தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்

View previous topic View next topic Go down

குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம் Empty குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்

Post by முழுமுதலோன் Mon Mar 10, 2014 3:06 pm

[size=15.555556297302246] [/size]இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்!


அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.


நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தால் தான் அங்கு அக்குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நினைப்பது சரியாய் இருக்காது, உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.


பொதுவாக பெற்றோர்கள் என்று எடுத்துக் கொண்டால் என்னத்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்தாலும் எல்லாக் குழந்தைகளும் அப்பெற்றோரின் அன்பை புரிந்து நடப்பதில்லை அதனாலேயே சில வீடுகளில் பிள்ளைகளாலே பிரச்சனைகள் சூழ்ந்துக் கொண்டு குடும்பமே அவதிக்குள்ளாவதும் உண்டு.அவ்வாறில்லாமல் பெற்றொரும் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளுதல் அவசியம் அதைப் போல் பிள்ளைகளும் வளர்ந்து ஆளானதும் பெற்றொர் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு பிடிக்கின்றதோ இல்லையோ அவற்றை பெரிதுபடுத்தி சண்டையிடாமல் அவர்கள் மனம் வருந்தும்படியான காரியங்கள் செய்வதை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.

இன்னும் சில குடும்பத்தில் புகுந்த வீடாரின் மூலமாக பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கும் அவ்வாறன தருணங்களில் அவர்களிடம் மனம்விட்டு பேச முயற்சி செய்வது நல்லது. இல்லாவிடில் கடிதம் மூலமாகக் கூட நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் இதனால் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொண்டு செயல்பட வழிவகுக்கும். இல்லாவிடில் பகைமை வளர்ந்து வளர்ந்துப் பெரிதாகி பிரச்சனைகள் தான் வளரும்.



சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது உறவுகளுக்குள் இருக்கும் பந்த பாசத்தை வேறோடு அறுத்துவிடும், குடும்பத்தில் பெரியவர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்த முடியாது அது நமது வேலையும் அல்ல, அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசி பெரிதுபடுத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை மாறாக அவர்களை மன்னித்து விடுவதுத் தான் சாலச் சிறந்தது. ஆனால் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.


குடும்பம் என்றாலே சிறிதேனும் சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான் என்று தோன்றுகின்றது அதிலிருந்து இதோ ஒரு சில யுத்திகள்:


1. குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களையும் தரிசிக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.


2. அடிக்கடி குடும்ப உறவுகளோடு ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும்.
அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம் இதுவும் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் தூண்டும்.


3. அதைப்போல் ஏதாவது புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.


4. மேலும் குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் கஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.


5. சில சமயத்தில் குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்க்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.


6. மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே வாழும் உறவுகளுக்குத் தான் பொருந்தும் என்பதில்லை வெளிநாடுகளில் சொர்ப்ப உறவினர்கள் அல்லது உறவுகளே இல்லாமல் தனித்து வாழும் குடும்பங்கள் கூட இவ்வாறான வழிகளைப் பின்பற்றி நட்புறவுகளைக்கூட மேன் மேலும் வளர்த்துக் கொள்ளலாம் இதனால் தனித்து வாழ்கிறோம் என்ற மனக்குறையும் அகலும்.


7. இவ்வாறு குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும் ஏன் அவை தோன்றவே தோன்றாது என்றும் கூறலாம், மேலும் இவ்வாறான வாழ்க்கை முறையில் வாழ்ந்துக்காட்டி, வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தியோடு அவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாயும் இருப்போம்.


www.nidur.info


Last edited by முழுமுதலோன் on Mon Mar 10, 2014 3:11 pm; edited 1 time in total (Reason for editing : பிழை)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம் Empty Re: குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்

Post by செந்தில் Mon Mar 10, 2014 8:07 pm

சூப்பர் 
 எற்றுக்கொள்கிறேன் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum