Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மலையின் மறுபக்கம்
Page 1 of 1 • Share
மலையின் மறுபக்கம்
ஒரு மாபெரும் நதி ஒரு உயரமான மலையருகே பாய்ந்து வந்தது. ஆனால்
மலையை தாண்டி அதனால் செல்ல முடியவில்லை. வெறுப்படைந்த நதி
மலையின் எல்லா பக்கங்களிலும் அடிக்க ஆரம்பித்தது. வானளாவி உயர்ந்து நின்ற பழம்பெரும் மலை நதியின் பயத்தையும், எரிச்சலையும் புரிந்துகொண்டது. கடல்போல பாய்ந்து கொண்டிருந்த நதி தன்னுடைய தனித்தன்மையை இழந்து விடுவோம் என்று பயந்தது. அந்த மலை நதியிடம் தினமும் என்மேல் வீசுகின்ற காற்றானது, உன்னை என் அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லட்டும் என்றது. உடனே நதியும் காற்றிடம் தன்னை மலையின் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியது. காற்று உடனே ஒத்துக் கொண்டது. ஆனால் அதற்கு உன் தீவிரமான உழைப்பு தேவை என்று காற்று கூறியது. என்னுடைய குறிக்கோளை அடைய நான் கடுமையாக உழைப்பேன். மலையின் அடுத்த பக்கத்திற்கு சென்று, என்னுடைய பிரயாணத்தை தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று நதி கூறியது.
ஒரு கடைசி எச்சாரிக்கை சொல்லுகிறேன். மலையின் அடுத்த பக்கத்திற்கு சென்ற பின்னர் அது உனக்கு வேறு ஒரு புதிய உலகமாக இருக்கும். புதுவிதமான மக்களை சந்திக்க வேண்டும். நீயும் வேறு புதிய பெயாரில் அழைக்கப்படுவாய் என்று காற்று கூறியது. உடனே நதி என்ன, நான் என்னுடைய தனித்தன்மையை இழந்து விடுவேனோ அப்படியென்றால் நான் மலையின் அடுத்த பக்கத்தில் என்னவாக இருப்பேன்! உன்னிடம் சரணடைந்து என்னையே ஒப்புக்கொடுப்பது எனக்குப் பயமாக இருக்கிறது. காற்றே, என்னை எங்கே அழைத்து செல்வாய்டூ நீ என்னை விடுதலை செய்வாயோ மாட்டாயோ எனக்கு புதியதொரு வாழ்க்கை கிடைக்குமா என்று நதி வினவியது. அதற்கு காற்று, நீ என்மேல் முழு நம்பிக்கை வைத்து என்னிடம் சரணடைய வேண்டும். நீ மலையின் அடுத்த பக்கத்தில் என்னவாக இருப்பாய் என்பது ஒரு புதிர். ஆனால் நீ தண்ணீராக எல்லாருக்கும் பயன்படுவாய் என்பதை மட்டும் என்னால் கூற முடியும் என்று கூறி, காற்று வீசியது. இறுதியில் நதி முழு நம்பிக்கையுடன் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்து தன்னை காற்றிடம் அர்ப்பணித்தது. காற்று தன் முழு சக்தியுடன் நதியை மலையின் அடுத்த பக்கத்திற்கு சுமந்து சென்று நதியை மலையிலிருந்து பாயும்படி செய்தது. என்ன ஆச்சாரியம்! கீழே பாய்ந்து கொண்டிருந்த நதி இப்பொழுது அழகான நீர் வீழ்ச்சியாக மலையின் மேலேயிருந்து கொட்ட ஆரம்பித்தது. தன்னுடைய பயத்தையும், ஆணவத்தையும் மேற்கொண்டு விட்டு, காற்றிடம் சரணடைந்ததால்தான் நதி இப்பொழுது நீர்வீழ்ச்சியாக மாறியது. சந்தோமூமாக துள்ளி மலை மேலிருந்து பாய்ந்து விழுந்தது. மனுகுலத்திற்கு பயன்படும் தன்மையை மட்டும் அது இழக்கவேயில்லை. காற்றிடம் சரணடைந்து உயிர் பிழைத்தது. இதற்காகத்தான் அது இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டது.
துவாபர யுகத்தில் இறைவன் கிருஷ்ணராக தோன்றினார். அவர் எத்தனை கதா பாத்திரங்களாக நடித்தார் என்பதை நாம் நினைத்து பார்ப்போம். இளம்பிராயத்தில் காளிங்கன்மேல் நர்த்தனம் புரிந்து அதைக் கொன்றார். இந்திரனுக்கு விழா எடுக்காததால் ஒரு மாதம் மழை பெய்தபோது, கோவர்த்தனகிரி என்ற மலையை தன் சுண்டு விரலினால் குடைபோல் பிடித்து, மக்கள் எல்லாரையும் காப்பாற்றினார்.
ஆயர்பாடியில் பசுக்களை மேய்த்தார். அப்பொழுது அவர் பசுக்களை மேய்ப்பவனாக நடித்தார். சிறு பிராயத்தில் வெண்ணெயைத் திருடி, வறுமையில் வாடிய தன் நண்பர்களுக்கு எல்லாம் கொடுத்து, வெண்ணைய் திருடனாக நடித்தார். மகாபாரத யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் து]துவனாக சென்றார். மகாபாரத யுத்தத்தின்போது அர்ஷக்ஷனனுக்கு தேரோட்டியானார். கோபியர்களுக்கு காதலன், பாமா, ருக்மணிக்கு கணவன், மேலும் திரௌபதிக்கு வஸ்திரம் கொடுத்தவர். குசேலனின் நண்பன் என பல கதாபாத்திரங்களானார். இப்படி நாம் கூறிக்கொண்டே போகலாம். “இறைவன் நம்மை அநேக வடிவங்களாக்க வேண்டுமென விரும்புகிறார்” என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார்.
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் இரண்டாவது மகன் திரு. தேவாசீர் லாறி அவர்கள் முதலில் தன் தந்தைக்கு மனுஜோதி ஆசிரமத்தில் உதவி புரிந்தார். எவ்வாறுடூ ஆசிரமத்திற்கு தேவையான தானியம், அரிசி, பருப்பு, காய்கறிகள், பால் போன்றவற்றை வாங்கி வருவதும், தன் தந்தைக்கு கார் ஓட்டுபவராகவும் உதவி செய்தார். காலப்போக்கில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒரு நாள் திரு. தேவாசீர் லாறி அவர்களை அழைத்து, நீ இறை பிரச்சாரம் செய்ய செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார். அதாவது மலையின் அடுத்த பக்கம் செல்ல வேண்டும் என்பதாகும். இப்போது திரு. தேவாசீர் லாறியின் மனம் மிகவும் வேதனையுற்றது. என்னால் பேச முடியாது. நான் பிரச்சாரம் செய்ய செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார். ஏன் அவ்வாறு கூறினார்டூ என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிறக்கும் போதே திரு. தேவாசீர் லாறி அவர்களின் வாயை சரியாக திறக்க முடியாது. 12 வருடங்களுக்கு அவருடைய தாயார் அவருக்கு கஞ்சி மற்றும் நீர் ஆகாரம் மாத்திரமே கொடுத்து வந்தார். அமரிக்காவிலிருந்து நிபுணர் ஒருவர் வந்து, அறுவை சிகிச்சை செய்த பின், அவரால் வாயை முழுமையாக திறந்து பேச முடிந்தது, உணவு உண்ண முடிந்தது.
ஒரு வருட காலம் தன் தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படியாததால் அவர் நிம்மதியை இழந்தார். தந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவரால் இருக்க முடியவில்லை. ஆகவே தன்னுடைய பயத்தையும் கூச்ச சுபாவத்தையும், து]ர எறிந்துவிட்டு, தந்தைக்குக் கீழ்ப்படிந்து சரணடைய முடிவு செய்தார். ஒரு வருடம் கழித்து தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படிந்து பிரச்சாரம் செய்ய சென்றார். அதற்குப் பின் இறைவன் அவருக்கென்று திட்டமிட்டிருந்த அநேக பணிகளை செய்தார். எத்தனையோ முறை உலகெங்கும் சுற்றி பிரச்சாரம் செய்தார். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் புகழை உயர்த்தும் விதமாக அவரின் போதனைகளை அநேக புஸ்தகங்களாக அச்சடித்தார். அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை “கிழக்கே தோன்றிய மின்னல்” என்ற படமாக எடுத்தார். “மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம்” என்ற படத்தையும் இயக்கி தயாரித்து வெளியிட்டார். இப்படி பல சாதனைகளை செய்தார். இவை எல்லாம் எப்படி சாத்தியமாயிற்றுடூ அவர் தன்னுடைய பயத்தை விட்டுவிட்டு தன்னுடைய தந்தைக்கு சரணடைந்தார். தன் தந்தைக்கு கார் ஓட்டுவதையும், மனுஜோதி ஆசிரமத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவது மட்டுமே தன்னுடைய பணி என்று நினைத்துக்கொண்டார். ஆனால் இறைவன் அவருக்கு வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார், அதாவது ஒரு மாற்றத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த திட்டத்தை செய்ய தைரியம், விசுவாசம் தேவைப்படுகிறது. அந்த திட்டத்தை செய்வேன் என்று அவர் முடிவு செய்தபோது, முதலாவதாக அவருக்கு நிம்மதி கிடைத்தது. அதன்பின்னர் தண்ணீர் உயர உயர எவ்வாறு தாமரை மலரும் உயருகின்றதோ, அவ்வாறே திரு. தேவாசீர் லாறி அவர்கள் தன் தந்தையின் புகழை உயர்த்த ஆரம்பித்தபோது, ஜமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவரை உயர்த்தினார். எல்லாருக்கும் உதாரணமாக அவர் வாழ்ந்தார்.
நதியாக ஓடிக் கொண்டிருந்தாலும், நீர் வீழ்ச்சியாக கொட்டினாலும் தண்ணீர் என்ற அதின் சாராம்சம் மாறவில்லை. ஆனால் அதின் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாற்றமும் இறைவனால் விதிக்கப்பட்டதே. மனிதர்களாகிய நம்முடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துபவன் இறைவனே. அவனிடம் சரணடைந்தால்தான் நாம் மறுபடியும் பிறருக்குப் பயன்படும் விதமாக வாழலாம். இறைவன் நம்மை வெவ்வேறு விதமாக வடிவமைக்க முனைகிறார். நாம் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாற்றம் வரும். ஒரு சவால் வரும்போது நாம் அதை ஏற்றுக்கொண்டால், அதின் பயனை நாம் மட்டுமல்ல எல்லாரும் பெறுவார்கள். மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக இருக்கின்றது. அதை அறிந்துகொண்டு நம் மனதை மாற்றத்திற்கு இன்றே பக்குவப்படுத்தி கொள்வோமாக!
http://www.manujothi.com/
மலையை தாண்டி அதனால் செல்ல முடியவில்லை. வெறுப்படைந்த நதி
மலையின் எல்லா பக்கங்களிலும் அடிக்க ஆரம்பித்தது. வானளாவி உயர்ந்து நின்ற பழம்பெரும் மலை நதியின் பயத்தையும், எரிச்சலையும் புரிந்துகொண்டது. கடல்போல பாய்ந்து கொண்டிருந்த நதி தன்னுடைய தனித்தன்மையை இழந்து விடுவோம் என்று பயந்தது. அந்த மலை நதியிடம் தினமும் என்மேல் வீசுகின்ற காற்றானது, உன்னை என் அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லட்டும் என்றது. உடனே நதியும் காற்றிடம் தன்னை மலையின் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியது. காற்று உடனே ஒத்துக் கொண்டது. ஆனால் அதற்கு உன் தீவிரமான உழைப்பு தேவை என்று காற்று கூறியது. என்னுடைய குறிக்கோளை அடைய நான் கடுமையாக உழைப்பேன். மலையின் அடுத்த பக்கத்திற்கு சென்று, என்னுடைய பிரயாணத்தை தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று நதி கூறியது.
ஒரு கடைசி எச்சாரிக்கை சொல்லுகிறேன். மலையின் அடுத்த பக்கத்திற்கு சென்ற பின்னர் அது உனக்கு வேறு ஒரு புதிய உலகமாக இருக்கும். புதுவிதமான மக்களை சந்திக்க வேண்டும். நீயும் வேறு புதிய பெயாரில் அழைக்கப்படுவாய் என்று காற்று கூறியது. உடனே நதி என்ன, நான் என்னுடைய தனித்தன்மையை இழந்து விடுவேனோ அப்படியென்றால் நான் மலையின் அடுத்த பக்கத்தில் என்னவாக இருப்பேன்! உன்னிடம் சரணடைந்து என்னையே ஒப்புக்கொடுப்பது எனக்குப் பயமாக இருக்கிறது. காற்றே, என்னை எங்கே அழைத்து செல்வாய்டூ நீ என்னை விடுதலை செய்வாயோ மாட்டாயோ எனக்கு புதியதொரு வாழ்க்கை கிடைக்குமா என்று நதி வினவியது. அதற்கு காற்று, நீ என்மேல் முழு நம்பிக்கை வைத்து என்னிடம் சரணடைய வேண்டும். நீ மலையின் அடுத்த பக்கத்தில் என்னவாக இருப்பாய் என்பது ஒரு புதிர். ஆனால் நீ தண்ணீராக எல்லாருக்கும் பயன்படுவாய் என்பதை மட்டும் என்னால் கூற முடியும் என்று கூறி, காற்று வீசியது. இறுதியில் நதி முழு நம்பிக்கையுடன் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்து தன்னை காற்றிடம் அர்ப்பணித்தது. காற்று தன் முழு சக்தியுடன் நதியை மலையின் அடுத்த பக்கத்திற்கு சுமந்து சென்று நதியை மலையிலிருந்து பாயும்படி செய்தது. என்ன ஆச்சாரியம்! கீழே பாய்ந்து கொண்டிருந்த நதி இப்பொழுது அழகான நீர் வீழ்ச்சியாக மலையின் மேலேயிருந்து கொட்ட ஆரம்பித்தது. தன்னுடைய பயத்தையும், ஆணவத்தையும் மேற்கொண்டு விட்டு, காற்றிடம் சரணடைந்ததால்தான் நதி இப்பொழுது நீர்வீழ்ச்சியாக மாறியது. சந்தோமூமாக துள்ளி மலை மேலிருந்து பாய்ந்து விழுந்தது. மனுகுலத்திற்கு பயன்படும் தன்மையை மட்டும் அது இழக்கவேயில்லை. காற்றிடம் சரணடைந்து உயிர் பிழைத்தது. இதற்காகத்தான் அது இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டது.
துவாபர யுகத்தில் இறைவன் கிருஷ்ணராக தோன்றினார். அவர் எத்தனை கதா பாத்திரங்களாக நடித்தார் என்பதை நாம் நினைத்து பார்ப்போம். இளம்பிராயத்தில் காளிங்கன்மேல் நர்த்தனம் புரிந்து அதைக் கொன்றார். இந்திரனுக்கு விழா எடுக்காததால் ஒரு மாதம் மழை பெய்தபோது, கோவர்த்தனகிரி என்ற மலையை தன் சுண்டு விரலினால் குடைபோல் பிடித்து, மக்கள் எல்லாரையும் காப்பாற்றினார்.
ஆயர்பாடியில் பசுக்களை மேய்த்தார். அப்பொழுது அவர் பசுக்களை மேய்ப்பவனாக நடித்தார். சிறு பிராயத்தில் வெண்ணெயைத் திருடி, வறுமையில் வாடிய தன் நண்பர்களுக்கு எல்லாம் கொடுத்து, வெண்ணைய் திருடனாக நடித்தார். மகாபாரத யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் து]துவனாக சென்றார். மகாபாரத யுத்தத்தின்போது அர்ஷக்ஷனனுக்கு தேரோட்டியானார். கோபியர்களுக்கு காதலன், பாமா, ருக்மணிக்கு கணவன், மேலும் திரௌபதிக்கு வஸ்திரம் கொடுத்தவர். குசேலனின் நண்பன் என பல கதாபாத்திரங்களானார். இப்படி நாம் கூறிக்கொண்டே போகலாம். “இறைவன் நம்மை அநேக வடிவங்களாக்க வேண்டுமென விரும்புகிறார்” என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார்.
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் இரண்டாவது மகன் திரு. தேவாசீர் லாறி அவர்கள் முதலில் தன் தந்தைக்கு மனுஜோதி ஆசிரமத்தில் உதவி புரிந்தார். எவ்வாறுடூ ஆசிரமத்திற்கு தேவையான தானியம், அரிசி, பருப்பு, காய்கறிகள், பால் போன்றவற்றை வாங்கி வருவதும், தன் தந்தைக்கு கார் ஓட்டுபவராகவும் உதவி செய்தார். காலப்போக்கில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒரு நாள் திரு. தேவாசீர் லாறி அவர்களை அழைத்து, நீ இறை பிரச்சாரம் செய்ய செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார். அதாவது மலையின் அடுத்த பக்கம் செல்ல வேண்டும் என்பதாகும். இப்போது திரு. தேவாசீர் லாறியின் மனம் மிகவும் வேதனையுற்றது. என்னால் பேச முடியாது. நான் பிரச்சாரம் செய்ய செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார். ஏன் அவ்வாறு கூறினார்டூ என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிறக்கும் போதே திரு. தேவாசீர் லாறி அவர்களின் வாயை சரியாக திறக்க முடியாது. 12 வருடங்களுக்கு அவருடைய தாயார் அவருக்கு கஞ்சி மற்றும் நீர் ஆகாரம் மாத்திரமே கொடுத்து வந்தார். அமரிக்காவிலிருந்து நிபுணர் ஒருவர் வந்து, அறுவை சிகிச்சை செய்த பின், அவரால் வாயை முழுமையாக திறந்து பேச முடிந்தது, உணவு உண்ண முடிந்தது.
ஒரு வருட காலம் தன் தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படியாததால் அவர் நிம்மதியை இழந்தார். தந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவரால் இருக்க முடியவில்லை. ஆகவே தன்னுடைய பயத்தையும் கூச்ச சுபாவத்தையும், து]ர எறிந்துவிட்டு, தந்தைக்குக் கீழ்ப்படிந்து சரணடைய முடிவு செய்தார். ஒரு வருடம் கழித்து தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படிந்து பிரச்சாரம் செய்ய சென்றார். அதற்குப் பின் இறைவன் அவருக்கென்று திட்டமிட்டிருந்த அநேக பணிகளை செய்தார். எத்தனையோ முறை உலகெங்கும் சுற்றி பிரச்சாரம் செய்தார். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் புகழை உயர்த்தும் விதமாக அவரின் போதனைகளை அநேக புஸ்தகங்களாக அச்சடித்தார். அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை “கிழக்கே தோன்றிய மின்னல்” என்ற படமாக எடுத்தார். “மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம்” என்ற படத்தையும் இயக்கி தயாரித்து வெளியிட்டார். இப்படி பல சாதனைகளை செய்தார். இவை எல்லாம் எப்படி சாத்தியமாயிற்றுடூ அவர் தன்னுடைய பயத்தை விட்டுவிட்டு தன்னுடைய தந்தைக்கு சரணடைந்தார். தன் தந்தைக்கு கார் ஓட்டுவதையும், மனுஜோதி ஆசிரமத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவது மட்டுமே தன்னுடைய பணி என்று நினைத்துக்கொண்டார். ஆனால் இறைவன் அவருக்கு வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார், அதாவது ஒரு மாற்றத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த திட்டத்தை செய்ய தைரியம், விசுவாசம் தேவைப்படுகிறது. அந்த திட்டத்தை செய்வேன் என்று அவர் முடிவு செய்தபோது, முதலாவதாக அவருக்கு நிம்மதி கிடைத்தது. அதன்பின்னர் தண்ணீர் உயர உயர எவ்வாறு தாமரை மலரும் உயருகின்றதோ, அவ்வாறே திரு. தேவாசீர் லாறி அவர்கள் தன் தந்தையின் புகழை உயர்த்த ஆரம்பித்தபோது, ஜமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவரை உயர்த்தினார். எல்லாருக்கும் உதாரணமாக அவர் வாழ்ந்தார்.
நதியாக ஓடிக் கொண்டிருந்தாலும், நீர் வீழ்ச்சியாக கொட்டினாலும் தண்ணீர் என்ற அதின் சாராம்சம் மாறவில்லை. ஆனால் அதின் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாற்றமும் இறைவனால் விதிக்கப்பட்டதே. மனிதர்களாகிய நம்முடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துபவன் இறைவனே. அவனிடம் சரணடைந்தால்தான் நாம் மறுபடியும் பிறருக்குப் பயன்படும் விதமாக வாழலாம். இறைவன் நம்மை வெவ்வேறு விதமாக வடிவமைக்க முனைகிறார். நாம் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாற்றம் வரும். ஒரு சவால் வரும்போது நாம் அதை ஏற்றுக்கொண்டால், அதின் பயனை நாம் மட்டுமல்ல எல்லாரும் பெறுவார்கள். மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக இருக்கின்றது. அதை அறிந்துகொண்டு நம் மனதை மாற்றத்திற்கு இன்றே பக்குவப்படுத்தி கொள்வோமாக!
http://www.manujothi.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மலையின் செங்குத்தான பகுதியில் அமைந்த நம்பமுடியாத கட்டிடங்கள்
» ஒரு ஓவியனின் மறுபக்கம்
» கடாபியின் மறுபக்கம்......
» மத்தளத்தின் மறுபக்கம்
» உலகையே அசைத்தவரின் மறுபக்கம்!
» ஒரு ஓவியனின் மறுபக்கம்
» கடாபியின் மறுபக்கம்......
» மத்தளத்தின் மறுபக்கம்
» உலகையே அசைத்தவரின் மறுபக்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|