Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒன்றுபடுங்கள்...வென்றுவிடுங்கள்....
Page 1 of 1 • Share
ஒன்றுபடுங்கள்...வென்றுவிடுங்கள்....
வீரதீர செயல்களை செய்ய விருப்பப் படுவோர், அதிகமாக தேர்ந்தெடுக்கும் களம் மலையேற்றம். முன்னே பின்னே தெரியாத இந்த மலைப்பாதையில் உயிருக்கு ஆபத்து என்பது சர்வ சாதாரணம். பூஜ்யம் டிகிரிக்கு கீழே உள்ள சீதோஷ்ண நிலையில், வெள்ளிப்பனி மலைகளில் நடந்து செல்வது என்பது மிகப்பெரிய சவால்.
மயிர்கூச்செறியச் செய்யும் இந்தப் பயணங் களில், செல்வோர் தனியாகச் செல்வதில்லை. ஒரு குழுவாகச் செல்வார்கள். இவர்கள் இந்தப் பயணங்களின்போது தங்களை ஒருவருக்கொருவர் நீளமான கயிற்றால் கட்டி இணைத்திருப்பார்கள். ஏன் இப்படி?
அந்தப் பனிமலையில் ஆங்காங்கே மிகப் பெரிய ஆழ்குழிகள் இருக்கும். ஆனால், அவை நம் கண்ணுக்குப் புலப்படாது. எத்தனை கவனமாகச் சென்றாலும், இந்தக் குழிகளில் இருந்து தப்ப முடியாது. ஏனெனில் இந்தக் குழிகள் பனிப் பொழிவுகளால் நிறைந்திருக்கும்.
நீரில் விழுந்தால் நீந்தி வெளிவரமுடியும். ஆழமான சேற்றிலும், இந்தப் பனிமூடிய பள்ளங்களிலும் விழுந்து விட்டால் யாராலும் தப்ப முடியாது. வீழ்ந்துவிட்ட அந்த மனிதனின் முயற்சிகள் அங்கே செல்லுபடியாகாது. அவர் தன்னை மற்றவர்களுடன் இணைத்திருப்பதால் அந்த நண்பர்கள், இவரை தூக்கிக் காப்பாற்ற முடியும்.
தொழில் என்பதும் ஒரு சவால்தான். நூறு சதவிகிதம் பாதுகாப்பு யாருக்குமே இல்லை. எத்தனை விழிப்போடு செயல்பட்டாலும் சில வேளைகளில் சில தடுமாற்றங்கள், சில சறுக்கல்கள் வருவதுண்டு. அந்த நேரத்தில் அவர் தன்னைத் தானே நிலைநிறுத்திக்கொள்வது, மீட்டெடுப்பது சிரமமான காரியம். இதுபோன்ற நேரங்களில் ஒரு வெளிஉதவி தேவைப்படுகிறது. கோரமான பற்களையும், பலம் வாய்ந்த கால்களையும் கொண்ட கம்பீரமான சிங்கம்கூட வலைக்குள் மாட்டிக் கொண்டால் அங்கு ஒரு சுண்டெலியின் உதவி தேவைப்படுகிறது.
அநேக தொழில் முனைவோர் தனிமரமாக நிற்கிறார்கள். தன்னை ஒத்த தொழில் முனைவோருடன் கலந்து வாழாமல் தனித்தீவாக வாழ்கிறார்கள். உயரமான தனிமரத்தின்மீதுதான் இடி தாக்கும் என்ற விதியை அவர்கள் உணராது இருக்கிறார்கள்.
சில காரணங்களுக்காக இவர்கள் தனித்தன்மையை போற்றுகிறார்கள்.
1. தான் மட்டும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் தன் உயரத்திற்கு வளர்ந்து விடக்கூடாது என்ற கெட்ட எண்ணம்.
2. தன் வளர்ச்சி கண்டு அதன் மேல் பொறாமை கொண்டு, அதன் காரணமாக தனது வளர்ச்சிக்கு விரோதமாக குழி தோண்டுவார்கள்.
3. தனது தொழில் ரகசியங்களை தெரிந்து கொண்டு தங்களுக்குப் போட்டியை உருவாக்குவார்கள்.
4. கடன் கேட்டு தொல்லை செய்வார்கள்.
5. இன்னும் சிலர் தொழிலில் நொடிந்து விட்டோம். இது வெளியே தெரிந்தால் தன் மதிப்பு பாதிக்கும் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்குவார்கள்.
