Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் மாறுங்கள்,எல்லாம் மாறும்
Page 1 of 1 • Share
நீங்கள் மாறுங்கள்,எல்லாம் மாறும்
பலரும் சில சமயங்களில்
என்னை நானே தேடுகிறேன்
என்பார்கள். தன்னைச்சுற்றி நிகழ்ந்து
கொண்டிருக்கும் பல
குழப்பங்களையும் அமைதியாக
அனுமதிப்பார்கள். கடைசியில்
அதில் ஏதேனும்
பிரச்சினை தலை தூக்கத் தொடங்கும்
போது அந்த நேரத்தில் மட்டும்
வலி தாங்காமல் கத்துகிற
குழந்தையைப்
போலாகி விடுவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் முதலில்
தங்களை சுயவிமர்சனம்
செய்து கொள்ள வேண்டும். அதற்கான
வழிமுறைகளில் சில: என்னைச்
சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல
வலுவான விஷயங்களையே இனம்
பிரித்துக் காணும் பழக்கத்தை நான்
மேற்கொண்டிருக்கிறேனா?
அல்லது தீய, பலவீனமான
விஷயங்களில் மட்டுமே கவனம்
செலுத்துகிறேனா?
என்னிடமுள்ள தீய, பலவீனமான
விஷயங்களை மற்றவர்கள்
காண்கிறார்கள் என்பதை நான்
உணர்ந்திருக்கிறேனா? என்
நடத்தை பற்றிய நேர்மையான
விமர்சனத்தை நான் வரவேற்கிறேனா?
நல்ல அறிவுரையைக் கேட்டு என்
தீய, பலவீனமான வழிகளை நான்
மாற்றிக் கொள்ளத் தயாராக
இருக்கிறேனா? என்னை மற்றவர்கள்
மன்னிக்காவிட்டாலும்,
மற்றவர்களிடமுள்ள
தவறுகளை மன்னித்து ஏற்றுக்
கொள்ள நான் தயாராக இருக்கிறேனா?
இந்தக் கேள்விகளையெல்லாம்
உங்களுக்குள் கேட்டுக்
கொண்டு அதற்குப் பதில்
தேடிப்பாருங்கள். உங்கள் தரப்பில்
உள்ள பலவீனங்கள் லேசாக எட்டிப்
பார்த்து `அடடா…நான்
இப்படியா செய்தேன்?’
என்று உள்ளுக்குள் ஒருகணம்
உங்களை யோசிக்க வைக்கும். இந்த
சிந்தனை தான் உங்களை நீங்கள்
மறு பரிசீலனைக்குள் கொண்டு வர
உதவுகிறது. இதற்குப்பிறகு நாம்
செய்ய வேண்டியது என்ன?
மற்றவரிடமுள்ள நல்ல
விஷயங்களைக் கண்டறிந்து நாம்
அங்கீகரிக்க வேண்டும். நம்மைக்
காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக
எழும் எதிர்மறை எண்ணங்களையும்
நம் மனங்களை விட்டு நாம்
விலக்கி விட வேண்டும்.
பிறகு அதுவே மிக உயர்ந்த
குணமாகி விடும். என் கோபத்தால்
எனக்கு அடிக்கடி பிரச்சினை
ஏற்படுகிறதா?
அதை மாற்றியே தீருவேன்
என்பதை உறுதிமொழியாக
எடுத்துக் கொள்ள வேண்டும். என்
பொறுமையின்மையால் என்
உறவுகளில் சில
பாதிக்கப்படுகின்றனவா? இனி நான்
உறவுகள் விஷயத்தில் எந்த வித
மாற்றுக்கருத்துகளும்
கூறப்போவதில்லை என்பதை
பிரகடனப்படத்தி விடவேண்டும்.
இப்படிச் செய்யும்போது உங்கள்
தகுதி காரணமாக
உங்களை நெருங்கப் பயந்த
உறவினர்கள் கூட உங்களிடம்
உரிமையுடன் சிநேகம்
பாராட்டுவார்கள்.
ஒரு செயலை தள்ளிப்போடும்போது
அந்த செயலுக்கான
அடிப்படை ஆர்வம் அடிபட்டுப்
போகிறது. அதன் மூலம் வரக்கூடிய
வரவுகள் தள்ளிப் போகிறது.
பல நேரங்களில் தாமதித்த
காரணத்தால் அவை நம்
கையை விட்டுப் போகவும்
செய்கின்றன. இந்த வட்டத்துக்குள்
நீங்கள் வந்து விட்டால் அப்புறமாய்
உங்களை நீங்கள்
யாரென்று தேடிக்கொண்டிருக்க
அவசியமில்லை. என் மகன்
என்று பெற்றோர் கொண்டாடுவார்கள்.
என் கணவர்
என்று மனைவி கொண்டாடுவாள்.
எங்கப்பா என்று பிள்ளைகள்
கொண்டாடுவார்கள். எங்கள் நல்ல
உறவுக்காரர் என்று சொந்தக்காரர்கள்
கொண்டாடுவார்கள்.
இத்தனை சொந்தம் உங்ளைச்
சுற்றி இருக்கும்போது நீங்கள் யார்
என்பது இப்போது உங்களுக்கே
தெரிந்திருக்குமே..!
http://rajramshivaa.blogspot.in/
என்னை நானே தேடுகிறேன்
என்பார்கள். தன்னைச்சுற்றி நிகழ்ந்து
கொண்டிருக்கும் பல
குழப்பங்களையும் அமைதியாக
அனுமதிப்பார்கள். கடைசியில்
அதில் ஏதேனும்
பிரச்சினை தலை தூக்கத் தொடங்கும்
போது அந்த நேரத்தில் மட்டும்
வலி தாங்காமல் கத்துகிற
குழந்தையைப்
போலாகி விடுவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் முதலில்
தங்களை சுயவிமர்சனம்
செய்து கொள்ள வேண்டும். அதற்கான
வழிமுறைகளில் சில: என்னைச்
சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல
வலுவான விஷயங்களையே இனம்
பிரித்துக் காணும் பழக்கத்தை நான்
மேற்கொண்டிருக்கிறேனா?
அல்லது தீய, பலவீனமான
விஷயங்களில் மட்டுமே கவனம்
செலுத்துகிறேனா?
என்னிடமுள்ள தீய, பலவீனமான
விஷயங்களை மற்றவர்கள்
காண்கிறார்கள் என்பதை நான்
உணர்ந்திருக்கிறேனா? என்
நடத்தை பற்றிய நேர்மையான
விமர்சனத்தை நான் வரவேற்கிறேனா?
நல்ல அறிவுரையைக் கேட்டு என்
தீய, பலவீனமான வழிகளை நான்
மாற்றிக் கொள்ளத் தயாராக
இருக்கிறேனா? என்னை மற்றவர்கள்
மன்னிக்காவிட்டாலும்,
மற்றவர்களிடமுள்ள
தவறுகளை மன்னித்து ஏற்றுக்
கொள்ள நான் தயாராக இருக்கிறேனா?
இந்தக் கேள்விகளையெல்லாம்
உங்களுக்குள் கேட்டுக்
கொண்டு அதற்குப் பதில்
தேடிப்பாருங்கள். உங்கள் தரப்பில்
உள்ள பலவீனங்கள் லேசாக எட்டிப்
பார்த்து `அடடா…நான்
இப்படியா செய்தேன்?’
என்று உள்ளுக்குள் ஒருகணம்
உங்களை யோசிக்க வைக்கும். இந்த
சிந்தனை தான் உங்களை நீங்கள்
மறு பரிசீலனைக்குள் கொண்டு வர
உதவுகிறது. இதற்குப்பிறகு நாம்
செய்ய வேண்டியது என்ன?
மற்றவரிடமுள்ள நல்ல
விஷயங்களைக் கண்டறிந்து நாம்
அங்கீகரிக்க வேண்டும். நம்மைக்
காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக
எழும் எதிர்மறை எண்ணங்களையும்
நம் மனங்களை விட்டு நாம்
விலக்கி விட வேண்டும்.
பிறகு அதுவே மிக உயர்ந்த
குணமாகி விடும். என் கோபத்தால்
எனக்கு அடிக்கடி பிரச்சினை
ஏற்படுகிறதா?
அதை மாற்றியே தீருவேன்
என்பதை உறுதிமொழியாக
எடுத்துக் கொள்ள வேண்டும். என்
பொறுமையின்மையால் என்
உறவுகளில் சில
பாதிக்கப்படுகின்றனவா? இனி நான்
உறவுகள் விஷயத்தில் எந்த வித
மாற்றுக்கருத்துகளும்
கூறப்போவதில்லை என்பதை
பிரகடனப்படத்தி விடவேண்டும்.
இப்படிச் செய்யும்போது உங்கள்
தகுதி காரணமாக
உங்களை நெருங்கப் பயந்த
உறவினர்கள் கூட உங்களிடம்
உரிமையுடன் சிநேகம்
பாராட்டுவார்கள்.
ஒரு செயலை தள்ளிப்போடும்போது
அந்த செயலுக்கான
அடிப்படை ஆர்வம் அடிபட்டுப்
போகிறது. அதன் மூலம் வரக்கூடிய
வரவுகள் தள்ளிப் போகிறது.
பல நேரங்களில் தாமதித்த
காரணத்தால் அவை நம்
கையை விட்டுப் போகவும்
செய்கின்றன. இந்த வட்டத்துக்குள்
நீங்கள் வந்து விட்டால் அப்புறமாய்
உங்களை நீங்கள்
யாரென்று தேடிக்கொண்டிருக்க
அவசியமில்லை. என் மகன்
என்று பெற்றோர் கொண்டாடுவார்கள்.
என் கணவர்
என்று மனைவி கொண்டாடுவாள்.
எங்கப்பா என்று பிள்ளைகள்
கொண்டாடுவார்கள். எங்கள் நல்ல
உறவுக்காரர் என்று சொந்தக்காரர்கள்
கொண்டாடுவார்கள்.
இத்தனை சொந்தம் உங்ளைச்
சுற்றி இருக்கும்போது நீங்கள் யார்
என்பது இப்போது உங்களுக்கே
தெரிந்திருக்குமே..!
http://rajramshivaa.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நீங்கள் மாறுங்கள்,எல்லாம் மாறும்
நல்லதொரு கட்டுரை பகிர்வு அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் மாறுங்கள்,எல்லாம் மாறும்
உண்மைதான் நம்மை நாம் அடிக்கடி சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும்.
நல்ல தகவல்கள்
நல்ல தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|