Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்லா பழகுங்க...
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
நல்லா பழகுங்க...
நீங்கள் சென்னை போன்ற நகரத்தில் தினமும் பேருந்துப் பயணம்/ரயில் பயணம் மேற்கொள்பவரா? அப்படியானல் நீங்கள் ஒரு காட்சியைத் தவிர்க்க முடியாது; பயணிகளில் பெரும்பாலானவர்கள், இளைஞர் முதல் வயதானோர் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போன் உடன் , காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்டுக்கொண்டும் வாட்ஸ்-ஆப் , ஃபேஸ் புக் பார்த்துக் கொண்டும் வருவார்கள். எனது பேருந்துப் பயணத்தில் தினமும் இந்தக் காட்சியைப் பார்ப்பேன். இது போதாதென்று இருசக்கர வாகன ஓட்டிகளும்கூட காதில் ஹெட்செட் மாட்டி அதற்கு மேல் ஹெல்மெட்டும் மாட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள். கார் ஓட்டிகளும் இதில் விதிவிலக்கல்ல. இப்படிச் செல்லும்போது அவசரமாக வரும் ஆம்புலன்ஸின் சைரன் ஒலியும், பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும் அவர்களுக்குக் கேட்பதில்லை. சாலையில் எதிர்ப்படும் காட்சிகள் அவர்களைப் பொறுத்தவரை ஒரு மெளனப் படத்தின் காட்சிகள்போல் நகரும் என நினைத்துக்கொள்வேன்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் தினமும் சென்றுவரும் பேருந்துத் தடம்தான் என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு இடையில் உள்ள நிறுத்தங்கள் என்னென்ன என்பது தெரியாது. கவனம் எல்லாம் கையில் இருக்கும் செல்போனிலும், காதில் கேட்கும் பாடலிலும்தான் இருக்கும். சொல்லப் போனால் கட்டளைகளுக்குப் பழக்கப்பட்ட ரோபோ மாதிரி தினமும் ஒரே இடத்திற்கு வந்து திரும்பிக்கொண்டிருப்போம்.
திடீரென யாராவது புதியவர்கள், ‘அடுத்த ஸ்டாப் என்ன?’ என்று கேட்டுவிட்டால் திடீரென என்ன சொல்வதென்றே தெரியாது. நான் எதற்கு அதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவம் இன்றைய இளம் தலைமுறையிடம் இருக்கிறது.
ஆனால் உலகம் என்பது நமக்கு வெளியிலும் இருக்கிறது. நம்முடைய படுக்கை அறையும், செல்போனும் மட்டும் உலகம் அல்ல. வெளியில் உள்ள இந்த உலகத்தின் ஒவ்வொரு சின்னச் சின்ன பாதிப்பும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதனால் இதை நீங்கள் புறந்தள்ள முடியாது.
இசையை ஆழ்ந்து ரசிப்பது மனதிற்கு ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காக எப்போது ஹெட்செட் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. பேருந்து பயணங்களின் போதெல்லாம், ஜன்னல் வழியாகப் பல விஷயங்களை உள்வாங்கலாம். நம்முடன் பயணிக்கும் மனிதர்களைப் பாருங்கள். செல்போனை பைகளில் வைத்துவிட்டு அவர்களுடன் பழகுங்கள். ஒரு நல்ல சமூகம் இப்படித்தான் உருவாகும்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|