Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காமராஜரும் மண்ணாங்கட்டியும்
Page 1 of 1 • Share
காமராஜரும் மண்ணாங்கட்டியும்
சமூக வலைதளங்களிலும் சரி, மின்னஞ்சல் வழியாகவும் சரி, பரப்பப்படும் செய்திகள் பல்வேறு சமயங்களில் தேவையற்றவைகளாகவே உள்ளன. இவை மூலம் ஆதாரமற்ற வதந்திகளும் பரப்பப்படுகின்றன. ஆனால் சில சமயங்களில் அத்திப்பூத்தாற்போல் சில நல்ல விஷயங்களும், உபயோகமான, பலருக்குத் தெரியவேண்டிய விஷயங்களும் பரப்பப்படுகின்றன. சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு நல்ல செய்தி நமது வலைதளத்திலும் சிக்கியது. அதை உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம்...
அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையாத் தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை “ஏம்பா மண்ணாங்கட்டி, அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 ரூபாயை, கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தர் மண்ணாங்கட்டி. பார்த்ததும் “ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துகிட்டு இருக்கேன், இட்லி வாங்க இவ்வளவு நேரமா, என்று எகிறினார்’ தேவர். மண்ணாங்கட்டிக்குக் கோபம்.
“என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’ என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி...
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக்காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். “அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்க தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக் கடிதம். இரண்டு நாட்கள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையாத் தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
தேவர் என்னவென்று கேட்கிறார். “இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று “முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார் தேவர். அப்போது எல்லாம் நேரடியாகத் தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டுக் காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். “யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்’ என்கிறார். “அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா’ என்றபடியே அருகில் இருந்த மூக்கையாத் தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. “எழுதப்படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா’ என்கிறார் மூக்கையாத்தேவர்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுப்பிசகாமல் “ஐயா எழுதப்படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு தேவர் ஐயா கேட்கச் சொல்றாருங்க’ என்றார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை...
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3 பேர் அங்கே வந்துவிட்டார்கள். “முதல்வருக்கு போன் செய்தது யார்?’ என்றார்கள். “நான்தான் ஐயா’ என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. “உங்களைக் கையோடு அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள்’ என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் எனப் புரிகிறது. மூக்கையாத் தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி “ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். “பின்னாடியே வருகிறேன். நீ போப்பா’ என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜரின் அலுவலகத்தை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதல்வரின் அறையில் உள்ள சோபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். “நீங்கதான் மண்ணாங்கட்டியா’ என்கிறார். “ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா’ என்றபடியே கீழே விழுந்தார். அந்தக் கலாச்சாரம் காமராஜருக்குப் பிடிக்காது. அவர் அதிகாரிகளைப் பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை “வா.. வான்னேன். வந்து பக்கத்தில் உட்காருங்கன்னேன்’ என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க, தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு “நான் தப்புப் பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்தத் தவறை நீதான் புரியவைச்சே... ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லியாமே. சமைக்கலயாமே... உங்களுக்க ரெண்டு பொம்பளப் புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்... எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டியிருக்கக்கூடாது. “இனிமேல் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான்’ என்று தட்டிக் கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...
அடுத்து அங்கேயே ஓர் உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசாங்க வேலை. அதிகாரிகளைப் பார்த்து “இவரை அழைத்துக் கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகாரக் குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்றுத் தயங்கி “போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா சாப்பிட்டிருக்க மாட்டார்கள்’ எனக் கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்துக் கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்துக் கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஓர் ஏழையின் கண்ணீர் வலி... இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, ஏழைகளுக்காகவே இருந்தார்...
இப்படியும் மனுசங்க இருந்திருக்காங்க....
கலைமகள்
அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையாத் தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை “ஏம்பா மண்ணாங்கட்டி, அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 ரூபாயை, கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தர் மண்ணாங்கட்டி. பார்த்ததும் “ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துகிட்டு இருக்கேன், இட்லி வாங்க இவ்வளவு நேரமா, என்று எகிறினார்’ தேவர். மண்ணாங்கட்டிக்குக் கோபம்.
“என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’ என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி...
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக்காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். “அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்க தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக் கடிதம். இரண்டு நாட்கள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையாத் தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
தேவர் என்னவென்று கேட்கிறார். “இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று “முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார் தேவர். அப்போது எல்லாம் நேரடியாகத் தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டுக் காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். “யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்’ என்கிறார். “அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா’ என்றபடியே அருகில் இருந்த மூக்கையாத் தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. “எழுதப்படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா’ என்கிறார் மூக்கையாத்தேவர்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுப்பிசகாமல் “ஐயா எழுதப்படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு தேவர் ஐயா கேட்கச் சொல்றாருங்க’ என்றார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை...
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3 பேர் அங்கே வந்துவிட்டார்கள். “முதல்வருக்கு போன் செய்தது யார்?’ என்றார்கள். “நான்தான் ஐயா’ என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. “உங்களைக் கையோடு அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள்’ என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் எனப் புரிகிறது. மூக்கையாத் தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி “ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். “பின்னாடியே வருகிறேன். நீ போப்பா’ என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜரின் அலுவலகத்தை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதல்வரின் அறையில் உள்ள சோபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். “நீங்கதான் மண்ணாங்கட்டியா’ என்கிறார். “ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா’ என்றபடியே கீழே விழுந்தார். அந்தக் கலாச்சாரம் காமராஜருக்குப் பிடிக்காது. அவர் அதிகாரிகளைப் பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை “வா.. வான்னேன். வந்து பக்கத்தில் உட்காருங்கன்னேன்’ என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க, தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு “நான் தப்புப் பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்தத் தவறை நீதான் புரியவைச்சே... ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லியாமே. சமைக்கலயாமே... உங்களுக்க ரெண்டு பொம்பளப் புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்... எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டியிருக்கக்கூடாது. “இனிமேல் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான்’ என்று தட்டிக் கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...
அடுத்து அங்கேயே ஓர் உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசாங்க வேலை. அதிகாரிகளைப் பார்த்து “இவரை அழைத்துக் கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகாரக் குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்றுத் தயங்கி “போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா சாப்பிட்டிருக்க மாட்டார்கள்’ எனக் கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்துக் கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்துக் கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஓர் ஏழையின் கண்ணீர் வலி... இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, ஏழைகளுக்காகவே இருந்தார்...
இப்படியும் மனுசங்க இருந்திருக்காங்க....
கலைமகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|