Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓய்வூதியதாரர் கவனத்துக்கு
Page 1 of 1 • Share
ஓய்வூதியதாரர் கவனத்துக்கு
ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் தற்போது தாங்கள் உயிருடன்தான் இருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலகங்களில் நேரில் ஆஜராகி உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில் வயதான பெண்மணி ஒருவர் இதுதொடர்பாக நமது அலுவலகத்துக்குப் பேசினார். “கடந்த பல ஆண்டுகளாக வேலூரில் ஓய்வூதியம் பெற்றுவந்தேன். மிகவும் வயதாகிவிட்டதால் சென்னையில் இருக்கும் மகள் வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என்னால் நடக்க முடியாது. பார்வைக் குறைபாடும் உள்ளது. உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக வேலூர் சென்றுவரும் நிலையில் நான் இப்போது இல்லை. இதற்கு மாற்றுவழி இருக்கிறதா?” என்றார்.
ஓய்வூதியர்கள் பலருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் இது. அவராவது பரவா யில்லை, வேலூர் - சென்னை. இதைவிட அதிக தொலைவில், வெளி மாநிலங்க ளில் தங்கள் உறவினர் களிடம் அடைக்கலமானவர்கள் தள்ளாத வயதில் மணிக்கணக்கில், நாள்கணக்கில் பயணித்து இதற்காக சொந்த ஊருக்கு வர முடியுமா? எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன. இதற்கு தீர்வுதான் என்ன? இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தியிடம் கேட்டோம்.
“மாவட்ட கருவூலம் மூலம் ஓய்வூதிய தாரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் முறையாகக் கிடைக்கிறதா, அவர்கள் உயிருடன் உள்ளனரா என்பதை உறுதிசெய்ய ஆண்டுதோறும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள வருவாய்த் துறை அலுவலகங்களில் மார்ச் தொடங்கி ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது.
இதில் அவர்கள் உயிருடன் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும். ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர் முதல் கடைநிலை ஊழியர் மற்றும் அவர்களது குடும்ப ஓய்வூதியதாரர்கள்வரை இது பொருந்தும்.
சில சமயங்களில் வயதான பெற்றோரை வாரிசுகள் புறக்கணிக்கின்றனர். இவர்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளனர். சிலரது வாரிசுளின் பணிச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஓய்வூதியம் பெறுவோர் சொந்த ஊரில் இருக்க முடிவதில்லை.
இவர்களில் நடக்க முடியாத, உடல்நலம் மோசமாக இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு விதிவிலக்கு உண்டு. வங்கி மேலாளர்கள், தாசில்தார், மண்டல துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஓய்வூதியரைச் சார்ந்தோர் கையொப்பம் பெற்றுச் சென்று கருவூல அதிகாரிகளிடம் வழங்கி, தாங்கள் இருப்பதை உறுதிசெய்து ஓய்வூதியம் பெறலாம். நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை’’என்றார்.
இதர விவரங்கள் குறித்து விரிவாகச் சொல்கிறார் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கொ.சி.கருப்பன்.
‘‘எங்கள் சங்கம் 28 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எங்கள் சங்கம் மூலம் பல்வேறு உதவிகள் செய்து தரப்படுகிறது. குறிப்பாக நேர்காணலுக்கு (மஸ்டரிங்) செல்ல முடியாதவர்களுக்கு உதவி செய்கிறோம். நேர்காணலில் பங்கேற்க முடியாத அளவுக்கு உள்ள ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை (லைஃப் சர்ட்டிபிகேட்) சம்பந்தப்பட்ட கருவூலத்தில் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் 28 மாவட்டங்களிலும் உள்ள எங்கள் சங்கத்தில் உள்ளன. ஓய்வூதியதாரர்களுக்கு அதை இலவசமாக வழங்குவதுடன், பூர்த்தி செய்தும், யாரிடம் சான்றொப்பம் (அட்டஸ்ட்) வாங்க வேண்டும் எனவும், வழிகாட்டுகிறோம். அந்த சான்றிதழை ஓய்வூதியதாரரின் உறவினர்கள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள், ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து, நேர்காணலுக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய அம்சங்களைப் பார்ப் போம். கருவூலங்களில் நடைபெறும் நேர்காண லில் கலந்துகொள்ளச் செல்லும் ஓய்வூதிய தாரர்கள் நிறைய விஷயங்களை மறந்துவிட்டுச் செல்கிறார்கள். நேர்காணலுக்குச் செல்லும் போது ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகம் (பி.பி.ஓ.), வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். குடும்ப ஓய்வூதியதாரர்கள் இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய சான்றிதழ்களை கொண்டுசெல்ல வேண்டும். ‘இணைப்பு 2’ மீண்டும் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதைக் குறிப்பது. ‘இணைப்பு 3’ எந்த வேலையும் செய்யவில்லை என்பது குறித்த சான்றிதழ். இவை குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் கொண்டுசெல்ல வேண்டியவை. இந்த சான்றிதழுக்கான விண்ணப்பங்களும் எங்களது சங்க அலுவலகத்தில் நகல் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதையும் இலவசமாக வழங்குகிறோம்.
இரண்டு விதமான ஓய்வூதிய முறைகள் உள்ளன. ஒன்று, கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் பைலட் திட்டம். மற்றொன்று வங்கி மூலம் (பப்ளிக் செக்டார் பேங்கிங் ஸ்கீம்) ஓய்வூதியம் பெறும் திட்டம். வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நேர்காணல் நடைபெறும். அந்த நேர்காணலுக்குச் செல்ல முடியாதவர்களும் வாழ்நாள் சான்றிதழை தங்களைச் சார்ந்தோர் மூலம் வழங்கலாம்.
நன்றி: தி இந்து
ஓய்வூதியர்கள் பலருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் இது. அவராவது பரவா யில்லை, வேலூர் - சென்னை. இதைவிட அதிக தொலைவில், வெளி மாநிலங்க ளில் தங்கள் உறவினர் களிடம் அடைக்கலமானவர்கள் தள்ளாத வயதில் மணிக்கணக்கில், நாள்கணக்கில் பயணித்து இதற்காக சொந்த ஊருக்கு வர முடியுமா? எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன. இதற்கு தீர்வுதான் என்ன? இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தியிடம் கேட்டோம்.
“மாவட்ட கருவூலம் மூலம் ஓய்வூதிய தாரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் முறையாகக் கிடைக்கிறதா, அவர்கள் உயிருடன் உள்ளனரா என்பதை உறுதிசெய்ய ஆண்டுதோறும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள வருவாய்த் துறை அலுவலகங்களில் மார்ச் தொடங்கி ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது.
இதில் அவர்கள் உயிருடன் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும். ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர் முதல் கடைநிலை ஊழியர் மற்றும் அவர்களது குடும்ப ஓய்வூதியதாரர்கள்வரை இது பொருந்தும்.
சில சமயங்களில் வயதான பெற்றோரை வாரிசுகள் புறக்கணிக்கின்றனர். இவர்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளனர். சிலரது வாரிசுளின் பணிச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஓய்வூதியம் பெறுவோர் சொந்த ஊரில் இருக்க முடிவதில்லை.
இவர்களில் நடக்க முடியாத, உடல்நலம் மோசமாக இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு விதிவிலக்கு உண்டு. வங்கி மேலாளர்கள், தாசில்தார், மண்டல துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஓய்வூதியரைச் சார்ந்தோர் கையொப்பம் பெற்றுச் சென்று கருவூல அதிகாரிகளிடம் வழங்கி, தாங்கள் இருப்பதை உறுதிசெய்து ஓய்வூதியம் பெறலாம். நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை’’என்றார்.
இதர விவரங்கள் குறித்து விரிவாகச் சொல்கிறார் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கொ.சி.கருப்பன்.
‘‘எங்கள் சங்கம் 28 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எங்கள் சங்கம் மூலம் பல்வேறு உதவிகள் செய்து தரப்படுகிறது. குறிப்பாக நேர்காணலுக்கு (மஸ்டரிங்) செல்ல முடியாதவர்களுக்கு உதவி செய்கிறோம். நேர்காணலில் பங்கேற்க முடியாத அளவுக்கு உள்ள ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை (லைஃப் சர்ட்டிபிகேட்) சம்பந்தப்பட்ட கருவூலத்தில் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் 28 மாவட்டங்களிலும் உள்ள எங்கள் சங்கத்தில் உள்ளன. ஓய்வூதியதாரர்களுக்கு அதை இலவசமாக வழங்குவதுடன், பூர்த்தி செய்தும், யாரிடம் சான்றொப்பம் (அட்டஸ்ட்) வாங்க வேண்டும் எனவும், வழிகாட்டுகிறோம். அந்த சான்றிதழை ஓய்வூதியதாரரின் உறவினர்கள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள், ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து, நேர்காணலுக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய அம்சங்களைப் பார்ப் போம். கருவூலங்களில் நடைபெறும் நேர்காண லில் கலந்துகொள்ளச் செல்லும் ஓய்வூதிய தாரர்கள் நிறைய விஷயங்களை மறந்துவிட்டுச் செல்கிறார்கள். நேர்காணலுக்குச் செல்லும் போது ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகம் (பி.பி.ஓ.), வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். குடும்ப ஓய்வூதியதாரர்கள் இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய சான்றிதழ்களை கொண்டுசெல்ல வேண்டும். ‘இணைப்பு 2’ மீண்டும் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதைக் குறிப்பது. ‘இணைப்பு 3’ எந்த வேலையும் செய்யவில்லை என்பது குறித்த சான்றிதழ். இவை குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் கொண்டுசெல்ல வேண்டியவை. இந்த சான்றிதழுக்கான விண்ணப்பங்களும் எங்களது சங்க அலுவலகத்தில் நகல் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதையும் இலவசமாக வழங்குகிறோம்.
இரண்டு விதமான ஓய்வூதிய முறைகள் உள்ளன. ஒன்று, கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் பைலட் திட்டம். மற்றொன்று வங்கி மூலம் (பப்ளிக் செக்டார் பேங்கிங் ஸ்கீம்) ஓய்வூதியம் பெறும் திட்டம். வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நேர்காணல் நடைபெறும். அந்த நேர்காணலுக்குச் செல்ல முடியாதவர்களும் வாழ்நாள் சான்றிதழை தங்களைச் சார்ந்தோர் மூலம் வழங்கலாம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...
» கர்ப்பிணிகளின் கவனத்துக்கு...
» ஆண்கள் கவனத்துக்கு
» மதிப்புக்குரிய ஆசிரியர்கள் கவனத்துக்கு...
» பெண் நோயாளிகள் கவனத்துக்கு...
» கர்ப்பிணிகளின் கவனத்துக்கு...
» ஆண்கள் கவனத்துக்கு
» மதிப்புக்குரிய ஆசிரியர்கள் கவனத்துக்கு...
» பெண் நோயாளிகள் கவனத்துக்கு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|