Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மருத்துவராக முதல் தகுதி மனித நேயம்!
Page 1 of 1 • Share
மருத்துவராக முதல் தகுதி மனித நேயம்!
மருத்துவர் பணி மகத்தான பணி என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது. மருத்துவர்களைக் கடவுளுக்கு அடுத்தபடியாக நினைப்போரும் உண்டு. கடவுளுக்கும் மேலாக நினைப்போரும் உண்டு.
நொடிதோறும் நோயின் ரணத்தில் சிக்கி, நிரந்தர நிவாரணம் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் உயிர்களைக் காக்கும் புனிதமான பணியைக் கவனமாக மேற்கொள்ள வேண்டிய மருத்துவர்கள் சில நேரங்களில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகின்றனர்.
தூத்துக்குடியில் காய்ச்சலுக்கு சிகிச்சைபெற்ற சிறுவனின் பார்வை பறிபோனதும், சளி, இருமலுக்குச் சிகிச்சை பெற வந்த சென்னை பெண் தவறான மருந்துகளால் பாதிக்கப்பட்டதும் அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவங்கள். இவை மருத்துவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்தவை எனக் கூறப்படுகிறது.
நோயின் தன்மையை நன்கு ஆராய்ந்து, நோயாளிக்காகச் சில நிமிடங்களைச் செலவிட்டு அவரது உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என நினைக்கும் மருந்துகளை ஒதுக்கி, ஒத்துக்கொள்ளும் மருந்துகளை எழுதித் தருதல் போன்ற விஷயங்களில் மருத்துவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே இச் சம்பவங்கள் எடுத்துச் சொல்கின்றன.
மருத்துவப் பிரதிநிதி மீண்டும் மீண்டும் வந்து பரிந்துரைக்கும் காரணத்துக்காகவே நோயாளிகளுக்குப் புதிய புதிய மருந்துகளை எழுதிக்கொடுப்பது மருத்துவர்கள் சிலரின் பாணி. சில நேரங்களில் விற்பனைக்கே வந்திருக்காத அந்த மருந்து, மாத்திரைகளுக்காக சீட்டுகளுடன் நகரத்தின் அத்தனை மருந்துக் கடைகளுக்கும் ஏறி இறங்கி அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாவோரின் நிலைமையோ மிகவும் பரிதாபம்.
அறிவியல் விஞ்ஞானிகள் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகளை எலிகள் போன்ற சிறிய உயிரினங்களை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதுபோல புதிய மருந்துகளின் குணமாக்கும் தன்மையை நோயாளிகளைக் கொண்டு ஆராய்வது அத்தகைய மருத்துவர்களுக்கு கைவந்த கலைபோலும்.
கிடைக்காத அந்த மருந்துக்கு மாற்றுமருந்து கேட்டு சம்பந்தப்பட்ட மருத்துவரை நோயாளிகள் அணுகும்போது அதற்கும் அம் மருத்துவர்கள் பீஸ் வசூலித்து விடுவதுண்டு.
இல்லாத மருந்தை எழுதியதாக நோயாளி புகார் கூறியதற்காக இன்சல்டிங் பீஸô, மாற்றுமருந்து எழுதிக் கொடுத்ததற்கான கன்சல்டிங் பீஸô என்பது மருத்துவர்களுக்கே வெளிச்சம்!
சாதாரண பேருந்தில் எஸ்எப்எஸ், டிஎஸ்எஸ், எஸ்எஸ்எஸ் என ஆங்கில எழுத்துகள் அதிகமாகச் சேரும்போது பயணக் கட்டணமும் அதிகமாகும் என்பது பாமரனும்கூட அறிந்த செய்திதான். அதேபோல, மருத்துவர்களின் பெயர்களுக்குப் பின்னால் சிரிக்கும் பட்டங்களில் ஆங்கில எழுத்துகள் கூடக்கூட அவர் வசூலிக்கும் கட்டணமும் கூடுதலாகும் என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.
இப்போது ஆலோசனைக் கட்டணமாக நூறு ரூபாய்க்கும் குறைவாக வாங்கும் மருத்துவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சிறப்பு மருத்துவர் எனில் கட்டணம் இன்னும் கூடுதல்.
