தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

View previous topic View next topic Go down

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம் Empty தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

Post by ஸ்ரீராம் Wed May 07, 2014 11:22 am

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம் Headaches-How-to-Stop-the-Pain.html

தலைவலி அன்றாடம் எல்லோருக்கும் வரும் பிரச்சனை தான் பாட்டி வைத்தியம் என்றவுடனே அது நமக்கு சரிப்பட்டு வராது என்று நினைப்பவர்களுக்காக தான் 20 விதமான வைத்தியங்களை தொகுத்து தந்துள்ளேன் நிட்சயமாக இதில் ஒன்றையாவது உங்களால் இலகுவாக செய்து விட முடியும் நிட்டயமாக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இது உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள நண்பர்களுக்கும் தெரிவித்து பயனடைய முடியும்


கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலைச்சாறு.
நல்லெண்ணெய்.
சர்க்கரை.

செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

அல்லது


மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

மகிழம்பூ
சுக்கு.
சீரகம்.
சோம்பு.
ரோஜாப்பூ.
ஏலக்காய்.
அதிமதுரம்.
சித்தரத்தை
தேன்.

செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

அல்லது

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:
வேப்பம் பட்டை.
கடுக்காய்
கோரைக் கிழங்கு.
நிலவேம்பு.
தேன்.

செய்முறை:
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது
செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

அறிகுறிகள்:

சூட்டினால் ஏற்படும் தலைவலி.
உடல் சூடாக இருத்தல்.

தேவையான பொருட்கள்:

செண்பக இலை.
நெய்.
ஓமம்.

செய்முறை:
செண்பக இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவ வேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.


அல்லது


தலைவலி தைலம் தயாரித்து பயன்படுத்தல்

தேவையான பொருட்கள்:

மிளகாய்- 200 கிராம்
மிளகு – 100 கிராம்
பால் – 1/2 லிட்டர்
நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை:
மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும் முறை:
வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.

தீரும் நோய்கள்:

எவ்விதமான தலைவலியும் குறையும்.


அல்லது


வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை.
கிராம்பு.
செய்முறை:
வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.


அல்லது

கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச்சாறு ஆகியவற்றை சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.

அறிகுறிகள்:

தலை வலி.
மூக்கில் நீர் வடிதல்.
ஜலதோஷம்.

தேவையான பொருட்கள்:

கீழாநெல்லிச்சாறு.
உத்தாமணிச்சாறு.
குப்பை மேனிச்சாறு.
நல்லெண்ணெய்.

செய்முறை
கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.


அல்லது

மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள்.
பூண்டு.

செய்முறை:
மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

கிராம்பு.
சீரகம்.

செய்முறை:
கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.


அல்லது

கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

கிராம்பு.

செய்முறை:
கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

அல்லது

குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

குங்குமப்பூ.

செய்முறை:
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது

டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

டீ. அல்லது காப்பி.
எலுமிச்சை பழச்சாறு.

செய்முறை:
டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

அல்லது


தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

தர்ப்பூசணி விதை.
வெட்டிவேர்.

செய்முறை:
தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்


அல்லது

அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

அவுரி இலை.
தேங்காய் எண்ணெய்.

செய்முறை:
அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.


அல்லது

சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

சுக்கு.
பால்.

செய்முறை:
சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.
குறிப்பு:
தாய்ப்பால் கிடைக்காமல் போனால் பசும்பால் பயன்படுத்தலாம். இருப்பினும் தாய்ப்பால் மிகவும் சிறந்தது.


அல்லது

வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சி வந்தால் தலைபாரம் குறையும்.

அறிகுறிகள்:

தலைபாரம்.

தேவையான பொருட்கள்:

வேப்பம் பிண்ணாக்கு.

செய்முறை:
வேப்பம் பிண்ணாக்கை எடுத்து சுட்டு மூக்கில் உறிஞ்சி வந்தால் தலைபாரம் குறையும்.

அல்லது

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து தூய நீர் விட்டு சுண்ட காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் மற்றும் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:

மலச்சிக்கல்.
தலைவலி.

தேவையான பொருள்கள்:

நில ஆவாரை = 25 கிராம்
கடுக்காய் தோல் = 50 கிராம்
சுக்கு = 50 கிராம்
மிளகு = 5 கிராம்
சோற்றுப்பு = 4 கிராம்

செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 1 லிட்டர் தூய நீர் விட்டு சுமார் 300 மி.லி அளவுக்கு சுண்டியதும் இறக்கி விடவும்.
உபயோகிக்கும் முறை:

காலை 5 மணி அளவில் 100 மி.லி கஷாயத்தை மட்டும் வடிகட்டி குடித்து சிறிது வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும். மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி குறையும்.


அல்லது

கொதிக்கும் நீரில் சுக்கு தூள் மற்றும் கற்பூரத்தை போட்டு மூடி வைத்து பிறகு இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

சுக்கு = 10 கிராம்
கற்பூரம் = 2 கிராம்

செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.



அல்லது

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து தடவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.

அறிகுறிகள்:

தலைபாரம்.
அஜீரண தலைவலி.

தேவையான பொருள்கள்:

சுக்கு = 10 கிராம்
மிளகு = 5 கிராம்
வெள்ளைப்பூண்டு = 5 கிராம்

செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து சிறிதளவு எடுத்து நெற்றியின் இரண்டு பக்கத்திலும் தடவி பற்று போட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரால் கழுவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.


அல்லது

திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

திருநீற்றுபச்சிலை

செய்முறை:
திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும்.

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம் Empty Re: தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

Post by செந்தில் Wed May 07, 2014 2:34 pm

பயனுள்ள மருத்துவக் குறிப்புக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம் Empty Re: தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

Post by முரளிராஜா Wed May 07, 2014 10:41 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம் Empty Re: தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

Post by முழுமுதலோன் Thu May 08, 2014 10:56 am

    தலைவலி போயே போச்சி  தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம் 1189600598-80
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம் Empty Re: தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum