Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யார் அந்தப் பயணி?
Page 1 of 1 • Share
யார் அந்தப் பயணி?
எப்போதுமே பலவித பதில்களிலிருந்து ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வகையில்தான் சைகோமெட்ரிக் தேர்வுகள் இருக்க வேண்டும் என்பதில்லை. சில சமயம் open ended questions எனப்படும் கேள்விகளும் கேட்கப்படலாம்.
இந்த வகைக் கேள்விகளில் ஒரு நன்மை உண்டு. தேர்வாளர் சிறிதும் எதிர்பாராத கோணத்தில் நீங்கள் பதிலளித்து அவரைத் திருப்திப்படுத்த முடியும். (அல்லது “நீங்கள் அவர்கள் நிறுவனத்துக்கு வேண்டவே வேண்டாமென்று தீர்மா னிக்க வைக்கவும் முடியும்”).
நான் எழுதிய தொடர் ஒன்றில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். “ஒரு பேருந்து தன் கடைசி நிறுத்தத்தை அடைந்துவிட்டது. ஓட்டுநர் உட்பட எல்லோரும் இறங்கி விட்டார்கள். ஆனால் ஒரு பயணி மட்டும் இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அந்தப் பேருந்திலிருந்து இறங்குகிறார். என்ன காரணமாக இருக்கும்?’’.
வாசகர்கள் விதவிதமாகப் பதிலளித்திருந்தார்கள். அவர்கள் அளிக்காத சில விடைக ளையும் இங்கே சில உதாரணங்களாகச் சேர்த்திருக்கிறேன். அவற்றைப் பார்ப்பதற்கு முன்னால் மேற்கூறிய கேள்விக்கான விடையை, முழுமையாகக் கண்களை இரண்டு நிமிடங்கள் மூடிக்கொண்டு யோசியுங்கள்.
இப்போது உங்கள் விடை களையும், பிறர் அளித்திருக்க வாய்ப்புள்ள விடைகளையும் ஒரு நிறுவனத்தின் கோணத்தில் அலசுவோமா?
“அவர் ஒரு வேளை தூங்கி இருப்பார், அவர் குடித்துவிட்டு உணர்வில்லாமல் இருப்பார்” என்பது போன்ற பதில்கள் சாதாரணமானவை. இதைத் தாண்டி உங்களால் யோசிக்க முடியவில்லை என்றோ, ஒரு பிரச்சினைக்கு ஏதோ ஒரு தீர்வை யோசித்துவிட்டால், அதைத் தாண்டி மேலும் யோசிக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள் என்றோ, இதைக் கொள்ளலாம்.
“பேருந்தில் ஒரு அணுகுண்டை வைக்கத் திட்டமிட்டிருக்கும் ஒரு தீவிரவாதியாக அவன் இருக்க வேண்டும். எல்லோரும் இறங்கிய பிறகு சரியான நேரம் பார்த்து வைத்திருக்கிறான்” என்பது உங்கள் பதிலானால், உங்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டா? இல்லையா? அது எது போன்ற வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்ப தைப் பொறுத்தது. மனிதவளத் துறை என்றால் எல்லோரையும் எதிர்மறைச் சிந்தனையோடு பார்க்கக் கூடாது. பாதுகாப்புத் துறை என்றால் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டிருந்தால்தான் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைச் சிந்திக்க முடியும்.
கீழே இரண்டு விதமான பதில்களை அளித்திருக்கிறேன். இரண்டு வித கோணங்களுக்கும் மனநிலைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.
(1) அந்தப் பயணி தன்னுடைய பொருள் எதையோ தொலைத்துவிட்டார். இருபது நிமிடங்களுக்கு அதைத் தேடிவிட்டுப் பிறகு கீழே இறங்குகிறார்.
(2) யாரோ ஒருவர் தன் விலை உயர்ந்த பொருளைப் பேருந்தில் தவற விட்டுவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார். பிறருக்குத் தெரியாமல் அந்தப் பொருளை எடுத்துச் செல்வதற்காக, இருபது நிமிடங்கள் காத்திருந்துவிட்டு அதை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் இறங்குகிறார் அந்தப் பய ணி.
“உங்களுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு என்பதைக்கூட உங்கள் விடைகள் மூலம் வெளிக்காட்ட முடியும். மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்குக் கீழ்க்கண்ட மாதிரிகூட விடை அளிக்கலாம் இல்லையா?’’ “வெளியே கடன்காரர் நிற்கிறார். அவர் போன பிறகு மெதுவாக இறங்குகிறார் பயணி”, “அவர் ஒரு தொலைக்காட்சி சீரியல் இயக்குநர். எதையும் மெதுவாகச் செய்துதான் அவருக்குப் பழக்கம்”.
ஒரே கேள்வியின் மூலம் ஒருவரை முழு மையாக எடைபோட முடியாதுதான் (அதற்காகத்தான் பலவித கேள்விகளும் நேர்முகமும்). ஆனால் ஒரு கேள்விக்கான விடையின் மூலம் ஓரளவு ஒருவரை எடைபோட்டு அதைப் பிற வழிகளின் மூலம் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். இதற்கு சைகோமெட்ரிக் தேர்வுகள் உதவுகின்றன.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
நன்றி: தி இந்து
இந்த வகைக் கேள்விகளில் ஒரு நன்மை உண்டு. தேர்வாளர் சிறிதும் எதிர்பாராத கோணத்தில் நீங்கள் பதிலளித்து அவரைத் திருப்திப்படுத்த முடியும். (அல்லது “நீங்கள் அவர்கள் நிறுவனத்துக்கு வேண்டவே வேண்டாமென்று தீர்மா னிக்க வைக்கவும் முடியும்”).
