தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அகர தமிழன் கவிதைகள்

View previous topic View next topic Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:36 pm

அம்மா என்றாலும் " அ " கரம்
-----------------------------

அன்னை என்றால் " அ " கரம்
அம்மா என்றாலும் " அ " கரம்
அகிலம் என்றாலே " அ " கரம்
அகிலமே என் அன்னையே
அகிலாண்டேஸ்வரியே அன்னையே

அன்னையின் வயிற்றில்......
அடியீடு செய்த நாள் பிறப்பு
அகிலத்தில் என் இறுதி நாள் இறப்பு
அன்னை அகத்தில் இறப்பு இல்லை
அடைமழையாய் பொழியும் அன்பு

அக்கரத்தின் தொடக்கம் அகரம்
அன்பின் தொடக்கம் அன்னை
அச்சம் அச்சுறுத்தல் அகற்றி
அகவளர்ச்சியின் ஆதாம் அன்னை
அருமருந்தானவள் அன்னை

அலரவன் படைப்பில் .....
அற்புதமானவள் நம் அன்னை
அகிலத்தில் கண்கண்ட அங்கணி
அன்னையை உணராதவன்
அண்ணை ...........!!!!!!!!!!!!!!!
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:37 pm

அண்டத்தின் அழகியவள் .....!!!
---------------------------------
அகந்தை -அற்ற அவள் குணம் ....
கடம்பை -போல் குற்றாத வார்த்தைகள் ....
ஆகாரி- அவள் என் வாழ்க்கையில் வந்தால் ....
காகதாலியம் - போல் கண்ணில் பட்டவள் ....
இமை-க்குள்ளே தன்னை வைக்க வைத்தால் .....
கிடுகு - போல் இணைந்திருக்கும் எம் காதல் .....
ஈகம் - போல் மனம் வீசும் பண்பு .....
கீதம் - போல் அவளின் மெல்லிய குரல்.....
உதயன் -போல் ஒளிகொண்ட முகம்.....
குபேரன் - போன்ற மென்மையான பார்வை ....
அத்தனையும் கொண்ட அண்டத்தின்
அழகியவள் .....!!!



கடம்பை - குளவி ஈகம் -சந்தன மரம்
உதயன் -சூரியம் குபேரன் -சந்திரன்

அன்புடன் அகர தமிழன்
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:38 pm

ஆமிடமும் இழந்தேன்
-------------------------

ஆரணியே அழகிய ஆடவளே
ஆதபன் போல் அகமுடைய ஆயிழையே
ஆடவன் நான் உன் மீது ஆர்வம் கொண்டேன்
ஆபம் இழந்தேன்
ஆமிடமும் இழந்தேன்
ஆகம்பிதம் போல் பொம்மையானேன்
ஆடவன் நெஞ்சில் ஆர்த்தி யடி
ஆசத்தின் எழில் கண்டேன்
ஆணு பேச்சு கேட்டேன்
ஆர்வலனானேனடி ஆரணியே
ஆறுதாலாய் ஒரு சொல் காதலிக்கிறேன்
ஆடவனே என்று சொல் ......!!!

**************************************

ஆதபன் -சூரியன் ஆயிழை ; பெண்
ஆபம் ;தண்ணீர் (நீர் ) ஆமிடம் ;உணவு
ஆர்த்தி ;துன்பம் ஆசம்; சிரிப்பு
ஆணு ; இனிமை
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:39 pm

உயிரெழுத்தில் உயர்ந்து வாழ்
-------------------------------

அ-க நிலையை அகக்கண்ணால்
அறிந்தால் அறும் உன் -அகந்தை

ஆ-ண்டவனிடம் சரணடைந்தவன்
உயிர் செல்லும் -ஆகாசம்

இ-ல்லறம் சிறப்புற இன்பமாய்
வாழ்பவன் மானிடத்துள் -இறைவன்

ஈ-கையை கடமையாக செய்பவன்
மனிதருக்குள் மாணிக்க -ஈசன்

உ-ழுதுண்டு வாழ்பவனை
புன்னகையுடன் பார்க்கிறாள் -உகமகள்

ஊ-கை பெற்றவன் பாக்கிய சாலி
பாக்கியம் பெறதேவை - ஊக்கம்

எ-கினன் படைப்பில் எல்லா
உயிரும் சமமான -எண்

ஏ-கந்தானை முதல் தொழு
தொழுதால் அறுந்திடும் நம் -ஏக்கம்

ஐ-க்கியத்தோடு வாழும் சமூகம்
எவராலும் வரும் இன்னல் -ஐந்தை

ஒ-கரம் தோகை விரித்தாடுவது போல்
உள்ளத்தை கொண்டிருந்தால் -ஒளிர்வு

ஓ-சம் ,ஓசை ,ஒச்சம் என்பவை புகழாகும்
புகழுக்கு மயங்காதவன் சிறந்த -ஓங்கல்

ஔ-வியம் கொள்வோர் இழந்திடுவர்
இன்பத்தை என்கிறார் என் பாட்டி -ஔவை

அன்புடன் அகர தமிழன்
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:40 pm

மயிலே அயில் கண்டேன்
------------------------------
மயிலின் அயில் கண்டேன் உன்னில்
குயிலின் ஓசை கேட்டேன் உன் குரலில்
அரணி மதிமுக அழகு தேவதையே -நீ
அருகில் வருகையில் ...
அகங்கையின் வாசனை அடிக்குதடி ....
அலங்காரம் உனக்கு தேவையில்லை
அயன் படைப்பில் அதிசயம் நீ ....!!!

அலந்தி போல் கண் சிமிட்டுகிறாய்
அவதிப்படும் என் மனதை அறிவாயோ
குறத்தியே உன் மீது எனக்கு அருத்தி
அரிமா யான் உன் மீது விழுந்தேன்
அநுக்கிரகம் கொண்டு என் காதலை
ஏற்றுடு ,காத்திடு ,நடத்திடு ........!!!



அயல் ;அழகு அரணி ; சூரியன் அலங்கை ;துளசி
அலத்தி ; மின்மினி அருத்தி ;ஆசை
அரிமா ;ஆண்சிங்கம்
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:41 pm

அகரமே அகிலம்
---------------------

அழகு மொழி என் தமிழ் மொழி
அகக்கண் மேம்பட உதவும் மொழி
அகங்கை அளவுக்குள் அடங்கிடாத மொழி
அகஸ்மாத்து போல் வந்ததல்ல என் மொழி
அகடவிகடம் நிறைந்தமொழி
அகண்டாகாரம் போல் விரிந்த மொழி
அகத்திணை இன்புற வைக்கும் இன்பமொழி
அகந்தையும் சிறுது கொண்ட என் மொழி
அக்கரம் அழகென வரையும் மொழி
அங்கணன் அங்கணியை வாழ்த்தும் மொழி


அன்புடன் - அகர தமிழன்
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:42 pm

என் காதல் சித்தியில் முடியும் ...!!!
----------------------------------

உன் அஞ்சல் கண்டு நான் அஞ்சல் ....
வீணையில் விழுந்த அங்குலியானேன் ....
அச்சன் கண்டுவிட்டார் உன் அஞ்சலை....
அஞ்சலை அஞ்சல் இல்லாமல் பறித்தார் ....
அக்கினி தாண்டவம் ஆடினார் அச்சன் ....
செய்வதறியாது அச்சுதனை மன்றாடினேன்.....
அச்சுதன் என் முழுமுதல் கடவுள் .....
அச்சுதன் என் கண்கண்ட காதலன் ......
நிச்சயம் என் காதல் சித்தியில் முடியும் ...!!!

அங்குலி -விரல் அச்சன் -தந்தை

நன்றியுடன் அகர தமிழன்
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:48 pm

இங்கிதமாய் வார்த்தை சொல்பவளே
------------------------------------
இகலோகத்தில் எனக்காக பிறந்தவளோ ..?
இசைமடந்தையின் வரம் பெற்றவளோ ...?
இங்கிதமாய் வார்த்தை சொல்பவளே ....
இகனியின் முகத்தை கொண்டவளே .....
இருனையில் கண்டிராத எழிழையே ....
இளமையின் துடிப்பை தூண்டி ....
இளவயது காளை - என்னைமயக்கி
இரவு பகலாய் சிந்திக்கவைத்தவளே....
இச்சையால் ஒரு வார்த்தை சொல் ...
இசப்பிடாதே என் ஏக்கத்தை கண்ணே ....!!!


****************************************
சொற்கள்

இங்கிதமாய்- இனிமையாய்
இகனியின்- வெற்றிலையின்
இருனையில்- சுற்றத்தில்
இசப்பிடாதே- ஏமாற்றிடாதே

அன்புடன் ;அகர தமிழன்
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 9:49 pm

ஈன்றவர் மதிப்போம் காதலில்
------------------------------
ஈசன் யானும் ஈசுவரி நீயும்
ஈருயிர் ஊருயிரானோம் உள்ளத்தால்
ஈசல் போல் வாழ்வல்ல நம் காதல்
ஈங்கு போற்றும் காதலராவோம்
ஈதை வரும் ...
ஈனதையும் தோன்றும் ...
ஈடனை அடக்கி வெல்வோம்...
ஈகையே நம் அன்புதான் உயிரே ,,,
ஈகம் போல் வீசும் நம் காதல் ...
ஈன்றவர் மதிப்போம் காதலில் ..
ஈங்கில் தோற்றதில்லை காதல்


ஈகம் ;சந்தன மரம் ஈங்கிசை ;இம்சை
ஈதை ; துன்பம் ஈடன் ;ஆசை
ஈனதை ; இழிவு ;ஈங்கு ;இவ்வுலகம்

அன்புடன் அகர தமிழன்
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by அகர தமிழன் Thu Mar 06, 2014 10:04 pm

உதிர்ந்து போனது நம் காதல்
----------------------------
உள்ளத்தில் உந்தல் கொண்டு
உதிரத்தில் துடிப்பை கொன்டு
உயிரே உன்னிடம் காதல் கொண்டேன்
உன்னையே சுற்றி சுற்றி வந்தேன்

உகந்தார் சொல் கேட்கவில்லை
உற்றார் சொல் மதிக்கவில்லை
உலகமே நீ தான் என்று காதலித்தேன்
உண்ணா நோன்புகூட இருந்தேன்

உகாமை அன்பை பொழிந்தேன்
உக்கிரமாக காதல் கொண்டேன்
உதயன் உதயமாகி வருவதுபோல்
உன் வரவுக்காய் காத்திருந்தேன்
உதிர்ந்து போனது நம் காதல்

அன்புடன் அகர தமிழன்
அகர தமிழன்
அகர தமிழன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

Back to top Go down

அகர தமிழன் கவிதைகள்  Empty Re: அகர தமிழன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum