Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ந.க.துறைவனின் சிறுவர் பாடல்
Page 1 of 1 • Share
ந.க.துறைவனின் சிறுவர் பாடல்
.
*
நகரங்கள்
*
கோயில் நகரம்
மதுரை.
மாங்கனி நகரம்
சேலம்.
முத்து நகரம்
தூத்துக் குடி.
பஞ்சாலை நகரம்.
கோiவை.
பட்டு நகரம்
காஞ்சி.
பின்னலாடை நகரம்
திருப்பூர்
.
பூக்கள் நகரம்
உதகை.
நெற் களஞ்சிய நகரம்
தஞ்சாவூர்.
அல்வா நகரம்
திருநெல்வேலி.
வெயில் நகரம்
வேலூர்.
நகரின் பெயரை
மனனம் செய்து
மனதில் நன்குப் பதிப்பீரே
மதிப்பெண் நன்று பெறுவீரே…!
*
நகரங்கள்
*
கோயில் நகரம்
மதுரை.
மாங்கனி நகரம்
சேலம்.
முத்து நகரம்
தூத்துக் குடி.
பஞ்சாலை நகரம்.
கோiவை.
பட்டு நகரம்
காஞ்சி.
பின்னலாடை நகரம்
திருப்பூர்
.
பூக்கள் நகரம்
உதகை.
நெற் களஞ்சிய நகரம்
தஞ்சாவூர்.
அல்வா நகரம்
திருநெல்வேலி.
வெயில் நகரம்
வேலூர்.
நகரின் பெயரை
மனனம் செய்து
மனதில் நன்குப் பதிப்பீரே
மதிப்பெண் நன்று பெறுவீரே…!
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவனின் சிறுவர் பாடல்
ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.
*
தாடி மாமா…!!
*
தாடி மாமா வந்தாரு
தூக்கிக் கொஞ்சி சிரிப்பாரு
அம்மா அப்பா எங்கேன்னு
அன்பா மெல்ல கேட்பாரு.
தம்பிப் பயலின் சுட்டித் தனத்தைக்
கேட்டுக் கேட்டு ரசிப்பாரு
சாக்லெட் பிஸ்கெட் மி்க்சரு
தம்பிக்கும் எனக்கும் கொடுப்பாரு.
சுற்றி வரும் நாய்க் குட்டியைத்
துரத்தி துரத்திப் புடிப்பாரு
சட்டெனத் தூக்கி அணைச்சி
மடியில் வைச்சி மகிழ்வாரு.
பாட்டுக் கதைகள் சொல்லிச் சொல்லி
பாடச் சொல்லிக் கேட்பாரு.
மடிக் கணினி மடியில் வைச்சி
அபாகஸ் கற்றுத் தருவாரு.
மாலைவேளை வெளியிலே
அழைச்சிக் கிட்டுப் போவாரு
சுற்றுச் சூழல் மாசுப் பற்றி
கதை கதையாகச் சொல்வாரு.
தயங்கித் தயங்கி நின்னாரு
டாட்டா காட்டிப் போனாரு
ஊருக்குப் போயி சேர்ந்த வுடனே
போனில் பேசிச் சொன்னாரு…!!
*
தாடி மாமா…!!
*
தாடி மாமா வந்தாரு
தூக்கிக் கொஞ்சி சிரிப்பாரு
அம்மா அப்பா எங்கேன்னு
அன்பா மெல்ல கேட்பாரு.
தம்பிப் பயலின் சுட்டித் தனத்தைக்
கேட்டுக் கேட்டு ரசிப்பாரு
சாக்லெட் பிஸ்கெட் மி்க்சரு
தம்பிக்கும் எனக்கும் கொடுப்பாரு.
சுற்றி வரும் நாய்க் குட்டியைத்
துரத்தி துரத்திப் புடிப்பாரு
சட்டெனத் தூக்கி அணைச்சி
மடியில் வைச்சி மகிழ்வாரு.
பாட்டுக் கதைகள் சொல்லிச் சொல்லி
பாடச் சொல்லிக் கேட்பாரு.
மடிக் கணினி மடியில் வைச்சி
அபாகஸ் கற்றுத் தருவாரு.
மாலைவேளை வெளியிலே
அழைச்சிக் கிட்டுப் போவாரு
சுற்றுச் சூழல் மாசுப் பற்றி
கதை கதையாகச் சொல்வாரு.
தயங்கித் தயங்கி நின்னாரு
டாட்டா காட்டிப் போனாரு
ஊருக்குப் போயி சேர்ந்த வுடனே
போனில் பேசிச் சொன்னாரு…!!
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவனின் சிறுவர் பாடல்
தோழன், பகத்சிங்
*
கல்விதனைத் துறந்தவன்
கடமையாற்றத் தெரிந்தவன்
பகுத்தறிவு செறிந்தவன்
பகல் ஒளிபோல் வாழ்த்தவன்
*
தியாக உள்ளம் மிகுந்தவன்
திறமையோடு வாழ்ந்தவன்
சுதந்திரம் பெற ஏங்கியவன்
சுறுசுறுப்பாய் இயங்கியவன்
*
இளைஞர்களைக் கவர்ந்தவன்
இனிய கனவை விதைத்தவன்
புதிய பாரதம் காண எழுந்தவன்
தூக்கில் தொங்கி மடிந்தவன்
*
சத்தியத்தை மதித்தவன்
சாகசங்கள் புரிந்தவன்
சாவுக்கும் அஞ்சிடாமல்
சமர்புரிந்து வாழ்ந்தவன்
*
அந்நியரை எதிர்த்தவன்
அடிமைகளைக் காத்தவன்
அன்னை நாட்டு விடுதலைக்கு
அர்ப்பணங்கள் செய்தவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவனின் சிறுவர் பாடல்
சிறுவர் புத்தகம் எழுதுங்கள்…!!{ சிறுவர் பாடல் }
*
சின்னச் சின்னக் குழந்தைகள்
சிரித்து சிரித்துப் படிக்கணும்
சிந்தனைக்கு விருந்தாகும்
சித்திரப் புத்தகம் எழுதுங்கள்
*
குடும்ப உறவை வளர்த்திடும்
பண்பு நெறிகள் பழகணும்
மனஇயல்பைப் பேணிடும்
உளவியல் புத்தகம் எழுதுங்கள்.
*
அறிவியல் தகவல் தொழில்நுட்பம்
கணினிக் கல்விக் கற்கணும்
சிலிர்க்க வைக்கும் சாதனைகள்
விளக்கும் புத்தகம் எழுதுங்கள்
*
அறிவை மெல்ல தூண்டிடும்
விளையாட்டுக் கல்விப் படிக்கணும்
ஆடிப்பாடிக் களி்க்க வைக்கும்
மன வளர்ச்சிப் புத்தகம் எழுதுங்கள்
*
கவிதை, கதை,நாவல், இலக்கியம்
தேடித் தேடிப் படிக்கணும், புதிய
கற்பனைவளம் ஊக்கப் படுத்தும்
சிறந்த சிறுவர் புத்தகம் எழுதுங்கள்
*
குழந்தைகளின் வளர்ப்பிலே
நல்ல கவனம் செலுத்துங்கள்
சர்வதேசக் குழந்தைகளைப்
புத்தகத் தினத்தில் வாழ்த்துவோம்…!!
*
.
*
சின்னச் சின்னக் குழந்தைகள்
சிரித்து சிரித்துப் படிக்கணும்
சிந்தனைக்கு விருந்தாகும்
சித்திரப் புத்தகம் எழுதுங்கள்
*
குடும்ப உறவை வளர்த்திடும்
பண்பு நெறிகள் பழகணும்
மனஇயல்பைப் பேணிடும்
உளவியல் புத்தகம் எழுதுங்கள்.
*
அறிவியல் தகவல் தொழில்நுட்பம்
கணினிக் கல்விக் கற்கணும்
சிலிர்க்க வைக்கும் சாதனைகள்
விளக்கும் புத்தகம் எழுதுங்கள்
*
அறிவை மெல்ல தூண்டிடும்
விளையாட்டுக் கல்விப் படிக்கணும்
ஆடிப்பாடிக் களி்க்க வைக்கும்
மன வளர்ச்சிப் புத்தகம் எழுதுங்கள்
*
கவிதை, கதை,நாவல், இலக்கியம்
தேடித் தேடிப் படிக்கணும், புதிய
கற்பனைவளம் ஊக்கப் படுத்தும்
சிறந்த சிறுவர் புத்தகம் எழுதுங்கள்
*
குழந்தைகளின் வளர்ப்பிலே
நல்ல கவனம் செலுத்துங்கள்
சர்வதேசக் குழந்தைகளைப்
புத்தகத் தினத்தில் வாழ்த்துவோம்…!!
*
.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவனின் சிறுவர் பாடல்
பனை மரம் { சிறுவர் பாடல் }
*
ஏரியோரம் பனை மரம்
உயர்ந்து நிற்கும் பனை மரம்
குலைகுலையாய் பனங் குலைகள்
காய்த்துத் தொங்கும் பனைமரம்
*
கோடையிலே மட்டைகள்
விசிறியாகும் பனை மரம்
வீட்டின் மேலே வேய்வதற்குக்
கூரையாகும் பனைமரம்
*
வெட்டிவெட்டித் தின்பதற்கு
நுங்கு தரும் பனைமரம்
அவித்துத் தின்ன ருசிமிகும்
கிழங்கு தரும் பனைமரம்
*
கருப்பட்டி தரும் பனைமரம்
கற்கண்டு தரும் பனைமரம்
பதநீர் தரும் பனைமரம்
காயகல்பம் பனைமரம்
*
உடல் வெப்ப நோய்களைக்
குணப்படுத்தும் பெரும் மரம்
சித்த மருத்துவத் துறையிலே
சிறந்து விளங்கும் மருந்து மரம்
*.
நுங்கு வண்டி ஆசைப்பட்ட அங்குசாமி
ஓடியோடிப் பார்க்கிறான்
வாங்கித் தின்னக் காசில்லாமல்
ஏங்கி ஏங்கித் தவிக்கிறான்
*
வெட்டி எரிந்தக் காய்களின்
குவியல்தனைப் பார்க்கிறான்
வண்டி செய்து ஓட்டுவதற்கு
ரெண்டு காய்கள் கேட்கிறான்
*
ரெண்டு காய்கள் தேர்வுசெய்து
வேகமாகப் பறக்கிறான்
ஓரமாக அமர்ந்துக் கொண்டு
வண்டி செய்ய முனைகிறான்
*
ஓரடிக் கொம்பின் முனையில்
ரெண்டு காய்கள் சொருகினான்
நீண்டக் கொம்பினால் தள்ளித் தள்ளி
நுங்கு வண்டி ஓட்டினான்
*.
*
ஏரியோரம் பனை மரம்
உயர்ந்து நிற்கும் பனை மரம்
குலைகுலையாய் பனங் குலைகள்
காய்த்துத் தொங்கும் பனைமரம்
*
கோடையிலே மட்டைகள்
விசிறியாகும் பனை மரம்
வீட்டின் மேலே வேய்வதற்குக்
கூரையாகும் பனைமரம்
*
வெட்டிவெட்டித் தின்பதற்கு
நுங்கு தரும் பனைமரம்
அவித்துத் தின்ன ருசிமிகும்
கிழங்கு தரும் பனைமரம்
*
கருப்பட்டி தரும் பனைமரம்
கற்கண்டு தரும் பனைமரம்
பதநீர் தரும் பனைமரம்
காயகல்பம் பனைமரம்
*
உடல் வெப்ப நோய்களைக்
குணப்படுத்தும் பெரும் மரம்
சித்த மருத்துவத் துறையிலே
சிறந்து விளங்கும் மருந்து மரம்
*.
நுங்கு வண்டி ஆசைப்பட்ட அங்குசாமி
ஓடியோடிப் பார்க்கிறான்
வாங்கித் தின்னக் காசில்லாமல்
ஏங்கி ஏங்கித் தவிக்கிறான்
*
வெட்டி எரிந்தக் காய்களின்
குவியல்தனைப் பார்க்கிறான்
வண்டி செய்து ஓட்டுவதற்கு
ரெண்டு காய்கள் கேட்கிறான்
*
ரெண்டு காய்கள் தேர்வுசெய்து
வேகமாகப் பறக்கிறான்
ஓரமாக அமர்ந்துக் கொண்டு
வண்டி செய்ய முனைகிறான்
*
ஓரடிக் கொம்பின் முனையில்
ரெண்டு காய்கள் சொருகினான்
நீண்டக் கொம்பினால் தள்ளித் தள்ளி
நுங்கு வண்டி ஓட்டினான்
*.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவனின் சிறுவர் பாடல்
பாடல் வழியேயும் அறிவுரை வழியேயும் அவர்களைப் பக்குவப்படுத்தியே ஆகவேண்டும்...
பாராட்டுகள்
பாராட்டுகள்
Similar topics
» தெலுங்கு சிறுவர் பாடல்.
» காகம்! - சிறுவர் பாடல்
» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
» கொக்கு - சிறுவர் பாடல்
» சிறுவர் பாடல் - (தொடர் பதிவு)
» காகம்! - சிறுவர் பாடல்
» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
» கொக்கு - சிறுவர் பாடல்
» சிறுவர் பாடல் - (தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|