Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வைராக்கிய வாழ்வு வெற்றி தரும்!
Page 1 of 1 • Share
வைராக்கிய வாழ்வு வெற்றி தரும்!
எப்போதும் போல் இந்த ஆண்டும் பருவ மழையை நம்பி பயிர் செய்தது, எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான் கந்தன். இருப்பினும் அவன் மனதில் எப்படியும் பயிர் விளைவதற்கான வழியை கண்டறிவது என்ற எண்ணம் மனதில் தோன்றியது. விவசாயியான கந்தன், கடுமையான உழைப்பாளி. எடுத்த காரியத்தை முடித்து விட்டுதான் வேறு வேலையை கவனிக்க வேண்டும் என்ற வைராக்கியம் உடையவன்.
எல்லா வருடங்களையும் போல்தான் இந்த ஆண்டும் தன் நிலத்தில் பயிர் செய்திருந்தான். ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததன் காரணமாக, கடுமையான வறட்சி ஏற்பட்டு கிணறு வறண்டு போய்விட்டது. இவ்வளவு நாளாக பயிரிட்டு வளர்த்து வந்த பயிர் வாடுவதைக் காண அவன் மனம் கலங்கியது. ‘எப்படியாவது பயிரைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்வது?’ என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினான்.
ஊருக்கு சற்றுத் தொலைவில் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அதில் மட்டும் நீர் இருந்தது. மிகுந்த சிரமம் என்று தெரிந்தாலும், அந்த ஏரியில் இருந்து ஒரு கால்வாய் வெட்டினால், தன் நிலத்தின் பயிரை காப்பாற்றி விடலாம் என்று கந்தன் முடிவு செய்தான். வாய்க்கால் வெட்டும் பணியை அதிகாலையில் தொடங்கினான். அவன் ஒருவனே அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தான்.
கந்தனின் மனைவி, தன் கணவன் குளிக்கும் நேரம் வந்ததும், தன் மகளிடம் எண்ணெயைக் கொடுத்து, அவன் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்கு அனுப்பினாள். எண்ணெயுடன் வந்த கந்தனின் மகள், ‘அப்பா! காலை புலர்ந்து வெகு நேரம் ஆகிவிட்டது. இன்னும் குளிக்காமல் இருந்தால் எப்படி? இதோ எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வேலை செய்யுங்கள்’ என்று கூறினாள்.
ஆனால் கந்தன் அதைப் பொருட்படுத்தாமல், தன் வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். ‘மகளே! நான் முக்கியமான ஒரு பணியில் இருக்கிறேன். அதை விடுத்து எனக்கு குளியல் பெரிய விஷயம் அல்ல. நீ இங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு செல்!’ என்று கூறினான். அவன் வாய் தான் வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது. அவனது கைகள் கால்வாய் வெட்டும் பணியில் இருந்து சிறிதும் பிறழ வில்லை.
மகள் சென்று விட்டாள். உச்சிப் பொழுதும் கழிந்து விட்டது. அப்போதும் தீவிரமாக வாய்க்கால் வெட்டும் பணியிலேயே ஈடுபட்டிருந்தான். குளிப்பது, உணவு உட்கொள்வது பற்றி அவன் நினைக்கவில்லையா? அல்லது அவன் உடல் உறுப்புகளும், மனமும் மரத்துப் போனதா என்று தெரியவில்லை.
கடைசியில் கந்தனின் மனைவியே நேராக வயலுக்கு வந்துவிட்டாள். ‘இப்படி ஒரேயடியாவா வேலையில் தீவிரமாக இருக்கிறது? இன்னும் குளிக்கவும் இல்லை, சாப்பிடவும் இல்லை. உங்கள் பிடிவாதத்தை எப்போதும் விடமாட்டீர்களா? எதையும் அளவுக்கு மீறி செய்வது உங்கள் இயல்பாகிவிட்டது. இதுவரை செய்த வேலை போதும். மீதி வேலையை நாளை பார்த்துக் கொள்ளலாம், வாருங்கள்’ என்று வற்புறுத்தி அழைத்தாள்.
அவ்வளவுதான், கந்தன் கோபத்தின் எல்லைக்கே போய்விட்டான். ‘உனக்கு மூளை கெட்டுப்போனதா?. நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்கள் எல்லாம் வாடி வதங்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. உடனடியாக தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் நிலமை மோசமாகிவிடும். பயிர்கள் விளையாவிட்டால், நம் குடும்பமே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். வயலுக்கு தண்ணீர் கொண்டு வரும்வரை எனக்கு குளியலும் வேண்டாம், சாப்பாடும் வேண்டாம். என்னை நிம்மதியாக வேலை செய்ய விடு!’ என்று சத்தம் போட்டு மனைவியை வீட்டுக்கு துரத்திவிட்டான்.
அவனிடம் வேறு எதுவும் பேச இயலாமல் வீட்டுக்கு திரும்பினாள் கந்தனின் மனைவி. உடல் வலியையும், சோர்வையும் பொருட்படுத்தாமல் வியர்வை சொட்ட கால்வாயை வெட்டிக் கொண்டே இருந்தான். சூரியன் மாலையில் மறையத் தொடங்கினான். கடுமையான உழைப்புக்குப் பிறகு ஒரு வழியாக, கால்வாயை ஏரியுடன் இணைத்து விட்டான். அப்போது கந்தனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது? அவனிடம் இருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. ஓரிடத்தில் ஆயாசமாக அமர்ந்தான். தன் வயலுக்கு தண்ணீர் பாய்ந்து வருவது கண்டு சிறு பிள்ளை போல் அவன் மனம் கூத்தாடியது.
அளவற்ற இன்பத்துடன் வீடு திரும்பியவன், தனது அன்பு மனைவியை அழைத்தான். ‘பெண்ணே! எப்படியோ சிரமப்பட்டு ஏரி தண்ணீரை, வயலில் பாய்ச்சிவிட்டேன். எண்ணெய் கொண்டு வா! குளிக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு குளிக்கச் சென்றான். குளித்த பின் சாப்பிட்டு விட்டு நிம்மதியாகத் தூங்கினான்.
இந்த கதையைப் போல் இறைவனை வழிபடும் போதும் பக்தர்கள் அதே சிந்தனையில் மூழ்கி இருக்க வேண்டும். இறைவனை வழிபடும் போது எவ்வித சிந்தனையும், எண்ணமும் குறுக்கிடாத வண்ணமும், அவ்வாறு குறுக்கிட்டாலும் அவற்றை அப்படியே ஒதுக்கித் தள்ளும் வைராக்கியமும் இருந்தால் இறைவனை எளிதில் தரிசிக்க முடியும்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வாழ்வு தரும் பசுக்கள்
» தயிர் தரும் சுக வாழ்வு.
» இஞ்சி தரும் இனிமையான வாழ்வு:-
» சாறுகள் தரும் சத்தான வாழ்வு:-
» சந்தோஷ வாழ்வு தரும் சரபேஸ்வரர்!
» தயிர் தரும் சுக வாழ்வு.
» இஞ்சி தரும் இனிமையான வாழ்வு:-
» சாறுகள் தரும் சத்தான வாழ்வு:-
» சந்தோஷ வாழ்வு தரும் சரபேஸ்வரர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|