தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆசை அதிகம் வெச்சு

View previous topic View next topic Go down

ஆசை அதிகம் வெச்சு Empty ஆசை அதிகம் வெச்சு

Post by நாஞ்சில் குமார் Thu Jun 19, 2014 11:03 am



ஸ்கூட்டரை உள்ளே நிறுத்திய பின் மாருதியை வெளியே எடுத்தான். வாசலில் நிறுத்திவிட்டு வழக்குக் கட்டுகளை எடுத்து வர அலுவலகத்தினுள் நுழையப் போனவனைத் தடுத்தழைத்தது அனுராதாவின் குரல். நாற்பத்தைந்து வயதிருக்கும். வசதியின் வனப்பு மிளிரும் முகம்.
“”ஹலோ! கண்ணன் சார்! வீட்டில் எல்லாரும் சவுக்யமா இருக்காங்களா?”
“”ம்.. நல்லாருக்காங்க.”
“”சார்! ஒரு பத்து நிமிஷம் ஸ்பேர் பண்ணலாமா?” இவனிடமிருந்து பதிலேதும் வருமுன்பே, “பண்பலை’போல் தொடர்ந்தார் அனுராதா. பக்கத்து ப்ளாட், கணவர் பெரிய அதிகாரி. பணிபுரிய ஏவலாள்கள், டிரைவர் என வீட்டிலேயே நான்கு பேர் வெளியாட்கள்.
“”உங்க வக்கீல் புரொஃபஷன்ல சம்பாதிக்கிறதோட அதிக ஸ்ட்ரெயின் இல்லாம, இன்னும்கூட சிம்பிளா மாசம் முப்பதாயிரம், ஐம்பதாயிரம் வரை சம்பாதிக்கலாம். ஒரு ஸ்கீம் – நாங்க இப்ப பிரமாதமாக பண்ணிக்கிட்டிருக்கோம். மேன்பவர் வேணாம்; எஸ்டாபிளிஷ்மெண்ட் வேணாம். வெறும் ஃபோன் காண்டாக்ட் போதும். உங்களுக்கு இருக்கிற வொயிடு கான்டாக்ட்ல ரொம்ப சிம்பிளா ஏர்ன் பண்ணலாம்.”
கண்ணன் நெளிய ஆரம்பித்தான். அனுராதா ஒரு வெள்ளைத்தாளில் பேனாவால் சதுரம் போட்டு அம்புக்குறியீடுகள் இட்டு, எண்களைக் குறித்தபடியே தொடர்ந்து பேசினாள்.
“”இந்த செயின் இன்ஸ்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்ல வெறும் இருபதாயிரம் ரூபாய் – அதுவும் அஞ்சாயிரம் அஞ்சாயிரமா நாலு இன்ஸ்டால்மெண்ட்ல கட்டினாப் போதும். இது மட்டும்தான் உங்க முதலீடு. ஒரு வருஷத்துக்கப்புறம் உங்க முதலீடு இருபதாயிரமும் திரும்பி வந்துவிடும். ஆனால், ஆறாவது மாசத்திலிருந்தே மாசா மாசம் ஆயிரத்திலிருந்து போனஸ் வந்து விழ ஆரம்பிச்சுடும். உங்க ஃபர்பார்மென்ஸ்க்கு ஏத்தபடி மாசம் இருபதாயிரம் வரை கூட வரும். நீங்க மாசம் நாலுபேர் இன்ட்ரட்யூஸ் செய்யணும். அந்த நாலு பேரும் தலா நாலுநாலு பேரைக் கொண்டு வரணும்…”
கண்ணன் கைக்கெடிகாரத்தைப் பார்த்தான்.
“”நீங்க ஃப்ரீயா இருக்கப்ப சொல்லுங்க… வந்து டீடெய்லா எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். நீங்க ராத்திரி பூரா கண்முழிச்சு நோட்ஸ் எடுத்து கோர்ட்டுக்குப் போய் வாதாடி, வக்காலத்து வாங்கி ஜட்ஜ்மென்டுக்குக் காத்திருந்து உங்க உழைப்புக்கு ஏத்த வருமானம் உங்க புரொஃபஷன்ல வராதுன்னு நெனைக்கிறேன். அதுனால் இந்த ஸ்கீம்ல…”
கண்ணனின் நெஞ்சுக்குள் நெருப்புப் பற்ற ஆரம்பித்துவிட்டது. வாசலில் தெருவருகே வழிமறித்து வலைவீசும் அனுராதாவின் வாதத்தை நார்நாராய்க் கிழிக்கத் துடித்தது மனசு. நீதிமன்ற விசாரணை நேரம் பாசவலை வீச, இவன் உள்வாங்கும் சிற்றலையானான்.
“”இல்லை மேடம். என் வேலையும் அதன் வருமானமும் எனக்குப் போதும். நீங்க சொல்ற சம்பந்தமில்லாத வருமானம் எதிலயும் எனக்கு ஈடுபாடு இல்லை. இந்த மாதிரி, மத்தவங்களைக் கோர்த்துவிடற சங்கிலித் தொடர் முதலீடு – வணிகம் எதுவுமே எந்த வடிவத்திலயுமே எனக்குப் பிடிக்காத ஒண்ணு.”
“”நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை… இன்னும் மேலதிகமாகச் சம்பாதிக்கலாமேன்னு…”
“”இல்லைம்’மா நன்றி வர்றேன்!”
காரின் கதவைத் திறந்து பளிச்சென்று உள்ளே அமர்ந்தான்.
“”நட்ராஜ், கேஸ் கட்டெல்லாம் எடுத்து வச்சுக்கீட்டீங்கள்ல? வந்து உக்காருங்க!” அதி வேகமாய்க் கிளப்பினான் காரை. வாகனத்தைவிட அவன் எண்ணம்தான் வேகமாய் ஓடுகிறது…
“நகர சாலை நெரிசலில் காலைப் புயலில் புறப்பட்டுப் புகுந்து “பிளஷர் காரில்’ மகிழ்ச்சியுடனா பயணிக்க முடிகிறது?
வீங்கிப் புடைத்த நெற்றியாகவும் பல் விழுந்து குழியான பொக்கை வாயாகவும் திகழும் தெருவில் சாகச சர்க்கஸ் வித்தைத்தான் வாகனப் பயணம். எந்த வகை வாகன ஓட்டிக்கும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது தனது அவசியக் கடமை என்கிற உணர்வே இருப்பதில்லை. அட, சாலை விதிகள் என்னென்னங்கிற அறிவு இருந்தாலல்லவா அதைக் கடைப்பிடிக்கிற நினைவு வரும்? தான்-தான் மட்டுமே பயணிக்க இந்தச் சாலை என்கிற அபத்தமான அழுச்சாட்டிய மனோநிலை தொத்து வியாதியாய் வேகமாகப் பரவிவிட்டதே.
“காதைத் துளைக்கும் எச்சரிக்கை ஒலியால் மிரட்டி தொலைவில் தெருவைக் கடக்கும் ஜீவனைத் தேவையற்று சில நிமிடங்கள் நிற்க வைத்துத் தன் வாகன வேகத்தைக் குறைக்காமல் சுகமாகப் பயணிக்கிற அதிகாரத்தை யார் தந்தது இவர்களுக்கு? வாகனங்களுக்கு இடையே விட்டுப் பயணிக்க வேண்டிய தொலைவு என்று ஒன்று உண்டு என்கிற சட்டமும் காணாமல் போனது. இடதும் வலதும் மிக நெருங்கி வந்து தாண்டிச் செல்ல – காது வழியே நெஞ்சைப் பிளக்கும் “ஹாரன்’ சமிக்ஞை – அடையாளக் குறியீடு எதையும் காண்பிக்காமலேயே அருகில் வரும் வாகனத்தைக் கடப்பதும், திரும்புவதும் எனப் பிறரைத் திக்குமுக்காட வைப்பதும்… அவன் எப்படிப் போவான் எப்படி, எங்கே, எப்போது திரும்புவான், திரும்புவானா, நேரே போகப் போகிறானா? எனக்குத்தான் அந்தக் கவலை. தன் வண்டியைத் தான் இயல்பாய் ஓட்டுவதற்குப் பதில் அவன் எப்படி ஓட்டுகிறானோ அதற்குத் தகத் தன் பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே, யோசிக்காத, அக்கறையற்ற அவனுக்காகவும் சேர்த்து நானல்லவோ யோசிக்க வேண்டியிருக்கிறது.