நான் எழுதிய தொடர் ஒன்றில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். “ஒரு பேருந்து தன் கடைசி நிறுத்தத்தை அடைந்துவிட்டது. ஓட்டுநர் உட்பட எல்லோரும் இறங்கி விட்டார்கள். ஆனால் ஒரு பயணி மட்டும் இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அந்தப் பேருந்திலிருந்து இறங்குகிறார். என்ன காரணமாக இருக்கும்?’’.
வாசகர்கள் விதவிதமாகப் பதிலளித்திருந்தார்கள். அவர்கள் அளிக்காத சில விடைக ளையும் இங்கே சில உதாரணங்களாகச் சேர்த்திருக்கிறேன். அவற்றைப் பார்ப்பதற்கு முன்னால் மேற்கூறிய கேள்விக்கான விடையை, முழுமையாகக் கண்களை இரண்டு நிமிடங்கள் மூடிக்கொண்டு யோசியுங்கள்.
இப்போது உங்கள் விடை களையும், பிறர் அளித்திருக்க வாய்ப்புள்ள விடைகளையும் ஒரு நிறுவனத்தின் கோணத்தில் அலசுவோமா?
“அவர் ஒரு வேளை தூங்கி இருப்பார், அவர் குடித்துவிட்டு உணர்வில்லாமல் இருப்பார்” என்பது போன்ற பதில்கள் சாதாரணமானவை. இதைத் தாண்டி உங்களால் யோசிக்க முடியவில்லை என்றோ, ஒரு பிரச்சினைக்கு ஏதோ ஒரு தீர்வை யோசித்துவிட்டால், அதைத் தாண்டி மேலும் யோசிக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள் என்றோ, இதைக் கொள்ளலாம்.
“பேருந்தில் ஒரு அணுகுண்டை வைக்கத் திட்டமிட்டிருக்கும் ஒரு தீவிரவாதியாக அவன் இருக்க வேண்டும். எல்லோரும் இறங்கிய பிறகு சரியான நேரம் பார்த்து வைத்திருக்கிறான்” என்பது உங்கள் பதிலானால், உங்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டா? இல்லையா? அது எது போன்ற வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்ப தைப் பொறுத்தது. மனிதவளத் துறை என்றால் எல்லோரையும் எதிர்மறைச் சிந்தனையோடு பார்க்கக் கூடாது. பாதுகாப்புத் துறை என்றால் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டிருந்தால்தான் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைச் சிந்திக்க முடியும்.
கீழே இரண்டு விதமான பதில்களை அளித்திருக்கிறேன். இரண்டு வித கோணங்களுக்கும் மனநிலைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.
(1) அந்தப் பயணி தன்னுடைய பொருள் எதையோ தொலைத்துவிட்டார். இருபது நிமிடங்களுக்கு அதைத் தேடிவிட்டுப் பிறகு கீழே இறங்குகிறார்.
(2) யாரோ ஒருவர் தன் விலை உயர்ந்த பொருளைப் பேருந்தில் தவற விட்டுவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார். பிறருக்குத் தெரியாமல் அந்தப் பொருளை எடுத்துச் செல்வதற்காக, இருபது நிமிடங்கள் காத்திருந்துவிட்டு அதை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் இறங்குகிறார் அந்தப் பய ணி.
“உங்களுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு என்பதைக்கூட உங்கள் விடைகள் மூலம் வெளிக்காட்ட முடியும். மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்குக் கீழ்க்கண்ட மாதிரிகூட விடை அளிக்கலாம் இல்லையா?’’ “வெளியே கடன்காரர் நிற்கிறார். அவர் போன பிறகு மெதுவாக இறங்குகிறார் பயணி”, “அவர் ஒரு தொலைக்காட்சி சீரியல் இயக்குநர். எதையும் மெதுவாகச் செய்துதான் அவருக்குப் பழக்கம்”.
ஒரே கேள்வியின் மூலம் ஒருவரை முழு மையாக எடைபோட முடியாதுதான் (அதற்காகத்தான் பலவித கேள்விகளும் நேர்முகமும்). ஆனால் ஒரு கேள்விக்கான விடையின் மூலம் ஓரளவு ஒருவரை எடைபோட்டு அதைப் பிற வழிகளின் மூலம் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். இதற்கு சைகோமெட்ரிக் தேர்வுகள் உதவுகின்றன.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: யார் அந்தப் பயணி?
யோசிக்க வேண்டிய விஷயம்தான்...
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பரே
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: யார் அந்தப் பயணி?
அவர் குடும்ப பிரச்சனை காரணமாக பஸ் நின்றது கூட தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லவா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: யார் அந்தப் பயணி?
ரானுஜா wrote:அவர் குடும்ப பிரச்சனை காரணமாக பஸ் நின்றது கூட தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லவா?
அவரு உங்களை சொல்லவில்லை அக்கா!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: யார் அந்தப் பயணி?
செந்தில் wrote:ரானுஜா wrote:அவர் குடும்ப பிரச்சனை காரணமாக பஸ் நின்றது கூட தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லவா?
அவரு உங்களை சொல்லவில்லை அக்கா!
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» போனஸ் (வந்தா!) அந்தப் பணத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பது எப்படி?
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» போனஸ் (வந்தா!) அந்தப் பணத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பது எப்படி?
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|