இன்னும் சிலர், தங்களுக்கு உறவு வட்டாரங்கள், நட்பு வட்டாரங்கள் இருக்கும். ஆனால் அவர்களிடம் ஆயிரம் கதை பேசுவார்கள். தொழில் பற்றி மட்டும் வாய் திறக்க மாட்டார்கள். அதை ஒரு பெரிய பாதுகாப்பு உணர்வு என்று போற்றுகிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இவையாவும் தவறான அபிப்பிராயங்கள் என்பது புரிய வரும்.
http://www.no1tamilchat.com/
மயிர்கூச்செறியச் செய்யும் இந்தப் பயணங் களில், செல்வோர் தனியாகச் செல்வதில்லை. ஒரு குழுவாகச் செல்வார்கள். இவர்கள் இந்தப் பயணங்களின்போது தங்களை ஒருவருக்கொருவர் நீளமான கயிற்றால் கட்டி இணைத்திருப்பார்கள். ஏன் இப்படி?
அந்தப் பனிமலையில் ஆங்காங்கே மிகப் பெரிய ஆழ்குழிகள் இருக்கும். ஆனால், அவை நம் கண்ணுக்குப் புலப்படாது. எத்தனை கவனமாகச் சென்றாலும், இந்தக் குழிகளில் இருந்து தப்ப முடியாது. ஏனெனில் இந்தக் குழிகள் பனிப் பொழிவுகளால் நிறைந்திருக்கும்.
நீரில் விழுந்தால் நீந்தி வெளிவரமுடியும். ஆழமான சேற்றிலும், இந்தப் பனிமூடிய பள்ளங்களிலும் விழுந்து விட்டால் யாராலும் தப்ப முடியாது. வீழ்ந்துவிட்ட அந்த மனிதனின் முயற்சிகள் அங்கே செல்லுபடியாகாது. அவர் தன்னை மற்றவர்களுடன் இணைத்திருப்பதால் அந்த நண்பர்கள், இவரை தூக்கிக் காப்பாற்ற முடியும்.
தொழில் என்பதும் ஒரு சவால்தான். நூறு சதவிகிதம் பாதுகாப்பு யாருக்குமே இல்லை. எத்தனை விழிப்போடு செயல்பட்டாலும் சில வேளைகளில் சில தடுமாற்றங்கள், சில சறுக்கல்கள் வருவதுண்டு. அந்த நேரத்தில் அவர் தன்னைத் தானே நிலைநிறுத்திக்கொள்வது, மீட்டெடுப்பது சிரமமான காரியம். இதுபோன்ற நேரங்களில் ஒரு வெளிஉதவி தேவைப்படுகிறது. கோரமான பற்களையும், பலம் வாய்ந்த கால்களையும் கொண்ட கம்பீரமான சிங்கம்கூட வலைக்குள் மாட்டிக் கொண்டால் அங்கு ஒரு சுண்டெலியின் உதவி தேவைப்படுகிறது.
அநேக தொழில் முனைவோர் தனிமரமாக நிற்கிறார்கள். தன்னை ஒத்த தொழில் முனைவோருடன் கலந்து வாழாமல் தனித்தீவாக வாழ்கிறார்கள். உயரமான தனிமரத்தின்மீதுதான் இடி தாக்கும் என்ற விதியை அவர்கள் உணராது இருக்கிறார்கள்.
சில காரணங்களுக்காக இவர்கள் தனித்தன்மையை போற்றுகிறார்கள்.
1. தான் மட்டும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் தன் உயரத்திற்கு வளர்ந்து விடக்கூடாது என்ற கெட்ட எண்ணம்.
2. தன் வளர்ச்சி கண்டு அதன் மேல் பொறாமை கொண்டு, அதன் காரணமாக தனது வளர்ச்சிக்கு விரோதமாக குழி தோண்டுவார்கள்.
3. தனது தொழில் ரகசியங்களை தெரிந்து கொண்டு தங்களுக்குப் போட்டியை உருவாக்குவார்கள்.
4. கடன் கேட்டு தொல்லை செய்வார்கள்.
5. இன்னும் சிலர் தொழிலில் நொடிந்து விட்டோம். இது வெளியே தெரிந்தால் தன் மதிப்பு பாதிக்கும் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்குவார்கள்.
இன்னும் சிலர், தங்களுக்கு உறவு வட்டாரங்கள், நட்பு வட்டாரங்கள் இருக்கும். ஆனால் அவர்களிடம் ஆயிரம் கதை பேசுவார்கள். தொழில் பற்றி மட்டும் வாய் திறக்க மாட்டார்கள். அதை ஒரு பெரிய பாதுகாப்பு உணர்வு என்று போற்றுகிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இவையாவும் தவறான அபிப்பிராயங்கள் என்பது புரிய வரும்.
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒன்றுபடுங்கள்...வென்றுவிடுங்கள்....
அறிவு ஒன்று மற்றும் தான் பிறருக்கு கொடுக்க கொடுக்க வளரும். நல்ல விஷயங்களை பிறருடன் பகிரும் பொழுது அது நமக்கு மனதில் பசுமரத்து ஆணி போல் பதித்து விடும்.
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|