இதனாலேயே தவறு, அபாயகரமானது எனத் தெரிந்திருந்தும் பொதுமக்கள் சாதாரண காய்ச்சல், வயிற்றுவலி போன்றவற்றுக்கு நேரடியாக மருத்துக் கடைகளை அணுகி, நோயின் அறிகுறிகளைக் கூறி, மருந்து மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தப் பழகிவிட்டனரோ எனத் தோன்றுகிறது. ஆபத்தான இதுபோன்ற செயல்களுக்கு இந்தக் கட்டண பயமுறுத்தல்களும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.
ஆனால், மிகக் குறைந்த கட்டணம் பெற்றுக்கொண்டு உண்மையான மருத்துவச் சேவையாற்றும் மருத்துவர்களும் இல்லாமலில்லை. மருத்துவரின் வாயிலிருந்து உதிரும் இதமான, நம்பிக்கையூட்டும் சொற்களுக்கு நோயாளியின் பாதிநோயைக் குணமாக்கிவிடும் வல்லமை உண்டு என்பார்கள். அதனால்தானோ என்னவோ, நோயாளியிடம் மருத்துவர்கள் பேசுவதே இப்போது அரிதாகி வருகிறது. தன்னைத் தேடியும், நாடியும் வருவோர் தங்கள் நோய் குறித்து சொல்லத் தொடங்கிய உடனேயே மருந்துகளை எழுதத் தொடங்கும் மருத்துவர்களையும் பார்க்கலாம்.
தனது மருத்துவமனையில் புதிதாக ஒரு சோதனைக் கருவி நிறுவியதற்காக, கூடுதலாக அந்தச் சோதனைக்கும் எழுதித் தந்து நோயாளிகளைச் சோதிக்கும் மருத்துவர்களும் உள்ளனர்.
கைராசி, அன்போடு நலம் விசாரித்தல், தனது பொருளாதாரத்துக்கு ஏற்ப மருத்துகளை எழுதித் தருதல் போன்ற காரணங்களுக்காக மருத்துவர்களை குடும்ப டாக்டர் என அழைத்து, அவரையும் தனது குடும்ப உறுப்பினர்போலவே பொதுமக்கள் கருதிய காலமும் உண்டு.
இன்றைக்கோ நோய்களும் பெருகிவிட்டன. மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒரு மருத்துவரை அணுகி நோய் குணமாகவில்லை எனில் உடனடியாக அடுத்த மருத்துவரை நாடும் நிலையும் உள்ளது.
இதனால் குடும்ப டாக்டர் என்ற சிறந்த ஏற்பாடும், மருத்துவர்-நோயாளியிடையேயான பரஸ்பரப் புரிதலும் காணாமல்போய் விட்டன.
ஒருநாளில் எத்தனை நோயாளிகளைப் பார்த்தோம் என்பதைவிடவும் நோயாளிகளை எப்படிப் பார்த்தோம் என்பதே முக்கியமானது என மருத்துவர்கள் எண்ணுதல் வேண்டும்.
அன்பும், அர்ப்பணிப்பு உணர்வும், மிகுந்த கவனமும் தேவைப்படும் ஒரு துறையில், பல லட்சங்களைக் கொட்டித் தந்து படித்ததற்காகவோ, குறுகிய காலத்துக்குள் பல லட்சங்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவோ அறநெறிகளைமீறிப் பணியாற்றுவது மருத்துவருக்கு நிதியைத் தரலாம்; மக்களுக்கு நிம்மதியைத் தராது. மொத்தத்தில் மருத்துவராக முதல் தகுதி மனித நேயம்!
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மருத்துவராக முதல் தகுதி மனித நேயம்!
மருத்துவம் வணிகமயம் ஆக்கப்பட்டதுதான் கோளாறு. இந்திய பாரம்பரிய மருத்துவமுறை வழக்கொழிந்து போனது மற்றொரு காரணம்.
Re: மருத்துவராக முதல் தகுதி மனித நேயம்!
ஆனால் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» இறைநேயமும் மனித நேயமுமே ஞானத்தின் முதல் படி
» கோபம் மனித இனத்தின் முதல் எதிரி.....
» கோபம் மனித இனத்தின் முதல் எதிரி
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» இறைநேயமும் மனித நேயமுமே ஞானத்தின் முதல் படி
» கோபம் மனித இனத்தின் முதல் எதிரி.....
» கோபம் மனித இனத்தின் முதல் எதிரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|