Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு ஓவியனின் மறுபக்கம்
Page 1 of 1 • Share
ஒரு ஓவியனின் மறுபக்கம்
லியனார்டோ டா வின்சி என்றதும் நினைவுக்கு வருவது என்ன? அவர் வரைந்த மோனாலிசாவும், இறுதி விருந்தும்தானே. 1452ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள வின்சி நகரில் பிறந்த அவர், ஓவியர் என்பதைத் தாண்டியும் பல அடையாளங்களைக் கொண்டவர்.
ஒரே நபர் பல துறைகளிலும் சிறந்து விளங்குவது அரிது. அப்படி அரிதினும் அரிதான மனிதர்தான் லியனார்டோ. ஓவியம் வரைவதுடன் சிலைகள் வடிப்பதிலும் அவர் சிறந்து விளங்கினார். அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றின் முன்னோடி அவர். அவர்தான் சைக்கிளைக் கண்டுபிடித்தார் என்று சொல்கிறவர்களும் உண்டு.
அறிவியல் துறையில் அதீத ஈடுபாட்டுடன் விளங்கினார். தசைகள், தசைநாண்கள், எலும்பு அமைப்புகள், உடற்கூறு குறித்தெல்லாம் அவர் வரைந்த படங்கள்தான் பிற்கால அறிவியல் படிப்புகளுக்கு வழிகாட்டி. மனித உடலை ஊடறுத்துப் பார்க்கும் எந்தக் கருவியின் உதவியும் இன்றி, இதயம் உட்படப் பல உள்ளுறுப்புகளின் படங்களை அவர் துல்லியமாக வரைந்திருக்கிறார்.
பொறியியல் துறையிலும் இவருடைய பங்களிப்பு குறிப்பிடத் தக்க அளவில் இருந்தது. மத்திய இத்தாலியில் பாயும் ஆர்னோ ஆற்றின் குறுக்கே கட்டுவதற்கான ஒற்றைப் பாலத்தின் மாதிரியை வடிவமைத்துக் கொடுத்தவர் லியனார்டோதான். எதிரிகளின் தாக்குதலில் இருந்து நகரத்தைக் காப்பாற்றக்கூடிய நகரும் தடுப்பரண்களையும் அவர் வடிவமைத்தார். அறிவியல் உண்மைகள், கண்டுபிடிப்புகள் தொடர்பான அவரது தொகுப்பில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் படங்கள் இடம்பெற்றிருந்தன.
எல்லாமே இந்த உலகைக் குறித்த அவரது அறிவியல் பார்வையின் வெளிப்பாடுகள். பறவைகளால் மட்டுமே பறக்க முடியும் என்ற எண்ணம் வேரூன்றி இருந்த அந்தக் காலத்திலேயே கிளைடர்கள், ஹெலிகாப்டர், போர் எந்திரங்கள் ஆகியவற்றின் மாதிரிகளை வரைந்தார் டா வின்சி. இசைக் கருவிகளின் படங்களையும், தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு வகையான குழாய்களையும்கூட அப்போதே வரைந்துவிட்டார்.
இப்படிப் பல துறைகளிலும் சிறந்து விளங்கியவரின் சொற்பப் படங்கள் மட்டுமே தற்போது இருக்கின்றன. அவர் வாழ்ந்த காலம்வரை ஓவியராக மட்டுமே அறியப்பட்டிருந்தார். அவர் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர் என்பதை, அவரது மறைவுக்குப் பிறகுதான் உலகம் உணர்ந்தது
நன்றி : தி ஹிந்து பெப்ரவரி 22, 2014
ஒரே நபர் பல துறைகளிலும் சிறந்து விளங்குவது அரிது. அப்படி அரிதினும் அரிதான மனிதர்தான் லியனார்டோ. ஓவியம் வரைவதுடன் சிலைகள் வடிப்பதிலும் அவர் சிறந்து விளங்கினார். அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றின் முன்னோடி அவர். அவர்தான் சைக்கிளைக் கண்டுபிடித்தார் என்று சொல்கிறவர்களும் உண்டு.
அறிவியல் துறையில் அதீத ஈடுபாட்டுடன் விளங்கினார். தசைகள், தசைநாண்கள், எலும்பு அமைப்புகள், உடற்கூறு குறித்தெல்லாம் அவர் வரைந்த படங்கள்தான் பிற்கால அறிவியல் படிப்புகளுக்கு வழிகாட்டி. மனித உடலை ஊடறுத்துப் பார்க்கும் எந்தக் கருவியின் உதவியும் இன்றி, இதயம் உட்படப் பல உள்ளுறுப்புகளின் படங்களை அவர் துல்லியமாக வரைந்திருக்கிறார்.
பொறியியல் துறையிலும் இவருடைய பங்களிப்பு குறிப்பிடத் தக்க அளவில் இருந்தது. மத்திய இத்தாலியில் பாயும் ஆர்னோ ஆற்றின் குறுக்கே கட்டுவதற்கான ஒற்றைப் பாலத்தின் மாதிரியை வடிவமைத்துக் கொடுத்தவர் லியனார்டோதான். எதிரிகளின் தாக்குதலில் இருந்து நகரத்தைக் காப்பாற்றக்கூடிய நகரும் தடுப்பரண்களையும் அவர் வடிவமைத்தார். அறிவியல் உண்மைகள், கண்டுபிடிப்புகள் தொடர்பான அவரது தொகுப்பில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் படங்கள் இடம்பெற்றிருந்தன.
எல்லாமே இந்த உலகைக் குறித்த அவரது அறிவியல் பார்வையின் வெளிப்பாடுகள். பறவைகளால் மட்டுமே பறக்க முடியும் என்ற எண்ணம் வேரூன்றி இருந்த அந்தக் காலத்திலேயே கிளைடர்கள், ஹெலிகாப்டர், போர் எந்திரங்கள் ஆகியவற்றின் மாதிரிகளை வரைந்தார் டா வின்சி. இசைக் கருவிகளின் படங்களையும், தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு வகையான குழாய்களையும்கூட அப்போதே வரைந்துவிட்டார்.
இப்படிப் பல துறைகளிலும் சிறந்து விளங்கியவரின் சொற்பப் படங்கள் மட்டுமே தற்போது இருக்கின்றன. அவர் வாழ்ந்த காலம்வரை ஓவியராக மட்டுமே அறியப்பட்டிருந்தார். அவர் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர் என்பதை, அவரது மறைவுக்குப் பிறகுதான் உலகம் உணர்ந்தது
நன்றி : தி ஹிந்து பெப்ரவரி 22, 2014
Re: ஒரு ஓவியனின் மறுபக்கம்
[You must be registered and logged in to see this image.]
---
எஸ்.வி.சேகரின் நாடகம் ஒன்றில் அவரின் அப்பா,
‘‘ஏண்டா இப்படிப் பொறுப்பில்லாம திரியறே?
நீ ஒரு டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா வரணும்னு
நான் எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா?’’ என்பார்.
‘‘போப்பா... ஒரே ஆள் எப்படி டாக்டரா, வக்கீலா,
இஞ்சினீயரா வர முடியும்?’’ என்பார் எஸ்.வி.சேகர்.
அரங்கம் சிரிப்பலையில் மூழ்கும்.
ஆனால் நிஜவாழ்வில்
மிகச் சிறந்த ஓவியராக,
சிற்பியாக,
நில அளவையாளராக,
தச்சராக, விஞ்ஞானியாக,
பொறியியலாளராக,
மருத்துவராக,
அரசியல் ஆலோசகராக
என்று பல நிலைகளில் வாழ்ந்த சாதனையாளர்
லியனார்டோ டாவின்சி.
--
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஒரு ஓவியனின் மறுபக்கம்
ராம் மலர் உங்களது பின்னூட்டங்கள் என்னை பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
Similar topics
» ஓவியனின் வாய்த்திறன்!
» ஓவியனின் திறன்
» மத்தளத்தின் மறுபக்கம்
» மலையின் மறுபக்கம்
» கடாபியின் மறுபக்கம்......
» ஓவியனின் திறன்
» மத்தளத்தின் மறுபக்கம்
» மலையின் மறுபக்கம்
» கடாபியின் மறுபக்கம்......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|