Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குட்டிச் சாதனையாளர்: அடுத்த சதுரங்க ராஜா
Page 1 of 1 • Share
குட்டிச் சாதனையாளர்: அடுத்த சதுரங்க ராஜா
இந்தியாவின் அடுத்த சதுரங்க (செஸ்) ராஜாவாக யார் வருவார்? அந்தச் சிறுவன்தான் வருவார் என இந்திய செஸ் ஜாம்பவான்கள் பலரும் கணித்திருக்கிறார்கள். அவர் வேறு யாருமல்ல. மதுரையைச் சேர்ந்த 15 வயதான அரவிந்த் சிதம்பரம். வருங்கால விஸ்வநாதன் ஆனந்த் என்று சொல்லப்படும் இவரது பூர்வீகம் காரைக்குடி. பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை திருநகரில்.
3 வயது குழந்தையாக இருந்தபோது தந்தையை இழந்த அரவிந்துக்கு, தாய்தான் எல்லாமே. அவரது வழிகாட்டுதல்படி நடந்த அரவிந்த், 7-ம் வயதில் செஸ் களத்தில் குதித்தார். 4-ம் வகுப்பிலேயே தீவிர செஸ் வீரராக உருவெடுத்தார். செஸில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது சென்னைக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.
அரவிந்த் அப்படி என்னத்தான் சாதனை படைத்தார் என்றுதானே கேட்க வருகிறீர்கள்? தேசிய செஸ் போட்டியில் 11, 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் பட்டம் வென்றிருக்கிறார். இத்தனைக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்றபோது அவருடைய வயது 12. இந்தியாவில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும் அரவிந்த் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர். ஸ்லோவேனியா நாட்டில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்டில் தற்போதைய உலக சாம்பியன் கார்ல்சனுக்கே சவால் விட்டு விளையாடித் தன் திறமையை நிரூபித்தார் அரவிந்த். அவருடனான போட்டியை டிராவில் முடித்தார் என்றால், அரவிந்தின் திறமை அசாத்தியமானது அல்லவா? கடந்த நவம்பரில் சென்னையில் உலக செஸ் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக சென்னை நேரு மைதானத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் ஓபன் போட்டி நடைபெற்றது. இதில் 4 கிராண்ட் மாஸ்டர்களை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைச் சூடினார் அரவிந்த்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 கிராண்ட் மாஸ்டர்கள், 30 இண்டர்நேஷனல் மாஸ்டர்கள் பங்கேற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் அரவிந்த் விளையாடிய விதம் அபாரமாக இருந்தது. இதைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல, போட்டியில் பங்கேற்ற எஞ்சிய கிராண்ட் மாஸ்டர்களும் மூக்கில் விரல் வைத்தனர்.
இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும், முதல் கிராண்ட்மாஸ்டர் நார்ம்ஸையும் பெற்றார் அரவிந்த். அப்போது அவருக்கு வயது 14. உலக செஸ் போட்டியில் செய்தி சேகரிக்க வந்திருந்த ஐரோப்பியப் பத்திரிகையாளர்கள் அரவிந்தைத் தேடி ஓடினார்கள்.
கடந்த ஏப்ரலில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் 2-வது கிராண்ட் மாஸ்டர் நார்ம்ஸைப் பெற்றுள்ள அரவிந்த், அடுத்ததாக ருமேனியாவில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதில் அவர் பங்கேற்று 3-வது நார்ம்ஸ் பெறும் பட்சத்தில் இளம் கிராண்ட் மாஸ்டராக உருவெடுப்பார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» எஸ்.புதூர் ஒன்றிய பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு
» "குட்டிச் சாத்தான்': இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» சதுரங்க விளையாட்டுச் சிந்தனை
» நீங்களும் சாதனையாளர் தான்!
» எஸ்.புதூர் ஒன்றிய பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு
» "குட்டிச் சாத்தான்': இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» சதுரங்க விளையாட்டுச் சிந்தனை
» நீங்களும் சாதனையாளர் தான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|