Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
ஒவ்வொருநாள் உறக்கத்திலும்
கனவில் நீ
வந்துவிடுகிறாய் என்றபோதும்
எந்தக் கனவாலும்
தந்துவிட முடியாது
அதிகாலை என்னை தட்டியெழுப்பும்
தேவதையான உன்னை...
கனவில் நீ
வந்துவிடுகிறாய் என்றபோதும்
எந்தக் கனவாலும்
தந்துவிட முடியாது
அதிகாலை என்னை தட்டியெழுப்பும்
தேவதையான உன்னை...
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
நீ குட்டிப்பாப்பாவாய்
என் அத்தையின் வயிற்றில்
கருவானபோதே
உருவாகிவிட்டது
நமக்கான காதலும்...
என் அத்தையின் வயிற்றில்
கருவானபோதே
உருவாகிவிட்டது
நமக்கான காதலும்...
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
நான் கண்மூடி உறங்கியபின்
என் கனவுலகில்
எப்போதும் இருள்சூழ்ந்ததில்லை.
அதோ தூரத்தில் தெரிகிறாள்
என் வெளிச்ச தேவதை
என் கனவுலகில்
எப்போதும் இருள்சூழ்ந்ததில்லை.
அதோ தூரத்தில் தெரிகிறாள்
என் வெளிச்ச தேவதை
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
படிக்கும்போதும்
வீட்டுநினைவு வந்ததாய்
சொன்னாய் நீ.
அந்த நூலக வாசலில்
ஆறுதல் சொன்னேன்.
நீ அன்பாய் பார்த்த
அந்த நொடியில்
விதையாய் விழுந்து
விருச்சமானதடி
நம் காதல்
வீட்டுநினைவு வந்ததாய்
சொன்னாய் நீ.
அந்த நூலக வாசலில்
ஆறுதல் சொன்னேன்.
நீ அன்பாய் பார்த்த
அந்த நொடியில்
விதையாய் விழுந்து
விருச்சமானதடி
நம் காதல்
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
தோழியென்றே பழகிவந்தாய்
'யாரையாவது காதலிக்கிறாயா?'
என்றாய்.
'இல்லையே' என்றேன்.
'பொய் சொல்லாதே' என்றாய்.
'நிஜமா இல்லப்பா' என்றேன்.
'அதான்
என்னைக் காதலிக்கிறாயே...'
சொல்லிவிட்டு
ஓரக்கண்களால் முறைத்தவாறே
எதிர்த்திசை நோக்கி
மெல்லமெல்ல தவழ்ந்தாய்
வேற்றுகிரக வாசியாக
மாறிக்கொண்டிருந்தேன் நான்.
'யாரையாவது காதலிக்கிறாயா?'
என்றாய்.
'இல்லையே' என்றேன்.
'பொய் சொல்லாதே' என்றாய்.
'நிஜமா இல்லப்பா' என்றேன்.
'அதான்
என்னைக் காதலிக்கிறாயே...'
சொல்லிவிட்டு
ஓரக்கண்களால் முறைத்தவாறே
எதிர்த்திசை நோக்கி
மெல்லமெல்ல தவழ்ந்தாய்
வேற்றுகிரக வாசியாக
மாறிக்கொண்டிருந்தேன் நான்.
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
என் வீட்டில் தவழ்கிறது
என் மகளென்ற பெயரில்
ஒரு பொம்மைக்குட்டி
உன்னைப் போலவே...
என் மகளென்ற பெயரில்
ஒரு பொம்மைக்குட்டி
உன்னைப் போலவே...
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
நம் குழந்தையை
கொஞ்சும் சாக்கில்
என் மீசையை பி(க)டித்திழுத்து
விளையாட ஆரம்பித்தாய்.
உனக்கு
இன்னொரு குழந்தையாய்
மாறிப்போனது
என் மீசை
கொஞ்சும் சாக்கில்
என் மீசையை பி(க)டித்திழுத்து
விளையாட ஆரம்பித்தாய்.
உனக்கு
இன்னொரு குழந்தையாய்
மாறிப்போனது
என் மீசை
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
வாழைக்கன்று மாங்கன்று
மல்லிகைக்கொடி ரோஜாச்செடி
என எனக்காக
நீ வளர்த்ததைப் போலவே
நீ பி(க)டித்திழுத்து விளையாட
வளர்த்து வைத்திருக்கிறேன்
என் மீசையை...
மல்லிகைக்கொடி ரோஜாச்செடி
என எனக்காக
நீ வளர்த்ததைப் போலவே
நீ பி(க)டித்திழுத்து விளையாட
வளர்த்து வைத்திருக்கிறேன்
என் மீசையை...
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
இனிமேல் உன்னை நினைத்து
கண்ணீர் விடப்போவதில்லை நான்
என்னுள் இருக்கும் நீ
என் கண்ணீர் வழி
கரைந்து விடுவாய் என்பதால்...
கண்ணீர் விடப்போவதில்லை நான்
என்னுள் இருக்கும் நீ
என் கண்ணீர் வழி
கரைந்து விடுவாய் என்பதால்...
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
உன்னை
செல்லங்கொஞ்சி அழைப்பதால்
நீ என்
செல்லமாகி விடவில்லை.
நீ செல்லுமிடமெங்கும்
என் நினைவுகள் சுழல்வதால் தான்
நீ என்
செல்லமாகி விட்டாய்
செல்லங்கொஞ்சி அழைப்பதால்
நீ என்
செல்லமாகி விடவில்லை.
நீ செல்லுமிடமெங்கும்
என் நினைவுகள் சுழல்வதால் தான்
நீ என்
செல்லமாகி விட்டாய்
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
உன்னைத் தேடி வேறெங்கும்
அலையப் போவதில்லை
நான்.
கண்கள் மூடி
எதைப் பற்றி யோசித்தாலும்
முண்டியடித்துக் கொண்டு
முதலாவதாய் வந்து நிற்கிறாய்
நீ.
-------------------------
அலையப் போவதில்லை
நான்.
கண்கள் மூடி
எதைப் பற்றி யோசித்தாலும்
முண்டியடித்துக் கொண்டு
முதலாவதாய் வந்து நிற்கிறாய்
நீ.
-------------------------
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
பொம்மை வாங்க
கடைக்கு போனோம்
நம் குழந்தையோடு.
எந்தவொரு பொம்மையும்
பிடிக்கவில்லை
நம் குழந்தைக்கு.
உன்னைத் தவிர...
கடைக்கு போனோம்
நம் குழந்தையோடு.
எந்தவொரு பொம்மையும்
பிடிக்கவில்லை
நம் குழந்தைக்கு.
உன்னைத் தவிர...
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
நீ அழகாய் இருப்பதால்தான்
உன்னை நான் காதலிப்பதாய்
யார் சொன்னது?
நான் காதலித்ததனால்தான்
நீ அழகான குட்டிப்பாப்பாவாய்
மாறிப்போனாயென்பது
உனக்கு தெரியுமா?
உன்னை நான் காதலிப்பதாய்
யார் சொன்னது?
நான் காதலித்ததனால்தான்
நீ அழகான குட்டிப்பாப்பாவாய்
மாறிப்போனாயென்பது
உனக்கு தெரியுமா?
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
நம் குழந்தையின்
கன்னத்தை திருகி
செல்லங்கொஞ்சி
விளையாடுகிறேன் நான்.
என் மீசையை திருகி
செல்லங்கொஞ்சி
விளையாடுகிறாய் நீ.
கன்னத்தை திருகி
செல்லங்கொஞ்சி
விளையாடுகிறேன் நான்.
என் மீசையை திருகி
செல்லங்கொஞ்சி
விளையாடுகிறாய் நீ.
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
உன் முகம்பார்த்து
புருவங்கள் உயர்த்தி
‘எங்கே வாங்கிக் கொண்டிருக்கிறாய்?’
என்றேன்.
‘என்ன வாங்குகிறேன்?’
என்றாய் வெகுளியாக.
‘எங்கே வாங்கிக் கொண்டிருக்கிறாய்?
ஒவ்வொரு நாளும்
புதிதுபுதிதாய் மலரும்
உன் அழகிய முகத்தை...’
புருவங்கள் உயர்த்தி
‘எங்கே வாங்கிக் கொண்டிருக்கிறாய்?’
என்றேன்.
‘என்ன வாங்குகிறேன்?’
என்றாய் வெகுளியாக.
‘எங்கே வாங்கிக் கொண்டிருக்கிறாய்?
ஒவ்வொரு நாளும்
புதிதுபுதிதாய் மலரும்
உன் அழகிய முகத்தை...’
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
உன்னுடைய சிறுவயதில்
பொம்மை வாங்கித்தரச்சொல்லி
அடம்பிடித்திருப்பாய் நீ.
உன்னை வாங்கித்தரச்சொல்லி
அடம்பிடித்திருக்கும்
உன் வயது குழந்தைகள்.
பொம்மை வாங்கித்தரச்சொல்லி
அடம்பிடித்திருப்பாய் நீ.
உன்னை வாங்கித்தரச்சொல்லி
அடம்பிடித்திருக்கும்
உன் வயது குழந்தைகள்.
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
என்னோடு
விளையாடிக் கொண்டிருந்த
நம் குழந்தை
என் கன்னத்தில் அறைந்துவிட்டு
கைகொட்டி சிரித்தது.
நானும்
விழுந்து விழுந்து
சிரித்தேன்.
‘ரொம்ப வலிக்குதா?’
என்று என்
கன்னம் தொட்டுப்பார்க்கும்
உன்னைப்பார்த்து...
விளையாடிக் கொண்டிருந்த
நம் குழந்தை
என் கன்னத்தில் அறைந்துவிட்டு
கைகொட்டி சிரித்தது.
நானும்
விழுந்து விழுந்து
சிரித்தேன்.
‘ரொம்ப வலிக்குதா?’
என்று என்
கன்னம் தொட்டுப்பார்க்கும்
உன்னைப்பார்த்து...
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
எந்த ஊரிலுள்ள
பொம்மைக்கடைக்கு போனாலும்
எல்லா பொம்மைகளும்
என்னை சூழ்ந்துகொண்டு
உன்னைபற்றி
என்னிடம் கேட்கின்றன
ஒரே குரலில்...
‘எங்கே வாங்கினாய்
இப்படி ஒரு
அழகுயர பொம்மையை...!‘
பொம்மைக்கடைக்கு போனாலும்
எல்லா பொம்மைகளும்
என்னை சூழ்ந்துகொண்டு
உன்னைபற்றி
என்னிடம் கேட்கின்றன
ஒரே குரலில்...
‘எங்கே வாங்கினாய்
இப்படி ஒரு
அழகுயர பொம்மையை...!‘
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
பக்கத்தில்
பொம்மைக்கடை எங்கே? என்று
புதியவர்கள் யாரேனும் கேட்டால்
நீ வசிக்கும்
நம் வீட்டை சுட்டுகின்றனர்
நம் வீதிவாசிகள்.
பொம்மைக்கடை எங்கே? என்று
புதியவர்கள் யாரேனும் கேட்டால்
நீ வசிக்கும்
நம் வீட்டை சுட்டுகின்றனர்
நம் வீதிவாசிகள்.
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
‘இப்படி நீ
சிரிக்காதே.
ஐயோ...
மோகினிப்பிசாசென்றே
யாரேனும் பயந்துபோய்
மயங்கி விழுந்துவிடுவார்கள்’
என்றேன்.
‘எனக்குன்னை பிடிக்கவில்லை’
என்றபடி
முகத்தை ஒரு வெட்டுவெட்டி
முறைத்தபடியே தூரம்போனாய்.
போடீ போ...
இப்படி கதைத்துக் களிக்க
உன்னைவிட்டால் எனக்கு
வேறு யாருண்டு இவ்வுலகில்...
சிரிக்காதே.
ஐயோ...
மோகினிப்பிசாசென்றே
யாரேனும் பயந்துபோய்
மயங்கி விழுந்துவிடுவார்கள்’
என்றேன்.
‘எனக்குன்னை பிடிக்கவில்லை’
என்றபடி
முகத்தை ஒரு வெட்டுவெட்டி
முறைத்தபடியே தூரம்போனாய்.
போடீ போ...
இப்படி கதைத்துக் களிக்க
உன்னைவிட்டால் எனக்கு
வேறு யாருண்டு இவ்வுலகில்...
Re: முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்
நான் யாருக்காகவும்
இவ்வளவு அதிகமாய்
அழுததில்லை.
உனக்காக அழுததைத்தவிர...
-------------------------
இவ்வளவு அதிகமாய்
அழுததில்லை.
உனக்காக அழுததைத்தவிர...
-------------------------
Similar topics
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» கவிதைகள்
» sms கவிதைகள்
» கவிதைகள் சில
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» கவிதைகள்
» sms கவிதைகள்
» கவிதைகள் சில
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|