Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
போதைள் ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!
Page 1 of 1 • Share
போதைள் ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!
போதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!
போதை என்பதை குடிப்பழக்கத்தோடு மட்டும் நாம் சம்பந்தப்படுத்தி மிகையாக பார்ப்பதற்கு நமது வாழ்க்கை முறை நமக்கு போதித்திருக்கிறது. நாமறியாத எவ்வளவோ விசயங்களில் நமக்குத் தெரியாமலேயே நாம் போதைக்குட்பட்டு அடிமையாகிக் கிடப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?
வாழ்க்கை சுழற்சியில் அறியாமல் நம்மை அழிக்கும் போதைகளைப் பற்றி எடுத்தியம்பும் இக்கட்டுரையை வாசியுங்கள் விபரமறிவீர்கள்.
வெகு நாள் கழித்து, அவரை சந்தித்தேன். "அண்ணே, எப்படி இருக்கீங்க. இப்போ நல்லா கண் பார்வை தெரியுதா" என்று கேட்டேன். "பரவாயில்லே" என்றார் கண்களை குறுக்கி பார்த்தப்படி. உண்மையிலேயே, அவர் அவ்விதம் பார்ப்பது மனதை பிசைவதாகவும், மிக மிக வருத்தமாகவும் இருந்தது. எல்லாமே நாமே தேடி கொள்கிற சிக்கல்கள் தான். நாற்பதை கூட அவர் தொடவில்லை. சுயதொழிலில் நிறைய சம்பாதித்தார். நிறைய மது அருந்தினார். "என்னை போல ஒருத்தனாலும் குடிக்க முடியாது" என்பது போல் குடிப்பார்.
குடிக்கு முழுமையாக அடிமையானார். அவருக்கு சர்க்கரை நோயும் இருந்தது. விளைவு. கண் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தார். உடனடியாக சித்த மருத்துவத்தை நாடினார். பல வித சிகிச்சைக்கு பிறகு மெல்ல, மெல்ல பார்வை இழப்பு தடுக்கப்பட்டது. போதைக்கு அடிமையானதன் விளைவு, அவர் மிக பெரிய அனர்த்தங்களை எல்லாம் சந்திக்க நேர்ந்தது.
இன்னுமொரு நண்பர் இருக்கிறார். லட்சாதிபதி கனவில், லாட்டரி சீட்டாக வாங்கி குவிக்கிறார். லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும், அவருக்கு லாட்டரி சீட்டு கிடைப்பதில் எந்த தடையும் இல்லை. எப்போதோ கிடைக்கும் ஆயிரம் ரூபாய் பணத்திற்காக - அன்றாடம் ஐம்பது, நூறு இழக்கிறார்.
தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். அதிலிருந்து மீளவும் முடியாமல் தவிக்கின்றனர். "நீங்கள் எதற்கு அடிமை" என்ற கேள்வியுடன் யூத்புல் விகடனில் வந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அதை வாசித்த பாதிப்பிலும், அனுபவம் தந்த பாதிப்பிலும் இந்த பதிவை எழுதுகிறேன்.
இன்றைய சூழலில் எதற்கும் அடிமையாகாமல் வாழுதல் என்பது மிக, மிக கஷ்டமோ என்று தோன்றுகிறது. அதீத பக்தி கூட ஒரு வித போதை, அது கூட ஒருவனது வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்க கூடும் என்று சொல்லலாம். யோசிக்கையில் அது உண்மையானதாகவும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. மொபைல், கணிப்பொறி, தொலைக்காட்சி என்று நம்மால் கையாளப்படும் பொருட்களே, ஒரு கட்டத்தில் எஜமானனாகி அவை - நம்மை அடிமைகளாக்கி விடுகின்றன.
ஒரு சமயத்தில், தினசரி சினிமா பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் பலருக்கு போதையாக இருந்தது. அன்று சினிமா என்கிற ஒரே ஒரு பொழுதுபோக்கு போதை. இன்று பல பொழுதுபோக்கு போதை. பலர் இறைச்சி உணவுக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். தினசரி உணவில் இறைச்சி இல்லை என்றால் எதையோ இழந்தது போல் ஆகி விடுவார்கள். எப்போதும் அழகான, ஆடம்பரமான உடை உடுத்தி கொள்ள வேண்டும் என்பது கூட ஒரு பழக்க போதை.
கண்ணுக்கு தெரிந்து, மனிதர்களை அடிமைப்படுத்தும் பழக்கம் சிலவென்றால், கண்ணுக்கு புலப்படாத பல பழக்கத்திற்கு நாம் அடிமைகளாக தான் இருக்கிறோம். நவீன உலகம், புதிய புதிய வசதிகளை தருவதோடு நில்லாமல், புது விதமான போதைகளையும் மனிதனுக்கு தந்து, அவனை ஏதாவது ஒன்றுக்கு அடிமைப்படுத்துவதில் முனைப்பாய் உள்ளன என்றால் மிகையில்லை. நாம் பொழுதுபோக்குக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்... நம் குழந்தைகள் இந்த விஷயத்தில் - நாம் எட்டடி பாய்ந்தால் அவர்கள் பதினாறடி பாய்கிறார்கள்.
எனது நண்பரின் மனைவி, தன் குழந்தைக்கு டி.வி பார்த்தப்படியே பாடம் சொல்லி கொடுப்பாராம். அவர் டி.விக்கு அடிமை. அப்படி இருக்கையில் குழந்தைக்கு நல்லது, கெட்டது சொல்லும் தகுதியையே நாம் இழந்து விடுகிறோமே. எப்படி அடிமைகள், சுயமாக சிந்திக்காதவரை அடிமைத்தனத்திலிருந்து மீள முடியாதோ, அதே போல் போதை அடிமைகளுக்கும் பொருந்தும்.
நம் பழக்கங்களை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று, பிறரை பாதிக்காத நம் பழக்க வழக்கங்கள். நம்மை மட்டுமே பலவீனப்படுத்தக் கூடியவை. மற்றது. நம்மோடு சேர்ந்து பிறரையும். குடியை போன்ற சில பழக்கங்கள், சம்பந்தப்பட்டவரை தாண்டி அவரை சார்ந்துள்ளவரை யும் பலவீனப்படுத்துகின்றன. இம் மாதிரியான பல அம்சங்கள் நிம்மதியை தொலைக்க காரணமாகின்றன.
எந்த பழக்கங்களாலும்- செலவும், நிம்மதியும் போகாத வரை பிரச்சனை இல்லை. ஒரு பழக்கம் நம்மை நான்கு படி மேலேற்றும் என்றால், அப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதில் தவறில்லை. அதே நேரம், அந்த பழக்கம் குப்புற தள்ளும் என்றால், குறைந்த பட்ச இழப்புகளுடனாவது வெளியே வந்து விடுவது தானே நல்லது.
http://www.friendstamilchat.com/
போதை என்பதை குடிப்பழக்கத்தோடு மட்டும் நாம் சம்பந்தப்படுத்தி மிகையாக பார்ப்பதற்கு நமது வாழ்க்கை முறை நமக்கு போதித்திருக்கிறது. நாமறியாத எவ்வளவோ விசயங்களில் நமக்குத் தெரியாமலேயே நாம் போதைக்குட்பட்டு அடிமையாகிக் கிடப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?
வாழ்க்கை சுழற்சியில் அறியாமல் நம்மை அழிக்கும் போதைகளைப் பற்றி எடுத்தியம்பும் இக்கட்டுரையை வாசியுங்கள் விபரமறிவீர்கள்.
வெகு நாள் கழித்து, அவரை சந்தித்தேன். "அண்ணே, எப்படி இருக்கீங்க. இப்போ நல்லா கண் பார்வை தெரியுதா" என்று கேட்டேன். "பரவாயில்லே" என்றார் கண்களை குறுக்கி பார்த்தப்படி. உண்மையிலேயே, அவர் அவ்விதம் பார்ப்பது மனதை பிசைவதாகவும், மிக மிக வருத்தமாகவும் இருந்தது. எல்லாமே நாமே தேடி கொள்கிற சிக்கல்கள் தான். நாற்பதை கூட அவர் தொடவில்லை. சுயதொழிலில் நிறைய சம்பாதித்தார். நிறைய மது அருந்தினார். "என்னை போல ஒருத்தனாலும் குடிக்க முடியாது" என்பது போல் குடிப்பார்.
குடிக்கு முழுமையாக அடிமையானார். அவருக்கு சர்க்கரை நோயும் இருந்தது. விளைவு. கண் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தார். உடனடியாக சித்த மருத்துவத்தை நாடினார். பல வித சிகிச்சைக்கு பிறகு மெல்ல, மெல்ல பார்வை இழப்பு தடுக்கப்பட்டது. போதைக்கு அடிமையானதன் விளைவு, அவர் மிக பெரிய அனர்த்தங்களை எல்லாம் சந்திக்க நேர்ந்தது.
இன்னுமொரு நண்பர் இருக்கிறார். லட்சாதிபதி கனவில், லாட்டரி சீட்டாக வாங்கி குவிக்கிறார். லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும், அவருக்கு லாட்டரி சீட்டு கிடைப்பதில் எந்த தடையும் இல்லை. எப்போதோ கிடைக்கும் ஆயிரம் ரூபாய் பணத்திற்காக - அன்றாடம் ஐம்பது, நூறு இழக்கிறார்.
தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். அதிலிருந்து மீளவும் முடியாமல் தவிக்கின்றனர். "நீங்கள் எதற்கு அடிமை" என்ற கேள்வியுடன் யூத்புல் விகடனில் வந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அதை வாசித்த பாதிப்பிலும், அனுபவம் தந்த பாதிப்பிலும் இந்த பதிவை எழுதுகிறேன்.
இன்றைய சூழலில் எதற்கும் அடிமையாகாமல் வாழுதல் என்பது மிக, மிக கஷ்டமோ என்று தோன்றுகிறது. அதீத பக்தி கூட ஒரு வித போதை, அது கூட ஒருவனது வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்க கூடும் என்று சொல்லலாம். யோசிக்கையில் அது உண்மையானதாகவும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. மொபைல், கணிப்பொறி, தொலைக்காட்சி என்று நம்மால் கையாளப்படும் பொருட்களே, ஒரு கட்டத்தில் எஜமானனாகி அவை - நம்மை அடிமைகளாக்கி விடுகின்றன.
ஒரு சமயத்தில், தினசரி சினிமா பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் பலருக்கு போதையாக இருந்தது. அன்று சினிமா என்கிற ஒரே ஒரு பொழுதுபோக்கு போதை. இன்று பல பொழுதுபோக்கு போதை. பலர் இறைச்சி உணவுக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். தினசரி உணவில் இறைச்சி இல்லை என்றால் எதையோ இழந்தது போல் ஆகி விடுவார்கள். எப்போதும் அழகான, ஆடம்பரமான உடை உடுத்தி கொள்ள வேண்டும் என்பது கூட ஒரு பழக்க போதை.
கண்ணுக்கு தெரிந்து, மனிதர்களை அடிமைப்படுத்தும் பழக்கம் சிலவென்றால், கண்ணுக்கு புலப்படாத பல பழக்கத்திற்கு நாம் அடிமைகளாக தான் இருக்கிறோம். நவீன உலகம், புதிய புதிய வசதிகளை தருவதோடு நில்லாமல், புது விதமான போதைகளையும் மனிதனுக்கு தந்து, அவனை ஏதாவது ஒன்றுக்கு அடிமைப்படுத்துவதில் முனைப்பாய் உள்ளன என்றால் மிகையில்லை. நாம் பொழுதுபோக்குக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்... நம் குழந்தைகள் இந்த விஷயத்தில் - நாம் எட்டடி பாய்ந்தால் அவர்கள் பதினாறடி பாய்கிறார்கள்.
எனது நண்பரின் மனைவி, தன் குழந்தைக்கு டி.வி பார்த்தப்படியே பாடம் சொல்லி கொடுப்பாராம். அவர் டி.விக்கு அடிமை. அப்படி இருக்கையில் குழந்தைக்கு நல்லது, கெட்டது சொல்லும் தகுதியையே நாம் இழந்து விடுகிறோமே. எப்படி அடிமைகள், சுயமாக சிந்திக்காதவரை அடிமைத்தனத்திலிருந்து மீள முடியாதோ, அதே போல் போதை அடிமைகளுக்கும் பொருந்தும்.
நம் பழக்கங்களை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று, பிறரை பாதிக்காத நம் பழக்க வழக்கங்கள். நம்மை மட்டுமே பலவீனப்படுத்தக் கூடியவை. மற்றது. நம்மோடு சேர்ந்து பிறரையும். குடியை போன்ற சில பழக்கங்கள், சம்பந்தப்பட்டவரை தாண்டி அவரை சார்ந்துள்ளவரை யும் பலவீனப்படுத்துகின்றன. இம் மாதிரியான பல அம்சங்கள் நிம்மதியை தொலைக்க காரணமாகின்றன.
எந்த பழக்கங்களாலும்- செலவும், நிம்மதியும் போகாத வரை பிரச்சனை இல்லை. ஒரு பழக்கம் நம்மை நான்கு படி மேலேற்றும் என்றால், அப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதில் தவறில்லை. அதே நேரம், அந்த பழக்கம் குப்புற தள்ளும் என்றால், குறைந்த பட்ச இழப்புகளுடனாவது வெளியே வந்து விடுவது தானே நல்லது.
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: போதைள் ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: போதைள் ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!
இன்றைய குழந்தைகள் ஐ-பாட் மற்றும் டாப்லெட் இல்லாமல் சோறு உண்பது இல்லை. இந்த உபகரணங்களில் கார்ட்டூன் , கேம்ஸ் மற்றும் ரைம்ஸ் போட்டால் தான் உணவு உள்ளே செல்லும். நண்டு சிண்டெல்லாம் இந்த உபகரணங்களை உபயோகிப்பது அதன் பெற்றோருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம் ஆனால் இவை நல்ல பழக்கங்களா?
இளம் பெற்றோர்களே சிந்திப்பீர்
ஸ்ரீமுகி
இளம் பெற்றோர்களே சிந்திப்பீர்
ஸ்ரீமுகி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|