தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம்

View previous topic View next topic Go down

திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம் Empty திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம்

Post by ஸ்ரீராம் Sun Oct 07, 2012 12:55 am

அமர்க்கள உறவுகளுக்கு வணக்கம்,

அமர்க்களத்தில் தினம் ஒரு திருக்குறள் பதிவிட்டு வருகிறேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

இன்றைய குறள்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

அதாவது ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான எடுத்துக்காட்டு.

புராணங்களில் நிறைய இடங்களில் தேவேந்திரன் (இந்திரன்) பெண்கள் விசயத்தில் கீழ்த்தரமானவன் என்பதை படித்துள்ளோம். உதாரணம்: ராமாயணத்தில் அகலிகை (கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினி).

அதனாலதான் இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்கிறோம். பின் எப்படி திருவள்ளுவர் இந்திரனை சான்றாக காட்டினார்? இது கூட ஒரு ஆசைதானே?

குறளை பற்றி தவறாக பேசக்கூடாது என்பது தெரியும். அதற்காக வருந்துகிறேன்.

இதுப்பற்றி அமர்க்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன? விருப்பம் உள்ளவர்கள் தயங்காமல் உங்கள் கருத்தை பகிருங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம் Empty Re: திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம்

Post by ஸ்ரீராம் Sun Oct 07, 2012 12:45 pm

யாரும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லையா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம் Empty Re: திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம்

Post by மகா பிரபு Sun Oct 07, 2012 1:03 pm

பெண்ணால் கெட்டவர் என்றால் என்ன? பெண்ணால் ஏமாற்றப்பட்டவர் என்றுதானே அர்த்தம். பெண்ணால் ஏமாற்றப்பட்டவர் என்றால் மோசமானவர் என்பது அர்த்தமில்லையே அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம் Empty Re: திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம்

Post by ஸ்ரீராம் Sun Oct 07, 2012 1:19 pm

பெண் ஆசையால் கேட்டவர் என்று அர்த்தம் தம்பி. இந்திரனின் பெண் ஆசை பற்றி புராணக்கதைகளில் நிறையவே படித்துள்ளோம்.

உதாரனத்திற்க்கு ராமாயணத்தில் நடந்தக்கதை:

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்’ என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது

அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்’ என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு’ என்றும் சபித்தார்.

இவ்வாறு இந்த கதை செல்கிறது.. இதுப்போல் பல உண்டு. இப்ப சொல்லுங்கள் தம்பி. இந்திரன் ஆசையை துறந்தவனா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம் Empty Re: திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம்

Post by முரளிராஜா Sun Oct 07, 2012 1:54 pm

அகலியயை கவுதம முனிவரின் மனைவி.மிகவும் அழகாக இருப்பார்.இந்திரன் தேவர் தலைவனாக இருந்த போதிலும் ஆசையை வீட்டவனில்லை.அகலியையை பார்த்ததும் ஆசையில் வீழ்கிறான்.கவுதம முனிவர் குளிக்க போன சமயம் பார்த்து அவர் வேடம் தரித்து அகலியாவை ஏமாற்றி விடுகிறான்.கவுதம முனிவர் வழக்கத்துக்கு மாறாக சீக்கிரம் வீடு திரும்புகிறார்.கையும் களவுமாக இந்திரன் பிடிபடுகிறான். கோபத்தில் கொதித்த கவுதம முனிவர் இந்திரனுக்கு மிகவும் மோசமான சாபம் ஒன்றை தருகிறார்.அகலியாவை கல்லாகும்படி சபிக்கிறார்.அகல்யாவுக்கு சாப விமோசனம் ராமனால் கிடைத்தது..ஆனால் அதன் பின் இந்திரனுக்கு நேர்ந்தது என்ன? சாபம் பெற்ற இந்திரன் யார் முகத்திலும் விழிக்க வெட்கப்பட்டு தாமரை பூவினுள் சென்று ஒளிந்து கொள்கிறான்.அரசனில்லாமல் தேவலோகம் திகைக்கிறது.எங்கு தேடியும் இந்திரன் கிட்டவில்லை.முனிவர்கள் ஒன்று கூடி நகுஷன் என்ற மன்னனை புதிய இந்திரனாக வரும்படி அழைப்பு விடுக்கின்றனர். நகுஷன் மிகுந்த நல்லவன்.கல்வி கேள்விகளில் சிறந்தவன்.ஆனால் தேவேந்திரனானதும் அவனுக்கு மண்டை கர்வம் ஏறிவிடுகிறது.போதாக்குறைக்கு பழைய இந்திரன் போல் பெண்பித்தம் வேறு வந்துவிடுகிறது. நகுஷன் பாவம் மேல் பாவம் செய்கிறான்.தேவலோகமே நடுங்குகிறது.இறுதியில் அவன் இந்திராணியயே அடைய திட்டமிடுகிறான்."நான் தான் இப்போது இந்திரன்,அதனால் இந்திராணி என் மனைவி ஆக வேண்டும்" என கட்டளை இடுகிறான். இந்திராணி தப்பி ஓடுகிறாள்.அன்னை சக்தி மீது சுமங்கலி விரதம் இருக்கிறாள்.சக்தி அவள் முன் தோன்றி இந்திரன் சாப விமோசனம் அடைய வழியை சொல்கிறாள்.இந்திரன் இருக்கும் இடத்தையும் சொல்கிறாள். இந்திராணி கவுதம முனிவரிடம் செல்கிறாள்.மன்றாடியதும் இந்திரன் ஆயிரம் கண்ணுடையவனாக சாப விமோசனத்தை கவுதம முனிவர் தருகிறார்.கணவனும் மனைவியும் ஒன்று சேர்கின்றனர்.ஆனால் ராஜ்ஜியம் போச்சே..அதை அடைய இந்திரன் திட்டம் தீட்டுகிறான். இந்திராணியிடம் ஒரு திட்டத்தை சொல்லி நகுசனிடம் அனுப்புகிறான்.இந்திராணி நகுஷனிடம் "யாரும் இதுவரை வராத ஒரு பல்லக்கில் ஏறி வந்தால் அவனை திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறாள்".. நகுஷன் அப்படி என்ன பல்லக்கு இருக்க முடியும் என யோசித்து இறுதியில் கற்பனைக்கெட்டாத ஐடியா ஒன்றை கண்டுபிடிக்கிறான்.சப்தரிஷிகளும் சேர்ந்து அவனை பல்லக்கில் இந்திராணியிடம் கொண்டு செல்ல வேண்டும்.இது போன்ற பயணம் மும்மூர்த்திகளுக்கும் இதுவரை கிட்டியதில்லை அல்லவா? சப்தரிஷிகளும் சேர்ந்து அவனை பல்லக்கில் சுமந்து கொண்டு செல்கின்றனர்.காமம் நகுஷனை துரத்துகிறது..பல்லக்கோ மெதுவாக ஊர்ந்து செல்வது போல் அவனுக்கு தெரிகிறது.குனிந்து எட்டிப்பார்த்தால் அகத்திய ரிஷி நத்தை வேகத்தில் பல்லக்கை சுமந்து செல்வது போல் தெரிகிறது.. கோபம் வந்த நகுஷன் "சர்ப்ப சர்ப்ப" என்று சொல்லி அகத்தியரை காலால் உதைக்கிறான்.(சர்ப்ப என்றால் வேகமாக என்று பொருள்)..கோபம் கொண்ட அகத்தியர் நகுஷனின் புண்ணியம் முழுவதும் அந்த விநாடியே கரைந்து போனதை உணர்கிறார். "சர்ப்ப என்று என்னை உதைத்த நீ சர்ப்பமாக கடவாய்" என்று சாபமிடுகிறார்.சொர்க்கத்திலிருந்து வீழ்ந்த நகுஷன் சர்ப்பமாக வனத்தில் வீழ்கிறான்.மனம் திருந்திய இந்திரன் மீண்டும் பதவிக்கு வருகிறான்.அன்றிலிருந்து குலமங்கையர் பவானிதேவிக்கு பூஜை செய்வது வழக்கத்துக்கு வந்ததாக புராணம் சொல்கிறது. இந்திரனே ஆனாலும் புலனடக்கம் இல்லாமல் போனால் அழிவுதான் என்று வள்ளுவர் சொன்னது இதனால் தான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம் Empty Re: திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம்

Post by ஸ்ரீராம் Sun Oct 07, 2012 2:04 pm

சரி ஒப்புக்கொள்கிறேன். உரைநடைதான் சற்று குழப்பி விட்டது.

யாரும் தீர்த்து வைக்காத இந்த பிரச்சனையை தனி ஒரு புலவனாக வந்து தீர்த்த சூயாவை வாழ்த்தலாம் .
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம் Empty Re: திருக்குறள் பற்றிய உறவுகளின் விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum