Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மரபு கவிதை - புதுகவிதை
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
மரபு கவிதை - புதுகவிதை
நன்றி தமிழ் இணைய பல்கலைக் கழகம்
தோற்றமும் வளர்ச்சியும்
இலக்கியம் என்பது சமுதாய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கலைவடிவமாகும். நுண்ணுணர்வால் அறிந்து நுகரத்தக்கது ஆதலின் இது நுண்கலையாகும். இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் காலத்தால் முந்தியது கவிதையே ஆகும். ‘உணர்ச்சி இயல்பாகவே உருவெடுக்கும் இடமான சிந்தனையும் சொற்களுமே கவிதை’ என்கிறார் மில் (Mill). ‘அறிவையும் கற்பனையையும் சேர்த்து இன்பத்தை உண்மையோடு இணைத்து வைக்கும் கலையே கவிதை’ என்பது ஜான்சனின் கருத்து. நன்னூல்,
சொல்லால் பொருட்கிட னாக உணர்வின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (நூற்பா-268)
எனக் குறிப்பிடுகின்றது.
கவிதையின் உயிராகக் கருதப்படும் ஓசையின் உருவாக்கத்தையொட்டி யாப்பிலக்கணம் வகுக்கப்பட்டது. தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகியவற்றில் பாக்கள், பாவினங்கள் ஆகியவற்றிற்கான இலக்கணங்கள் வரையறுத்து உணர்த்தப்படுகின்றன. பல்வேறு இலக்கியங்களைப் பயின்ற பயிற்சியும், யாப்பிலக்கண அறிவும் உடையவர்களால் மட்டும் சிறந்த மரபுக் கவிதைகளைப் படைக்க முடியும். இதில் சாதித்தல் அரிது என்பதை,
காரிகை கற்றுக் கவிபாடு வதினும்
பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே
என்னும் பாடல் உணர்த்தும். இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சமயம், கதை என யாவும் மரபுக்கவிதை வடிவிலேயே முன்பு இடம்பெற்றன. இவ்வடிவம் செய்யுள் என்பதாக இலக்கியங்களிலும், நூற்பா என்பதாக இலக்கண நூல்களிலும் பெயர் பெற்றிருந்தது.
இருபதாம் நூற்றாண்டளவில் மேனாட்டார் வருகையால் ஏற்பட்ட உரைநடைத் தாக்கமும், கல்வி பயில்வோர் பலதரப்பட்டவர்களாக அமைந்தமையும், மனப்பாடத்தின் தேவையின்மையும், அச்சு நூல்கள் மற்றும் இதழ்களின் வளர்ச்சியும், சமுதாய மாற்றமும் புதுக்கவிதை என்னும் யாப்புக் கடந்த கவிதை வகை தோன்றிச் சிறக்கக் காரணமாயின.
இவ்விருவகைக் கவிதைகளின் தோற்றம், வளர்ச்சி, வடிவம் (Form), உள்ளடக்கம் (Content), உத்திகள் (Techniques) ஆகியன பற்றி எடுத்துரைப்பதாக இப்பாடம் அமைகிறது.
மரபுக்கவிதை காலத்தால் முந்தியது. பல்வேறு இலக்கிய நூல்களாக இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தழைத்து விளங்கும் சிறப்புடையது. புதுக்கவிதை, கடந்த இருபதாம் நூற்றாண்டில் தோன்றிச் செழிக்கத் தொடங்கியது. இக்கவிதைகளின் தோற்றம், பெயர்க்காரணம், நோக்கம், நூல்கள், படைப்பாளர்கள், வளர்ச்சி, இன்றைய நிலை ஆகியன குறித்து இங்குக் காண்போம்.
தோற்றமும் வளர்ச்சியும்
இலக்கியம் என்பது சமுதாய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கலைவடிவமாகும். நுண்ணுணர்வால் அறிந்து நுகரத்தக்கது ஆதலின் இது நுண்கலையாகும். இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் காலத்தால் முந்தியது கவிதையே ஆகும். ‘உணர்ச்சி இயல்பாகவே உருவெடுக்கும் இடமான சிந்தனையும் சொற்களுமே கவிதை’ என்கிறார் மில் (Mill). ‘அறிவையும் கற்பனையையும் சேர்த்து இன்பத்தை உண்மையோடு இணைத்து வைக்கும் கலையே கவிதை’ என்பது ஜான்சனின் கருத்து. நன்னூல்,
சொல்லால் பொருட்கிட னாக உணர்வின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (நூற்பா-268)
எனக் குறிப்பிடுகின்றது.
கவிதையின் உயிராகக் கருதப்படும் ஓசையின் உருவாக்கத்தையொட்டி யாப்பிலக்கணம் வகுக்கப்பட்டது. தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகியவற்றில் பாக்கள், பாவினங்கள் ஆகியவற்றிற்கான இலக்கணங்கள் வரையறுத்து உணர்த்தப்படுகின்றன. பல்வேறு இலக்கியங்களைப் பயின்ற பயிற்சியும், யாப்பிலக்கண அறிவும் உடையவர்களால் மட்டும் சிறந்த மரபுக் கவிதைகளைப் படைக்க முடியும். இதில் சாதித்தல் அரிது என்பதை,
காரிகை கற்றுக் கவிபாடு வதினும்
பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே
என்னும் பாடல் உணர்த்தும். இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சமயம், கதை என யாவும் மரபுக்கவிதை வடிவிலேயே முன்பு இடம்பெற்றன. இவ்வடிவம் செய்யுள் என்பதாக இலக்கியங்களிலும், நூற்பா என்பதாக இலக்கண நூல்களிலும் பெயர் பெற்றிருந்தது.
இருபதாம் நூற்றாண்டளவில் மேனாட்டார் வருகையால் ஏற்பட்ட உரைநடைத் தாக்கமும், கல்வி பயில்வோர் பலதரப்பட்டவர்களாக அமைந்தமையும், மனப்பாடத்தின் தேவையின்மையும், அச்சு நூல்கள் மற்றும் இதழ்களின் வளர்ச்சியும், சமுதாய மாற்றமும் புதுக்கவிதை என்னும் யாப்புக் கடந்த கவிதை வகை தோன்றிச் சிறக்கக் காரணமாயின.
இவ்விருவகைக் கவிதைகளின் தோற்றம், வளர்ச்சி, வடிவம் (Form), உள்ளடக்கம் (Content), உத்திகள் (Techniques) ஆகியன பற்றி எடுத்துரைப்பதாக இப்பாடம் அமைகிறது.
மரபுக்கவிதை காலத்தால் முந்தியது. பல்வேறு இலக்கிய நூல்களாக இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தழைத்து விளங்கும் சிறப்புடையது. புதுக்கவிதை, கடந்த இருபதாம் நூற்றாண்டில் தோன்றிச் செழிக்கத் தொடங்கியது. இக்கவிதைகளின் தோற்றம், பெயர்க்காரணம், நோக்கம், நூல்கள், படைப்பாளர்கள், வளர்ச்சி, இன்றைய நிலை ஆகியன குறித்து இங்குக் காண்போம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.1.1 தோற்றம்
• மரபுக்கவிதை
நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் தொன்மையானதாக விளங்குவது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப் பெறுகின்றது. இதற்கும் முந்தையனவாக இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன. அவ்விலக்கண நூல்கள் ‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல’ இலக்கியத்திலிருந்து இலக்கண நூல்கள் ஏற்படுகின்றன என்னும் விதிக்கு இணங்க, தமக்கு முற்பட்ட இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் வகுத்தனவாகும். இலக்கண நூல்களில் செய்யுள் தொடர்பான எழுத்து, சொல், அகம்-புறம் என்னும் பாடுபொருள் குறித்த செய்திகள், யாப்பு, அணி ஆகியன பற்றிய வரையறைகள் இடம் பெற்றிருக்கும். எனவே இவற்றைக் கருதிப் பார்க்கும்போது, செய்யுள் என்னும் கவிதை வடிவம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக்காலத் தொன்மையுடையது என உறுதிபடக் கூறலாம்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன குறித்த இலக்கணங்களைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. இறையனார் களவியல் உரையில் மறைந்து போன சங்க நூல்களின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை ஆகிய தலைச் சங்க நூல்களும், கலி, குருகு, வியாழமாலையகவல், வெண்டாளி ஆகிய இடைச் சங்க நூல்களும் அவ்வகை நூல்களுள் அடங்கும். சிற்றிசை, பேரிசை என்பன கடைச்சங்கத்தில் இருந்து மறைந்தவற்றுள் அடங்கும். ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என மயிலை சீனிவேங்கடசாமி, இவ்வகை நூல்கள் குறித்துத் தனியொரு நூலே எழுதியுள்ளார். அவற்றின்வழி மரபுக்கவிதையின் தொன்மையை நன்கு அறியலாம்.
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்
எனப் பாரதியார் பாடும் பாடல், மரபுக்கவிதையின் காலத் தொன்மைக்கும் பொருந்தக் கூடியதாகும்.
• மரபுக்கவிதை
நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் தொன்மையானதாக விளங்குவது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப் பெறுகின்றது. இதற்கும் முந்தையனவாக இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன. அவ்விலக்கண நூல்கள் ‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல’ இலக்கியத்திலிருந்து இலக்கண நூல்கள் ஏற்படுகின்றன என்னும் விதிக்கு இணங்க, தமக்கு முற்பட்ட இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் வகுத்தனவாகும். இலக்கண நூல்களில் செய்யுள் தொடர்பான எழுத்து, சொல், அகம்-புறம் என்னும் பாடுபொருள் குறித்த செய்திகள், யாப்பு, அணி ஆகியன பற்றிய வரையறைகள் இடம் பெற்றிருக்கும். எனவே இவற்றைக் கருதிப் பார்க்கும்போது, செய்யுள் என்னும் கவிதை வடிவம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக்காலத் தொன்மையுடையது என உறுதிபடக் கூறலாம்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன குறித்த இலக்கணங்களைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. இறையனார் களவியல் உரையில் மறைந்து போன சங்க நூல்களின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை ஆகிய தலைச் சங்க நூல்களும், கலி, குருகு, வியாழமாலையகவல், வெண்டாளி ஆகிய இடைச் சங்க நூல்களும் அவ்வகை நூல்களுள் அடங்கும். சிற்றிசை, பேரிசை என்பன கடைச்சங்கத்தில் இருந்து மறைந்தவற்றுள் அடங்கும். ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என மயிலை சீனிவேங்கடசாமி, இவ்வகை நூல்கள் குறித்துத் தனியொரு நூலே எழுதியுள்ளார். அவற்றின்வழி மரபுக்கவிதையின் தொன்மையை நன்கு அறியலாம்.
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்
எனப் பாரதியார் பாடும் பாடல், மரபுக்கவிதையின் காலத் தொன்மைக்கும் பொருந்தக் கூடியதாகும்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது. இந்நூற்றாண்டில் மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர். 1892இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் புல்லின் இலைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக் கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப் புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ் (Free verse) என்னும் வசன கவிதையாக அமைந்தது. அவர்தம் பாடுபொருளும் பிறர் இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி எமர்சன், கார்ல் சான்ட்பெர்க், லின்ட்ஸே, வாலெஸ் ஸ்டீவன்ஸன், ஸ்டீவன் கிரேன், அமி லோவல் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் வசன கவிதை படைக்கலாயினர்.
பிரெஞ்சு நாட்டிலும், ரிம்பாடு என்னும் இளங்கவிஞர், 1886ஆம் ஆண்டுஒளி வெள்ளம் என்னும் தலைப்பில் வெர்ஸ் லிப்ரே என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார். இவரையடுத்து 1889-இல் வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை வெளியிட்டார்.
இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின.
பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம், இத்தாலியக் கவிஞர்களின்ப்யுச்சரிசம், ஜெர்மானியரின் எக்ஸ்பிரஷனிசம் என்பன அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து வசன கவிதைகளைத் தோற்றுவிக்கலாயின.
‘விட்மனின் பாடலில் எதுகை, மோனை, தளை எதுவுமே இருக்காது; வசன நடை போலவே இருக்கும்; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமே யொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயனில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார்’ என்பார் மகாகவி பாரதியார். மரபுக் கவிதையில் வல்லவரும் தம் பல்வேறு பாடல்களை அதிலேயே படைத்தவருமாகிய பாரதியார் வசன கவிதையில் விருப்புற்றவராகத் தாமும்காட்சிகள் என்னும் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.
பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை படைக்கலாயினர்.
புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
5.1.2 பெயர்க்காரணம்
தமிழ்க் கவிதைகளை மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பன போன்ற பெயர்களில் குறிப்பிடுகிறோம். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
• மரபுக் கவிதை
தொன்று தொட்டு வரும் தன்மையுடையது என்பதை மரபு என்னும் சொல் உணர்த்தி நிற்கின்றது. இனிய ஓசை நயம் அமைந்த பாடல்களைக் கேட்டுப் பழகியவர், அதே ஓசையில் பாடல் புனைய முயன்று, பிறர் படிக்கவும், இவ்வாறே புதியன படைக்கவும் ‘பாடல் அமைப்பை’ எழுத்து, அசை, சீர் என அமைத்து ஒழுங்குபடுத்தியிருத்தல் வேண்டும். இவ்வாறு யாப்பிலக்கணம் தோன்ற, அடுத்தடுத்து வந்தவர் அம்மரபு மாறாமல் கவி படைக்கத் தொடங்கினர்.
பாக்களையடுத்துப் பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றின. இவ்வாறுதான் பாடப்படவேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
பாடுபொருளும் உத்திகளும் புதியனவாயினும் மரபு இலக்கணத்தின்படி படைக்கப்படுதலின் இவை மரபுக்கவிதை எனப்படுகின்றன.
• புதுக்கவிதை
ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து எனக் காலந்தோறும் யாப்பு வடிவங்கள் செல்வாக்குப் பெற்றுவந்தன. மேனாட்டுத் தாக்கத்தால் உரைநடை செல்வாக்குப் பெற்ற நிலையில், யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி, வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது. பின்னர், யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, கட்டிலடங்காக் கவிதை போன்ற பெயர்களை அவ்வப்போது பெற்று வரலாயிற்று.
பழக்கத்தில் உள்ள நிலையிலிருந்து சிறிதளவோ முற்றிலுமோ மாறுபட்டுத் தோன்றுவது புதுமை எனப்படும். வழிவழியாக மரபு கெடாது யாப்பிலக்கணத்தோடு பொருந்தி வரும் கவிதைகளிலிருந்து மாறுபடும் கவிதைப் படைப்புதான் புதுக்கவிதை ஆகும். புதுக்கவிதைகள் உருவத்தால் மட்டுமன்றி, உள்ளடக்கம், உத்திமுறைகள் ஆகியவற்றாலும் புதுமையுடையனவாகும்.
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை (ஊர்வலம்)
என மேத்தா கூறும் புதுக்கவிதை, புதுக்கவிதையின் இலக்கணத்தையும் இயல்பையும் புலப்படுத்தும். இதனை, சாலை இளந்திரையன் உரை வீச்சுஎனக் கூறுவார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது. இந்நூற்றாண்டில் மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர். 1892இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் புல்லின் இலைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக் கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப் புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ் (Free verse) என்னும் வசன கவிதையாக அமைந்தது. அவர்தம் பாடுபொருளும் பிறர் இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி எமர்சன், கார்ல் சான்ட்பெர்க், லின்ட்ஸே, வாலெஸ் ஸ்டீவன்ஸன், ஸ்டீவன் கிரேன், அமி லோவல் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் வசன கவிதை படைக்கலாயினர்.
பிரெஞ்சு நாட்டிலும், ரிம்பாடு என்னும் இளங்கவிஞர், 1886ஆம் ஆண்டுஒளி வெள்ளம் என்னும் தலைப்பில் வெர்ஸ் லிப்ரே என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார். இவரையடுத்து 1889-இல் வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை வெளியிட்டார்.
இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின.
பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம், இத்தாலியக் கவிஞர்களின்ப்யுச்சரிசம், ஜெர்மானியரின் எக்ஸ்பிரஷனிசம் என்பன அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து வசன கவிதைகளைத் தோற்றுவிக்கலாயின.
‘விட்மனின் பாடலில் எதுகை, மோனை, தளை எதுவுமே இருக்காது; வசன நடை போலவே இருக்கும்; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமே யொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயனில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார்’ என்பார் மகாகவி பாரதியார். மரபுக் கவிதையில் வல்லவரும் தம் பல்வேறு பாடல்களை அதிலேயே படைத்தவருமாகிய பாரதியார் வசன கவிதையில் விருப்புற்றவராகத் தாமும்காட்சிகள் என்னும் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.
பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை படைக்கலாயினர்.
புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
5.1.2 பெயர்க்காரணம்
தமிழ்க் கவிதைகளை மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பன போன்ற பெயர்களில் குறிப்பிடுகிறோம். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
• மரபுக் கவிதை
தொன்று தொட்டு வரும் தன்மையுடையது என்பதை மரபு என்னும் சொல் உணர்த்தி நிற்கின்றது. இனிய ஓசை நயம் அமைந்த பாடல்களைக் கேட்டுப் பழகியவர், அதே ஓசையில் பாடல் புனைய முயன்று, பிறர் படிக்கவும், இவ்வாறே புதியன படைக்கவும் ‘பாடல் அமைப்பை’ எழுத்து, அசை, சீர் என அமைத்து ஒழுங்குபடுத்தியிருத்தல் வேண்டும். இவ்வாறு யாப்பிலக்கணம் தோன்ற, அடுத்தடுத்து வந்தவர் அம்மரபு மாறாமல் கவி படைக்கத் தொடங்கினர்.
பாக்களையடுத்துப் பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றின. இவ்வாறுதான் பாடப்படவேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
பாடுபொருளும் உத்திகளும் புதியனவாயினும் மரபு இலக்கணத்தின்படி படைக்கப்படுதலின் இவை மரபுக்கவிதை எனப்படுகின்றன.
• புதுக்கவிதை
ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து எனக் காலந்தோறும் யாப்பு வடிவங்கள் செல்வாக்குப் பெற்றுவந்தன. மேனாட்டுத் தாக்கத்தால் உரைநடை செல்வாக்குப் பெற்ற நிலையில், யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி, வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது. பின்னர், யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, கட்டிலடங்காக் கவிதை போன்ற பெயர்களை அவ்வப்போது பெற்று வரலாயிற்று.
பழக்கத்தில் உள்ள நிலையிலிருந்து சிறிதளவோ முற்றிலுமோ மாறுபட்டுத் தோன்றுவது புதுமை எனப்படும். வழிவழியாக மரபு கெடாது யாப்பிலக்கணத்தோடு பொருந்தி வரும் கவிதைகளிலிருந்து மாறுபடும் கவிதைப் படைப்புதான் புதுக்கவிதை ஆகும். புதுக்கவிதைகள் உருவத்தால் மட்டுமன்றி, உள்ளடக்கம், உத்திமுறைகள் ஆகியவற்றாலும் புதுமையுடையனவாகும்.
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை (ஊர்வலம்)
என மேத்தா கூறும் புதுக்கவிதை, புதுக்கவிதையின் இலக்கணத்தையும் இயல்பையும் புலப்படுத்தும். இதனை, சாலை இளந்திரையன் உரை வீச்சுஎனக் கூறுவார்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.1.3 நோக்கம்
கவிதை, ஒரு கருத்தை எடுத்துச் சொல்கிறது. அந்தக் கருத்து எதற்காகச் சொல்லப்படுகிறது? அதையே நோக்கம் என்கிறோம்.
• மரபுக்கவிதை
மரபுக்கவிதை, சங்க காலத்தில் மன்னர்களோடு தொடர்புடையதாக இருந்தது. மன்னர்களின் வீரம், வெற்றி, கொடை, ஆட்சிச் சிறப்பு ஆகியவற்றைப் புகழ்வதாகவும், துணிச்சலுடன் புலவர்கள் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. அரசவையிலோ, சங்கம் போன்ற தமிழ் அவைகளிலோ ஒன்று குழுமிய புலவர்கள் அகப்பொருள் பாடி இன்புறுத்துவதாகவும் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன.
இடைக்காலத்தில் பக்தி இலக்கிய மறுமலர்ச்சியின் காரணமாகப் பாடுபொருள் இறைவனைப் பற்றியதாகவும், திருத்தலங்களின் (கோயில் உள்ள ஊர்) சிறப்பை உணர்த்துவதாகவும் அமைந்தது.
சித்தர் இலக்கியம், தத்துவம், மருத்துவம், அரசர்களையும் குறுநில மன்னர்களையும் மகிழ்வுறுத்தும் சிற்றிலக்கியங்கள் என அடுத்தடுத்த காலங்களில் பாடுபொருள்கள் அமைந்தன.
கவியரங்கம், வரையறுக்கப்பட்ட தலைப்பு, இயற்கை, சமூக அவலம் என இன்றைய நிலையில் மரபுக்கவிதையின் பயன்பாடு அமைகின்றது.
எனவே, மரபுக்கவிதை தொழிலுக்கு உரியதாகவும், அறிவுறுத்துவதாகவும், இன்புறுத்துவதாகவும் அமைந்து வரும் நிலையை அறிகின்றோம்.
கவிதை, ஒரு கருத்தை எடுத்துச் சொல்கிறது. அந்தக் கருத்து எதற்காகச் சொல்லப்படுகிறது? அதையே நோக்கம் என்கிறோம்.
• மரபுக்கவிதை
மரபுக்கவிதை, சங்க காலத்தில் மன்னர்களோடு தொடர்புடையதாக இருந்தது. மன்னர்களின் வீரம், வெற்றி, கொடை, ஆட்சிச் சிறப்பு ஆகியவற்றைப் புகழ்வதாகவும், துணிச்சலுடன் புலவர்கள் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. அரசவையிலோ, சங்கம் போன்ற தமிழ் அவைகளிலோ ஒன்று குழுமிய புலவர்கள் அகப்பொருள் பாடி இன்புறுத்துவதாகவும் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன.
இடைக்காலத்தில் பக்தி இலக்கிய மறுமலர்ச்சியின் காரணமாகப் பாடுபொருள் இறைவனைப் பற்றியதாகவும், திருத்தலங்களின் (கோயில் உள்ள ஊர்) சிறப்பை உணர்த்துவதாகவும் அமைந்தது.
சித்தர் இலக்கியம், தத்துவம், மருத்துவம், அரசர்களையும் குறுநில மன்னர்களையும் மகிழ்வுறுத்தும் சிற்றிலக்கியங்கள் என அடுத்தடுத்த காலங்களில் பாடுபொருள்கள் அமைந்தன.
கவியரங்கம், வரையறுக்கப்பட்ட தலைப்பு, இயற்கை, சமூக அவலம் என இன்றைய நிலையில் மரபுக்கவிதையின் பயன்பாடு அமைகின்றது.
எனவே, மரபுக்கவிதை தொழிலுக்கு உரியதாகவும், அறிவுறுத்துவதாகவும், இன்புறுத்துவதாகவும் அமைந்து வரும் நிலையை அறிகின்றோம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
புதுக்கவிதையைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள் மிகச் சிலரே. பலர் சமுதாய அவலம் கண்டு அவ்வப்போது கவிதைகள் புனைபவராக உள்ளனர். தனிமனித உணர்வுகளைப் பாடுவதும், நாட்டுப்பற்று, மொழியுணர்வு, பொதுவுடைமை, அநீதியை எதிர்த்தல், பெண்ணுரிமை, தலித்தியம், பகுத்தறிவு என்பனவற்றைப் பாடுதலும் இன்றைய புதுக்கவிதைகளின் நோக்கங்களாக உள்ளன.
மரபுக்கவிதை இயற்றுவது என்பது, பெரும்பாலும் அடித்தட்டு மக்களிடத்தில் இடம் பெறாததாகவே இருந்து வந்துள்ளது. புதுக்கவிதையைப் பொறுத்தவரை பெண்கள், அடித்தட்டு மக்கள், தொழிலாளிகள் எனப் பலரும் படைப்பாளராகி விடுவதனால், தங்களின் உண்மை நிலையையும், வாழ்வியல் சிக்கல்களையும், தாங்கள் எதிர்நோக்கும் தீர்வுகளையும் தெளிவாக எடுத்துக் கூற வல்லவர்களாய் அமைகின்றனர். அவர்தம் புதுக்கவிதைப் படைப்புகளும் அவர்களின் மனநிலையையும் வாழ்வியலையும் படிப்பவருக்கு நன்கு உணர்த்துவனவாகின்றன.
புதுக்கவிதையைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள் மிகச் சிலரே. பலர் சமுதாய அவலம் கண்டு அவ்வப்போது கவிதைகள் புனைபவராக உள்ளனர். தனிமனித உணர்வுகளைப் பாடுவதும், நாட்டுப்பற்று, மொழியுணர்வு, பொதுவுடைமை, அநீதியை எதிர்த்தல், பெண்ணுரிமை, தலித்தியம், பகுத்தறிவு என்பனவற்றைப் பாடுதலும் இன்றைய புதுக்கவிதைகளின் நோக்கங்களாக உள்ளன.
மரபுக்கவிதை இயற்றுவது என்பது, பெரும்பாலும் அடித்தட்டு மக்களிடத்தில் இடம் பெறாததாகவே இருந்து வந்துள்ளது. புதுக்கவிதையைப் பொறுத்தவரை பெண்கள், அடித்தட்டு மக்கள், தொழிலாளிகள் எனப் பலரும் படைப்பாளராகி விடுவதனால், தங்களின் உண்மை நிலையையும், வாழ்வியல் சிக்கல்களையும், தாங்கள் எதிர்நோக்கும் தீர்வுகளையும் தெளிவாக எடுத்துக் கூற வல்லவர்களாய் அமைகின்றனர். அவர்தம் புதுக்கவிதைப் படைப்புகளும் அவர்களின் மனநிலையையும் வாழ்வியலையும் படிப்பவருக்கு நன்கு உணர்த்துவனவாகின்றன.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.1.4 படைப்பாளர்களும் நூல்களும்
இவ்வாறு இரு வகையாகப் பிரிக்கப்பட்ட கவிதைகளைப் படைத்தவர்கள் பற்றியும், அவர்களது நூல்களைப் பற்றியும் இனிக் காணலாம்.
• மரபுக் கவிதை
சங்க இலக்கியம், காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள் என்னும் யாவும் மரபுக் கவிதைகளால் ஆனவையே ஆகும்.
பாரதியார் காலந்தொட்டு வரும் மரபுக்கவிதை படைப்பாளர்களும் அவர்தம் படைப்புகளும் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவேயாகும்.
(1) பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு
(2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - ஆசியசோதி, மருமக்கள்வழி மான்மியம்
(3) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - தமிழன் இதயம்,
கவிதாஞ்சலி
(4) பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, இருண்ட வீடு
குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு
(5) கண்ணதாசன் - இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி
ஆதிமந்தி
(6) சுத்தானந்த பாரதியார் - பாரதசக்தி மகாகாவியம், தமிழ்த்
திருப்பாவை
(7) சுரதா - சிரிப்பின் நிழல், தேன்மழை, துறைமுகம்
(8) அழ.வள்ளியப்பா - மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி
(9) வாணிதாசன் - கொடி முல்லை
(10) வைரமுத்து - வைகறை மேகங்கள்
இவ்வாறு இரு வகையாகப் பிரிக்கப்பட்ட கவிதைகளைப் படைத்தவர்கள் பற்றியும், அவர்களது நூல்களைப் பற்றியும் இனிக் காணலாம்.
• மரபுக் கவிதை
சங்க இலக்கியம், காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள் என்னும் யாவும் மரபுக் கவிதைகளால் ஆனவையே ஆகும்.
பாரதியார் காலந்தொட்டு வரும் மரபுக்கவிதை படைப்பாளர்களும் அவர்தம் படைப்புகளும் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவேயாகும்.
(1) பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு
(2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - ஆசியசோதி, மருமக்கள்வழி மான்மியம்
(3) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - தமிழன் இதயம்,
கவிதாஞ்சலி
(4) பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, இருண்ட வீடு
குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு
(5) கண்ணதாசன் - இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி
ஆதிமந்தி
(6) சுத்தானந்த பாரதியார் - பாரதசக்தி மகாகாவியம், தமிழ்த்
திருப்பாவை
(7) சுரதா - சிரிப்பின் நிழல், தேன்மழை, துறைமுகம்
(8) அழ.வள்ளியப்பா - மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி
(9) வாணிதாசன் - கொடி முல்லை
(10) வைரமுத்து - வைகறை மேகங்கள்
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
பாரதியார் தொடங்கிப் புதுக்கவிதைக் கவிஞர் பலர் நல்ல பல படைப்புகளை நல்கியுள்ளனர்.
(1) பாரதியார் - வசன கவிதை
(2) ந.பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை
(3) அப்துல் ரகுமான் - பால்வீதி, சுட்டுவிரல்
(4) வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி
(5) மீரா - கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
(6) நா.காமராசன் - கறுப்பு மலர்கள், நாவல்பழம்
(7) மேத்தா - கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம்
(8) வைரமுத்து - இன்னொரு தேசிய கீதம், திருத்தி எழுதிய
தீர்ப்புகள், கொடிமரத்தின் வேர்கள்
(9) சிற்பி - சர்ப்ப யாகம்
(10) அறிவுமதி - நட்புக்காலம்
பாரதியார் தொடங்கிப் புதுக்கவிதைக் கவிஞர் பலர் நல்ல பல படைப்புகளை நல்கியுள்ளனர்.
(1) பாரதியார் - வசன கவிதை
(2) ந.பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை
(3) அப்துல் ரகுமான் - பால்வீதி, சுட்டுவிரல்
(4) வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி
(5) மீரா - கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
(6) நா.காமராசன் - கறுப்பு மலர்கள், நாவல்பழம்
(7) மேத்தா - கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம்
(8) வைரமுத்து - இன்னொரு தேசிய கீதம், திருத்தி எழுதிய
தீர்ப்புகள், கொடிமரத்தின் வேர்கள்
(9) சிற்பி - சர்ப்ப யாகம்
(10) அறிவுமதி - நட்புக்காலம்
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.1.5 வளர்ச்சி வரலாறு
எண்ணத்தை அழகாக எடுத்துச் சொல்வது கவிதை. சொல்வதையும் அழகிய வகையில் சொல்லப்பயன்படுவது பா வடிவங்களாகும். காலந்தோறும் மாறிய பா, பாவினம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
• மரபுக் கவிதை
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மரபுக்கவிதை வடிவம் இன்றும் நிலைபெற்று வருகின்றது. இலக்கியம் என்றாலே அது மரபுக்கவிதைதான் என்று விளங்கிய கால கட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் காண முடிகின்றது.
‘முதலில் தோன்றியது, மிகுந்த கட்டுப்பாடு இல்லாததாகிய ஆசிரியப்பாவாகும்; வரவர ஓசை நலம் கருதியும் செப்பமான நிலையை எண்ணியும் சிற்சில கட்டுப்பாடுகள் தோன்றியிருக்கும். ஆசிரியப்பாவை அடுத்து அதனோடொத்த இயல்புடைய வஞ்சிப்பா தோன்றியதெனலாம். அடுத்துக் குறள் வெண்பா உள்ளிட்ட பலவகை வெண்பாக்களும், பிறகு மருட்பாவும், அதன் பிறகு கலிப்பாவும், பரிபாடலும் தோன்றியிருத்தல் வேண்டும். அடுத்து வந்த காலத்தில் விருத்தப்பா, தாழிசை, துறை என்பன பயன்பாட்டிலமைந்தன’ என்பார் அ.கி.பரந்தாமனார்.
யாப்பிலக்கணம் குறித்து அகத்தியம், அவிநயம், காக்கைபாடினியம், கையனார் யாப்பியல், சங்க யாப்பு, பல்காயம், பனம்பாரம், பெரிய பம்மம், மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், வாய்ப்பியம், யாப்பருங்கலம் எனப் பல்வேறு இலக்கண நூல்கள் காலந்தோறும் தோன்றி வந்துள்ளன. இந்நூல்கள்தொல்காப்பியக் காலம் சார்ந்தும், காரிகைக்கு முன்னரும் தோன்றியனவாகும்.
காரிகைக்குப் பின், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்னும் நூல்களும் யாப்பிலக்கணம் உரைப்பனவாய் அமைந்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டிலும் யாப்பிலக்கண வழிகாட்டி நூல்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன:
(1) புலவர் குழந்தை - யாப்பதிகாரம், தொடையதிகாரம் (உரை)
(2) அ.கி.பரந்தாமனார் - கவிஞராக (உரைநடை)
(3) கி.வா.ஜகந்நாதன் - கவி பாடலாம் (உரைநடை)
(4) த.சரவணத் தமிழன் - யாப்பு நூல் (நூற்பா)
(5) ச.பாலசுந்தரம் - தென்னூல் (நூற்பா)
(6) இரா.திருமுருகன் - சிந்துப் பாவியல் (நூற்பா)
சங்க இலக்கியத்தில் அகவலும், நீதி இலக்கியத்தில் வெண்பாவும், பிற்காலக் காப்பியங்களில் விருத்தமும், குறவஞ்சி, பள்ளு முதலியவற்றில் சிந்துப் பாடலுமாக மரபுக்கவிதை வடிவம் சிறந்து வந்துள்ளது.
எண்ணத்தை அழகாக எடுத்துச் சொல்வது கவிதை. சொல்வதையும் அழகிய வகையில் சொல்லப்பயன்படுவது பா வடிவங்களாகும். காலந்தோறும் மாறிய பா, பாவினம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
• மரபுக் கவிதை
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மரபுக்கவிதை வடிவம் இன்றும் நிலைபெற்று வருகின்றது. இலக்கியம் என்றாலே அது மரபுக்கவிதைதான் என்று விளங்கிய கால கட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் காண முடிகின்றது.
‘முதலில் தோன்றியது, மிகுந்த கட்டுப்பாடு இல்லாததாகிய ஆசிரியப்பாவாகும்; வரவர ஓசை நலம் கருதியும் செப்பமான நிலையை எண்ணியும் சிற்சில கட்டுப்பாடுகள் தோன்றியிருக்கும். ஆசிரியப்பாவை அடுத்து அதனோடொத்த இயல்புடைய வஞ்சிப்பா தோன்றியதெனலாம். அடுத்துக் குறள் வெண்பா உள்ளிட்ட பலவகை வெண்பாக்களும், பிறகு மருட்பாவும், அதன் பிறகு கலிப்பாவும், பரிபாடலும் தோன்றியிருத்தல் வேண்டும். அடுத்து வந்த காலத்தில் விருத்தப்பா, தாழிசை, துறை என்பன பயன்பாட்டிலமைந்தன’ என்பார் அ.கி.பரந்தாமனார்.
யாப்பிலக்கணம் குறித்து அகத்தியம், அவிநயம், காக்கைபாடினியம், கையனார் யாப்பியல், சங்க யாப்பு, பல்காயம், பனம்பாரம், பெரிய பம்மம், மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், வாய்ப்பியம், யாப்பருங்கலம் எனப் பல்வேறு இலக்கண நூல்கள் காலந்தோறும் தோன்றி வந்துள்ளன. இந்நூல்கள்தொல்காப்பியக் காலம் சார்ந்தும், காரிகைக்கு முன்னரும் தோன்றியனவாகும்.
காரிகைக்குப் பின், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்னும் நூல்களும் யாப்பிலக்கணம் உரைப்பனவாய் அமைந்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டிலும் யாப்பிலக்கண வழிகாட்டி நூல்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன:
(1) புலவர் குழந்தை - யாப்பதிகாரம், தொடையதிகாரம் (உரை)
(2) அ.கி.பரந்தாமனார் - கவிஞராக (உரைநடை)
(3) கி.வா.ஜகந்நாதன் - கவி பாடலாம் (உரைநடை)
(4) த.சரவணத் தமிழன் - யாப்பு நூல் (நூற்பா)
(5) ச.பாலசுந்தரம் - தென்னூல் (நூற்பா)
(6) இரா.திருமுருகன் - சிந்துப் பாவியல் (நூற்பா)
சங்க இலக்கியத்தில் அகவலும், நீதி இலக்கியத்தில் வெண்பாவும், பிற்காலக் காப்பியங்களில் விருத்தமும், குறவஞ்சி, பள்ளு முதலியவற்றில் சிந்துப் பாடலுமாக மரபுக்கவிதை வடிவம் சிறந்து வந்துள்ளது.
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
கி.பி.1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் குழுவினர், பாரதியாரை அடுத்துப் புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள் கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மணிக்கொடி இதழின் காலகட்டத்திலேயே ஜெயபாரதி, சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள் பல இடம் பெற்றன.
கி.பி.1950-1970 ஆண்டுகளில் இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார் ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன. 1962-ஆம் ஆண்டு புதுக்கவிதை வரலாற்றில் சிறப்புடையதாகும்.
எழுபதுகளில் தாமரை, கசடதபற, வானம்பாடி போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன.
புள்ளி, வெள்ளம், உதயம், கதம்பம், ரசிகன், நீ, அலைகள், ஐ என்னும் புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி வெளிவரலாயின. அவற்றுள் சில:
(1) ந.பிச்சமூர்த்தி - காட்டுவாத்து
(2) வேணுகோபாலன் - கோடை வயல்
(3) வைத்தீஸ்வரன் - உதய நிழல்
(4) நா.காமராசன் - கறுப்பு மலர்கள்
(5) இன்குலாப் - இன்குலாப் கவிதைகள்
(6) ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை
(7) கலாப்ரியா - தீர்த்த யாத்திரை
(8) சி.சு.செல்லப்பா - புதுக்குரல்கள்
(9) தமிழன்பன் - தோணி வருகிறது
(10) வல்லிக்கண்ணன் - அமர வேதனை
(11) ப.கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள்
(12) சி.மணி - வரும் போகும்
புதுக்கவிதை, ஈழத்திலும் மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, க-வி-தை போன்ற இதழ்களில் சிறப்புற வளர்ந்து வந்துள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
புதுக்கவிதை குறித்த செய்திகளையும் தெளிவினையும் புலப்படுத்தி வரன்முறைப் படுத்திய பெருமை திறனாய்வு நூல்களுக்கு உண்டு. இவை ஒரு வகையில் மரபுவழி யாப்பிலக்கண நூல்களை ஒத்தன எனலாம்.‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது வல்லிக்கண்ணன் எழுதியது. புதுக்கவிதை போக்கும் நோக்கும் என்னும் நூல் ந.சுப்புரெட்டியாரால் எழுதப்பட்டது. புதுக்கவிதை - ஒரு புதுப்பார்வை என்பது கவிஞர் பாலாவின் படைப்பு. புதுக்கவிதை வளர்ச்சிக்கு இத்தகு நூல்களும் பெரும்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
கி.பி.1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் குழுவினர், பாரதியாரை அடுத்துப் புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள் கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மணிக்கொடி இதழின் காலகட்டத்திலேயே ஜெயபாரதி, சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள் பல இடம் பெற்றன.
கி.பி.1950-1970 ஆண்டுகளில் இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார் ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன. 1962-ஆம் ஆண்டு புதுக்கவிதை வரலாற்றில் சிறப்புடையதாகும்.
எழுபதுகளில் தாமரை, கசடதபற, வானம்பாடி போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன.
புள்ளி, வெள்ளம், உதயம், கதம்பம், ரசிகன், நீ, அலைகள், ஐ என்னும் புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி வெளிவரலாயின. அவற்றுள் சில:
(1) ந.பிச்சமூர்த்தி - காட்டுவாத்து
(2) வேணுகோபாலன் - கோடை வயல்
(3) வைத்தீஸ்வரன் - உதய நிழல்
(4) நா.காமராசன் - கறுப்பு மலர்கள்
(5) இன்குலாப் - இன்குலாப் கவிதைகள்
(6) ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை
(7) கலாப்ரியா - தீர்த்த யாத்திரை
(8) சி.சு.செல்லப்பா - புதுக்குரல்கள்
(9) தமிழன்பன் - தோணி வருகிறது
(10) வல்லிக்கண்ணன் - அமர வேதனை
(11) ப.கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள்
(12) சி.மணி - வரும் போகும்
புதுக்கவிதை, ஈழத்திலும் மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, க-வி-தை போன்ற இதழ்களில் சிறப்புற வளர்ந்து வந்துள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
புதுக்கவிதை குறித்த செய்திகளையும் தெளிவினையும் புலப்படுத்தி வரன்முறைப் படுத்திய பெருமை திறனாய்வு நூல்களுக்கு உண்டு. இவை ஒரு வகையில் மரபுவழி யாப்பிலக்கண நூல்களை ஒத்தன எனலாம்.‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது வல்லிக்கண்ணன் எழுதியது. புதுக்கவிதை போக்கும் நோக்கும் என்னும் நூல் ந.சுப்புரெட்டியாரால் எழுதப்பட்டது. புதுக்கவிதை - ஒரு புதுப்பார்வை என்பது கவிஞர் பாலாவின் படைப்பு. புதுக்கவிதை வளர்ச்சிக்கு இத்தகு நூல்களும் பெரும்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.1.6 இன்றைய நிலை
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் மொழியமைப்பிலும், வெளியிடும் பாங்கிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. அவற்றை விரிவாகக் காணலாம்.
• மரபுக்கவிதை
நற்றமிழ், தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ் போன்ற இலக்கிய இதழ்களில் வல்லமை படைத்த மரபுக் கவிஞர்களின் படைப்புகளும், போட்டிக் கவிதைகள் பலவும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கவியரங்குகளில் மரபுக் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.
பாரதியார் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், சிவாஜிகணேசன் பிள்ளைத் தமிழ் என்பன போன்ற மரபுவழி இலக்கியங்கள் இன்றும் படைக்கப் பெற்று வருகின்றன.
மருதூர் அரங்கராசனின் யாப்பறிந்து பாப்புனைய என்னும் நூல் இன்றைய நிலையில் மரபுக்கவிதை படைப்பவர்க்கு ஏற்ற வகையில் இயற்றப் பெற்றுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் மொழியமைப்பிலும், வெளியிடும் பாங்கிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. அவற்றை விரிவாகக் காணலாம்.
• மரபுக்கவிதை
நற்றமிழ், தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ் போன்ற இலக்கிய இதழ்களில் வல்லமை படைத்த மரபுக் கவிஞர்களின் படைப்புகளும், போட்டிக் கவிதைகள் பலவும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கவியரங்குகளில் மரபுக் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.
பாரதியார் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், சிவாஜிகணேசன் பிள்ளைத் தமிழ் என்பன போன்ற மரபுவழி இலக்கியங்கள் இன்றும் படைக்கப் பெற்று வருகின்றன.
மருதூர் அரங்கராசனின் யாப்பறிந்து பாப்புனைய என்னும் நூல் இன்றைய நிலையில் மரபுக்கவிதை படைப்பவர்க்கு ஏற்ற வகையில் இயற்றப் பெற்றுள்ளது.
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உட்படப் பலரும் எளிதில் எழுதுவதாகப் புதுக்கவிதை விளங்குகின்றது. பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற கொள்கைவாதிகளும், கவியரங்கம் நிகழ்த்துவோரும், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் புதுக்கவிதை நூல்களை வெளியீடு செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்து காணமுடிகின்றது.
நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், தை, நறுமுகை போன்ற காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும் புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.
ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா) என்னும் வகைகளும் புதுக்கவிதையின் சாராம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன.
உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உட்படப் பலரும் எளிதில் எழுதுவதாகப் புதுக்கவிதை விளங்குகின்றது. பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற கொள்கைவாதிகளும், கவியரங்கம் நிகழ்த்துவோரும், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் புதுக்கவிதை நூல்களை வெளியீடு செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்து காணமுடிகின்றது.
நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், தை, நறுமுகை போன்ற காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும் புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.
ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா) என்னும் வகைகளும் புதுக்கவிதையின் சாராம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.2 கவிதை வடிவம்
ஒரு கவிதையைப் பார்த்த அளவில் மரபுக்கவிதையா, புதுக்கவிதையா எனக் கண்டுணரும் அளவிற்கு வடிவப் பாகுபாடுகள் இவற்றிற்கிடையே உள்ளன. படிக்கும் வகையிலும் இவற்றை வேறுபடுத்தி உணரலாம். வரிவடிவம், ஒலிவடிவம் என்னும் இருவகைகளிலும் இவ்வாறு இவை வேறுபடுவதனை அடி, அடி எண்ணிக்கை, யாப்பு, தொடைநயம், சொற்கள், தனித்தன்மை, நெடுங்கதை என்னும் உள்தலைப்புகள் கொண்டு இங்குக் காண்போம்.
5.2.1 அடி
கவிதைக்கு வடிவம் தர யாப்புப் பயன்படுகிறது. யாப்பு அடிகளைக் கொண்டு அமைகிறது. அடிகள் அமைந்துள்ள நிலையைக் காண்போம்.
• மரபுக்கவிதை
குறில், நெடில், ஒற்று என்பவற்றின் அடிப்படையில் நேரசை, நிரையசைகளும், அவ்வசைகளின் அடிப்படையில் ஓரசைச் சீர், ஈரசைச் சீர், மூவசைச் சீர், நாலசைச் சீர் என்பனவும் இவற்றின் அடிப்படையில் அடிகளும் அமைகின்றன.
இரண்டு சீர்களையுடையது குறளடி; 3 சீர்கள் கொண்டது சிந்தடி; 4 சீர்கள் உடையது நேரடி அல்லது அளவடி; 5 சீர்கள் அமைந்தது நெடிலடி; 6 சீர் முதலானவற்றை உடையது கழிநெடிலடி எனப்படுகின்றது. 6 முதல் 8 சீர் உடையன சிறப்புடையன; 9 மற்றும் 10 சீர் உடையன நடுத்தரச் சிறப்புடையன; 10க்கு மேற்பட்ட சீர் உடையன அவ்வளவாகச் சிறப்பற்றன.
ஓர் அசையோ, ஒரு சீரோ ஓரடியில் தனித்து இடம் பெறுவதில்லை. கூன் என்னும் தனிச்சொல் கலிப்பா, வஞ்சிப்பாக்களில் உறுப்பாக இடம்பெறுவதாகும். இது சிறுபான்மையினது.
(1) குறளடி - ‘அறம்செய விரும்பு’
(2) சிந்தடி - ‘நிற்க அதற்குத் தக’
(3) அளவடி - ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
(4) நெடிலடி - ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை’
5) கழிநெடிலடி - ‘நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ
இதற்கு நாயகமே!’
விருத்தம் போன்றவற்றில் ஒரு பாடலில் இடம்பெறும் அடிகள், எதுகையைக் கொண்டு அடையாளம் காணப்படுவது வழக்கம். இவ்வெதுகை அடியெதுகையாகும்.
• புதுக்கவிதை
அடி என்பது புதுக்கவிதையில் வரி எனப்படும். சீர்கள், சொற்கள்என்றே குறிக்கப்பெறும். ஒரு வரியில் பெரும்பாலும் நான்குக்கு மேற்பட்ட சொற்கள் இடம்பெறுவதில்லை. மற்றபடி, எதுகை, அசை, சீர், தளை ஆகியன தொடர்பான வரையறைகள் ஏதுமில்லை.
உன்
விழிகளின் வாசிப்பில்
என்
பேனா எழுத
அவதிப்படுகின்றது (ஈரநிழல்)
என்னும் கவிதையில் பல்வேறு நிலைகளையும் காண்கிறோம்.
புதுக்கவிதையைப் பொறுத்தவரை, வரிகளில் அமையும் சொல்லமைப்பைப் பொருள்தான் தீர்மானிக்கின்றது.
அவள்
மாமியார் வீட்டுக்குப்
போனாள்
அவள் மாமியார்
வீட்டுக்குப் போனாள்
இவை இரண்டிலும் ஒரே விதமான சொற்கள் இடம் பெற்றிருப்பினும், அவை அடுத்தடுத்த வரிகளில் அமையும் நிலை கொண்டு வெவ்வேறு பொருள் தரக் காணலாம்.
ஒரு கவிதையைப் பார்த்த அளவில் மரபுக்கவிதையா, புதுக்கவிதையா எனக் கண்டுணரும் அளவிற்கு வடிவப் பாகுபாடுகள் இவற்றிற்கிடையே உள்ளன. படிக்கும் வகையிலும் இவற்றை வேறுபடுத்தி உணரலாம். வரிவடிவம், ஒலிவடிவம் என்னும் இருவகைகளிலும் இவ்வாறு இவை வேறுபடுவதனை அடி, அடி எண்ணிக்கை, யாப்பு, தொடைநயம், சொற்கள், தனித்தன்மை, நெடுங்கதை என்னும் உள்தலைப்புகள் கொண்டு இங்குக் காண்போம்.
5.2.1 அடி
கவிதைக்கு வடிவம் தர யாப்புப் பயன்படுகிறது. யாப்பு அடிகளைக் கொண்டு அமைகிறது. அடிகள் அமைந்துள்ள நிலையைக் காண்போம்.
• மரபுக்கவிதை
குறில், நெடில், ஒற்று என்பவற்றின் அடிப்படையில் நேரசை, நிரையசைகளும், அவ்வசைகளின் அடிப்படையில் ஓரசைச் சீர், ஈரசைச் சீர், மூவசைச் சீர், நாலசைச் சீர் என்பனவும் இவற்றின் அடிப்படையில் அடிகளும் அமைகின்றன.
இரண்டு சீர்களையுடையது குறளடி; 3 சீர்கள் கொண்டது சிந்தடி; 4 சீர்கள் உடையது நேரடி அல்லது அளவடி; 5 சீர்கள் அமைந்தது நெடிலடி; 6 சீர் முதலானவற்றை உடையது கழிநெடிலடி எனப்படுகின்றது. 6 முதல் 8 சீர் உடையன சிறப்புடையன; 9 மற்றும் 10 சீர் உடையன நடுத்தரச் சிறப்புடையன; 10க்கு மேற்பட்ட சீர் உடையன அவ்வளவாகச் சிறப்பற்றன.
ஓர் அசையோ, ஒரு சீரோ ஓரடியில் தனித்து இடம் பெறுவதில்லை. கூன் என்னும் தனிச்சொல் கலிப்பா, வஞ்சிப்பாக்களில் உறுப்பாக இடம்பெறுவதாகும். இது சிறுபான்மையினது.
(1) குறளடி - ‘அறம்செய விரும்பு’
(2) சிந்தடி - ‘நிற்க அதற்குத் தக’
(3) அளவடி - ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
(4) நெடிலடி - ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை’
5) கழிநெடிலடி - ‘நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ
இதற்கு நாயகமே!’
விருத்தம் போன்றவற்றில் ஒரு பாடலில் இடம்பெறும் அடிகள், எதுகையைக் கொண்டு அடையாளம் காணப்படுவது வழக்கம். இவ்வெதுகை அடியெதுகையாகும்.
• புதுக்கவிதை
அடி என்பது புதுக்கவிதையில் வரி எனப்படும். சீர்கள், சொற்கள்என்றே குறிக்கப்பெறும். ஒரு வரியில் பெரும்பாலும் நான்குக்கு மேற்பட்ட சொற்கள் இடம்பெறுவதில்லை. மற்றபடி, எதுகை, அசை, சீர், தளை ஆகியன தொடர்பான வரையறைகள் ஏதுமில்லை.
உன்
விழிகளின் வாசிப்பில்
என்
பேனா எழுத
அவதிப்படுகின்றது (ஈரநிழல்)
என்னும் கவிதையில் பல்வேறு நிலைகளையும் காண்கிறோம்.
புதுக்கவிதையைப் பொறுத்தவரை, வரிகளில் அமையும் சொல்லமைப்பைப் பொருள்தான் தீர்மானிக்கின்றது.
அவள்
மாமியார் வீட்டுக்குப்
போனாள்
அவள் மாமியார்
வீட்டுக்குப் போனாள்
இவை இரண்டிலும் ஒரே விதமான சொற்கள் இடம் பெற்றிருப்பினும், அவை அடுத்தடுத்த வரிகளில் அமையும் நிலை கொண்டு வெவ்வேறு பொருள் தரக் காணலாம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.2.2 அடி எண்ணிக்கை
அடி இரண்டு முதல் பல சீர்களைக் கொண்டது. அடிகளின் எண்ணிக்கைக்கு அளவு உண்டா? பார்க்கலாம்.
• மரபுக் கவிதை
இரண்டடிகளையுடைய திருக்குறள் முதலாக, 782 அடிகளையுடையமதுரைக்காஞ்சி வரையிலுமாக மரபுக்கவிதை பல்வேறு அடிவரையறைகளைப் பெற்றுவரக் காண்கிறோம்.
வெண்பா ஈரடிச் சிறுமையும், ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் மூவடிச் சிறுமையும், கலிப்பா நாலடிச் சிறுமையும் கொண்டு அமையும் எனயாப்பருங்கலக் காரிகை கூறுகின்றது. பொதுவாக இப்பாக்களுக்கான அடிகளின் உச்சவரம்பு உரைப்போர் உள்ளக்கருத்தின் அளவினதாக அமைகின்றது.
விருத்தம், தாழிசை, துறை போன்ற பாவினங்கள் பொதுவாக ஓரெதுகையுடைய நான்கடிகளைப் பெற்று வருதல் இயல்பு.
அவிநயம் என்னும் நூல், ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை ஒன்று என்று கூறுகின்றது. இலக்கணங்களில் காணும் நூற்பா யாப்பை அதற்குச் சான்றாகக் காட்டுகின்றது.
• புதுக்கவிதை
புதுக்கவிதையானது குறைந்தது இரண்டு வரிகளையாவது கொண்டிருக்கின்றது. உச்சவரம்புக்கு வரி எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை.
தொடக்க காலத்தில் பத்து வரிகளுக்கு மேற்பட்ட அளவில் கவிதைகள் இருந்தன. இக்காலத்தில் பெரும்பாலும் பத்துவரிகளுக்குள்ளாகவே புதுக்கவிதை அமைவதைக் காண்கிறோம்.
அடி இரண்டு முதல் பல சீர்களைக் கொண்டது. அடிகளின் எண்ணிக்கைக்கு அளவு உண்டா? பார்க்கலாம்.
• மரபுக் கவிதை
இரண்டடிகளையுடைய திருக்குறள் முதலாக, 782 அடிகளையுடையமதுரைக்காஞ்சி வரையிலுமாக மரபுக்கவிதை பல்வேறு அடிவரையறைகளைப் பெற்றுவரக் காண்கிறோம்.
வெண்பா ஈரடிச் சிறுமையும், ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் மூவடிச் சிறுமையும், கலிப்பா நாலடிச் சிறுமையும் கொண்டு அமையும் எனயாப்பருங்கலக் காரிகை கூறுகின்றது. பொதுவாக இப்பாக்களுக்கான அடிகளின் உச்சவரம்பு உரைப்போர் உள்ளக்கருத்தின் அளவினதாக அமைகின்றது.
விருத்தம், தாழிசை, துறை போன்ற பாவினங்கள் பொதுவாக ஓரெதுகையுடைய நான்கடிகளைப் பெற்று வருதல் இயல்பு.
அவிநயம் என்னும் நூல், ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை ஒன்று என்று கூறுகின்றது. இலக்கணங்களில் காணும் நூற்பா யாப்பை அதற்குச் சான்றாகக் காட்டுகின்றது.
• புதுக்கவிதை
புதுக்கவிதையானது குறைந்தது இரண்டு வரிகளையாவது கொண்டிருக்கின்றது. உச்சவரம்புக்கு வரி எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை.
தொடக்க காலத்தில் பத்து வரிகளுக்கு மேற்பட்ட அளவில் கவிதைகள் இருந்தன. இக்காலத்தில் பெரும்பாலும் பத்துவரிகளுக்குள்ளாகவே புதுக்கவிதை அமைவதைக் காண்கிறோம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.2.3 ஒலிநயம்
யாப்பு அமைப்பு ஒழுங்காக அமைவதிலேயே ஒரு வகையான ஓசை அமைப்பு உருவாகிச் செவிக்கு இன்பமூட்டுவதை உணரலாம். அது எவ்வாறு அமைகிறது என்பதைக் காண்போம்.
• மரபுக் கவிதை
மரபுக்கவிதை இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டது. சொற்களை ஓசை ஒழுங்கில் வைத்துக் கட்டுவதையே யாப்பு என்கிறோம். எனவே யாப்பில் தாளம், ஒலி நயம், ஓசை நயம் என்று குறிப்பிடப்படும் இசைத் தன்மை மிக எளிதில் கிட்டி விடுகின்றது. சொற்களின் வல்லோசை, மெல்லோசைகளைக் கவிஞன் அடுக்குவதன் மூலம் சந்தமும் ஒலிநயமும் கைவருகின்றன.
‘இலக்கணக் கட்டுக்கோப்பு சொற்களின் அர்த்தத்தை ஆழப்படுத்துகிறது; சொற்களின் ஒலிநயத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது’ என்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். அதே வேளையில் ‘ஒலிநயத்துக்கு மிகையான அழுத்தம் கொடுத்துத் தம் படைப்பின் தரத்தைக் குறைத்துக் கொள்ளவும் கூடாது’ என்கிறார் கைலாசபதி.
ஒவ்வொரு பாவகைக்கும் குறிப்பிட்ட ஓசை நயம் இருக்கிறது.
(1) வெண்பா - செப்பலோசை
(2) ஆசிரியப்பா - அகவலோசை
(3) கலிப்பா - துள்ளலோசை
(4) வஞ்சிப்பா - தூங்கலோசை
இவ்வொவ்வொன்றும் ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என மும்மூன்று வகைகள் உடையன. தளைகளைக் கொண்டு நால்வகை ஓசைகளும், தளைகளின் வருகைமுறை கொண்டு ஏந்திசை முதலிய உட்பிரிவுகளும் உணர்த்தப்படுகின்றன.
தாழிசை, துறை, விருத்தம் என்னும் பா வகைகளில் சீர்களின் வருகை முறையால் வாய்பாடுகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பல்வேறு வகைப்பாடுகளால் பற்பல ஒலிநயங்களில் பாடல்கள் அமைகின்றன.
கவிஞன் தன் பொருளுக்கு ஒத்திசைகின்ற பா மற்றும் பா வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விரும்புகின்ற ஒலிநயத்தைப் பெறமுடியும். பயிற்சியின் மூலம் ஓரளவு எளிதிலேயே இது கைவந்து விடுகின்றது.
ஆசில்பர தாரமவை அஞ்சிறைய டைப்பேம்
மாசில்புகழ்க் காதலுறு வேம்வளமை கூறப்
பேசுவது மானமிடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம் (கம்ப ராமாயணம்)
என்பதில் கும்பகருணன், இராவணனிடம் அறவுரை கூறுமுகமாக அமையும் கருத்துகளை, ஒலிநயம் மெருகூட்டக் காணலாம்.
ஒலிநயமே, பாடலுள் இடம்பெறும் நகை முதலான எண்வகை மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவதில் பேரிடம் பெறுகின்றது.
யாப்பு அமைப்பு ஒழுங்காக அமைவதிலேயே ஒரு வகையான ஓசை அமைப்பு உருவாகிச் செவிக்கு இன்பமூட்டுவதை உணரலாம். அது எவ்வாறு அமைகிறது என்பதைக் காண்போம்.
• மரபுக் கவிதை
மரபுக்கவிதை இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டது. சொற்களை ஓசை ஒழுங்கில் வைத்துக் கட்டுவதையே யாப்பு என்கிறோம். எனவே யாப்பில் தாளம், ஒலி நயம், ஓசை நயம் என்று குறிப்பிடப்படும் இசைத் தன்மை மிக எளிதில் கிட்டி விடுகின்றது. சொற்களின் வல்லோசை, மெல்லோசைகளைக் கவிஞன் அடுக்குவதன் மூலம் சந்தமும் ஒலிநயமும் கைவருகின்றன.
‘இலக்கணக் கட்டுக்கோப்பு சொற்களின் அர்த்தத்தை ஆழப்படுத்துகிறது; சொற்களின் ஒலிநயத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது’ என்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். அதே வேளையில் ‘ஒலிநயத்துக்கு மிகையான அழுத்தம் கொடுத்துத் தம் படைப்பின் தரத்தைக் குறைத்துக் கொள்ளவும் கூடாது’ என்கிறார் கைலாசபதி.
ஒவ்வொரு பாவகைக்கும் குறிப்பிட்ட ஓசை நயம் இருக்கிறது.
(1) வெண்பா - செப்பலோசை
(2) ஆசிரியப்பா - அகவலோசை
(3) கலிப்பா - துள்ளலோசை
(4) வஞ்சிப்பா - தூங்கலோசை
இவ்வொவ்வொன்றும் ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என மும்மூன்று வகைகள் உடையன. தளைகளைக் கொண்டு நால்வகை ஓசைகளும், தளைகளின் வருகைமுறை கொண்டு ஏந்திசை முதலிய உட்பிரிவுகளும் உணர்த்தப்படுகின்றன.
தாழிசை, துறை, விருத்தம் என்னும் பா வகைகளில் சீர்களின் வருகை முறையால் வாய்பாடுகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பல்வேறு வகைப்பாடுகளால் பற்பல ஒலிநயங்களில் பாடல்கள் அமைகின்றன.
கவிஞன் தன் பொருளுக்கு ஒத்திசைகின்ற பா மற்றும் பா வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விரும்புகின்ற ஒலிநயத்தைப் பெறமுடியும். பயிற்சியின் மூலம் ஓரளவு எளிதிலேயே இது கைவந்து விடுகின்றது.
ஆசில்பர தாரமவை அஞ்சிறைய டைப்பேம்
மாசில்புகழ்க் காதலுறு வேம்வளமை கூறப்
பேசுவது மானமிடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம் (கம்ப ராமாயணம்)
என்பதில் கும்பகருணன், இராவணனிடம் அறவுரை கூறுமுகமாக அமையும் கருத்துகளை, ஒலிநயம் மெருகூட்டக் காணலாம்.
ஒலிநயமே, பாடலுள் இடம்பெறும் நகை முதலான எண்வகை மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவதில் பேரிடம் பெறுகின்றது.
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
‘மென்மையான ஒலிநயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது புதுக்கவிதை முயற்சி’ என்கிறார் சி.சு.செல்லப்பா. இந்த மென்மையைச் ‘சவுக்கைத் தோப்பின்வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயும்ஒலி’ என்கிறார் ந.பிச்சமூர்த்தி. ‘கடல் அலையிலும் கால்நடையிலும் ஒருவகை ஒலிநயம் உள்ளதே, அதேபோல் புதுக்கவிதையிலும் ஒருவகை ஒலிநயம் இசைந்து வரும்’ என்பார் மீரா.
செய்யுளில் கிடைப்பதுபோல் எதிர்பார்க்கும் நிறுத்தங்களில் தோன்றாமல், இயல்பாகவே தோன்றி நிறுத்தங்களை நிர்ணயிக்கும் உள்ளடங்கிய ஒலிநயம், புதுக்கவிதையில் இடம்பெறுகின்றது.
எந்தெந்த இடங்களில் தாளலயம் வருகிறது என்பது வாசகனுக்கு முன்கூட்டியே மரபுக்கவிதையில் தெரிந்து விடுகின்றது. அதனால் செய்யுளின் ஓசை எந்திர கதி போன்ற செயற்கைத் தன்மையை அடைந்து விடுகிறது. இது கடிகார ஓசை போன்றது. புதுக்கவிதையில், காற்றைப் போல், தென்றலைப்போல் இயல்பானதாக இருக்க வேண்டும். கவிதையின் அர்த்தத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டும் எனப் புதுக்கவிதைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
அணில் கடித்த பழமா?
ஆங், எனக்கும்
கொஞ்சம்
தாலியறுத்த விதவையா?
அய்யோ. . .
எச்சில் !
என்னும் கவிதையில் அமையும் ஒலிநயம், பாடுபொருளுக்கு மேலும் வலுச்சேர்க்கக் காண்கிறோம்.
‘மென்மையான ஒலிநயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது புதுக்கவிதை முயற்சி’ என்கிறார் சி.சு.செல்லப்பா. இந்த மென்மையைச் ‘சவுக்கைத் தோப்பின்வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயும்ஒலி’ என்கிறார் ந.பிச்சமூர்த்தி. ‘கடல் அலையிலும் கால்நடையிலும் ஒருவகை ஒலிநயம் உள்ளதே, அதேபோல் புதுக்கவிதையிலும் ஒருவகை ஒலிநயம் இசைந்து வரும்’ என்பார் மீரா.
செய்யுளில் கிடைப்பதுபோல் எதிர்பார்க்கும் நிறுத்தங்களில் தோன்றாமல், இயல்பாகவே தோன்றி நிறுத்தங்களை நிர்ணயிக்கும் உள்ளடங்கிய ஒலிநயம், புதுக்கவிதையில் இடம்பெறுகின்றது.
எந்தெந்த இடங்களில் தாளலயம் வருகிறது என்பது வாசகனுக்கு முன்கூட்டியே மரபுக்கவிதையில் தெரிந்து விடுகின்றது. அதனால் செய்யுளின் ஓசை எந்திர கதி போன்ற செயற்கைத் தன்மையை அடைந்து விடுகிறது. இது கடிகார ஓசை போன்றது. புதுக்கவிதையில், காற்றைப் போல், தென்றலைப்போல் இயல்பானதாக இருக்க வேண்டும். கவிதையின் அர்த்தத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டும் எனப் புதுக்கவிதைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
அணில் கடித்த பழமா?
ஆங், எனக்கும்
கொஞ்சம்
தாலியறுத்த விதவையா?
அய்யோ. . .
எச்சில் !
என்னும் கவிதையில் அமையும் ஒலிநயம், பாடுபொருளுக்கு மேலும் வலுச்சேர்க்கக் காண்கிறோம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.2.4 தொடைநயம்
அடிகளை எவ்வாறு இணைப்பது (தொடுப்பது) என்பதையே தொடை என்கிறோம். அத்தொடை காலத்துக்கேற்றவாறு மாறி வருகிறது.
• மரபுக்கவிதை
தொடுக்கப்படுவது தொடை, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவும், அந்தாதி, இரட்டை, செந்தொடை என்பனவும் மரபுக்கவிதையில் தொடைநயங்களாகச் சிறப்பிடம் பெறுகின்றன.
அடுத்தடுத்த அடிகளில் எதுகையும், ஓரடியின் முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனையும், சொல் அல்லது பொருளில் முரணும், அடிகளின் இறுதிச் சீர்களில் இயைபும் தேவைப்படுமிடத்து அளபெடையும் மரபுக்கவிதைகளில் இடம்பெறக் காண்கிறோம். மனனத்திற்கேற்றவாறு முதல் பாடலின் இறுதி அடுத்த பாடலின் தொடக்கமாக அமைவது அந்தாதியாகும் (மனனம் = மனப்பாடம் செய்தல்). செந்தொடை என்பது, எதுகை போன்ற எத்தொடைகளும் அமையாமல், பொருளால் கவிதை சிறந்து நிற்பதென்பர்.
கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் ; அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் ; நல்ல
புதல்வர்கள் விளைத லில்லை ;
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி ; அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்? (பாரதிதாசன்)
என வரும் பாடலில் எதுகை, மோனை, முரண் என்னும் தொடைநயங்கள் சிறக்கக் காண்கிறோம்.
அடிகளை எவ்வாறு இணைப்பது (தொடுப்பது) என்பதையே தொடை என்கிறோம். அத்தொடை காலத்துக்கேற்றவாறு மாறி வருகிறது.
• மரபுக்கவிதை
தொடுக்கப்படுவது தொடை, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவும், அந்தாதி, இரட்டை, செந்தொடை என்பனவும் மரபுக்கவிதையில் தொடைநயங்களாகச் சிறப்பிடம் பெறுகின்றன.
அடுத்தடுத்த அடிகளில் எதுகையும், ஓரடியின் முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனையும், சொல் அல்லது பொருளில் முரணும், அடிகளின் இறுதிச் சீர்களில் இயைபும் தேவைப்படுமிடத்து அளபெடையும் மரபுக்கவிதைகளில் இடம்பெறக் காண்கிறோம். மனனத்திற்கேற்றவாறு முதல் பாடலின் இறுதி அடுத்த பாடலின் தொடக்கமாக அமைவது அந்தாதியாகும் (மனனம் = மனப்பாடம் செய்தல்). செந்தொடை என்பது, எதுகை போன்ற எத்தொடைகளும் அமையாமல், பொருளால் கவிதை சிறந்து நிற்பதென்பர்.
கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் ; அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் ; நல்ல
புதல்வர்கள் விளைத லில்லை ;
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி ; அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்? (பாரதிதாசன்)
என வரும் பாடலில் எதுகை, மோனை, முரண் என்னும் தொடைநயங்கள் சிறக்கக் காண்கிறோம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
எதுகையும் மோனையும் அமைந்தேயாக வேண்டும் என்னும் அவசியம் புதுக்கவிதையில் இல்லை. பொருளுக்கு இசைந்த ஒலிநயத்தையும் சொற்களையும் கவிஞர்கள், தாம் விரும்பிய வண்ணம் அமைக்கும் சுதந்திரம் வசனத்தில் அமைந்து கிடக்கிறது. கட்டுப்பாடு இல்லாமல் கட்டுக்கோப்பை உருவாக்கும் வாய்ப்பு வசனத்தில் எழுதும்போது கிடைக்கிறது. எனவே பொருளம்சத்தை ஓசைக்காகத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, சொற்களின் கட்டமைப்பைப் புதுக்கவிதையில் எழுதும்போது கவிஞன் விரும்பிய வகையில் அமைத்துக்கொள்ள முடிகின்றது.
எதுகை, மோனைகளெல்லாம் புதுக்கவிதையில் வரவே கூடாது என்றெல்லாம் விதி ஏதும் இல்லை. அவை வற்புறுத்தித் திணிக்கப்பட்டனவாக இல்லாமல், இயல்பாக இருத்தல் வேண்டும்.
புலமையற்ற தருமிக்குப்
பொற்கிழி
தலைநிமிர்ந்த நக்கீரருக்குத்
தண்டனை
கடவுள்கள் கூட
நியாயத்திற்குப்
புறம்பாகவே
என்னும் கவிதையில் எதுகை, மோனை, முரண் தொடைகள் அமைந்திருக்கக் காண்கிறோம்.
எனக்கு
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில் (அ.சங்கர்)
என்னும் கவிதையில் இயைபுத் தொடை அமையக் காணலாம்.
எதுகையும் மோனையும் அமைந்தேயாக வேண்டும் என்னும் அவசியம் புதுக்கவிதையில் இல்லை. பொருளுக்கு இசைந்த ஒலிநயத்தையும் சொற்களையும் கவிஞர்கள், தாம் விரும்பிய வண்ணம் அமைக்கும் சுதந்திரம் வசனத்தில் அமைந்து கிடக்கிறது. கட்டுப்பாடு இல்லாமல் கட்டுக்கோப்பை உருவாக்கும் வாய்ப்பு வசனத்தில் எழுதும்போது கிடைக்கிறது. எனவே பொருளம்சத்தை ஓசைக்காகத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, சொற்களின் கட்டமைப்பைப் புதுக்கவிதையில் எழுதும்போது கவிஞன் விரும்பிய வகையில் அமைத்துக்கொள்ள முடிகின்றது.
எதுகை, மோனைகளெல்லாம் புதுக்கவிதையில் வரவே கூடாது என்றெல்லாம் விதி ஏதும் இல்லை. அவை வற்புறுத்தித் திணிக்கப்பட்டனவாக இல்லாமல், இயல்பாக இருத்தல் வேண்டும்.
புலமையற்ற தருமிக்குப்
பொற்கிழி
தலைநிமிர்ந்த நக்கீரருக்குத்
தண்டனை
கடவுள்கள் கூட
நியாயத்திற்குப்
புறம்பாகவே
என்னும் கவிதையில் எதுகை, மோனை, முரண் தொடைகள் அமைந்திருக்கக் காண்கிறோம்.
எனக்கு
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில் (அ.சங்கர்)
என்னும் கவிதையில் இயைபுத் தொடை அமையக் காணலாம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.2.5 சொற்கள்
கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார். இன்றுவரை அந்த வகையிலேயே சொற்கள் கவிதையில் அமைகின்றன.
• மரபுக்கவிதை
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் என்கிறது தொல்காப்பியம். இவை செய்யுள் ஈட்டச் சொற்கள் என்று குறிக்கப்பெறுகின்றன.
(1) இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது
(2) திரிசொல் - படித்தவர்க்கே புரிவது
(3) திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்
(4) வடசொல் - சமஸ்கிருதச் சொற்கள்
இவற்றின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள் ளேசில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார். (பாரதியார்)
என்பதில் பல வகைச் சொற்களும் இடம்பெறக் காணலாம். (பெண்ணுக்கு - இயற்சொல், பேணி - திரிசொல், ஞானம் - வடசொல்)
கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார். இன்றுவரை அந்த வகையிலேயே சொற்கள் கவிதையில் அமைகின்றன.
• மரபுக்கவிதை
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் என்கிறது தொல்காப்பியம். இவை செய்யுள் ஈட்டச் சொற்கள் என்று குறிக்கப்பெறுகின்றன.
(1) இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது
(2) திரிசொல் - படித்தவர்க்கே புரிவது
(3) திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்
(4) வடசொல் - சமஸ்கிருதச் சொற்கள்
இவற்றின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள் ளேசில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார். (பாரதியார்)
என்பதில் பல வகைச் சொற்களும் இடம்பெறக் காணலாம். (பெண்ணுக்கு - இயற்சொல், பேணி - திரிசொல், ஞானம் - வடசொல்)
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள் கொச்சைச் சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.
விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடு தான்
என்பதில் திசைச்சொல்லும் (ஜன்னல்)
எம்ப்ளாய்மெண்ட்
எக்சேஞ்சுக்குப்
புறப்பட்டுப் போன
மகனிடம் கேட்டுக் கொண்டார்
தந்தை
என்னுடையதையும்
ரெனிவல் செய்துகொண்டு
வந்துவிடப்பா (அறிவுமதி)
என்பதில் ஆங்கிலச் சொற்களும்,
அழுவதும்கூட
ஆரோக்கியமான
விஷயம்தான்...
சில நேரங்களில் (அறிவுமதி)
என்பதில் வடசொல்லும்,
வில்லை ஒடித்து மணக்க
இராமன் வராவிட்டாலும்
பரவாயில்லை
தூக்கிச் செல்ல
இராவணனாவது வரமாட்டானா (பி.எல்.ராஜேந்திரன்)
என்னும் கவிதையில் வழக்குச் சொற்களும் இடம்பெறக் காண்கிறோம்.
புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள் கொச்சைச் சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.
விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடு தான்
என்பதில் திசைச்சொல்லும் (ஜன்னல்)
எம்ப்ளாய்மெண்ட்
எக்சேஞ்சுக்குப்
புறப்பட்டுப் போன
மகனிடம் கேட்டுக் கொண்டார்
தந்தை
என்னுடையதையும்
ரெனிவல் செய்துகொண்டு
வந்துவிடப்பா (அறிவுமதி)
என்பதில் ஆங்கிலச் சொற்களும்,
அழுவதும்கூட
ஆரோக்கியமான
விஷயம்தான்...
சில நேரங்களில் (அறிவுமதி)
என்பதில் வடசொல்லும்,
வில்லை ஒடித்து மணக்க
இராமன் வராவிட்டாலும்
பரவாயில்லை
தூக்கிச் செல்ல
இராவணனாவது வரமாட்டானா (பி.எல்.ராஜேந்திரன்)
என்னும் கவிதையில் வழக்குச் சொற்களும் இடம்பெறக் காண்கிறோம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார். இன்றுவரை அந்த வகையிலேயே சொற்கள் கவிதையில் அமைகின்றன.
• மரபுக்கவிதை
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் என்கிறது தொல்காப்பியம். இவை செய்யுள் ஈட்டச் சொற்கள் என்று குறிக்கப்பெறுகின்றன.
(1) இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது
(2) திரிசொல் - படித்தவர்க்கே புரிவது
(3) திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்
(4) வடசொல் - சமஸ்கிருதச் சொற்கள்
இவற்றின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள் ளேசில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார். (பாரதியார்)
என்பதில் பல வகைச் சொற்களும் இடம்பெறக் காணலாம். (பெண்ணுக்கு - இயற்சொல், பேணி - திரிசொல், ஞானம் - வடசொல்)
• மரபுக்கவிதை
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் என்கிறது தொல்காப்பியம். இவை செய்யுள் ஈட்டச் சொற்கள் என்று குறிக்கப்பெறுகின்றன.
(1) இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது
(2) திரிசொல் - படித்தவர்க்கே புரிவது
(3) திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்
(4) வடசொல் - சமஸ்கிருதச் சொற்கள்
இவற்றின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள் ளேசில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார். (பாரதியார்)
என்பதில் பல வகைச் சொற்களும் இடம்பெறக் காணலாம். (பெண்ணுக்கு - இயற்சொல், பேணி - திரிசொல், ஞானம் - வடசொல்)
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள் கொச்சைச் சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.
விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடு தான்
என்பதில் திசைச்சொல்லும் (ஜன்னல்)
எம்ப்ளாய்மெண்ட்
எக்சேஞ்சுக்குப்
புறப்பட்டுப் போன
மகனிடம் கேட்டுக் கொண்டார்
தந்தை
என்னுடையதையும்
ரெனிவல் செய்துகொண்டு
வந்துவிடப்பா (அறிவுமதி)
என்பதில் ஆங்கிலச் சொற்களும்,
அழுவதும்கூட
ஆரோக்கியமான
விஷயம்தான்...
சில நேரங்களில் (அறிவுமதி)
என்பதில் வடசொல்லும்,
வில்லை ஒடித்து மணக்க
இராமன் வராவிட்டாலும்
பரவாயில்லை
தூக்கிச் செல்ல
இராவணனாவது வரமாட்டானா (பி.எல்.ராஜேந்திரன்)
என்னும் கவிதையில் வழக்குச் சொற்களும் இடம்பெறக் காண்கிறோம்.
புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள் கொச்சைச் சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.
விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடு தான்
என்பதில் திசைச்சொல்லும் (ஜன்னல்)
எம்ப்ளாய்மெண்ட்
எக்சேஞ்சுக்குப்
புறப்பட்டுப் போன
மகனிடம் கேட்டுக் கொண்டார்
தந்தை
என்னுடையதையும்
ரெனிவல் செய்துகொண்டு
வந்துவிடப்பா (அறிவுமதி)
என்பதில் ஆங்கிலச் சொற்களும்,
அழுவதும்கூட
ஆரோக்கியமான
விஷயம்தான்...
சில நேரங்களில் (அறிவுமதி)
என்பதில் வடசொல்லும்,
வில்லை ஒடித்து மணக்க
இராமன் வராவிட்டாலும்
பரவாயில்லை
தூக்கிச் செல்ல
இராவணனாவது வரமாட்டானா (பி.எல்.ராஜேந்திரன்)
என்னும் கவிதையில் வழக்குச் சொற்களும் இடம்பெறக் காண்கிறோம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.2.6 நாட்டுப்புறப் பாங்கு
கவிஞனின் கருத்தும் அதனை வெளிப்படுத்தும் அழகும் இணைந்து கவிதையாகின்றன. எளிய மக்களும் இயல்பான போக்கிலேயே கருத்தையும் கற்பனையையும் அழகாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த மொழியையும் ஒலியையும் கவிஞர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே கவிதையின்
அடிநாதமாக அமைகிறது.
• மரபுக்கவிதை
மரபுக்கவிதையின் தொடக்கமே, நாட்டுப்புறப் பாடல்கள்தாம் என்றும் கூறலாம். ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் முதலான தாழிசைக் கூறுகள். நாட்டுப்புறச் சாயலுடையனவேயாகும். சிலப்பதிகாரம், திருவாசகம், குறவஞ்சி, பள்ளு போன்றவை நாட்டுப்புறத் தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன.
தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ !
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ !
எனவரும் திருவாசகம் - (திருச்சாழல் பாடல்) நாட்டுப்புறப்பாங்கினது ஆகும்.
கவிஞனின் கருத்தும் அதனை வெளிப்படுத்தும் அழகும் இணைந்து கவிதையாகின்றன. எளிய மக்களும் இயல்பான போக்கிலேயே கருத்தையும் கற்பனையையும் அழகாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த மொழியையும் ஒலியையும் கவிஞர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே கவிதையின்
அடிநாதமாக அமைகிறது.
• மரபுக்கவிதை
மரபுக்கவிதையின் தொடக்கமே, நாட்டுப்புறப் பாடல்கள்தாம் என்றும் கூறலாம். ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் முதலான தாழிசைக் கூறுகள். நாட்டுப்புறச் சாயலுடையனவேயாகும். சிலப்பதிகாரம், திருவாசகம், குறவஞ்சி, பள்ளு போன்றவை நாட்டுப்புறத் தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன.
தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ !
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ !
எனவரும் திருவாசகம் - (திருச்சாழல் பாடல்) நாட்டுப்புறப்பாங்கினது ஆகும்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
• புதுக்கவிதை
நாட்டுப்புறப் பாடல்களே ஏட்டிலக்கியங்களின் தாய் ஆதலின், புதுக்கவிதையிலும் அவற்றின் போக்குச் சிறப்புற இடம்பெறக் காணலாம்.
காடெல்லாம் சுற்றிக்
காராம்பசு கொண்டுவந்தோம்
நாடெல்லாம் சுற்றி
நல்லபசு கொண்டு வந்தோம்
சீமைபல சுற்றிச்
சிவப்புப்பசு கொண்டு வந்தோம்
சிவப்புப்பசு உதைக்குமின்னு
சிலபேர்கள் சொன்னதனால்
பால்கறக்க எங்கவீட்டில்
பக்கத்தில் போகவில்லை
பக்கத்தில் போகாது
பாலெல்லாம் வீணாச்சு
என்னும் கவிதையில் பொதுவுடைமைத் தத்துவம் பயன்கொள்ளப் பெறாமை நாட்டுப்புறப் பாங்கில் சுட்டப் பெறுகின்றது.
ஆராரோ ஆராரோ
அப்பாநீ கண்ணுறங்கு
தார்ரோட்டில் காரோட்டும்
தமிழ்மணியே கண்ணுறங்கு !
நாடே பரிசளிப்பு - உனக்கு
நன்கொடையே மூலதனம்
பாடுபடத் தேவையில்லை - என்
பாண்டியனே கண்ணுறங்கு !
என்னும் பாடல் அரசியல்வாதிக்கான தாலாட்டாகப் பாடப்பட்டிருப்பதை அறிகிறோம்.
விடுகதை, பழமொழி போன்ற நாட்டுப்புறக் கூறுகள் அடிப்படையில் அமையும் கவிதைகளையும் காணமுடிகின்றது.
நாட்டுப்புறப் பாடல்களே ஏட்டிலக்கியங்களின் தாய் ஆதலின், புதுக்கவிதையிலும் அவற்றின் போக்குச் சிறப்புற இடம்பெறக் காணலாம்.
காடெல்லாம் சுற்றிக்
காராம்பசு கொண்டுவந்தோம்
நாடெல்லாம் சுற்றி
நல்லபசு கொண்டு வந்தோம்
சீமைபல சுற்றிச்
சிவப்புப்பசு கொண்டு வந்தோம்
சிவப்புப்பசு உதைக்குமின்னு
சிலபேர்கள் சொன்னதனால்
பால்கறக்க எங்கவீட்டில்
பக்கத்தில் போகவில்லை
பக்கத்தில் போகாது
பாலெல்லாம் வீணாச்சு
என்னும் கவிதையில் பொதுவுடைமைத் தத்துவம் பயன்கொள்ளப் பெறாமை நாட்டுப்புறப் பாங்கில் சுட்டப் பெறுகின்றது.
ஆராரோ ஆராரோ
அப்பாநீ கண்ணுறங்கு
தார்ரோட்டில் காரோட்டும்
தமிழ்மணியே கண்ணுறங்கு !
நாடே பரிசளிப்பு - உனக்கு
நன்கொடையே மூலதனம்
பாடுபடத் தேவையில்லை - என்
பாண்டியனே கண்ணுறங்கு !
என்னும் பாடல் அரசியல்வாதிக்கான தாலாட்டாகப் பாடப்பட்டிருப்பதை அறிகிறோம்.
விடுகதை, பழமொழி போன்ற நாட்டுப்புறக் கூறுகள் அடிப்படையில் அமையும் கவிதைகளையும் காணமுடிகின்றது.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.3 உள்ளடக்கம்
‘கலை கலைக்காகவே’ என இன்புறுத்தல் மட்டுமே அதன் பயன் என்பவர்களும் உண்டு. ஆனால், இன்பம் என்பது கவிதையின் ஒரு பயனாக இருக்கலாமேயன்றி அதுவே இலக்கியமாகாது; "கலை வாழ்க்கைக்காகவே" என்னும் கருத்தே பெரும்பாலோர் முடிவாகும்.
சமுதாய வாழ்வைச் சித்திரிப்பதும், சமுதாய மேன்மைக்கு வழிகோலுவதும், வழிகாட்டுவதும் இலக்கியத்தின் இயல்புகள் ஆகும்.
இருவகைக் கவிதைகளும் பல்வேறு பாடுபொருள்களை உடையனவாய் உள்ளன. அவற்றுள் மனிதநேயம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பெண்ணியம், பொதுவுடைமை, அரசியல், வறுமை, காதல், தன்னம்பிக்கை, இயற்கை ஆகிய பாடுபொருள்கள் குறித்து இங்குத் தனித்தனியே காண்போம்.
‘கலை கலைக்காகவே’ என இன்புறுத்தல் மட்டுமே அதன் பயன் என்பவர்களும் உண்டு. ஆனால், இன்பம் என்பது கவிதையின் ஒரு பயனாக இருக்கலாமேயன்றி அதுவே இலக்கியமாகாது; "கலை வாழ்க்கைக்காகவே" என்னும் கருத்தே பெரும்பாலோர் முடிவாகும்.
சமுதாய வாழ்வைச் சித்திரிப்பதும், சமுதாய மேன்மைக்கு வழிகோலுவதும், வழிகாட்டுவதும் இலக்கியத்தின் இயல்புகள் ஆகும்.
இருவகைக் கவிதைகளும் பல்வேறு பாடுபொருள்களை உடையனவாய் உள்ளன. அவற்றுள் மனிதநேயம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பெண்ணியம், பொதுவுடைமை, அரசியல், வறுமை, காதல், தன்னம்பிக்கை, இயற்கை ஆகிய பாடுபொருள்கள் குறித்து இங்குத் தனித்தனியே காண்போம்.
Re: மரபு கவிதை - புதுகவிதை
5.3.1 மனிதநேயம்
மரபுக்கவிதை
மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவுதலும், துயர்கண்டு வருந்தித் தீர்க்க முற்படுதலும் இடையூறு செய்யாதிருத்தலும் மனிதநேயம் ஆகும்.
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் ; பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா(து) அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் ;
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேருறக் கண்டுளம் துடித்தேன் ;
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்(சு)
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்
எனவரும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா, மனிதநேயத்தையும் ஆன்மநேயத்தையும் தெள்ளிதின் உணர்த்துவதாக உள்ளது.
புதுக்கவிதை
அண்டை மாநிலம், அண்டை நாடுகள் என அடுத்தடுத்து இருப்பனகூட எல்லைக்கோடு, மண்ணுரிமை முதலான பல்வேறு காரணங்களாலும், தீவிரவாதங்களாலும், நாளும் நவீன ஆயுதம் கொண்டு போரிடும் இக்காலத்திற்கு மனிதநேயம் மிகமிகத் தேவையாகும்.
போர்களை நிறுத்து
புன்னகையை உடுத்து
பூமியை நேசி
பூக்களை ரசி
மனிதரை மதி
மண்ணைத் துதி
இன்றாவது
என வரும் வைரமுத்துவின் கவிதை மனிதநேயத்தை எடுத்துரைக்கின்றது. ‘சிக்கலும் சிடுக்கும் புதுக்கவிதையின் ஜீவாதாரம்’ என்னும் க.நா.சுப்பிரமணியத்தின் கருத்திற்கேற்றது இது.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» இயற்கை வரைந்த கவிதை .(கலைநிலா கவிதை .)
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» இயற்கை வரைந்த கவிதை .(கலைநிலா கவிதை .)
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|