தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

View previous topic View next topic Go down

தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி Empty தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

Post by mohaideen Tue Feb 11, 2014 6:53 pm

[You must be registered and logged in to see this image.]


தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி.. நண்பர்களே பகிருங்கள்...

பண்டிகை தினங்கள் படும் பாடு சொல்லி மாளது. பண்டிகைகள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து மகிழும் நாளாகவே கடந்த சில வருடங்கள் வரை நிகழ்ந்து வந்தது. அதை வணிகர்கள் தினமாக மாற்றிய பெருமை நமது தொலைக்காட்சி நிறுவனங்களையும், மற்றும் ஆசை காட்டி மோசம் செய்யும் வியாபாரிகளையே சாரும் ........

எந்த மாதம் பண்டிகை இல்லை? எந்த நாளில் வர்த்தகம் இல்லை? எதற்கு இந்த இரண்டையும் இணைத்து, வியாபார நோக்கங்களை தவறான பாதையில் செலுத்த வேண்டும்?

இந்த உள்ளக் குமுறல், பண்டிகை நாட்களை வைத்து வியாபாரம் செய்யும் குள்ள நரி வணிகர்களைக் குறித்தும், அதனால் கடனாளியாகி உபாதைகளுக்கு உள்ளாகும் சாமான்ய மக்களைக் குறித்தும்தான்.

மேற்கு நாடுகளில் கிருத்துமஸ் தினத்திலும் புது வருட முதல் நாளில் மட்டுமே 'தள்ளுபடி' விற்பனை எனும் உத்தி, இது நாள் வரை இருந்து வருகிறது.

இதைப் பார்த்த நம்மூர் முதலாளிகளுக்கு, இந்த சென்டிமென்டினால் வரும் மிகப்பெரிய இலாபம் குறித்து சிந்திக்க தொடங்கியதன் பலன்தான் 'தள்ளுபடி' வியாபாரம்.

இதன் பின்னே உள்ள உளவியல் கருத்து என்ன? ரொம்பவும் எளிமையான ஒன்று.

பண்டிகை நாட்களில் உங்களுக்கு விடுமுறை. நீங்களும் சமைத்து சாப்பிட்டு நிம்மதியாக தூங்க உங்களுக்குக் கிடைத்த 24 மணி நேர சாவகாசம். வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறீர்கள். வெளியே செல்லவில்லை என்றால் பொருட்கள் வாங்க மாட்டீர்கள். ஆகவே வியாபாரம் மந்தமாகிப் போகிறது.

ஆக வணிகர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள், சும்மா வீட்டில் இருக்கும் உங்களை வெளியே வரவைக்க வேண்டும். உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் உங்களை எதையாவது வாங்க வைத்து விட வேண்டும்.

அதற்கான மாஸ்டர் ப்ளான் அவர்களிடம் இருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்....

பண்டிகையும் நகை வாங்கும் நாளையும் அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். பக்கம் பக்கமாக ஏன் அட்சயத் திருதியை அன்று தங்க நகை அல்லது பிளாட்டினம் வாங்க வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஏன்? அவர்களுக்கு வியாபாரம் நடக்க வேண்டாமா?

வருடம் முழுதும் மாதங்கள் வருகிறது. மாதத்தில் சில நாட்கள் தவிர மற்ற நாட்களில் எல்லா மதத்தவருக்கும் ஏதாவது ஒரு பண்டிகை அல்லது விழா வருகிறது. இந்த நாட்கள் தள்ளுபடி விற்பனை வணிகர்களுக்கு கொண்டாட்ட நாள்.

சில முக்கியமான தள்ளுபடி நாட்களை நினைவு கூறுகிறேன், புது வருடம், ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, சித்திரை விஷு, ஆடிமாதம் முழுதும், தீபாவளி, பொங்கல், ரம்ஜான், உகாதி, அட்சயத் திருதியை, கிருத்துமஸ், மொஹரம், ஈத் பெருநாள், ஈஸ்டர், தனிப் பெரும் தள்ளுபடி விழா என்று தீவுத்திடலிலும், வள்ளுவர் கோட்டத்திலும், சென்னை வர்த்தக மையத்திலும், மற்றும் பல கல்யாண மண்டபங்களிலும் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தள்ளுபடி நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே நீங்கள் தள்ளுபடி விலையைப் பெறலாம் என்று விளம்பரங்கள் தினசரி பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருக்கும். பண்டிகை நாள் நெருங்க நெருங்க தினசரிப் பத்திரிகையில் செய்திகளுக்கு பதில் இவர்களது தள்ளுபடி விளம்பரங்களே மிகையாக இருக்கும். சமீபத்தில் வந்த ஒரு விளம்பரம், செய்திகள் வடிவில் அதே பாணியிலேயே முதல் இரண்டு பக்கங்களுக்கு இருந்தது.

