Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
Page 1 of 1 • Share
கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், ஸ்ரீரங்கம் இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் கோபுரமே நாட்டின் உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில் ஆசியாவிலேயே 2-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. எனினும் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜாகோபுரம் மட்டும் 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபிலா மடத்தால் முழுமை பெற்றது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மொத்தம் 4 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் கிழக்கில் அமைந்துள்ள கோபுரம் ராஜகம்பீரமாக 217 அடி உயரத்தில் தமிழகத்தின் 2-வது உயரமான கோபுரமாக திகழ்ந்து வருகிறது. இந்த கோபுரத்தின் அடித்தளம் கிரானைட் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் கிருஷ்ணதேவராயரால் கட்டத்துவங்கப்பட்டு, நாயக்கர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் 11 அடுக்குகள் கொண்ட 193 அடி உயர ராஜகோபுரம் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கோபுரமாக கருததப்பட்டது. இந்தக் கோயிலை பெருமைப்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ஆண்டாள் கோயிலின் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோயிலூர் உலகை தன் வலது காலால் அளந்த விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமனனுக்காக 'உலகளந்த பெருமாள் கோவில்' அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கோபுரம் 192 அடி உயரத்தில் தமிழகத்தின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயில் விக்ரகம் முன்புறத்தில் 16 கைகளுடன் சக்ரத்தாழ்வாராகவும், பின்பக்கத்தில் நரசிம்மர் வடிவத்திலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஏகாம்பரநாதர் கோயிலின் ராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இந்த கோபுரம் 192 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கோபுரம் கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீக்கிரையாகி 1967 வரை மொட்டையாய் பொலிவிழந்து நின்றது. பின்னர் 1963-ல் இராஜகோபுரத் திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990-ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
மீனாட்சியம்மன் கோயில், மதுரை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது. மேலும் கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
சாரங்கபாணி சுவாமி கோயில், கும்பகோணம்
கும்பகோணத்தில் உள்ள விஷ்ணு கோயில்களிலேயே மிகப்பெரிய கோயிலாக சாரங்கபாணி சுவாமி கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயில் ஒரு தேர் வடிவத்தில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் ராஜகோபுரம் 173 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிப்பதுடன் பல்வேறு சமயக்கதைகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
ராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்குடி
ராஜகோபாலசுவாமி கோயில் குலோத்துங்க சோழரின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் மொத்தம் 16 கோபுரங்கள் இருப்பதுடன், இதன் ராஜகோபுரம் இந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
பெருவுடையார் கோயில்
தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிற்றூரில் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பெருவுடையார் கோயில் என்றே பெயர் இருப்பினும், இதன் அமைவிடமான கங்கைகொண்ட சோழபுரத்தின் பெயரிலேயே பிரபலமாக அழைக்கப்படுகிறது.
http://tamil.nativeplanet.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபுர தரிசனம் {சிறப்பு பதிவு}
gopura தரிசனம் கோடி புண்யம் என்பார்கள். எனக்கு பல கோடி புண்ணியம் கிடைத்தது. நன்றி.
Similar topics
» கோபுர தரிசனம்!
» காதலர் தினம் {சிறப்பு பதிவு}
» மனிதர்களை சமாளிப்பது எப்படி? {சிறப்பு பதிவு }
» வெற்றிக்கொடி கட்டிய வீராங்கனைகள்! - சிறப்பு பதிவு
» இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு}
» காதலர் தினம் {சிறப்பு பதிவு}
» மனிதர்களை சமாளிப்பது எப்படி? {சிறப்பு பதிவு }
» வெற்றிக்கொடி கட்டிய வீராங்கனைகள்! - சிறப்பு பதிவு
» இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|