“பயணத்தில் மட்டுமா – வாழ்க்கையிலேயும் அல்லவா இந்தச் சுயநலம் பாசியாய்ப் படர்ந்துவிட்டதே! சுயநலச் சுதந்திரத்தின் எல்லை எதுவரை? மற்றவர் சுதந்திரத்தின் எல்லைக்கோடு வரை என்கிற அறிவு வேண்டாமா?’
நிமிர்ந்து நிற்கும் சிகப்புக் கட்டிடத்தின் உள்ளே ஒரு வழியாய் நுழைந்து மரத்தடியில் வண்டியை நிறுத்தி இறங்குகிறான் இவன். நீண்டு மடித்து வைக்கப்பட்ட கட்டுக்களை எடுத்துக்கொண்டு இவனைப் பின் தொடர்கிறார் இளைய வழக்கறிஞர்.
சுட்டெரித்த சூரியன் விடைபெறும் மாலை நேரம்.
ஆவி மேலெழும் இஞ்சி தட்டிப்போட்ட தேநீரைச் சுவைத்தபடியே எதிரே அமர்ந்திருக்கும் இளைஞர் ரகுவின் பேச்சை உற்று கேட்கிறானிவன். வெள்ளைத் தாளில் சிறுசிறு குறிப்புகளாக எழுதிக் கொள்கிறான்.
“”ம்…டீயக் குடிங்க, ஆறிடப் போகுது.”
“”தேங்க்ஸ்!”
கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே தேநீர் அருந்தி முடிக்கிறான் ரகு. தொடர்கிறான்:
“”நான் மட்டுமில்லை. எங்க கம்பெனியிலிருக்கிற ஆறேழு பேர், அப்புறம் மிடில்கிளாஸ்வுமன் கொஞ்சம்பேர், வயசானவங்க கொஞ்சம் பேரு – கிட்டத்தட்ட எனக்குத் தெரிஞ்சு நாற்பது அம்பது பேர் இப்படி இந்த “எவர் கிரீன் குரோ பைனான்ஸ்’ல பணம் கட்டி ஏமாந்திருக்கோம். ஒரு வருஷம் இருக்கும். முதல் நாலு மாசத்துக்குப் பின்னாடி மூணு மாசம் மட்டும் “செக்’ தந்தாங்க. அப்புறம் தரவேயில்லை. இன்னும் நாலைஞ்சு “ஸ்கீம் ப்ளோட் பண்றோம்ன்னு, மேலும்மேலும் எங்கக்கிட்டயிருந்து பணம் கறக்கப் பார்த்தாங்களே தவிர, அவுங்கக்கிட்டயிருந்து ரிட்டன் எதுவும் வரவேயில்லை. சொன்னபடி எதுவுமே சரியாத் தரலை.”
“”அவுங்க உங்களைக் குறி வைச்சு வளைச்சாங்களா? நீங்களா போய் விழுந்தீங்களா?”
“”அது வந்து… மீடியாவெல்லாம் செம விளம்பரம் செய்ஞ்சு எங்க மனசுக்குள்ள அவுங்க கம்பெனிய பத்தி ஒரு “இமேஜைப் பில்டப்’ பண்ணீட்டாங்க. அதுவுமில்லாம அப்பல்லாம் எங்கள மாதிரி ஐ.டி.தகவல் தொழில்நுட்பத் துறையில கைநெறையக் காசு புழங்குற தகவல்தான் உலகம் தெரிஞ்ச ரகசியமாச்சே. ஃபோன் மேல ஃபோன், எஸ்.எம்.எஸ்., பர்சனல் கேன்வாஸ்ன்னு நுனிநாக்கு இங்கிலீஷ்ல தேன் குழைச்சுப் பேசிக்கிட்டே இருந்தாங்க. ஒரு பத்து நிமிஷம் எப்ப ஸ்பேர் பண்ண முடியும்ன்னு கேட்டு அப்பாய்ண்டமெண்ட் வாங்கிக்கிட்டு வந்து லேப்-டாப்பில கிராஃப் காண்பிச்சு, அவுங்க இன்வெஸ்ட்மெண்ட் பிளான், ஹைப்பா டைரக்டர்ஸ் ஃப்ரொஃபைல்லாம் காண்பிச்சு அப்படியே கரைச்சாங்க. எங்களுக்கும் செலவு போக மிஞ்சியதை, ஃப்ளாட், வீடு வாங்க உதவுமேன்னு, இப்படி இன்வெஸ்ட் பண்ணினா பெட்டர்னு தோணுச்சு.”
தன் பேனாவால் மேஜையை “டக்டக்’கெனத் தட்டியபடியே இவன் குறுக்கிட்டான்.
“”ம்… அப்ப… அவுங்களாத் தேடி வந்தவங்கக்கிட்ட நீங்க அப்படியே இலகுவா “இந்தாங்க’ன்னு எடுத்துக் கொடுத்திருந்கீங்க…”
“”யெஸ் சார்.”
“”ஒங்க பணத்தைப் பாதுகாப்பான இடத்தில முதலீடு செய்யணுங்கிற அக்கறையில்லாம, உங்களைத் தேடிவந்தவங்ககிட்ட, அப்படியே கையில் இருக்கிறதைச் சுலபமா குடுத்தீங்க?”
“”இன் எ வே யெஸ்..”
“”ம்…”
வேதனையும் கசப்பும் கலந்த பெருமூச்சு இவனுள் – படித்த முட்டாள்களை அடிக்கடி தற்போது பார்க்க நேரிட்டு விடுகிறதேயென.
“”மிஸ்டர் ரகு! “ஸிஸ்டம்’ “நெட்’, கேளிக்கை சேனல் தவிர உங்களுக்குத் தெரிஞ்சது “பப்’பும் “வீக்என்ட் பார்ட்டியும்தானா? எவ்வளவு நியூஸ் பேப்பர் பத்திரிகை, சேனல்லாம் பொருளாதாரத் தகவலைத் தருது…”
“”நோ டைம் சார்!” படீரெனப் பதில் வருகிறது ரகுவிடமிருந்து.
“”ரகு! ஒங்களை நீங்களே ஏமாத்திக்கிற முயற்சியில் சுகங்காணாதீங்க. உங்களுக்குத் தெரிஞ்சுக்கிற ஆசையும் ஆர்வமும் இல்லை. முக்கியமாகப் பொறுப்பு இல்லை. ஒங்க பாட்டி காலத்தில அடுப்படிப் பாத்திரம், தகர டப்பாவில சிறுகச்சிறுகச் சேமிச்சாங்க. உங்க அப்பா காலத்தில.. எதில கூட வட்டி வரும். அதே சமயம் முதலுக்கு மோசம் வந்துடக் கூடாதுங்கிற அக்கறை கவலையோட பத்து எடம் அலைஞ்சு, நாலு பேர் கிட்டக் கேட்டு, அரசு நிறுவனங்கள்ல, அஞ்சலகச் சேமிப்பு, தேசவுடமை வங்கின்னு சேமிச்சாங்க. உங்களுக்கு எல்லாத்திலயும் போல இதுலயும் மிக எளிதான – சுகமான சோம்பேறித்தனம். நேரமில்லைங்கறது சால்ஜாப்பு. கூடுதல் சம்பளம் தர்றாங்கன்னா அதிகமாகத்தான் ஒழைக்கணும். ஆனா,சுயத்தை இழந்து, அப்படிக் கொத்தடிமையா ஒழைச்சுச் சம்பாதிப்பதைக் கவனமா சேமிச்சு, பாதுகாப்பா முதலீடு செய்யணுங்கிற அக்கறை வேண்டாமோ? நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க.
ஒங்களுக்கே “அவுங்க தர்ற சம்பளம் அதிகந்தான்; ஈஸியா சம்பாதிக்கிற பணம்தானே’ன்னு ஒரு அக்கறையின்மை உங்களுக்குள்ளே பரவிடுது. அதுக்கு மேலே எதிர்த்தாப்பில நவீனமா எப்படி திருட்றது, எப்படி ஏமாத்தறது, எப்படி கண்கட்டு வித்தை காண்பிச்சு கொள்ளயடிக்கிறதுன்னு புதுப்புது வழிகளை, நுட்பங்களைக் கண்டுபிடித்து ஒரு பெரிய கொள்ளைக்காரக் கும்பலே எல்லாத் துறையிலும் பகட்டா பவனி வருது. நாமதான் விழிப்போட செயல்படணும். சரி… இப்ப எப்படி நடவடிக்கை எடுக்கலாம்ன்னு யோசிக்கிறேன். ஒரு நாலு நாளுக்குள்ல பாதிக்கப்பட்டவங்களை ஒருங்கிணைச்சு ஒரு குழு அமைச்சுக்குங்க. காவல்துறை முறையீடு, வழக்குத் தொடுப்பது, மீடியாவிடம் போறதுன்னு எல்லா வழியிலயும் முயல்வோம். முழு விபரமும் சேகரிச்சு வையுங்க. சட்டபூர்வமாகச் செய்ய வேண்டியதை நான் திட்டமிட்டுச் செய்யிறேன்.”
“”தேங்க்ஸ்” எழுந்து நின்று வணங்குகிறான் ரகு. ரகுவின் தோள் அணைத்துப் பேசுகிறான் இவன்.
“”ரகு! நான் தனிப்பட்ட முறையில உங்களை விமர்சனம் செய்ததா நெனக்காதீங்க. நான் சொன்னதையெல்லாம் சரியான கண்ணோட்டத்தில எடுத்துக்குங்க…”
“”நோசார். ஒரு எல்டர் பிரதரா நீங்க உரிமையோட வழி காண்பிக்கிறதாத்தான் நெனைக்கிறேன்.”
கைகுலுக்கலில் இனிமை மலர்ந்தது. இவனையே ஊற்றுப் பார்த்து வியக்கிறான் நடராஜ். “சாந்தமான முகம்; ஆனால் கம்பீரமான உள்ளம். முப்பத்தைந்து வயதில் பக்குவமும் சமூக அக்கறையும் கொண்டவர் என் சீனியர்.”
“”என்ன அப்படிப் பார்க்கிறே நட்ராஜ், நான் சொன்னது சரியா, தப்பா சொல்லு?”
“”கரெக்ட்தான் சார். காலைல அந்தம்மாகிட்ட… “சார் ஏன் அவ்வளவு கோபப்பட்டார்’ன்னு நான் கொஞ்சம் யோசிச்சேன். ஆனா, இதோ இப்பப் பாக்குறேன்ல! துள்ளித் திரியிற மீன்லருந்து விலாங்குமீன் வரை மாட்டாதான்னு வலைய விரிய வீசுறவுங்க அதிகமாகிட்டாங்க. இப்பிடியிருக்கிறப்ப நீங்க எடுத்துச் சொல்றது எப்படி சார் தப்பாகும்?”
“”பக்கத்து ஃப்ளாட் அனுராதாம்மாவுக்கு என்ன தேவை? வீட்டுக்காரர் கைநெறயச் சம்பாதிக்கிறாரு. நல்ல வசதி. இது பத்தாதுன்னு தம்மோட பேராசை வலைக்குள்ள மத்தவங்களையும் இழுக்கறது தப்பில்லையா? ஆசைப்படு – தப்பில்லை. பேராசைப் படாதே. அதுவுமில்லாமல நம்ம உழைப்பு இல்லாம வரக்கூடிய பொருள் நமக்கு மகிழ்ச்சி தராதுன்னு நம்புகிறவன் நான். ஓ.கே., பேசிக்கிட்டிருந்தா பேசிக்கிட்டேயிருப்போம். வீட்டுக்குக் கிளம்பலாம். பூட்டிக்கிட்டு வா! கார்ல இருக்கேன்.”
கையில் மடித்துப்போட்ட கருப்புக் கோட்டுடன் வேக நடைபோடுகிறான் இவன்.
ஜில்லென்று பூ மணத்துடன் வீசும் வேப்பமரக்காற்று முகத்தில் பட்டு மோதுகிறது; நின்று அதை உள்வாங்கிச் சுவாசித்துப் பின் நடக்கிறான் இவன்.
-அகிலன் கண்ணன்

நன்றி: தினமணி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஆசை அதிகம் வெச்சு Empty Re: ஆசை அதிகம் வெச்சு

Post by ரானுஜா Thu Jun 19, 2014 5:35 pm

ஆசைப்படு – தப்பில்லை. பேராசைப் படாதே. அதுவுமில்லாமல நம்ம உழைப்பு இல்லாம வரக்கூடிய பொருள் நமக்கு மகிழ்ச்சி தராதுன்னு wrote:

விழிப்புணர்வு மிக்க கதை அருமை பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆசை அதிகம் வெச்சு Empty Re: ஆசை அதிகம் வெச்சு

Post by செந்தில் Thu Jun 19, 2014 6:28 pm

சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆசை அதிகம் வெச்சு Empty Re: ஆசை அதிகம் வெச்சு

Post by முரளிராஜா Fri Jun 20, 2014 11:45 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆசை அதிகம் வெச்சு Empty Re: ஆசை அதிகம் வெச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum