய்யும்போது, கடாயின் அடியில் ஒட்டிக் கொண்டு எடுக்கவே வராது. அதைக் கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால் ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்துவிடும்
வெரைட்டி ரைஸ் தயாரிக்கும்போது, சாதத்தை உதிரியாகக் களறீயதும், ஒரு கரண்டியால் மேற்புறம் சிராக அழுத்தி விட்டு, மூடி வைத்து விடுங்கள். இதனால், நெடுநேரம் சூடாக இருப்பதுடன், சுவையும் குறையாமல் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும்.
காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டதா? இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து கட்லெட்டாக செய்துவிடலாம். மாலை சிற்றுண்டி ரெடி!
பர்ஃபி, மைசூர்பாக் போன்ற ஸ்வீட்ஸ் செய்யும்போது, கடாயின் அடியில் ஒட்டிக் கொண்டு எடுக்கவே வராது. அதைக் கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால் ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்துவிடும்
வெரைட்டி ரைஸ் தயாரிக்கும்போது, சாதத்தை உதிரியாகக் களறீயதும், ஒரு கரண்டியால் மேற்புறம் சிராக அழுத்தி விட்டு, மூடி வைத்து விடுங்கள். இதனால், நெடுநேரம் சூடாக இருப்பதுடன், சுவையும் குறையாமல் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
பக்குவமாகச் செய்தாலும், ஊறுகாயில் பூஞ்சை காளான் வந்துவிடுகிறதா? கவலையை விடுங்கள். ஊறுகாயின் அளவுக்கேற்ப, சுத்தமாக உலர்ந்த பாட்டில் ஒன்றை எடுத்து, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை விட்டு, எல்லா இடங்களிலும் பரவும்படி செய்யுங்கள். பிறகு ஊறுகாயை நிரப்புங்கள். பூஞ்சை காளான் கிட்டே நெருங்காது.
வாழைப்பழத்தை சீப்பாக வைத்திருக்கும்போது நன்கு பழுத்துவிட்டால், காம்பில்இருந்து தனித்தனியாக உதிர்ந்துவிடும். அதோடு, ஈ, சிறு கொசு போன்றவை மொய்க்க ஆரம்பித்துவிடும். இதைத் தவிர்க்க, செம்பழமாக இருக்கும்போதே சீப்பிலிருந்து காம்புடன் தனித்தனியாக பிரித்துவிடுங்கள். பழங்கள் பழுத்துவிட்டாலும், காம்புடன் இருப்பதால் ஈ மொய்க்காமல் சுகாதாரமாக இருக்கும். சீக்கிரத்தில் அழுகவும் செய்யாது. பிறருக்கு எடுத்துக் கொடுப் பதும் சுலபம்.
தக்காளி குருமா, ரசம், கிரேவி போன்றவற்றைத் தயாரிக்க, தக்காளி விழுதுக்கு மிக்ஸியை பயன்படுத்தாமல், கேரட் துருவியைக் கொண்டு தக்காளியை மெதுவாக தேயுங்கள். விழுதுகள் எளிதாக கிடைத்துவிடும். தோலையும் தூக்கி எறிந்து விடலாம்
பீங்கான் தட்டுகள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை வரிசையாக அடுக்கும்போது கீறல் விழாமல் இருக்க, ஒவ்வொரு தட்டின் இடையிலும் டிஷ்யூ பேப்பரை வைத்து விடுங்கள். ஒன்றோடு ஒன்று உராயாமல் தட்டுகள் பாதுகாப்பாக இருக்கும்.
வாழைப்பழத்தை சீப்பாக வைத்திருக்கும்போது நன்கு பழுத்துவிட்டால், காம்பில்இருந்து தனித்தனியாக உதிர்ந்துவிடும். அதோடு, ஈ, சிறு கொசு போன்றவை மொய்க்க ஆரம்பித்துவிடும். இதைத் தவிர்க்க, செம்பழமாக இருக்கும்போதே சீப்பிலிருந்து காம்புடன் தனித்தனியாக பிரித்துவிடுங்கள். பழங்கள் பழுத்துவிட்டாலும், காம்புடன் இருப்பதால் ஈ மொய்க்காமல் சுகாதாரமாக இருக்கும். சீக்கிரத்தில் அழுகவும் செய்யாது. பிறருக்கு எடுத்துக் கொடுப் பதும் சுலபம்.
தக்காளி குருமா, ரசம், கிரேவி போன்றவற்றைத் தயாரிக்க, தக்காளி விழுதுக்கு மிக்ஸியை பயன்படுத்தாமல், கேரட் துருவியைக் கொண்டு தக்காளியை மெதுவாக தேயுங்கள். விழுதுகள் எளிதாக கிடைத்துவிடும். தோலையும் தூக்கி எறிந்து விடலாம்
பீங்கான் தட்டுகள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை வரிசையாக அடுக்கும்போது கீறல் விழாமல் இருக்க, ஒவ்வொரு தட்டின் இடையிலும் டிஷ்யூ பேப்பரை வைத்து விடுங்கள். ஒன்றோடு ஒன்று உராயாமல் தட்டுகள் பாதுகாப்பாக இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
பாத்திரம் துலக்குவதற்கு உப்புத் தண்ணீர்தான் கிடைக்கிறது என்றால், என்னதான் க்ளீனிங் பவுடர் அல்லது 'லிக்விட்' உபயோகித்தாலும் நுரையே வராது. இதனால் பாத்திரத்தை கழுவிய திருப்தியும் இருக்காது. க்ளீனிங் பவுடர் (அ) லிக்விடை சிறிது நல்ல தண்ணீரில் கரைத்து பாத்திரத்தைத் துலக்குங்கள். நன்றாக நுரை வருவதுடன் பாத்திரம் பளிச்சென பிரகாசிக்கும்
வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது, கொழகொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகும். ஒரு தக்காளியைத் துண்டுகளாக்கி சேர்த்து வதக்கிப் பாருங்கள்... வெண்டை பொரியல் பொலபொலப்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
===========================================================
பால் சேர்த்து செய்யும் பாயசம் 'திக்'காக இருக்க வேண்டுமா? பாலை அப்படியே சேர்க்காமல், மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி நுரையுடன் சேருங்கள். பாயசம் 'திக்'காக இருக்கும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் Ôகண்டன்ஸ்டு மில்க்Õ அரைத்துச் சேர்த்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
- ===========================================================
எள்ளுருண்டை செய்வதற்கு முன் எள்ளை தண்ணீரில் அலசினால் கையில் ஒட்டிக் கொண்டு பாடாய் படுத்தி எடுத்துவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால் எளிதாக அலசி விடலாம்.
வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது, கொழகொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகும். ஒரு தக்காளியைத் துண்டுகளாக்கி சேர்த்து வதக்கிப் பாருங்கள்... வெண்டை பொரியல் பொலபொலப்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
===========================================================
பால் சேர்த்து செய்யும் பாயசம் 'திக்'காக இருக்க வேண்டுமா? பாலை அப்படியே சேர்க்காமல், மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி நுரையுடன் சேருங்கள். பாயசம் 'திக்'காக இருக்கும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் Ôகண்டன்ஸ்டு மில்க்Õ அரைத்துச் சேர்த்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
- ===========================================================
எள்ளுருண்டை செய்வதற்கு முன் எள்ளை தண்ணீரில் அலசினால் கையில் ஒட்டிக் கொண்டு பாடாய் படுத்தி எடுத்துவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால் எளிதாக அலசி விடலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
தேங்காய் துவையல், சட்னி போன்றவை கெட்டுப் போகாமல் இருக்க புளி சேர்ப்பது வழக்கம். புளிக்குப் பதிலாக தெளிவான ரசத்தை விட்டு அரைத்தால் டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.
சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைந்ததும் தனித்தனி உருண்டைகளாக செய்ய அதிக நேரம் பிடிக்கும். மாவைப் பிசைந்ததும், நீண்ட உருளை போல் செய்து, உலர்ந்த மாவில் புரட்டுங்கள். பிறகு, கத்தியால் சம இடைவெளி விட்டு வெட்டினால் வேலை சீக்கிரத்தில் முடிந்துவிடும். சப்பாத்திகளும் சம அளவிலானதாக இருக்கும்.
சமைப்பதற்கு அதிக அளவு பயன்படும் இடுக்கியில் பிசுக்கும், அழுக்கும் படிந்திருக்கிறதா? ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், அரிசி களைந்த தண்ணீரில் போட்டு வையுங்கள். இந்த நீரில் ஊற வைத்துத் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைந்ததும் தனித்தனி உருண்டைகளாக செய்ய அதிக நேரம் பிடிக்கும். மாவைப் பிசைந்ததும், நீண்ட உருளை போல் செய்து, உலர்ந்த மாவில் புரட்டுங்கள். பிறகு, கத்தியால் சம இடைவெளி விட்டு வெட்டினால் வேலை சீக்கிரத்தில் முடிந்துவிடும். சப்பாத்திகளும் சம அளவிலானதாக இருக்கும்.
சமைப்பதற்கு அதிக அளவு பயன்படும் இடுக்கியில் பிசுக்கும், அழுக்கும் படிந்திருக்கிறதா? ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், அரிசி களைந்த தண்ணீரில் போட்டு வையுங்கள். இந்த நீரில் ஊற வைத்துத் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறும்போது, தக்காளி சட்னி, சாஸ், வெங்காயச் சட்னி, ஊறுகாய், போன்ற சிவந்த நிறமுள்ள அயிட்டங்களையும், எண்ணெய், நெய் அதிகம் சேர்த்த பொருட்களையும் நேரடியாக தட்டில் வைக்காதீர்கள். சிறிய கிண்ணங்களில் வைத்து பரிமாறினால், தட்டுகளில் கறை படியாது. சுத்தம் செய்யவதும் எளிது.
பாத்திரங்களைத் தேய்த்து கழுவி வைக்கும் பெரிய கம்பி வலைக்கூடையில் சிறிய ஸ்பூன்களை வைக்க ஓட்டைகள் இல்லாமல் இருக்கும். இதற்கு, ஒரு சிறிய டீஸ்பூன் ஸ்டாண்டை, அந்த வலைக்கூடையின் பக்க வாட்டில் கட்டிவிடுங்கள். டீஸ்பூன் கீழே விழாமல் இருக்கும்.
துணிகளை அயர்ன் செய்யும்போது தண்ணீர் தெளிப்பது வழக்கம். அந்த தண்ணீரில் சிறிது பன்னீர் அல்லது யூடிகொலனை கலந்து விடுங்கள். சென்ட் போடாமலே ஆடைகள் மணக்கும்.
வடை மாவு நீர்த்துப் போய் விட்டால், ஒரு பிடி அவலை மாவுடன் கலந்து, ஐந்து நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு வடையாக தட்டி எடுங்கள். அபாரமான ருசியில் வடை மணக்கும்.
பாத்திரங்களைத் தேய்த்து கழுவி வைக்கும் பெரிய கம்பி வலைக்கூடையில் சிறிய ஸ்பூன்களை வைக்க ஓட்டைகள் இல்லாமல் இருக்கும். இதற்கு, ஒரு சிறிய டீஸ்பூன் ஸ்டாண்டை, அந்த வலைக்கூடையின் பக்க வாட்டில் கட்டிவிடுங்கள். டீஸ்பூன் கீழே விழாமல் இருக்கும்.
துணிகளை அயர்ன் செய்யும்போது தண்ணீர் தெளிப்பது வழக்கம். அந்த தண்ணீரில் சிறிது பன்னீர் அல்லது யூடிகொலனை கலந்து விடுங்கள். சென்ட் போடாமலே ஆடைகள் மணக்கும்.
வடை மாவு நீர்த்துப் போய் விட்டால், ஒரு பிடி அவலை மாவுடன் கலந்து, ஐந்து நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு வடையாக தட்டி எடுங்கள். அபாரமான ருசியில் வடை மணக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
அடை, தோசை, வடை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை நேரடியாக சேர்க்காதீர்கள். சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால், அவை நறுக்கென்று வாயில் அகப்படாமல், நன்கு வெந்து சுவையாக இருக்கும்.
அல்வா, கேசரி, உப்புமா கிளறும்போது ஜல்லிக் கரண்டியின் பின்பக்கத்தைத் திருப்பி வைத்துக் கிளறுங்கள் (அதாவது கரண்டியின் குழிவான பக்கம் கீழே இருப்பது போல்). இதனால் கையும் வலிக்காது. கிளறுவதும் ஈஸி.
ஃபெவிகாலை பயன்படுத்தியதும், அதில் சில துளிகள் தண்ணீர் விட்டு மூடி வையுங்கள். மீண்டும் எடுத்து உபயோகிக்கும்போது தண் ணீரை வடித்துவிட்டு பயன் படுத்தினால், காய்ந்து போகா மல் நீண்ட நாட்களுக்கு வரும்
தோசை மாவு புளித்து விட்டதா? அதில் கால் டீஸ்பூன் டேபிள் சால்ட், அரை டம்ளர் வெந்நீரை ஊற்றிக் கலக்கி, தோசை வார்த்தால் புளிப்பு மறைந்து ருசியும் அமோகமாக இருக்கும்.
ஃப்ரிட்ஜில் உள்ள டிரேக்க ளில் நேரடியாக காய்களை அடுக்கும்போதுஅழுக்கு படிந்து விடும். ஒரு பனியன் துணியைத் தண்ணீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து டிரேயில் விரித்து விடுங்கள். இப்போது காய்களை அதன் மேல் வைத்து, அதே துணியால் சுற்றி விடுங்கள். ஃபிரிட்ஜும் அழுக்காகாது... காய்களும் வாடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்
அல்வா, கேசரி, உப்புமா கிளறும்போது ஜல்லிக் கரண்டியின் பின்பக்கத்தைத் திருப்பி வைத்துக் கிளறுங்கள் (அதாவது கரண்டியின் குழிவான பக்கம் கீழே இருப்பது போல்). இதனால் கையும் வலிக்காது. கிளறுவதும் ஈஸி.
ஃபெவிகாலை பயன்படுத்தியதும், அதில் சில துளிகள் தண்ணீர் விட்டு மூடி வையுங்கள். மீண்டும் எடுத்து உபயோகிக்கும்போது தண் ணீரை வடித்துவிட்டு பயன் படுத்தினால், காய்ந்து போகா மல் நீண்ட நாட்களுக்கு வரும்
தோசை மாவு புளித்து விட்டதா? அதில் கால் டீஸ்பூன் டேபிள் சால்ட், அரை டம்ளர் வெந்நீரை ஊற்றிக் கலக்கி, தோசை வார்த்தால் புளிப்பு மறைந்து ருசியும் அமோகமாக இருக்கும்.
ஃப்ரிட்ஜில் உள்ள டிரேக்க ளில் நேரடியாக காய்களை அடுக்கும்போதுஅழுக்கு படிந்து விடும். ஒரு பனியன் துணியைத் தண்ணீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து டிரேயில் விரித்து விடுங்கள். இப்போது காய்களை அதன் மேல் வைத்து, அதே துணியால் சுற்றி விடுங்கள். ஃபிரிட்ஜும் அழுக்காகாது... காய்களும் வாடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
கொத்தமல்லித்தழை வாடாமல் ஒரு வாரம் வரை பசுமையாக இருக்க வேண்டுமா? வேர் பாகத்தை மட்டும் வெட்டிவிட்டு, மற்றதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பாதியளவு தண்ணீர் விட்டு, மூடாமல் ஃபிரிட்ஜில் வையுங்கள். வாடிப்போன கொத்தமல்லித் தழைகளைகூட இதேபோல் வைத்தால் ஃபிரெஷ்ஷாக மாறி விடும்.
இரண்டு ஸ்பூன் சோளமாவை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். மாவு கல்லில் ஒட்டாமல் தோசை நன்றாக சுட வரும்.
குழந்தைகளுக்கு வெள்ளை தேங்காய் பர்ஃபி சாப்பிட்டு போரடித்துவிடும். கலர் கலராக பர்ஃபி செய்ய ஒரு ஐடியா. பர்ஃபி செய்ததும் தட்டில் கொட்டுவதற்குமுன், சாக்லெட் மற்றும் ஸ்டிராபெர்ரி பானத்துக்கான பவுடரைச் சேர்த்துக் கிளறுங்கள். வண்ண வண்ண கலர்களில், வாய்க்கும் ருசியாக இருக்கும்.
தண்ணீரைப் பயன்படுத்தாமலேயே பூஜை விளக்குகளைப் பளிச்சென மாற்றமுடியும். சுத்தம் செய்ய வேண்டிய பகுதியில் வெள்ளை பல்பொடியைத் தூவி, உலர்ந்த துணியால் நன்றாக அழுத்தித் துடையுங்கள். கருமை நிறம் காணாமல் போய் விளக்கு பளீரென மின்னும்.
இரண்டு ஸ்பூன் சோளமாவை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். மாவு கல்லில் ஒட்டாமல் தோசை நன்றாக சுட வரும்.
குழந்தைகளுக்கு வெள்ளை தேங்காய் பர்ஃபி சாப்பிட்டு போரடித்துவிடும். கலர் கலராக பர்ஃபி செய்ய ஒரு ஐடியா. பர்ஃபி செய்ததும் தட்டில் கொட்டுவதற்குமுன், சாக்லெட் மற்றும் ஸ்டிராபெர்ரி பானத்துக்கான பவுடரைச் சேர்த்துக் கிளறுங்கள். வண்ண வண்ண கலர்களில், வாய்க்கும் ருசியாக இருக்கும்.
தண்ணீரைப் பயன்படுத்தாமலேயே பூஜை விளக்குகளைப் பளிச்சென மாற்றமுடியும். சுத்தம் செய்ய வேண்டிய பகுதியில் வெள்ளை பல்பொடியைத் தூவி, உலர்ந்த துணியால் நன்றாக அழுத்தித் துடையுங்கள். கருமை நிறம் காணாமல் போய் விளக்கு பளீரென மின்னும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
சேமியா, ஜவ்வரிசியில் பாயசம் செய்யும்போது, முதலிலேயே எல்லாப் பாலையும் சூடாகச் சேர்த்து விட்டால் பாயசம் கெட்டியாகி விடும். பாயசத்துக்கு தேவையானதை ரெடி செய்து விட்டு, பரிமாறும்போது, காய்ச்சிய பாலைக் கலந்து விடுங்கள். பாயசம் கெட்டியாகாமல், சுவையாக இருக்கும்.
டைனிங் டேபிளில் விரிக்கும் வண்ண 'மேட்'டுகள் பழையதாகிவிட்டால், தூக்கி எறியாதீர்கள். சதுர வடிவ துண்டுகளாக வெட்டி, எண்ணெய்ப் பாத்திரங்கள், பாட்டில்களுக்கு அடியிலும், காய்கறிகள் நறுக்கும்போது, தரையில் அமரும்போதும், கீழே விரித்துக் கொள்ளலாம்
கோதுமை தோசை வார்க்கும்போது, 'மெத்'தென்று துவண்டு சரியாக வார்க்க வராமல் போகும். கோதுமை மாவை வெறும் கடாயில் ஒன்றிரண்டு நிமிடங்கள் வறுத்து, பிறகு தண்ணீர் சேர்த்து கரைத்து தோசை வார்த்தால் நன்றாக வரும்.
டைனிங் டேபிளில் விரிக்கும் வண்ண 'மேட்'டுகள் பழையதாகிவிட்டால், தூக்கி எறியாதீர்கள். சதுர வடிவ துண்டுகளாக வெட்டி, எண்ணெய்ப் பாத்திரங்கள், பாட்டில்களுக்கு அடியிலும், காய்கறிகள் நறுக்கும்போது, தரையில் அமரும்போதும், கீழே விரித்துக் கொள்ளலாம்
கோதுமை தோசை வார்க்கும்போது, 'மெத்'தென்று துவண்டு சரியாக வார்க்க வராமல் போகும். கோதுமை மாவை வெறும் கடாயில் ஒன்றிரண்டு நிமிடங்கள் வறுத்து, பிறகு தண்ணீர் சேர்த்து கரைத்து தோசை வார்த்தால் நன்றாக வரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
ஏலக்காய் சரியாக அரைபடாது. ஒரு துளி நெய்யில் இரண்டு நிமிடம் நிறம் மாறும் வரை வறுத்து, பிறகு மிக்ஸியில் பொடித்தால் நைஸாகப் பொடிந்துவிடும். இதை டப்பாவில் போட்டு மூடி வைத்தால் தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.
துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட் காலரில் இருக்கும் அழுக்கை அகற்ற பிளாஸ்டிக் பிரஷ்ஷை பயன்படுத்தாதீர்கள். பாத்திரம் துலக்க பயன்படும் பிளாஸ்டிக் ஒயரினாலான சுருளை உபயோகித்தால், துணி சீக்கிரத்தில் நைந்து போகாமல் இருக்கும். புடவை ஃபால்ஸ்களில் படிந்த அழுக்கையும் இதுபோல் நீக்கலாம்.
நாப்தலின் உருண்டைகளை பினாயில் பாட்டிலுக்குள் போட்டு வைத்துவிடுங்கள். இப்படி பயன் படுத்தி வீட்டையும் குளியலறையையும் சுத்தம் செய்யும்போது, பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.
குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது, பொம்மைகள் அத்தனையையும் எடுத்துப் போடாதீர்கள். வெகு விரைவில் அவற்றைப் பார்த்து சலிப்படைந்து விடுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு பொம்மைகளாகக் கொடுத்து விளையாடச் செய்தால், விளையாட்டு ஆர்வம் பொங்குவதோடு, சலிப்பும் வராது. எதை வைத்து விளையாடுவது என்கிற குழப்பமும் வராது.
துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட் காலரில் இருக்கும் அழுக்கை அகற்ற பிளாஸ்டிக் பிரஷ்ஷை பயன்படுத்தாதீர்கள். பாத்திரம் துலக்க பயன்படும் பிளாஸ்டிக் ஒயரினாலான சுருளை உபயோகித்தால், துணி சீக்கிரத்தில் நைந்து போகாமல் இருக்கும். புடவை ஃபால்ஸ்களில் படிந்த அழுக்கையும் இதுபோல் நீக்கலாம்.
நாப்தலின் உருண்டைகளை பினாயில் பாட்டிலுக்குள் போட்டு வைத்துவிடுங்கள். இப்படி பயன் படுத்தி வீட்டையும் குளியலறையையும் சுத்தம் செய்யும்போது, பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.
குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது, பொம்மைகள் அத்தனையையும் எடுத்துப் போடாதீர்கள். வெகு விரைவில் அவற்றைப் பார்த்து சலிப்படைந்து விடுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு பொம்மைகளாகக் கொடுத்து விளையாடச் செய்தால், விளையாட்டு ஆர்வம் பொங்குவதோடு, சலிப்பும் வராது. எதை வைத்து விளையாடுவது என்கிற குழப்பமும் வராது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
ஒரு கரண்டி லேசான அவல், 3 கரண்டி பால், ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய், இனிப்புச் சுவைக்கு தேவையான சர்க்கரை அல்லது தேன் அல்லது மில்க்மெய்ட் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளுங்கள். பொடித்த பாதாம், உலர்ந்த திராட்சை, முந்திரி... எது கை வசம் இருந்தாலும் மேலே தூவி கிண்ணங்களில் நிரப்பி ஸ்பூனுடன் குழந்தைகளுக்கு கொடுங்கள். ஆவலுடன் சாப்பிடுவார்கள். முன்னதாகவே தயாரித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.
கட்டிப் பெருங்காயத்தை சாம்பாரில் சேர்ப்பதாக இருந்தால், பருப்பை வேக வைக்கும்போதே அதனுடன் சேர்த்து விடுங்கள். இதனால் மணம் தூக்கலாக இருப்பதுடன், குறைந்த அளவு பெருங்காயமே போதுமானதாக இருக்கும்.
வீட்டைப் பூட்டிவிட்டு ஒன்றிரண்டு நாட்கள் வெளியூர் சென்று திரும்பினால்... வீடு முழுக்க எறும்பு, பூச்சிகள் என்று சமயங்களில் படுத்தி எடுத்துவிடும். ஊருக்குப் புறப்பட்டால்... எல்லா அறைகளின் (குளியலறையும் சேர்த்து) நான்கு மூலைகளிலும் பூச்சி மருந்து அடியுங்கள். சமையலறை சிங்க், வாஷ்பேஸின் ஆகியவற்றின் துவாரங்களில் நாஃப்தலின் உருண்டைகளைப் போடுங்கள். சமையலறை அலமாரிகளின் ஓரங்களில் லஷ்மண் ரேகாவினால் கோடு வரையுங்கள். அதன் பிறகு பாருங்கள்... பூச்சிகள் அண்டவே அண்டாது
கட்டிப் பெருங்காயத்தை சாம்பாரில் சேர்ப்பதாக இருந்தால், பருப்பை வேக வைக்கும்போதே அதனுடன் சேர்த்து விடுங்கள். இதனால் மணம் தூக்கலாக இருப்பதுடன், குறைந்த அளவு பெருங்காயமே போதுமானதாக இருக்கும்.
வீட்டைப் பூட்டிவிட்டு ஒன்றிரண்டு நாட்கள் வெளியூர் சென்று திரும்பினால்... வீடு முழுக்க எறும்பு, பூச்சிகள் என்று சமயங்களில் படுத்தி எடுத்துவிடும். ஊருக்குப் புறப்பட்டால்... எல்லா அறைகளின் (குளியலறையும் சேர்த்து) நான்கு மூலைகளிலும் பூச்சி மருந்து அடியுங்கள். சமையலறை சிங்க், வாஷ்பேஸின் ஆகியவற்றின் துவாரங்களில் நாஃப்தலின் உருண்டைகளைப் போடுங்கள். சமையலறை அலமாரிகளின் ஓரங்களில் லஷ்மண் ரேகாவினால் கோடு வரையுங்கள். அதன் பிறகு பாருங்கள்... பூச்சிகள் அண்டவே அண்டாது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
முற்றிய தேங்காயை துண்டுகள் போடுவது சிரமமாக இருக்கும். தேங்காயை ஃபிரீசரில் பதினைந்து நிமிடங்கள் வைத்து, தண்ணீரில் கழுவி, கத்தியால் கீறிவிட்டால், சுலபமாக வந்துவிடும்.
துணிகளில் கறை ஏற்பட்டுவிட்டால், மறுநிமிடமே அந்த இடங்களில் கிளிப் (அ) சேஃப்டி பின்னை குத்தி வையுங்கள். துவைக்கும்போது, அந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்து தனியாக அலசலாம்.
வெயில் காலத்தில் இரவே பாலை உறை ஊற்றும்போது, தயிர்
புளித்துவிடும். இதற்கு... மூன்று அடுக்கு டிபன் கேரியரில் நடு அடுக்கில் உறை ஊற்றிய பாலையும், மேலும் கீழும் உள்ள அடுக்குகளில் குளிர்ந்த நீரையும் நிரப்பி வைத்தால்... அதிகம் புளிக்காமல் இருக்கும்
ஃபிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென்று இருக்க... லிக்விட் (அ) சோப் பவுடருடன் சில துளிகள் சொட்டு நீலத்தை விட்டு, நுரை வரும் வரை கலக்குங்கள். இந்த நுரையை மட்டும் எடுத்து துடைத்தால் போதும். பளபளவென்று இருக்கும்.
சௌசௌ காயை நறுக்கும்போது கை பிசுபிசுப்பாகிவிடும். இதைத் தவிர்க்க... காயை நீள வாக்கில் இரண்டாக வெட்டி, ஒன்றோடு ஒன்றைத் தேய்த்தால் நுரை வரும். பிறகு தண்ணீரில் கழுவிவிட்டு நறுக்கினால் பிசுபிசுப்பே படியாது.
[You must be registered and logged in to see this link.]
துணிகளில் கறை ஏற்பட்டுவிட்டால், மறுநிமிடமே அந்த இடங்களில் கிளிப் (அ) சேஃப்டி பின்னை குத்தி வையுங்கள். துவைக்கும்போது, அந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்து தனியாக அலசலாம்.
வெயில் காலத்தில் இரவே பாலை உறை ஊற்றும்போது, தயிர்
புளித்துவிடும். இதற்கு... மூன்று அடுக்கு டிபன் கேரியரில் நடு அடுக்கில் உறை ஊற்றிய பாலையும், மேலும் கீழும் உள்ள அடுக்குகளில் குளிர்ந்த நீரையும் நிரப்பி வைத்தால்... அதிகம் புளிக்காமல் இருக்கும்
ஃபிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென்று இருக்க... லிக்விட் (அ) சோப் பவுடருடன் சில துளிகள் சொட்டு நீலத்தை விட்டு, நுரை வரும் வரை கலக்குங்கள். இந்த நுரையை மட்டும் எடுத்து துடைத்தால் போதும். பளபளவென்று இருக்கும்.
சௌசௌ காயை நறுக்கும்போது கை பிசுபிசுப்பாகிவிடும். இதைத் தவிர்க்க... காயை நீள வாக்கில் இரண்டாக வெட்டி, ஒன்றோடு ஒன்றைத் தேய்த்தால் நுரை வரும். பிறகு தண்ணீரில் கழுவிவிட்டு நறுக்கினால் பிசுபிசுப்பே படியாது.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
அனைத்தும் சூப்பர் பகிர்வுக்கு நன்றி அண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
பதிவுக்கு மிக்க நன்றி..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
குட்...துணிகளில் கறை ஏற்பட்டுவிட்டால், மறுநிமிடமே அந்த இடங்களில் கிளிப் (அ) சேஃப்டி பின்னை குத்தி வையுங்கள். துவைக்கும்போது, அந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்து தனியாக அலசலாம்.
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
நல்ல குறிப்புகள்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
மகா பிரபு, முரளிராஜா, ஸ்ரீராம் அவர்கள் இதனை கட்டாயம் படிக்க வேண்டும்...
(நான் கடைபிடிக்கிறேன் என்று நினைத்தால் அது பொய்... பொய்...)
(நான் கடைபிடிக்கிறேன் என்று நினைத்தால் அது பொய்... பொய்...)
Re: டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~
மகா பிரபு, முரளிராஜா, ஸ்ரீராம் அவர்கள் இதனை கட்டாயம் படிக்க வேண்டும்...
எங்களுக்கு டேக் பண்ணினது மகிழ்ச்சி. நீங்கள் கடைபிடிக்கணுமே?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» சமையலறை டிப்ஸ்!
» டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» சமையலறை டிப்ஸ்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|