தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வேளுக்குடி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவாரூர்

View previous topic View next topic Go down

வேளுக்குடி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவாரூர் Empty வேளுக்குடி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவாரூர்

Post by முழுமுதலோன் Fri Feb 21, 2014 2:33 pm

வேளுக்குடி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவாரூர்

வேளுக்குடி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவாரூர் T_500_1931

மூலவர் : அங்காளபரமேஸ்வரி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : வேம்பு, அரசு
தீர்த்தம் : கூத்தன்குளத்து தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : வேளுக்குடி
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

மகாசிவராத்திரி, ஆடிவெள்ளி, ஆவணியில் சம்பத்ரா அபிஷேகம், சண்டிஹோமம், அமாவாசை ஹோமம்.

தல சிறப்பு:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறந்த கோயிலுக்கான விருதை காஞ்சி சங்கர மடத்தின் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் கடந்த 2000 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளார் என்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வேளுக்குடி, திருவாரூர் மாவட்டம்-610 102.

போன்:

+91 4367-234367,9865291605; 9659985390

பொது தகவல்:

கோயிலின் தெற்குபக்கம் ஐந்து நிலை ராஜகோபுரம், கோபுரத்தில் ஐந்து கலசம், கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைந்துள்ளது. கோயிலின் பிரகாரத்தில் நடராஜர், மயானருத்திரர், பேச்சியம்மன், அர்த்த மண்டபத்தில் வலது பக்கம், கிழக்குப்பக்கம்பார்த்த வகையில் கங் காளருத்ரரும்(லிங்கம்)வினாயகரும், அருகில் தெற்கு முகம் பார்த்த வகையி ல் அகோர வீரபத்திரர் அவர் அருகில் சக்தியும், சற்று தொலைவில் தட்சன் ஆட்டுத்தலையுடன் நிற்பதுடன், வலதுபக்கம் மயான ருத்ரர் சிவசக்தி ரூப அம்பாளும், அருகில் மேற்கு பக்கம் விநாயகரை பார்த்த வண்ணம் சப்தகன்னிகள் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தில் மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மியம்மாளுடனும், பாவாடைராயன் காந்தழகி, கந்தர்வழகியுடன் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பார்த்த வண்ணம் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. பேச்சியம்மன் பத்து கரங்களுடன் சிங்கமுக வாகனம் எதிரில் அமர்ந்திருக்கும் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருளன் காட்டேரியுடன் தனி சன்னதியிலும், காத்தவராயன் ஆரியமாலா மற்றும் கன்னியம்மாளுடன், காவலாளி தொட்டியத்து சின்னானுடன் தனி சன்னதியிலும், கருப் பண்ணசுவாமி கருப்பாயி அம்மனுடன் தனித்தனி சன்னதியிலும் மேற்கு பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர்.


பிரார்த்தனை

திருமணத்தடை, புத்திரபாக்கியம்,நோய் நீங்கவும், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை கோளாறு நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், கால்நடைகள் உயிருடன் (ஆடு, மாடு,கோழி, புறா) செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

கோயில் ஸ்தாபகர் திரு.சடையப்ப பூஜாரி இக்கோயிலில் நிகழ்த்திய கலை நிகழ்ச்சியை பார்த்து, தஞ்சை மன்னர் ராஜராஜசோழன் பரம்பரயை சேர்ந்த சரபோஜி மன்னர் பாராட்டி, அவர் பயன்படுத்திய கேடயம் மற்றும் வீரவாளினை பரிசாக அளித்து, பின்னர் சுவாமி தரிசனம் செய்துள்ளார். பல்வேறுப்பகுதியில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு பக்தர்கள் வந்துசெல்கின்றனர். மூன்று வினாயகர் கோயில்கள் மற்றும் இரு சிவன் கோயில்கள் உள்ள பகுதியில் அங்காளபரமேஸ்வரி அருள்பாலிப்பது பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்

தல வரலாறு:

மிகவும் பழமையான கோயில் (ஈசனின் திருவிளையாடலில் ஒன்றான தட்ச யாகபரணி நிகழ்வை கூறும் கோயில்) ஈசனின் திருவிளையாடலில் ஒன்றான தட்சயாகபரணி நிகழ்வை மையக் கருத்தை முன் வைத்து கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தக்கன் தான், நடத்திய வேள்வியில் திருமால், பிரம்மன், அக்கினி, இந்திரன், சூரியன் உள்ளிட்டவர்களை அழைத்தவர். ஈசனை அழைக்கவில்லை. இதை அறிந்த பார்வதி தன், தந்தை நடத்தும் வேள்விக்கு சென்று வரவும் ஈசனை அழைக்காமல் வேள்வி நடத்தியது தவறு என்பதை சுட்டிக்காட்டவும் ஈசனிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு ஈசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாக்குவாதம் செய்து, ஈசன் அனுமதியில்லாமல், அவர் வார்த்தையை மீறி வேள்வி நடக்கும் இடத்திற்கு பார்வதி சென்றார். அங்கு அவர் தந்தையால் புறக்கணிக்கப்பட்டார். மேலும் தன் கணவரான ஈசனை அழைக்காமல் நடத்திய வேள்வியை அழியட்டும் என சாபமிட்டு விட்டு சிவபெருமானிடம் சென்றபோது, ஈசன் பார்வதி மேல் கோபப்படுகிறார். இதனால் பெண் புத்தி பின் புத்தி என்பதை உணர்ந்தேன் மன்னித்து ஏற்க வேண்டினார். மனம் குளிர்ந்த ஈசன் சோதனை நடத்தியதாக கூறி பின்னர் ஏற்றார். அதற்கான வேள்வி இந்த பகுதியில் நடந்ததாக கருதி இங்கு அப்பகுதியில் 400 ஆண்டிற்கு முன் தெருக்கூத்து கலைஞரான சடையப்ப பூஜாரி அங்காள பரமேஸ்வரியை முன்னிலைப்படுத்தி கோயில் அமைத்தார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறந்த கோயிலுக்கான விருதை காஞ்சி சங்கர மடத்தின் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் கடந்த 2000 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளார் என்பது சிறப்பு.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், விழுப்புரம்
» அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» அரித்துவாரமங்கலம் அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» திருவிடைவாசல் அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
» திருவாரூர்-அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum