Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாமரைத் தடாகம்!
Page 1 of 1 • Share
தாமரைத் தடாகம்!
தண்ணீர் ஒட்டாத வட்ட இலைகள்
தத்தித் தளும்பி வட்ட அலையாடும் தண்ணீர்
பூத்து பூரித்து புன்னகைத்து
புதுமுகம் காட்டும் தாமரை மலர்கள்
போட்டியிட்டு பூத்தாடும் அல்லிகள்
நீருக்குள் ஒளிந்தாடும் பச்சைப் பாசிகள்
பேர் சொல்லாமல் மொட்டு விரித்து
குட்டி குட்டியாய் சிரிக்கும் சின்னப்பூக்கள்
வேண்டாம் வேண்டாமென்று வேர் அறுத்துவிட்டாலும்
வேளைக்கொரு வேகத்தில்
வேக வேகமாய் வளரும் வெங்காய தாமரைகள்
வேரோடும் இலையோடும்
மலரோடும் நீரோடும்
நீந்தி விளையாடும் மீன்கள்
நீருக்குள் கலந்த காற்றைப்போல்
உயிருக்குள் கலந்த காதலோடு
தோணியாய் நீந்தி வரும் அழகான அன்னங்கள்
பயிருக்குள் முளைக்கும் கள்ளக் களையாய்
உள்ளுக்குள் ஊடுருவும் பாம்புகள்
கரையோரம் நின்று நாணம் காட்டும் நாணல்கள்
ஈரக்கரையில் இதய வடிவில் இலை விரித்து
இடம் நிரப்பி நிற்கும் இனம் தெரியா தாவரங்கள்
புல்லினங்கள் பூச்சிகள்
துள்ளிக் குதித்தாடும் தவளைகள்
நாலு பக்கமும் வரிக்கல்லால் வடிக்கப்பட்ட
படித்துறைகள்
துணி வெளுக்கும் சத்தங்கள்
குதித்துக் கூத்தாடி குளித்து கும்மாளமிடும்
குறும்புக் கூச்சல்கள்
மஞ்சள் பூசும் வளையோசைகள்
கிசிகிசுப்பு பேச்சொலிகள்
கன்னியரின் கிண்கிணி சிரிப்பொலிகள்....
ஊரின் தென்கோடியில்
கடலென நிறைந்து பரந்த நீர்ப்பரப்போடு
பூத்து சிரித்த தாமரைத் தடாகம்
வட்டக்குளமாய் சுருங்கிப்போனது
வருடங்கள் போகப் போக..
நேற்று பார்த்தேன் விளம்பரம் ஓன்று
வீடு கட்ட மனை விற்பனைக்கென்று..
எந்த இடமென்று உற்றுப் பார்க்கிறேன்
வற்றிக் கிடக்கிறது வட்டக்குளம்..
கனத்தது மனது
கசிந்து வீழ்ந்தது கண்ணீர் குளப்பரப்பில்
நினைவில் கதறி கலங்கியது
நீர் பூத்த தாமரைத் தடாகம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தாமரைத் தடாகம்!
நேற்று பார்த்தேன் விளம்பரம் ஓன்று
வீடு கட்ட மனை விற்பனைக்கென்று..
எந்த இடமென்று உற்றுப் பார்க்கிறேன்
வற்றிக் கிடக்கிறது வட்டக்குளம்..
கனத்தது மனது
கசிந்து வீழ்ந்தது கண்ணீர் குளப்பரப்பில்
நினைவில் கதறி கலங்கியது
நீர் பூத்த தாமரைத் தடாகம்!
வட்டக்குளம் மட்டுமல்ல...
நாட்டில் பல வயல்வெளிகள் நிலைமையும் அதுதான்
கவிதை அருமையோ அருமை
வீடு கட்ட மனை விற்பனைக்கென்று..
எந்த இடமென்று உற்றுப் பார்க்கிறேன்
வற்றிக் கிடக்கிறது வட்டக்குளம்..
கனத்தது மனது
கசிந்து வீழ்ந்தது கண்ணீர் குளப்பரப்பில்
நினைவில் கதறி கலங்கியது
நீர் பூத்த தாமரைத் தடாகம்!
வட்டக்குளம் மட்டுமல்ல...
நாட்டில் பல வயல்வெளிகள் நிலைமையும் அதுதான்
கவிதை அருமையோ அருமை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|