Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வழிபாட்டு பாடல்கள் !
Page 1 of 1 • Share
வழிபாட்டு பாடல்கள் !
அன்பெனும் பிடியுள் அகப்படும்மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம்அருட்பெருஞ்ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி
எங்கெங்கு இருந்து உயிர் ஏதெது வேண்டினும்
அங்கங் கிருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழையது என்று
அதுவது வாய்த்திகழ் அருட்பெருஞ்ஜோதி
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி
எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு
அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி
எச்சோ தனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்றருள் அருட்பெருஞ்ஜோதி
எவையெலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின
அவையெலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற அடக்கம் அருட்பெருஞ்ஜோதி
உயிருறும் மாயையின் உறுவிரிவு அனைத்தும்
அயிரற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
உயிருறும் இருவினை உறுவிரிவு அனைத்தும்
அயர்வுற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.
படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மானை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிருவருளாலே நான்தான்ஆ னேனே.
மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருத்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
இறக்கவும் ஆசை இல்லை; இப்படிநான்
இருக்கவும் ஆசை இன்றி; இனிநான்
பிறக்கவும் ஆசை இலை; உலகெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலை துயர்அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி யேகஜோதி யேகஜோதி யேகஜோதி
நான்செயும் பிழைகள்பலவும் நீபொறுத்து
நலம்தரல் வேண்டுவன் போற்றி
ஏன்செய்தாய் என்பார்இல்லைமற் றெனக்குஉன்
இன்னருள் நோக்கசெய் போற்றி
ஊன்செய் நாவால்உன் ஐந்தெழுத்து எளியேன்
ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயம் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
வள்ளலே போற்றிநின் னருளே.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில் யான் ஒருவனன்றோ வகையறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யா உனக்கு
மகனலனோ நீயெனக்கு வாய்ந்ததந்தை யலையோ
கோழையுலகு உயிர்த்துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருளொளியைக் கொடுத்தருள் இப்பொழுதே.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெரு மான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தை மிக விழைந்த தாலோ
வள்ளற் பெருமாளின் திருநெறிகள்
1. கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக் கொள்ளாதீர்கள்.
4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவ தன்னையும் விலக்குக.
5. புலால் உண்ணற்க எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை வழிபாடாகக் கொள்க.
7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக.
8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய ஒழுக்கங்களைப் பின்பற்றுக.
9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க.
10. உயிர்க்குலமே கடவுள் வாழும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.
திருப்பள்ளி எழுச்சி
திருச்சிற்றம்பலம்
1. பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்ஒளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
முழுதும்ஆ னான்என ஆகம வேத
முறைகள்எ லாம்மொழி கின்றமுன் னவனே
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
2. துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
3. நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
4. கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
5. புன்மாலை இரவெலாம் புலர்ந்த்து ஞானப்
பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே
6. ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினார் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
7. சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
நினைப்பள்ளி உண்ணத்தெள் ஆரமு தளிக்கும்
நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
8. மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
9. மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
இருள்அறுத் தெனைஆண்ட அருட்பெருஞ் சோதி
என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
10. அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
-
திருச்சிற்றம்பலம்
திருவடிப் புகழ்ச்சி
பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக
பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப்
பரமஏ காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம் மகத்துவம்
பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிர தி சயநிட்க ளம்பூத
பௌதிகா தாரநிபுணம்
பவபந்த நிக்ரக வினோதச களம்சிற்
பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம்
பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த ஆகமாந் தாந்தநிரு
பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம்
பகிரங்கம் அந்தரங்கம்
பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம்
பரம்பரம் அனந்தம்அசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம்
பரபதம் பரமசூக்ஷ்மம்
பராபரம் அநாமய நிராதரம் அகோசரம்
பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம்
பரசுகோ தயம்அக்ஷயம்
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்
பதித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப
ரம்சிதம் பரவிலாசம்
பகர்சுபா வம்புனிதம் அதுலம்அது லிதம்அம்ப
ராம்பர நிராலம்பனம்
பரவுசா க்ஷõத்கார நிரவய வம்கற்ப
னாதீத நிருவிகாரம்
பரதுரிய அநுபவம் குருதுரிய பதம்அம்
பகம்அம்பகா தீதவிமலம்
பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற்
பதாதீதம் இன்பவடிவம்
பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு
பவவிலாசப் பிரகாசம்
பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த
பதமகா மௌனரூபம்
பரமபோ தம்போத ரகிதகசி தம்சம்ப
வாதீதம் அப்பிரமேயம்
பகரனந் தானந்தம் அமலம்உசி தம்சிற்ப
தம்சதா னந்தசாரம்
பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம்
பாகார நிருவிகற்பம்
பரசுகா ரம்பம் பரம்பிரம வித்தம்
பரானந்த புரணபோகம்
பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம்
பரபரீணம் பராந்தம்
பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச
பாவனம் பரமமோக்ஷம்
பரமானு குணநவா தீதம்சி தாகாச
பாஸ்கரம் பரமபோகம்
பரிபாக வேதன வரோதயா னந்தபத
பாலனம் பரமயோகம்
பரமசாத் தியவதீ தானந்த போக்கியம்
பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த
பாதாக்ர சுத்தபலிதம்
பரமசுத் தாத்விதா னந்தஅனு பூதிகம்
பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த
பரமானு பவவிலாசம்
தரமிகும் சர்வசா திட்டான சத்தியம்
சர்வவா னந்தபோகம்
சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ
சத்திதர மென்றளவிலாச்
சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத்
தன்மைபல வாகநாடித்
தம்மைநிகர் மறையெலாம் இன்னுமள விடநின்ற
சங்கரன் அநாதிஆதி
சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட
சசிகண்ட சாமகண்ட
சயசய வெனும் தொண்டர் இதயமலர் மேவிய
சடாமகுடன் மதன தகனன்
சந்திரசே கரன் இடப வாகனன் கங்கா
தரன்சூல பாணிஇறைவன்
தனிமுதல் உமாபதி புராந்தகன் பசுபதி
சயம்புமா தேவன்அமலன்
தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழும்அன்பர்
தங்களுக் கருளாண்டவன்
தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச்
சைலம்எனும் ஒருவில்லவன்
தக்ஷிணா மூர்த்திஅருள் மூர்த்திபுண் ணியமூர்த்தி
தகும்அட்ட மூர்த்தியானோன்
தலைமைபெறு கணநாய கன்குழகன் அழகன்மெய்ச்
சாமிநம் தேவதேவன்
சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான்
தாணுமுக் கண்களுடையான்
சதுரன் கடாசல உரிப்போர்வை யான்செந்
தழல்கரத் தேந்திநின்றோன்
சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ
சம்பிரமன் சர்வேச்சுரன்
தகைகொள்பர மேச்சுரன் சிவபிரான் எம்பிரான்
தம்பிரான் செம்பொற்பதம்
தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா
சத்திவடி வாம்பொற்பதம்
தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற்
சத்திவடி வாம்பொற்பதம்
சாற்றரிய இச்சைஞா னங்கிரியை என்னுமுச்
சத்திவடி வாம்பொற்பதம்
தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த
சத்திவடி வாம்பொற்பதம்
தகுவிந்தை மோகினியை மானைஅசை விக்குமொரு
சத்திவடி வாம்பொற்பதம்
தாழ்வில்ஈ சானமுதல் மூர்த்திவரை ஐஞ்சத்தி
தம்சத்தி யாம்பொற்பதம்
சவிகற்ப நிருவிகற் பம்பெறும் அனந்தமா
சத்திசத் தாம்பொற்பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திருவருட்
சத்திஉரு வாம்பொற்பதம்
தவாதசாந் தப்பதம் துவாதசாந் தப்பதம்
தரும்இணை மலர்ப்பூம்பதம்
சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலர்இதய
சாக்ஷியா கியபூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களில்
சமரச முறும்பூம்பதம்
தருபரம் சூக்குமம் தூலம்இவை நிலவிய
தமக்குள்உயி ராம்பூம்பதம்
சரஅசர அபரிமித விவிதஆன் மப்பகுதி
தாங்கும் திருப்பூம்பதம்
தண்டபிண் டாண்டஅகி லாண்டபிர மாண்டந்
தடிக்கவரு ளும்பூம்பதம்
தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார
சகலகர்த் துருபூம்பதம்
சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா
சங்குலவு நற்பூம்பதம்
மரபுறு மதாதீத வெளிநடுவில் ஆனந்த
மாநடன மிடுபூம்பதம்
மன்னும்வினை ஒப்புமல பரிபாகம் வாய்க்கமா
மாயையை மிதிக்கும்பதம்
மலிபிறவி மறலியின் அழுந்தும்உயிர் தமைஅருளின்
மருவுற எடுக்கும்பதம்
வளர்ஊர்த்த வீரதாண் டவமுதல் பஞ்சக
மகிழ்ந்திட இயற்றும்பதம்
வல்லமுய லகன்மீதில் ஊன்றிய திருப்பதம்
வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாம்தவிர்த் தழியாத சுத்தநிலை
வாய்த்திட வழங்கும்பதம்
மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம்
மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம்
மறைப்பரி உகைக்கும்பதம்
மறையவன் உளங்கொண்ட பதம் அமித கோடியாம்
மறையவர் சிரஞ்சூழ்பதம்
மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொள்
மறையவன் வாழ்த்தும்பதம்
மறையவன் செயஉலகம் மாக்கின்ற அதிகார
வாழ்வைஈந் தருளும்பதம்
மறையவன் கனவினும் காணாத பதம்அந்த
மறையவன் பரவும்பதம்
மால்விடை இவர் ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடு
மால்அருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிரு
மால்விழிஇ லங்கும்பதம்
மால்தேட நின்றபதம் ஓரனந் தம்கோடி
மால்தலை அலங்கற்பதம்
மால்முடிப் பதம்நெடிய மால்உளப் பதம்அந்த
மாலும்அறி வரிதாம்பதம்
மால்கொள் அவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு
வாய்மைபெற நிற்கும்பதம்
மால்உலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின்
வதிந்திட அளிக்கும்பதம்
வரையுறும் உருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி
வயஉருத் திரர்சூழ்பதம்
வாய்ந்திடும் உருத்திரற்கியல்கொள் முத்தொழில் செய்யும்
வண்மைதந் தருளும்பதம்
வானஇந் திரராதி எண்திசைக் காவலர்கள்
மாதவத் திறனாம்பதம்
மதிஇரவி ஆதிசுரர் அசுரர் அந் தரர்வான
வாசிகள் வழுத்தும்பதம்
மணிஉரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர்
மாமுனிவர் ஏத்தும்பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள்
மதித்துவர மேற்கும்பதம்
மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர்
மற்றையர்கள் பற்றும்பதம்
வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கள்
மனக்கோயில் வாழும்பதம்
மாதேவி எங்கள்மலை மங்கைஎன் னம்மைமென்
மலர்க்கையால் வருடும்பதம்
மறலியை உதைத்தருள் கழற்பதம் அரக்கனை
மலைக்கீழ் அடர்க்கும்பதம்
வஞ்சமறு நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன்
மஞ்சுற விளங்கும்பதம்
வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடஉள்
மந்தணந விற்றும்பதம்
மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட
மாறிநட மாடும்பதம்
மறக்கருணை யும்தனி அறக்கருணை யும்தந்து
வாழ்விக்கும் ஒண்மைப்பதம்
இரவுறும் பகலடியர் இருமருங் கினும்உறுவ
ரெனவயங் கியசீர்ப்பதம்
எம்பந்த மறஎமது சம்பந்த வள்ளல்மொழி
இயல்மண மணக்கும்பதம்
ஈவரசர் எம்முடைய நாவரசர் சொற்பதிக
இசைபரி மளிக்கும்பதம்
ஏவலார் புகழ்எமது நாவலா ரூரர்புகல்
இசை திருப் பாட்டுப்பதம்
ஏதவூர் தங்காத வாதவூர் எங்கோவின்
இன்சொல்மணி அணியும்பதம்
எல்லூரு மணிமாட நல்லூரி ல்அப்பர்முடி
யிடைவைகி யருள்மென்பதம்
எடுமேல் எனத்தொண்டர் முடிமேல் மறுத்திடவும்
இடைவலிந் தேறும்பதம்
எழில்பரவை இசைஆ ரூர்மறுகின் அருள்கொண்டி
ராமுழுதும் உலவும்பதம்
இன்தொண்டர் பசிஅறக் கச்சூரின் மனைதொறும்
இரக்கநடை கொள்ளும்பதம்
இளைப்புறல் அறிந்தன்பர் பொதிசோ றருந்தமுன்
னிருந்துபின் நடக்கும்பதம்
எறிவிறகு விற்கவளர் கூடல் தெருத்தொறும்
இயங்கிய இரக்கப்பதம்
இறுவைகை யங்கரையில் மண்படப் பல்கால்
எழுந்துவிளை யாடும்பதம்
எங்கேமெய் அன்பருளர் அங்கே நலந்தர
எழுந்தருளும் வண்மைப்பதம்
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே
இரங்கிஈந் தருளும்பதம்
என்போன்ற வர்க்குமிகு பொன்போன் கருணைதந்
திதயத் திருக்கும்பதம்
என்னுயிரை யன்னபதம் என்னுயிர்க் குயிராய்
இலங்குசெம் பதுமப்பதம்
என்னறிவெ னும்பதம் என்அறிவினுக் கறிவாய்
இருந்தசெங் கமலப்பதம்
என் அன்பெ னும்பதம்என் அன்பிற்கு வித்தாய்
இசைந்தகோ கனகப்பதம்
என்தவ மெனும்பதம்என் மெய்த்தவப் பயனாய்
இயைந்தசெஞ் சலசப்பதம்
என்இருகண் மணியான பதம்என்கண் மணிகளுக்
கினியநல் விருந்தாம்பதம்
என்செல்வ மாம்பதம்என் மெய்ச்செல்வ வருவாய்
எனும்தாம ரைப்பொற்பதம்
என்பெரிய வாழ்வான பதம்என்க ளிப்பாம்
இரும்பதம்என் நிதி யாம்பதம்
என்தந்தை தாயெனும் இணைப்பதம் உறவாம்
இயற்பதம்என் நட் பாம்பதம்
என்குருவெ னும்பதம்என் இட்டதெய் வப்பதம்
எனதுகுல தெய்வப்பதம்
என்பொறிக ளுக்கெலாம் நல்விடய மாம்பதம்என்
எழுமையும் விடாப்பொற்பதம்
என்குறையெ லாம்தவிர்த் தாட் கொண்ட பதம்எனக்
கெய்ப்பில்வைப் பாகும்பதம்
எல்லார்க்கும் நல்லபதம் எல்லாம்செய் வல்லபதம்
இணையிலாத் துணையாம்பதம்
எழுமனம் உடைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட்
கின்னமுத மாகும்பதம்
எண்ணுறில் பாலில்நறு நெய்யொடு சருக்கரை
இசைந்தென இனிக்கும்பதம்
ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே
னென்னமது ரிக்கும்பதம்
எங்கள்பதம் எங்கள்பதம் என்றுசம யத்தேவர்
இசைவழக் கிடுநற்பதம்
ஈறிலாப் பதம்எலாந் தருதிருப் பதம் அழிவில்
இன்புதவு கின்றபதமே.
-
திருச்சிற்றம்பலம்
http://suddhasanmargham.blogspot.in/
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம்அருட்பெருஞ்ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி
எங்கெங்கு இருந்து உயிர் ஏதெது வேண்டினும்
அங்கங் கிருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழையது என்று
அதுவது வாய்த்திகழ் அருட்பெருஞ்ஜோதி
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி
எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு
அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி
எச்சோ தனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்றருள் அருட்பெருஞ்ஜோதி
எவையெலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின
அவையெலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற அடக்கம் அருட்பெருஞ்ஜோதி
உயிருறும் மாயையின் உறுவிரிவு அனைத்தும்
அயிரற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
உயிருறும் இருவினை உறுவிரிவு அனைத்தும்
அயர்வுற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.
படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மானை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிருவருளாலே நான்தான்ஆ னேனே.
மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருத்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
இறக்கவும் ஆசை இல்லை; இப்படிநான்
இருக்கவும் ஆசை இன்றி; இனிநான்
பிறக்கவும் ஆசை இலை; உலகெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலை துயர்அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி யேகஜோதி யேகஜோதி யேகஜோதி
நான்செயும் பிழைகள்பலவும் நீபொறுத்து
நலம்தரல் வேண்டுவன் போற்றி
ஏன்செய்தாய் என்பார்இல்லைமற் றெனக்குஉன்
இன்னருள் நோக்கசெய் போற்றி
ஊன்செய் நாவால்உன் ஐந்தெழுத்து எளியேன்
ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயம் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
வள்ளலே போற்றிநின் னருளே.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில் யான் ஒருவனன்றோ வகையறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யா உனக்கு
மகனலனோ நீயெனக்கு வாய்ந்ததந்தை யலையோ
கோழையுலகு உயிர்த்துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருளொளியைக் கொடுத்தருள் இப்பொழுதே.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெரு மான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தை மிக விழைந்த தாலோ
வள்ளற் பெருமாளின் திருநெறிகள்
1. கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக் கொள்ளாதீர்கள்.
4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவ தன்னையும் விலக்குக.
5. புலால் உண்ணற்க எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை வழிபாடாகக் கொள்க.
7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக.
8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய ஒழுக்கங்களைப் பின்பற்றுக.
9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க.
10. உயிர்க்குலமே கடவுள் வாழும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.
திருப்பள்ளி எழுச்சி
திருச்சிற்றம்பலம்
1. பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்ஒளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
முழுதும்ஆ னான்என ஆகம வேத
முறைகள்எ லாம்மொழி கின்றமுன் னவனே
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
2. துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
3. நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
4. கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
5. புன்மாலை இரவெலாம் புலர்ந்த்து ஞானப்
பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே
6. ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினார் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
7. சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
நினைப்பள்ளி உண்ணத்தெள் ஆரமு தளிக்கும்
நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
8. மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
9. மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
இருள்அறுத் தெனைஆண்ட அருட்பெருஞ் சோதி
என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
10. அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
-
திருச்சிற்றம்பலம்
திருவடிப் புகழ்ச்சி
பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக
பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப்
பரமஏ காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம் மகத்துவம்
பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிர தி சயநிட்க ளம்பூத
பௌதிகா தாரநிபுணம்
பவபந்த நிக்ரக வினோதச களம்சிற்
பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம்
பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த ஆகமாந் தாந்தநிரு
பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம்
பகிரங்கம் அந்தரங்கம்
பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம்
பரம்பரம் அனந்தம்அசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம்
பரபதம் பரமசூக்ஷ்மம்
பராபரம் அநாமய நிராதரம் அகோசரம்
பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம்
பரசுகோ தயம்அக்ஷயம்
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்
பதித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப
ரம்சிதம் பரவிலாசம்
பகர்சுபா வம்புனிதம் அதுலம்அது லிதம்அம்ப
ராம்பர நிராலம்பனம்
பரவுசா க்ஷõத்கார நிரவய வம்கற்ப
னாதீத நிருவிகாரம்
பரதுரிய அநுபவம் குருதுரிய பதம்அம்
பகம்அம்பகா தீதவிமலம்
பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற்
பதாதீதம் இன்பவடிவம்
பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு
பவவிலாசப் பிரகாசம்
பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த
பதமகா மௌனரூபம்
பரமபோ தம்போத ரகிதகசி தம்சம்ப
வாதீதம் அப்பிரமேயம்
பகரனந் தானந்தம் அமலம்உசி தம்சிற்ப
தம்சதா னந்தசாரம்
பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம்
பாகார நிருவிகற்பம்
பரசுகா ரம்பம் பரம்பிரம வித்தம்
பரானந்த புரணபோகம்
பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம்
பரபரீணம் பராந்தம்
பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச
பாவனம் பரமமோக்ஷம்
பரமானு குணநவா தீதம்சி தாகாச
பாஸ்கரம் பரமபோகம்
பரிபாக வேதன வரோதயா னந்தபத
பாலனம் பரமயோகம்
பரமசாத் தியவதீ தானந்த போக்கியம்
பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த
பாதாக்ர சுத்தபலிதம்
பரமசுத் தாத்விதா னந்தஅனு பூதிகம்
பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த
பரமானு பவவிலாசம்
தரமிகும் சர்வசா திட்டான சத்தியம்
சர்வவா னந்தபோகம்
சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ
சத்திதர மென்றளவிலாச்
சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத்
தன்மைபல வாகநாடித்
தம்மைநிகர் மறையெலாம் இன்னுமள விடநின்ற
சங்கரன் அநாதிஆதி
சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட
சசிகண்ட சாமகண்ட
சயசய வெனும் தொண்டர் இதயமலர் மேவிய
சடாமகுடன் மதன தகனன்
சந்திரசே கரன் இடப வாகனன் கங்கா
தரன்சூல பாணிஇறைவன்
தனிமுதல் உமாபதி புராந்தகன் பசுபதி
சயம்புமா தேவன்அமலன்
தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழும்அன்பர்
தங்களுக் கருளாண்டவன்
தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச்
சைலம்எனும் ஒருவில்லவன்
தக்ஷிணா மூர்த்திஅருள் மூர்த்திபுண் ணியமூர்த்தி
தகும்அட்ட மூர்த்தியானோன்
தலைமைபெறு கணநாய கன்குழகன் அழகன்மெய்ச்
சாமிநம் தேவதேவன்
சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான்
தாணுமுக் கண்களுடையான்
சதுரன் கடாசல உரிப்போர்வை யான்செந்
தழல்கரத் தேந்திநின்றோன்
சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ
சம்பிரமன் சர்வேச்சுரன்
தகைகொள்பர மேச்சுரன் சிவபிரான் எம்பிரான்
தம்பிரான் செம்பொற்பதம்
தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா
சத்திவடி வாம்பொற்பதம்
தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற்
சத்திவடி வாம்பொற்பதம்
சாற்றரிய இச்சைஞா னங்கிரியை என்னுமுச்
சத்திவடி வாம்பொற்பதம்
தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த
சத்திவடி வாம்பொற்பதம்
தகுவிந்தை மோகினியை மானைஅசை விக்குமொரு
சத்திவடி வாம்பொற்பதம்
தாழ்வில்ஈ சானமுதல் மூர்த்திவரை ஐஞ்சத்தி
தம்சத்தி யாம்பொற்பதம்
சவிகற்ப நிருவிகற் பம்பெறும் அனந்தமா
சத்திசத் தாம்பொற்பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திருவருட்
சத்திஉரு வாம்பொற்பதம்
தவாதசாந் தப்பதம் துவாதசாந் தப்பதம்
தரும்இணை மலர்ப்பூம்பதம்
சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலர்இதய
சாக்ஷியா கியபூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களில்
சமரச முறும்பூம்பதம்
தருபரம் சூக்குமம் தூலம்இவை நிலவிய
தமக்குள்உயி ராம்பூம்பதம்
சரஅசர அபரிமித விவிதஆன் மப்பகுதி
தாங்கும் திருப்பூம்பதம்
தண்டபிண் டாண்டஅகி லாண்டபிர மாண்டந்
தடிக்கவரு ளும்பூம்பதம்
தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார
சகலகர்த் துருபூம்பதம்
சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா
சங்குலவு நற்பூம்பதம்
மரபுறு மதாதீத வெளிநடுவில் ஆனந்த
மாநடன மிடுபூம்பதம்
மன்னும்வினை ஒப்புமல பரிபாகம் வாய்க்கமா
மாயையை மிதிக்கும்பதம்
மலிபிறவி மறலியின் அழுந்தும்உயிர் தமைஅருளின்
மருவுற எடுக்கும்பதம்
வளர்ஊர்த்த வீரதாண் டவமுதல் பஞ்சக
மகிழ்ந்திட இயற்றும்பதம்
வல்லமுய லகன்மீதில் ஊன்றிய திருப்பதம்
வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாம்தவிர்த் தழியாத சுத்தநிலை
வாய்த்திட வழங்கும்பதம்
மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம்
மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம்
மறைப்பரி உகைக்கும்பதம்
மறையவன் உளங்கொண்ட பதம் அமித கோடியாம்
மறையவர் சிரஞ்சூழ்பதம்
மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொள்
மறையவன் வாழ்த்தும்பதம்
மறையவன் செயஉலகம் மாக்கின்ற அதிகார
வாழ்வைஈந் தருளும்பதம்
மறையவன் கனவினும் காணாத பதம்அந்த
மறையவன் பரவும்பதம்
மால்விடை இவர் ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடு
மால்அருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிரு
மால்விழிஇ லங்கும்பதம்
மால்தேட நின்றபதம் ஓரனந் தம்கோடி
மால்தலை அலங்கற்பதம்
மால்முடிப் பதம்நெடிய மால்உளப் பதம்அந்த
மாலும்அறி வரிதாம்பதம்
மால்கொள் அவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு
வாய்மைபெற நிற்கும்பதம்
மால்உலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின்
வதிந்திட அளிக்கும்பதம்
வரையுறும் உருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி
வயஉருத் திரர்சூழ்பதம்
வாய்ந்திடும் உருத்திரற்கியல்கொள் முத்தொழில் செய்யும்
வண்மைதந் தருளும்பதம்
வானஇந் திரராதி எண்திசைக் காவலர்கள்
மாதவத் திறனாம்பதம்
மதிஇரவி ஆதிசுரர் அசுரர் அந் தரர்வான
வாசிகள் வழுத்தும்பதம்
மணிஉரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர்
மாமுனிவர் ஏத்தும்பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள்
மதித்துவர மேற்கும்பதம்
மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர்
மற்றையர்கள் பற்றும்பதம்
வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கள்
மனக்கோயில் வாழும்பதம்
மாதேவி எங்கள்மலை மங்கைஎன் னம்மைமென்
மலர்க்கையால் வருடும்பதம்
மறலியை உதைத்தருள் கழற்பதம் அரக்கனை
மலைக்கீழ் அடர்க்கும்பதம்
வஞ்சமறு நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன்
மஞ்சுற விளங்கும்பதம்
வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடஉள்
மந்தணந விற்றும்பதம்
மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட
மாறிநட மாடும்பதம்
மறக்கருணை யும்தனி அறக்கருணை யும்தந்து
வாழ்விக்கும் ஒண்மைப்பதம்
இரவுறும் பகலடியர் இருமருங் கினும்உறுவ
ரெனவயங் கியசீர்ப்பதம்
எம்பந்த மறஎமது சம்பந்த வள்ளல்மொழி
இயல்மண மணக்கும்பதம்
ஈவரசர் எம்முடைய நாவரசர் சொற்பதிக
இசைபரி மளிக்கும்பதம்
ஏவலார் புகழ்எமது நாவலா ரூரர்புகல்
இசை திருப் பாட்டுப்பதம்
ஏதவூர் தங்காத வாதவூர் எங்கோவின்
இன்சொல்மணி அணியும்பதம்
எல்லூரு மணிமாட நல்லூரி ல்அப்பர்முடி
யிடைவைகி யருள்மென்பதம்
எடுமேல் எனத்தொண்டர் முடிமேல் மறுத்திடவும்
இடைவலிந் தேறும்பதம்
எழில்பரவை இசைஆ ரூர்மறுகின் அருள்கொண்டி
ராமுழுதும் உலவும்பதம்
இன்தொண்டர் பசிஅறக் கச்சூரின் மனைதொறும்
இரக்கநடை கொள்ளும்பதம்
இளைப்புறல் அறிந்தன்பர் பொதிசோ றருந்தமுன்
னிருந்துபின் நடக்கும்பதம்
எறிவிறகு விற்கவளர் கூடல் தெருத்தொறும்
இயங்கிய இரக்கப்பதம்
இறுவைகை யங்கரையில் மண்படப் பல்கால்
எழுந்துவிளை யாடும்பதம்
எங்கேமெய் அன்பருளர் அங்கே நலந்தர
எழுந்தருளும் வண்மைப்பதம்
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே
இரங்கிஈந் தருளும்பதம்
என்போன்ற வர்க்குமிகு பொன்போன் கருணைதந்
திதயத் திருக்கும்பதம்
என்னுயிரை யன்னபதம் என்னுயிர்க் குயிராய்
இலங்குசெம் பதுமப்பதம்
என்னறிவெ னும்பதம் என்அறிவினுக் கறிவாய்
இருந்தசெங் கமலப்பதம்
என் அன்பெ னும்பதம்என் அன்பிற்கு வித்தாய்
இசைந்தகோ கனகப்பதம்
என்தவ மெனும்பதம்என் மெய்த்தவப் பயனாய்
இயைந்தசெஞ் சலசப்பதம்
என்இருகண் மணியான பதம்என்கண் மணிகளுக்
கினியநல் விருந்தாம்பதம்
என்செல்வ மாம்பதம்என் மெய்ச்செல்வ வருவாய்
எனும்தாம ரைப்பொற்பதம்
என்பெரிய வாழ்வான பதம்என்க ளிப்பாம்
இரும்பதம்என் நிதி யாம்பதம்
என்தந்தை தாயெனும் இணைப்பதம் உறவாம்
இயற்பதம்என் நட் பாம்பதம்
என்குருவெ னும்பதம்என் இட்டதெய் வப்பதம்
எனதுகுல தெய்வப்பதம்
என்பொறிக ளுக்கெலாம் நல்விடய மாம்பதம்என்
எழுமையும் விடாப்பொற்பதம்
என்குறையெ லாம்தவிர்த் தாட் கொண்ட பதம்எனக்
கெய்ப்பில்வைப் பாகும்பதம்
எல்லார்க்கும் நல்லபதம் எல்லாம்செய் வல்லபதம்
இணையிலாத் துணையாம்பதம்
எழுமனம் உடைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட்
கின்னமுத மாகும்பதம்
எண்ணுறில் பாலில்நறு நெய்யொடு சருக்கரை
இசைந்தென இனிக்கும்பதம்
ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே
னென்னமது ரிக்கும்பதம்
எங்கள்பதம் எங்கள்பதம் என்றுசம யத்தேவர்
இசைவழக் கிடுநற்பதம்
ஈறிலாப் பதம்எலாந் தருதிருப் பதம் அழிவில்
இன்புதவு கின்றபதமே.
-
திருச்சிற்றம்பலம்
http://suddhasanmargham.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வழிபாட்டு பாடல்கள் !
வள்ளலாரின் 10 கட்டளைகளை பின்பற்றினால் போதும்
மறு பிறப்பு இல்லா மாண்மை நேரும்
மறு பிறப்பு இல்லா மாண்மை நேரும்
Similar topics
» விநாயகர் வழிபாட்டு பாடல்கள்
» நவராத்திரி வழிபாட்டு முறை.
» பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்
» அம்மன் பாடல்கள்
» டி எம் எஸ் பக்தி பாடல்கள்
» நவராத்திரி வழிபாட்டு முறை.
» பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்
» அம்மன் பாடல்கள்
» டி எம் எஸ் பக்தி பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|