இதில் முக்கிய விஷயம் இந்த் விளம்பரத்திற்காக அவர்கள் கொடுக்கும் பணம் சுமார் ரூ 10 இலட்சம் வரை, ஒரு முழுப் பக்கத்திற்கு. இந்தப் பணத்தைப் பற்றி குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஒரு இடத்தில் இதை குறித்து விவாதிப்போம்.

இந்த விளம்பரங்களில் மிக விஞ்சி இருப்பது வீட்டு உபயோகத்திற்கான டிவி குளிர் சாதனப் பெட்டி, குளிர்சாதனக் கருவி, மிக்சி, கிரைண்டர், ஃபேன் மற்றும் கட்டில் அலமாரி முதலான வீட்டு சாதனங்கள் அடங்கியவை.

ஆனால் தள்ளுபடி விலையில் வராதவைகள் தங்க நகைக் கூலி, சேதாரம், கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர்கள். மோட்டார் சைக்கிள்கள், கார், மினி லாரி போன்ற விலை எந்நாளும் ஏறிக்கொண்டே இருக்கும் சாதனங்கள்.

நீங்கள் பார்க்கும் இந்த வீட்டுச் சாதனங்கள் விற்பனையாளர்களை, சென்னையில் விரல் விட்டு எண்ணி விடலாம். மிஞ்சிப் போனால் சுமார் 20 பேர் மட்டுமே. இவர்கள்தான் இந்த வர்த்தக உலகை ஆள்கிறார்கள். இது மிகச் சமீபமாக நிகழ்ந்த நிகழ்வு. இவர்களில் பெரும்பாலும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரே மாதிரியான வர்த்தக உத்திகளை கையாள்கிறார்கள். ஒரே இடத்தில் அடுத்தடுத்து கடை விரித்து வியாபாரம் செய்கிறார்கள் .

இவர்கள் நிஜமாகவே தள்ளுபடி விலையில் சாதனங்களைக் கொடுக்கிறார்களா? ஒரு பொருளை லாபம் இல்லாமல் விற்க இவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

இங்கேதான் விஷயமே இருக்கிறது. தள்ளுபடி என்பது ஒரு நாள் மட்டுமே நடக்கும் கூத்து அல்ல. அது வருடம் முழுதுமே நடந்து கொண்டு இருக்கிறது. எல்லாப் பண்டிகைகளின் முன்னேயும் பின்னேயும் ஒரு பத்து நாட்கள் இட்டால், உங்களுக்கு வாரக் கடைசி நாட்களுடன் சேர்ந்து 365 நாட்களும் தள்ளுபடி நாட்களே.

அப்படி என்றால் நிஜமாகவே தள்ளுபடி செய்வதில்லையா என்று கேட்டால்..... சிரிப்பைத்தான் பதிலாகத் தரமுடியும். உங்களை வீட்டிலிருந்து வெளியே இறக்கிக் கொண்டு வந்து பொருள்களை குறைந்த விலையில் வாங்கச் சொல்லி உங்களுக்கு பரிவுடம் சொல்லும் இவர்கள் உங்கள் மாமன் அல்லது மச்சானா என்ன?

இலாபம் இல்லாத வணிகம் இல்லை. தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் ஒரே நாளில் மிகப் பெரிய வியாபாரம் நிகழ்த்தி இவர்கள் சாதனை செய்கிறார்கள். இந்த வணிகத்திற்குச் சரியான வரி கணக்கீடு செய்யப் படுகிறதா? அந்த விற்பனைக்கு உரிய வரிப் பணம் அரசாங்கத்திற்குப் போய் சேர்கிறதா? இதை கவனிக்கும் வணிக வரித்துறை, என்றைக்காவது, சிபிஐ ரைடு போலவோ, இல்லை வருமான வரித்துறையின் ரைடு போலவோ தள்ளுபடி விற்பனை நாட்களில், இந்த நிறுவனங்களில் ரைடு நடத்தி இருக்கிறார்களா?

இந்த நிறுவனங்கள் நடத்தும் வணிகத்திற்கு உரிய ரசீது தான் கடைசி வரை வணிக வரித்துறைக்குப் போய் சேர்கிறதா, இல்லை பிரத்தியேகமாக வேறு கணக்குகள் சாமர்த்தியமாகக் வருமான வரி இலாக்காவிற்கு மாற்றிக் காட்டப் படுகிறதா? 
இதையெல்லாம் வணிக வரித்துறை சோதனை செய்திருக்கிறார்களா?

என் ஒரே கேள்வி இதுதான். பண்டிகை நாள் தள்ளுபடி தினத்தில் ஏன் வணிக வரித்துறை அலுவலர்கள் பெரும் வணிகம் நடக்கும் இடங்களில் நின்று வரி சரியாக வசூல் ஆகிறதா என்று சோதிப்பதில்லை? வணிகம் நடக்கும்போதே அரசாங்க அதிகாரி அங்கிருக்கிறார் என்றால் இந்த வணிகர்கள் ரசீத் போடாமல் 'எஸ்டிமேட்' எனும் தாளைத் தந்து வணிக வரி ஏய்ப்பு நடத்துவதைத் தடுக்கக் கூடாது?

தள்ளுபடி விலையில் லாபம் இல்லை என்றால் கொள்ளை கொள்ளையாக பணம் கொடுத்து விளம்பரங்கள் கொடுப்பது ஏன்?

வாடிக்கையாளர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் 0% வட்டி ஸ்கீம், கிரெடிட் கார்ட் பேமென்ட் ஸ்கீம், பிலேடட் பேமென்ட் ஸ்கீம், என்று சொல்லி தங்களின் பொருட்களை வாடிக்கையாளர்கள் மீது திணிப்பத்தின் நோக்கம் என்ன?

தற்காலம் எல்லாவற்றிற்கும் வங்கிக் கடனை ஏற்பாடு செய்கிறார்கள். கார் தொடங்கி, ஏசி, டிவி மற்றும் உல்லாசச் சுற்றுலா வரை, எல்லா விதமான உங்களின் செலவிற்கும், உங்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இருக்கின்றன.

நீங்கள் அந்தக் கடனை அடைக்க சுமார் 12 முதல் 24 மாதம் வரை அயாராது உழைக்க வேண்டும். பிடிக்காத மேனேஜரை பகைத்துக் கொள்ள முடியாமல் அவ்ருடனேயே பணி செய்ய வேண்டும். புதிய வேலைக்கு முயல முடியாது. காரணம் கடன் உங்கள் கண் முன் வந்து கையாட்டும். போகட்டும் அடுத்த வருஷம் பார்க்கலாம் என்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்களது முடிவு அல்ல, அது கடன் உபாதையால் ஏற்படும் முடிவு. ஆகவே உங்களது எதிர்காலம் பாதிக்கப் பட்டு நல்ல வாய்ப்புகளை இழக்கிறீர்கள்.

வரவு எட்டணா, செலவு பத்தணா எனும் பாடல்தான் நினைவிற்கு வருகிறது. இதுபோல தள்ளுபடி விலை, கடன் அட்டை, தவணை முறை என்று ஒரு ஒரு தலைமுறையைத் தொலைத்து கடனாளியாக்கி, வணிகம் அமெரிக்க மக்களை தன்னுள் அழுத்திப் பிடித்துக் கொண்டது. அமெரிக்காவில் கடன் அட்டை உபாதைகளால் மஞ்சள் நோட்டிஸ் கொடுத்தவர்கள் பலர்.

இன்று, அதேதான் இங்கும் நடக்கிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிவி இருக்கிறது. பெட்ரூமில் ஒன்று ஹாலில் ஒன்று. வீட்டில் ஃ பிரிட்ஜ் பழுதாகிவிட்டால் உடனே கடனுக்கு ஒரு புதிய ஃ பிரிட்ஜ் வாங்குபவர்களே அதிகம். வீட்டு உபயோக சாதனங்களை பழுது பார்ப்பதில்லை. பதிலுக்கு புதியதாக மாற்றுகிறார்கள். வசதி உள்ளவர்கள் செய்தால் பரவாயில்லை. மாத சம்பளம் பெறும் மத்திய வர்க்கம் இதைத்தான் செய்கிறது. கடனாளியாகி மேலும் மேலும் புதிய வங்கிகளில் கடன் அட்டைகளைப் பெறுகிறார்கள். புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்கிறார்கள்.

வசதிக்கும் நம் சௌகரியத்திற்கும் வாங்கலாம் தப்பில்லை. ஆனால் அதன் செலவை ஈடு கட்டும் விதத்தில் நீங்கள் உங்கள் பணியில் உயர்ந்தீர்களா என்பதே இங்கே கேள்வி. உங்கள் சம்பளமோ உங்கள் பதவி நிலையோ உயர்ந்து இதையெல்லாம் செய்தால் மகிழ்ச்சி. ஆனால் இன்றைக்கு இருக்கும் மேம்போக்கான நிறுவனங்களும், பணி நிரந்தரம் இல்லாத வேலைகளும் பெருகிவிட்டபோது, வாழும் முறை மட்டுமே பெரும் செலவாக மாறிக்கொண்டு இருக்கிறது.

அத்தகைய போலியான கடன் வாழ்வு வாழ்க்கைக்குப் பெரிதும் தூபம் போடுபவர்கள் இந்த தள்ளுபடி வணிகர்கள்.

அடுத்த முறை தள்ளுபடி விளம்பரம் வந்தால் யோசியுங்கள். நீங்கள் பணக்காரர் ஆகிவிட்டீர்களா அல்லது அந்த வணிகனை பணக்காரன் ஆக்கப் போகிறீர்களா என்று......



நன்றி : முகநூல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி Empty Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

Post by செந்தில் Tue Feb 11, 2014 8:38 pm

முடியலை முடியலை முடியலை 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி Empty Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

Post by Muthumohamed Tue Feb 11, 2014 10:35 pm

பலருக்கும் இது தெரிவதில்லை காரணம் பொருளை அடைய உள்ள ஆவர்வம் தான்

பயனுள்ள நல்ல பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி Empty Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

Post by kanmani singh Wed Feb 12, 2014 11:31 am

பதிவுக்கு நன்றி நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி Empty Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

Post by ஜேக் Wed Feb 12, 2014 8:24 pm

அடுத்த முறை தள்ளுபடி விளம்பரம் வந்தால் யோசியுங்கள். நீங்கள் பணக்காரர் ஆகிவிட்டீர்களா அல்லது அந்த வணிகனை பணக்காரன் ஆக்கப் போகிறீர்களா என்று......

அதுக்கெல்லாம் நமக்கு நேரமில்லை.

ஏழையே ஆனாலும் பரவாயில்லை...

நெனச்ச பொருளை வாங்கனும்னாக்க... வாங்கித்தானே தீரணும்... நக்கல் நக்கல் லொள்ளு லொள்ளு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி Empty Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

Post by rammalar Wed Feb 12, 2014 11:52 pm

எண்ணைய் பாக்கெட்கள், ஹார்லிக்ஸ்
போன்ற சத்துள்ள பானங்கள், மளிகை
பொருட்கள் மற்றும் சோப்பு வகைகள்
எல்லாமே உற்பத்தி விலையிலிருந்து
கூடுதலாக முப்பது சதவீதம் அத்துடன்
சேர்த்து MRP ரேட் விலை குறித்திருப்பாரகள்
-
சில்லரை விற்பனையாளர்கள் அந்த MRP
ரேட்டில் 5 அல்லது பத்து சதவீதம் வரை
தள்ளுபடி செய்து விற்பனை செய்வாரகள்
-
உதாரணமாக 500 மில்லி ஆலிவ் ஆயில் MRP
விலை ரூ 250 ஆகும்.
சென்னையில் ரூ 210 க்கு விற்பார்கள்.
சிதம்பரத்தில் இதன் விலை ரூ185 மட்டுமே...!
-
ரூ 185 க்கு விற்றாலும் லாபம் கிடைக்கும் என்ற
போது அதில் குறிக்கப்பட்டிருக்கும் ரூ250 க்கு
விற்றால் எவ்வளவு லாபம்...?!
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி Empty Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

Post by மகா பிரபு Thu Feb 13, 2014 5:16 pm

தகவலுக்கு நன்றி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி Empty Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum