Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
Page 1 of 1 • Share
பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
கவிதையை மாற்றிய கண்ணதாசனும், அடிப்பட்ட கிளியும்
[You must be registered and logged in to see this image.]
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.
அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.
கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.
அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.
என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.
ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.
[You must be registered and logged in to see this image.]
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான். அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.
கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''
நன்றி ;கவிதை வீதி தளம்
[You must be registered and logged in to see this image.]
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.
அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.
கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.
அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.
என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.
ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.
[You must be registered and logged in to see this image.]
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான். அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.
கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''
நன்றி ;கவிதை வீதி தளம்
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
இப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...!
[You must be registered and logged in to see this image.]
அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.
ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.
அதற்கு ஆர்தர், “பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.
“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.
அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.
ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!
நன்றி ;கவிதை வீதி தளம்
[You must be registered and logged in to see this image.]
அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.
ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.
அதற்கு ஆர்தர், “பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.
“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.
அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.
ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!
நன்றி ;கவிதை வீதி தளம்
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
இவங்க.. எவ்வளவு சாமர்த்தியமா மேச் பண்றாங்க பாருங்க...!
[You must be registered and logged in to see this image.]
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார். ஒருமுறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது.
அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின்பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல, அவருக்கு இரண்டாவது வரி மறந்துபோய், "உப்பை எடுத்தார்...உப்பை எடுத்தார்' என்று ஐந்தாறு முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார்.
மக்கள் திருதிருவென விழித்தனர்.உடனே கலைவாணர், "எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி, அங்கு சென்று ஒரே ஒரு தடவை தான் உப்பை எடுத்திருப்பாரா? பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக "உப்பை எடுத்தார்' என பலமுறை பாடிக் காட்டினார்'' என்று போட்டார் ஒரு போடு.
பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன.
[You must be registered and logged in to see this image.]
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார். ஒருமுறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது.
அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின்பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல, அவருக்கு இரண்டாவது வரி மறந்துபோய், "உப்பை எடுத்தார்...உப்பை எடுத்தார்' என்று ஐந்தாறு முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார்.
மக்கள் திருதிருவென விழித்தனர்.உடனே கலைவாணர், "எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி, அங்கு சென்று ஒரே ஒரு தடவை தான் உப்பை எடுத்திருப்பாரா? பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக "உப்பை எடுத்தார்' என பலமுறை பாடிக் காட்டினார்'' என்று போட்டார் ஒரு போடு.
பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
[You must be registered and logged in to see this image.]
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார் வி.பாஷ்யம் ஐயங்கார். அவர் தம்முடைய ஓய்வு நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார்.
ஒருநாள் அந்த வெள்ளைக்காரர் இல்லத்துக்குள் ஐயங்கார் நுழைந்ததும் அங்கே இருந்த நாய் பாய்ந்து குரைத்தது. அதனால் ஐயங்கார் ஓட நேரிட்டது. அதைக் கண்ட வெள்ளையர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்."
"என்ன ஐயங்கார்! குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழியை மறந்து விட்டீர்களோ?'' என்றார்.""நண்பரே! அந்தப் பழமொழியை நீங்கள் அறிவீர்கள்; நானும் அறிவேன். ஆனால் நாய்க்கு அந்த பழமொழி தெரியுமா?'' என்று சாமர்த்தியமாகக் கேட்டார் ஐயங்கார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார் வி.பாஷ்யம் ஐயங்கார். அவர் தம்முடைய ஓய்வு நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார்.
ஒருநாள் அந்த வெள்ளைக்காரர் இல்லத்துக்குள் ஐயங்கார் நுழைந்ததும் அங்கே இருந்த நாய் பாய்ந்து குரைத்தது. அதனால் ஐயங்கார் ஓட நேரிட்டது. அதைக் கண்ட வெள்ளையர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்."
"என்ன ஐயங்கார்! குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழியை மறந்து விட்டீர்களோ?'' என்றார்.""நண்பரே! அந்தப் பழமொழியை நீங்கள் அறிவீர்கள்; நானும் அறிவேன். ஆனால் நாய்க்கு அந்த பழமொழி தெரியுமா?'' என்று சாமர்த்தியமாகக் கேட்டார் ஐயங்கார்.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
[You must be registered and logged in to see this image.]
விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.
அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்....
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.
அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும், ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.
அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதைவிட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.
இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி.....
ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட, அவரது மனத்தைக் காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...
(அறிஞர்கள் வாழ்வில்)
விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.
அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்....
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.
அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும், ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.
அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதைவிட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.
இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி.....
ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட, அவரது மனத்தைக் காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...
(அறிஞர்கள் வாழ்வில்)
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
[You must be registered and logged in to see this image.]
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். பிறகு அல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை… ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.
அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .
அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு
கஷ்டபடுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.
ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார். உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.
அப்புறமென்ன டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். பிறகு அல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை… ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.
அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .
அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு
கஷ்டபடுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.
ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார். உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.
அப்புறமென்ன டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
[You must be registered and logged in to see this image.]
அரசவைக் கவிஞர் பீர்பாலுக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்தது. அதை அமைச்சர் ஒருவர் அறவே வெறுத்தார்.
ஒரு சமயம் அக்பர் நமது அமைச்சர்களுடனும், பீர்பாலுடனும் உலாவச் சென்றார்.
அப்போது வழியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கழுதை ஒரு புகையிலைச் செடியைப் பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டு அப்பால் சென்றது.
குறிப்பிட்ட அமைச்சர் அதனை பீர்பாலுக்கு சுட்டிக்காட்டி, அந்த கழுதையைப் பாருங்கள், அதுகூட புகையிலைச் செடியையே வெறுக்கிறது என்று கேலி பேசினார்.
பீர்பாலோ அடக்கமான குரலில் உண்மைதான் அமைச்சரே! கழுதைகளுக்கு எப்போதுமே புகையிலையைக் கண்டால் பிடிப்பதில்லைதான் என்றார்.
அரசவைக் கவிஞர் பீர்பாலுக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்தது. அதை அமைச்சர் ஒருவர் அறவே வெறுத்தார்.
ஒரு சமயம் அக்பர் நமது அமைச்சர்களுடனும், பீர்பாலுடனும் உலாவச் சென்றார்.
அப்போது வழியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கழுதை ஒரு புகையிலைச் செடியைப் பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டு அப்பால் சென்றது.
குறிப்பிட்ட அமைச்சர் அதனை பீர்பாலுக்கு சுட்டிக்காட்டி, அந்த கழுதையைப் பாருங்கள், அதுகூட புகையிலைச் செடியையே வெறுக்கிறது என்று கேலி பேசினார்.
பீர்பாலோ அடக்கமான குரலில் உண்மைதான் அமைச்சரே! கழுதைகளுக்கு எப்போதுமே புகையிலையைக் கண்டால் பிடிப்பதில்லைதான் என்றார்.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
[You must be registered and logged in to see this image.]
அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது ஒருமுறை எதிர்கட்சி தலைவராக இருந்த கே.விநாயகம் தமிழக அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும்
யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு
-என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா எழுப்பினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும். அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும்.
எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
அண்ணாவின் பதிலைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் ஒரு சேர ஆர்பரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள்.
அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது ஒருமுறை எதிர்கட்சி தலைவராக இருந்த கே.விநாயகம் தமிழக அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும்
யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு
-என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா எழுப்பினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும். அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும்.
எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
அண்ணாவின் பதிலைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் ஒரு சேர ஆர்பரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள்.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
[You must be registered and logged in to see this image.]
மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். அவர் காந்திஜியை மட்டம் தட்ட விரும்பி அவரிடம் “இந்திய மக்களின் சார்பாக ஆங்கிலேயே அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உங்கள் மக்கள் உங்களை மட்டும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? உங்களைவிட சிறந்த அறிவாளி யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லையா..?” என்று கிண்டலாக கேட்டார்.
இதைப்புரிந்து கொண்ட காந்திஜி மெல்ல புன்னகைத்தபடி “உங்களது ஆங்கிலேய அரசை சமாளிக்க மிகப்பெரிய அறிவாளி தேவையில்லை. என்னைப்போன்ற மிகச் சாமான்யனே போதும் என்று என் இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்...” என்றார்.
காந்திஜி அவர்களின் வாழ்க்கை, அவருடைய நாட்கள், அவருடைய வார்த்தைகள் அத்தனையும் இன்று வாழும் தலைமுறைக்கு வேதங்கள். இன்று உலகம் இந்தியாபைப்பார்த்து... மிகப்பெரிய வெற்றியின் ரகசியத்தை, அமைதிக்கான வழியை, அனைவரையும் வெல்லக்கூடிய தந்திரத்தை, ஆத்ம சக்தியை கற்றுக்கொண்டுள்ளது அது அஹிம்சை.
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் உத்தமர் காந்தி. அவருடைய கொள்கைகள்.. அவருடைய போராட்டங்கள், அவருடைய வழிமுறைகளை உலகம் பின்பற்றிக்கொண்டு வருகிறது.. அதை நாம் மறந்துக்கொண்டு வருகிறோம்...
உத்தமரின் இந்த அவதார நாளில் நாமும் அஹிம்சையை அரவணைப்போம். கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா வல்லரசாகட்டும்...
மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். அவர் காந்திஜியை மட்டம் தட்ட விரும்பி அவரிடம் “இந்திய மக்களின் சார்பாக ஆங்கிலேயே அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உங்கள் மக்கள் உங்களை மட்டும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? உங்களைவிட சிறந்த அறிவாளி யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லையா..?” என்று கிண்டலாக கேட்டார்.
இதைப்புரிந்து கொண்ட காந்திஜி மெல்ல புன்னகைத்தபடி “உங்களது ஆங்கிலேய அரசை சமாளிக்க மிகப்பெரிய அறிவாளி தேவையில்லை. என்னைப்போன்ற மிகச் சாமான்யனே போதும் என்று என் இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்...” என்றார்.
காந்திஜி அவர்களின் வாழ்க்கை, அவருடைய நாட்கள், அவருடைய வார்த்தைகள் அத்தனையும் இன்று வாழும் தலைமுறைக்கு வேதங்கள். இன்று உலகம் இந்தியாபைப்பார்த்து... மிகப்பெரிய வெற்றியின் ரகசியத்தை, அமைதிக்கான வழியை, அனைவரையும் வெல்லக்கூடிய தந்திரத்தை, ஆத்ம சக்தியை கற்றுக்கொண்டுள்ளது அது அஹிம்சை.
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் உத்தமர் காந்தி. அவருடைய கொள்கைகள்.. அவருடைய போராட்டங்கள், அவருடைய வழிமுறைகளை உலகம் பின்பற்றிக்கொண்டு வருகிறது.. அதை நாம் மறந்துக்கொண்டு வருகிறோம்...
உத்தமரின் இந்த அவதார நாளில் நாமும் அஹிம்சையை அரவணைப்போம். கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா வல்லரசாகட்டும்...
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
[You must be registered and logged in to see this image.]
ஒரு சமயம் காங்கிரஸ் பேரியக்கத்தோடு தொடர்புடைய ஒரு பட அதிபரின் படத் தொடக்க விழாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் அழைக்கப்பட்டிருந்தார்.
படப்பிடிப்பைத் தொடங்கிவைத்து பெருந்தலைவர் பேசும்போது 'எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னாலும், தயாரிப்பாளருக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதால் நான் இவ்விழாவிற்கு வந்திருக்கிறேன்.
என்னை கைராசிக்காரன், அது, இது என்றெல்லாம் இங்கே புகழ்ந்து பேசினார்கள். கைராசியை நான் நம்புகிறவன் இல்லை, உழைப்பை மட்டுமே நம்புகிறவன்.
என்னைப் படத் தொடக்க விழாவிற்கு கூப்பிட்டதும் படத்துக்கு என்ன பேர் வைச்சிருக்கீங்கன்னு கேட்டேன். அதற்கு பார்த்தால் பசி தீரும்-னு சொன்னாங்க. அதெப்படி பார்த்தால் பசிதீரும்? கார்லே வரும் போது கூட அதைப் பற்றித்தான் யோசனை பண்ணிக்கிட்டு வந்தேன்.
இங்கே எல்லோரும் பேசினபோதுதான் எனக்கு விவரம் புரிஞ்சது. நீங்க எல்லாம் படாத பாடுபட்டு எடுக்கிற படத்தை ஏரளாமான மக்கள் பார்த்தாங்கன்னா உங்களோட பசி தீரும் அப்படித்தானேன்னேன்.” என்று சொல்ல கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
ஒரு சமயம் காங்கிரஸ் பேரியக்கத்தோடு தொடர்புடைய ஒரு பட அதிபரின் படத் தொடக்க விழாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் அழைக்கப்பட்டிருந்தார்.
படப்பிடிப்பைத் தொடங்கிவைத்து பெருந்தலைவர் பேசும்போது 'எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னாலும், தயாரிப்பாளருக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதால் நான் இவ்விழாவிற்கு வந்திருக்கிறேன்.
என்னை கைராசிக்காரன், அது, இது என்றெல்லாம் இங்கே புகழ்ந்து பேசினார்கள். கைராசியை நான் நம்புகிறவன் இல்லை, உழைப்பை மட்டுமே நம்புகிறவன்.
என்னைப் படத் தொடக்க விழாவிற்கு கூப்பிட்டதும் படத்துக்கு என்ன பேர் வைச்சிருக்கீங்கன்னு கேட்டேன். அதற்கு பார்த்தால் பசி தீரும்-னு சொன்னாங்க. அதெப்படி பார்த்தால் பசிதீரும்? கார்லே வரும் போது கூட அதைப் பற்றித்தான் யோசனை பண்ணிக்கிட்டு வந்தேன்.
இங்கே எல்லோரும் பேசினபோதுதான் எனக்கு விவரம் புரிஞ்சது. நீங்க எல்லாம் படாத பாடுபட்டு எடுக்கிற படத்தை ஏரளாமான மக்கள் பார்த்தாங்கன்னா உங்களோட பசி தீரும் அப்படித்தானேன்னேன்.” என்று சொல்ல கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
[You must be registered and logged in to see this image.]
இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் ஓரிடத்தில் சந்தித்து நேச நாடுகள் பெற்ற வெற்றியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது... என்னுடைய கனவில் நேற்று கடவுள் வந்து போரில் நேசநாடுகள் பெற்ற வெற்றிக்கு உன்னுடைய ராஜதந்திரம்தான் காரணம் என்று சொன்னதாக சர்ச்சில் குறிப்பிட்டார்.
உடனே ரூஸ்வெல்ட் குறுக்கிட்டு அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏன் என்றால் நேற்றுதான் கடவுள் என்னுடைய கனவில் வந்து அமெரிக்காவிலிருந்து நீ கொடுத்து உதவிய போர்க் கருவிகள்தான் வெற்றிக்குக் காரணம். என்று என்னிடம் சொன்னார், என்று குறிப்பிட்டார்.
இரண்டு பேர் பேசியதையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஸ்டாலின் நீங்கள் இருவர் சொல்வதிலும் உண்மை இல்லை. நான் உங்கள் இருவருடைய கனவிலும் வரவில்லையே. என்றார்.
நேரத்தில் கையாளும் வார்த்தை நகைச்சுவையாகவும், வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மாறியதை இது காட்டுகிறது.
இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் ஓரிடத்தில் சந்தித்து நேச நாடுகள் பெற்ற வெற்றியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது... என்னுடைய கனவில் நேற்று கடவுள் வந்து போரில் நேசநாடுகள் பெற்ற வெற்றிக்கு உன்னுடைய ராஜதந்திரம்தான் காரணம் என்று சொன்னதாக சர்ச்சில் குறிப்பிட்டார்.
உடனே ரூஸ்வெல்ட் குறுக்கிட்டு அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏன் என்றால் நேற்றுதான் கடவுள் என்னுடைய கனவில் வந்து அமெரிக்காவிலிருந்து நீ கொடுத்து உதவிய போர்க் கருவிகள்தான் வெற்றிக்குக் காரணம். என்று என்னிடம் சொன்னார், என்று குறிப்பிட்டார்.
இரண்டு பேர் பேசியதையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஸ்டாலின் நீங்கள் இருவர் சொல்வதிலும் உண்மை இல்லை. நான் உங்கள் இருவருடைய கனவிலும் வரவில்லையே. என்றார்.
நேரத்தில் கையாளும் வார்த்தை நகைச்சுவையாகவும், வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மாறியதை இது காட்டுகிறது.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
அருமை சிந்தனைக்கு உரியதுஇங்கே எல்லோரும் பேசினபோதுதான் எனக்கு விவரம் புரிஞ்சது. நீங்க எல்லாம் படாத பாடுபட்டு எடுக்கிற படத்தை ஏரளாமான மக்கள் பார்த்தாங்கன்னா உங்களோட பசி தீரும் அப்படித்தானேன்னேன்.” என்று சொல்ல கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
என்னை கைராசிக்காரன், அது, இது என்றெல்லாம் இங்கே புகழ்ந்து பேசினார்கள். கைராசியை நான் நம்புகிறவன் இல்லை, உழைப்பை மட்டுமே நம்புகிறவன்.
மிகப்பெரிய வெற்றியின் ரகசியத்தை, அமைதிக்கான வழியை, அனைவரையும் வெல்லக்கூடிய தந்திரத்தை, ஆத்ம சக்தியை கற்றுக்கொண்டுள்ளது அது அஹிம்சை.
அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
நாவடக்கம் யாருக்கு தேவை..? எதிர்கட்சி தலைவர் கேள்வி..?
அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது ஒருமுறை எதிர்கட்சி தலைவராக இருந்த கே.விநாயகம் தமிழக அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும்
யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு
-என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா எழுப்பினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும். அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும்.
எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
அண்ணாவின் பதிலைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் ஒரு சேர ஆர்பரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள்.
அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது ஒருமுறை எதிர்கட்சி தலைவராக இருந்த கே.விநாயகம் தமிழக அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும்
யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு
-என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா எழுப்பினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும். அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும்.
எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
அண்ணாவின் பதிலைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் ஒரு சேர ஆர்பரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள்.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.**
யதார்த்தம் இதுதானே?
கண்மணி சிங்
யதார்த்தம் இதுதானே?
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
படிக்க மிகவும் சுவாரஸ்யமான செய்திகளை கொண்டுள்ள பகிர்வு.
நன்றி இனியவன்.
நன்றி இனியவன்.
Re: பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்தவை
முரளிராஜா wrote:படிக்க மிகவும் சுவாரஸ்யமான செய்திகளை கொண்டுள்ள பகிர்வு.
நன்றி இனியவன்.
Similar topics
» பிரபலங்கள் சொன்னவை
» 103 புகழ் பெற்ற பிரபலங்கள் ஒரே ஓவியத்தில் !
» 14 வயதில் சாதனை செய்த 14 பிரபலங்கள் பற்றிய தொகுப்பு
» வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீச
» காமராஜர் வாழ்க்கையில் சில..
» 103 புகழ் பெற்ற பிரபலங்கள் ஒரே ஓவியத்தில் !
» 14 வயதில் சாதனை செய்த 14 பிரபலங்கள் பற்றிய தொகுப்பு
» வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீச
» காமராஜர் வாழ்க்கையில் சில..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|